இடுகைகள்

ஓநாய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அண்டர்கவர் ஏஜென்டாக இருந்து காணாமல் போன அம்மாவைக் கண்டுபிடிக்க செல்லும் மகனின் கதை!

படம்
  சேஸ் தி ட்ரூத்  24 எபிசோடுகள் சீன டிராமா நாயகன் போலீஸ் அதிகாரி. அவனது அம்மா, சிறுவயதிலேயே வடமேற்கு ஓநாய் குழுவைப் பிடிக்க அதில் இடம்பிடித்தவர். ஆனால் சில ஆண்டுகளிலேயே அவருடனான தொடர்பு காவல்துறையிடம் இருந்து துண்டிக்கப்படுகிறது. அவர் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா, காவல்துறைக்கு துரோகம் செய்துவிட்டாரா என பல கணிப்புகள் நிலவுகின்றன. நாயகன், தனது அம்மாவைத் தேடி வடமேற்கு ஓநாய் குழுவைத் தேடி கிளம்புகிறான். இதில் அவன் சந்திக்கும் சவால்களே கதை.  இந்த தொடரின் பலம், சண்டைக்காட்சிகளும், உணர்ச்சிகரமான பாசம் தொடர்பான உரையாடல்களும்தான். அதுதான் தொடரை பார்க்க வைக்கிறது. சுவாரசியமானதாக மாற்றுகிறது.  தொடர் நெடுக ஓநாய்களின் ஓவியங்கள், அதன் பொம்மைகள், கிராபிக்சில் ஓடிவரும் ஓநாய்கள் என பார்க்க அழகாக இருக்கிறது. மனிதர்கள் நகருவது போலவே கேமராவும் ஹான்பெய், காலிசா, பாலைவனம், மலைதொடர்கள் என நகர்கிறது. கதையின் வழியாக அதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. காவல்துறைக்கும், வடமேற்கு ஓநாய் குழுவுக்கும் நடைபெறும் சண்டைக் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. அதிலும் இறுதிப்பகுதியில் வடமேற்கு ஓநாய் குழுவின் தலைமை அலுவல

மனிதர்கள் இல்லாத சூழலில் உயிர்பிழைத்து வாழுமா நாய்கள்?

படம்
  மனிதர்கள் இல்லாத உலகம் ஓடிடிகளில், இணையத்தில் உள்ள மனிதர்கள் பலரும், உலகம் அழியும் சூழலில் மனிதர்கள் எப்படி பிழைப்பது என யோசித்து வருகிறார்கள். இதைப்பற்றி நாவல், சிறுகதை, குறும்படம், வெப்தொடர், திரைப்படம் என படைப்புகளை   எடுத்துவருகிறார்கள். நோயோ அல்லது அணு ஆயுதங்கள் கொண்ட போராலோ மக்கள் பேரழிவை சந்தித்து மீண்டும் உலகில் வாழத் தொடங்குவதுதான் கதை. இந்த மையப்பொருளை அப்படியே மனிதர்கள் இல்லாத உலகில் விலங்குகள் குறிப்பாக நாய்களை வைத்து யோசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும்? பல்லாண்டுகளுக்கு முன்னரே வீட்டு விலங்கான நாய், மீண்டும் காட்டுக்குத் திரும்பி உணவுக்காக வேட்டையாட முடியுமா, மனிதர்கள் துணையில்லாமல் தன்னைக் காத்துக்கொள்ளுமா என்ற கேள்வி முக்கியமானது. இதே கேள்வியை பூங்காக்களில் உள்ள மனிதர்களைக் கேட்டால், அது சாத்தியமே இல்லை என்று கூறி காரணங்களை அடுக்குவார்கள். ஆனால், அது அவர்கள் பார்வைக் கோணத்தில் சரியாக இருக்கலாம். முழுக்க உண்மையல்ல.   தொடக்கத்தில் சில நாய் இனங்கள் இப்படி தடுமாறினாலும், விரைவில் சூழலுக்கு ஏற்ப தன்னை பொருத்திக்கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். காட்டுக்குள

