இடுகைகள்

இதழ்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கோபுலு ஒவியங்களின் அழகுடன் படித்த காந்தியின் நவகாளி யாத்திரை! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம். நான் நலம். அறை இப்போதுதான் மெல்ல ஈரத்திலிருந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. ஆபீசில் இணைய வசதி சரியாக இல்லை. எனவே, பிளாக்கில் ஏதும் சரியாக எழுத முடியவில்லை. இன்று எடிட்டர் கே.என்.எஸ் வீட்டுக்குப் போக நினைத்தேன். ஆனால் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருப்பதாக சொல்லிவிட்டார். இனி அவரை தொந்தரவு செய்யக்கூடாது என நினைக்கிறேன்.  நவகாளி யாத்திரை - இயல்வாகை வெளியீடு படித்துக்கொண்டு இருக்கிறேன். கோபுலு ஓவியங்கள் நூலை அழகாக்கி இருக்கின்றன என்பது உண்மை. இந்த நூலை பிடிஎப்பில் முன்னதாகவே படித்துள்ளதாக நினைவு. கோபுலு ஓவியங்களுக்காகவே மீண்டும் நூலை இரவல் பெற்று படித்தேன். நேரு பற்றி இந்து ஆங்கில இதழில் ஞாயிறு அன்று கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். நவ.14 அன்று வெளியான சிறப்புக்கட்டுரை நேரு, புரட்சியாளரா இல்லையா என்பதைப் பற்றியது. அதை மொழிபெயர்க்க முடியுமா என்று பார்க்கவேண்டும்.  சேத்தன் பகத் இந்தியா இந்துக்களின் நாடு என்று பத்தி ஒன்றை எழுதியிருந்தார். அதை எதிர்த்து ஸ்வபன்தாஸ் குப்தா டைம்ஸ் ஆப் இந்தியாவில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். மதச்சார்பற்ற அரசின் இயல்புக்கு ஏற்ற க