சாப விடுதலைக்காக குன்லூன் கல்லறைக்குச் செல்லும் தொல்பொருள் குழு! - குன்லூன் டாம்ப் - சீனதொடர்-

படம்
  குன்லூன் டாம்ப் குன்லுன் டாம்ப் 2022 சீன டிவி தொடர் மூல நாவல்- கேண்டில் இன் தி டாம்ப் – ஸாங் மூ யே ராகுட்டன் விக்கி ஆப் சாகசத் தொடர் இயக்குநர் – ஃபெய் ஸென் ஷியாங்       ஓல்ட் ஹூ, ஃபேட்டி, ஒல்ட் ஜின், ஷிர்லி யாங் இந்த நால்வரும் தொன்மையான பொருட்களை தேடித் திரியும் ஆட்கள். கல்லறைகளுக்குள் நுழைந்து பொருட்களை தேடி எடுத்து வந்து விற்பதுதான் வேலை. ஒருமுறை இப்படியான வேலைக்கு செல்லும்போது ஓல்ட் ஹூ (ஹூ பாயி), ஃபேட்டி (வாங் கை சுவான்) ஷிர்லி யாங் ஆகியோரை வைரஸ் ஒன்று தாக்குகிறது. தொன்மை கலாசாரப்படி கல்லறைக்குள் நுழைபவர்களை தாக்கும் சாபம் இது. இதன் பெயர் ரெட் ஸ்பாட் கர்ஸ். இதன்படி இதற்கு பரிகாரமாக தீயசக்தி ராஜ்யமான குன்லுன் எனும் இடத்திற்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் போகாவிட்டால் வைரஸ் தாக்கி உயிர் போய்விடும் அபாயம் இருக்கிறது. இந்த மூவரையும் பயன்படுத்தி பொக்கிஷங்களை சம்பாதிக்க தொன்மை பொருட்களை விற்பவரும் செல்வந்தருமான மிங்க் யூ ஒரு மறைமுகத் திட்டம் வகுக்கிறார். இதன்படி, பொக்கிஷங்களைப் பற்றி ஏதும் சொல்லாமல் தன் தந்தை குன்லூன் டாம்பில் இறந்துபோய்விட்டார். உடலை மீட்க வேண்டும் என்

மதமும், மாந்த்ரீகமும் மனிதர்களை வேட்டையாடியபோது....

படம்
அசுரகுலம் - ரத்தசாட்சி  நிறைய கொலைகளை செய்ய திட்டமிட்டுள்ள தொடர் கொலைகாரர், நான்கு இடங்களையாவது தேர்வு செய்து கொல்வார்.  உள்ளூர், வெளியூர் என இடங்கள் மாறுபடுவது உண்டு. செய்யும் கொலைகளுக்கான இடைவெளி என்பது மெல்லல குறையும். இது கொலை செய்வதன் மகிழ்ச்சி காரணமாக ஏற்படுவது. மகிழ்ச்சியும் அதிகம் கிடைக்கவேண்டுமென்பது அழுத்தமாக மாறும்போது கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கொலை செய்வதற்கான இடைவெளி இருக்கிறதென்றால், கொலைகாரர் நேரம், தயாரிப்பு, திட்டமிடல் ஆகியவற்றை செய்துகொண்டிருக்கிறார் என உறுதியாக கூறலாம். கொலை செய்யும் தொடர் கொலைகாரர்களுக்கு நோக்கம் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். கொலை செய்தால் மனது சந்தோஷமாக இருக்கிறது என ஒருவர் சொன்னால் அவரை நீங்கள் என்ன சொல்வீர்கள்? புணர்ச்சி, திருட்டு, கொள்ளை என லட்சியத்திற்காக மனிதர்களை கொல்பவர்களே அதிகம். முதல் சீரியல் கொலைகாரர் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் வந்திருக்கும். இங்கிலாந்தில் மக்களை இரவில் தெருவிறங்கி நடக்கவே யோசிக்கவைத்த கொலையாளி  ஜேக் தி ரிப்பர்.ஆறு வாரங்களில் நான்கு கொலைகளை செய்து உலக ஊடகங்களை லண்டனின் ஒயிட்சாப்பல் பகுதியை நோக்கி திர

நகைகளை குறிவைத்து திருடும் ஓநாய்க்கூட்டத்தைப் பிடிக்கும் ஸகூபிடூ குழு! - பிக் டாப் ஸ்கூபிடூ அனிமேஷன்

படம்
              பிக் டாப் ஸ்கூபி டூ அனிமேஷன் ஹன்னா பார்பரா , வார்னர் பிரதர்ஸ் நகரில் ஓநாய் ஒன்று நகைக்கடைக்குள் புகுந்து நகைகளை திருடிச்செல்கிறது . இதனை யார் செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை . அப்போது அங்கு வெல்மாவின் துப்பறியும் குழு வருகிறது . எப்படி மர்மங்களை கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் அனிமேஷன் படத்தின் கதை . சர்க்கஸ் கம்பெனிக்கு வந்து சேரும் குழுவினர் , அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கும்போது அங்குதான் ஓநாய் பல்வேறு நகைக்கடைகளை உடைத்து நகைகளை அள்ளிச்சென்று வருவதைக் கண்டுபிடிக்கின்றனர் . இப்படி நகைகளை திருடுவதும் குறிப்பிட்ட பேட்டர்னில் நடைபெறுகிறது . இப்படி நடைபெறும் திருட்டுகளை காவல்துறை பிடிக்கமுடியாமல் திணறுகிறது . இந்த வகையில் இன்னும் ஒரு நகை மட்டுமே திருட வேண்டியிருக்கிறது . வெல்மா , பிரெட் , டெப்னி , சேகி , ஸ்கூபி ஆகியோர் சர்க்கஸ் கம்பெனிக்கு வந்து உண்மையைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர் . இதனால் அவர்களே அங்கு சர்க்கஸை நடத்தவேண்டியதாகிறது . ஆளுக்கொரு வேலையை ஏற்றுக்கொள்கின்றனர் . இதில் வெல்மா தவிர பிறர் அனைவருமே சோபித்து ப

இயற்கைக்கு நெருக்கமாக வாழும் விலங்கு கொயேட்(சிறியவகை ஓநாய்)!

படம்
        coyote       மொபி விலங்குநல ஆர்வலர் ! நீங்கள் விலங்கு நல ஆர்வலராக உள்ளீர்கள் . வீகன் உணவுப்பழக்கத்தையும் பிரசாரம் செய்கிறீர்கள் ஏன் ? எனக்கு ஒன்பது வயதாகும்போது விலங்குகளைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன் . அவற்றின் வாழிடம் , வாழ்க்கை ஆகியவற்றை நாம் மதிக்கவேண்டும் என நினைத்தேன் . எனவே , எனது உணவுப்பழக்கத்தை நான் மாற்றிக்கொண்டு வீகனாக மாறினேன் . இயற்கையோடு ஒருவர் எப்படி இணைந்து வாழவேண்டுமென நினைக்கிறேன் ? இன்று காட்டிலிருந்து பல்வேறு வைரஸ்கள் பரவி வருவதாக செய்திகளில் கூறப்படுகின்றன . மனிதர்கள் சுயமாக காடுகளிலுள்ள விலங்குகளை பாதுகாக்க உறுதி எடுத்திருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது . இனியும் இதில் நாம் கவனமின்றி இருந்தால் , ஏற்படும் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் . இதன் பொருள் நாம் காட்டு விலங்குகளோடு நெருங்கி வாழ்ந்தால் பயன்கள் கிடைக்கும் என்பதல்ல . அவைகளுக்கான இடத்தை நாம் பறிக்க கூடாது என்பதுதான் . கொயோட் ( சிறியவகைஓநாய்கள் ) உங்களுக்கு பிடித்துப்போனதான் காரணம் என்ன ? சிறிய வகை ஓநாய்களை லாஸ் ஏஞ்சல்ஸில் நீங்கள் பார்க்கமுடியும் . அவற்றின்

பகிர்வதில் யார் பெஸ்ட் நாயா? ஓநாயா?

படம்
ஓநாய் வில்லனாக நினைக்காதீர்கள். நாய்க்கு மூதாதையர்தான் அவை. நாய்களை நாம் நம் வீட்டு விலங்காக மாற்றி முதலில் வாசலில் நின்ற நாயை இன்று பெட்ரூம், சோபா செட்டில் படுக்க வைத்து கொஞ்சிக் கொண்டிருக்கிறோம். மனிதர்களிடமிருந்து அவர்களின் குணங்களுக்கேற்ப சமாளித்து வாழ்வதில் பறவைகளில் காக்கை பெஸ்ட், என்றால் விலங்குகளில் நாய்தான் சிறந்தது. அதேசமயம் உணவைப் பகிர்வது, உணர்வுகளை புரிந்து நடந்துகொள்வது ஆகியவற்றில் சாமர்த்தியசாலி. திருடன் மணியன்பிள்ளை நூலில் கொள்ளையடிக்க செல்லும் வீட்டில் இரண்டு வெளிநாட்டு நாய்கள் காவலுக்கு நிற்கின்றன. அதற்கு அயிரைமீன் ஆசை காட்டியதும் கடமையை ஐந்து நிமிடங்களுக்கு மறந்துபோகிறது. திருட்டு போனபின்பு ஓனர் அதனைச் சொல்லி கிண்டல் செய்ய இரு நாய்களும் உணவு உண்ணாமல் இருந்து செத்து போகின்றன என்ற செய்தி எனக்கு பதற்றம் தந்தது. திருட்டு கொடுத்தவரின் உணர்வை நாய் புரியாமல் இருக்குமா? சொல்லுங்கள். வியன்னாவிலுள்ள அறிவியல் மையத்தில் இதுகுறித்த சோதனை ஒன்றை செய்தனர். ஆறு நாய்கள், ஒன்பது ஓநாய்கள் அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன. திரையில் தெரியும் உணவுகளை தொட்டு ஓநாய்கள் அதனை பி

ஓநாய்களை நாய்களாக்க முடியுமா?

படம்
பிபிசி ஓநாய்களும் மனிதர்களும் நண்பர்களாவது சாத்தியமா? நாய்கள் ஏறத்தாழ ஓநாய் குடும்பத்திலிருந்து உருவானது என்பது அறிவியல் உண்மை. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம்முடன் பழகி நண்பனாக ஏறத்தாழ நம் அடிமையாக உள்ளது. தற்போது வெளிவந்துள்ள புதிய ஆராய்ச்சி, ஓநாய்களையும் நாய்களைப் போல வளர்க்க முடியும் என்று உறுதியாக கூறியுள்ளது. ஆக்ரோஷம் நிறைந்த விலங்குகளைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட விலங்குகளோடு இனப்பெருக்கம் செய்ய வைத்து நாய்கள் உருவாயின. ஆக்ரோஷம் குறைந்தவை வீட்டுக்கும், ஆக்ரோஷம் மிகுந்தவை ராணுவம் மற்றும் காவல்துறைக்கும் தேர்வாயின. காடுகள், பனிப்பிரதேசங்களில் நாய்களின் துணையின்றி மனிதர்கள் வாழ்வது கடினம். எதிர்பாராத ஆபத்துகள் அங்கு அதிகம். அமெரிக்காவின் பண்ணை நிலங்களிலும்  காட்டு விலங்குகளை எச்சரிக்க நாய்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் பண்ணை விலங்குளை வேட்டையாடும் ஓநாய்களை எப்படி நாய்களைப் போல வீட்டுக்குள் அனுமதிப்பீர்கள் என வியன்னாவைச் சேர்ந்த கால்நடை கழகம் கேள்வி கேட்டுள்ளது. இதுவும் சரியான சந்தேகம்தான். செரி விடுங்கள். அறிவியலில் எதுதான் சாத்தியம் இல்லை. நன்ற