இடுகைகள்

கீதாஞ்சலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விருது வெற்றிக்கு எழுத்துலகில் இடம் இல்லை! - இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ

படம்
  கீதாஞ்சலி ஸ்ரீ இந்தி மொழி எழுத்தாளர்  ரெட் சமாதி என்ற பெயரில் கீதா எழுதிய நூல் டாம்ப் ஆஃப் சாண்ட் என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. டெய்ஸி ராக்வெல் என்பவர் இதனை மொழிபெயர்த்தார். இந்த நூலுக்கு தற்போது சர்வதேச புக்கர் பரிசு கிடைத்துள்ளது. 64 வயதான கீதாஞ்சலியை சந்தித்துப் பேசினோம்.  நீங்களே உங்கள் நூலை ஆங்கிலம், இந்தி மொழியில் எழுதியுள்ளீர்கள். தற்போது விருதுபெற்ற நாவல் கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உங்களுடைய படைப்புகளை நீங்களே மொழிபெயர்க்க ஆசைப்பட்டுள்ளீர்களா? என்னுடைய கிரியேட்டிவிட்டியான எழுத்து என்பது இந்தி மொழியில்தான். பிரேம்சந்தின் சுயசரிதை நூலை ஆங்கிலத்தில் எழுதினேன். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்பதைவிட நான் இந்தியில் புதிதாகவே நூலை எழுதிவிட முடியும்.  டாம் ஆஃப் சாண்ட் நாவல், எப்படி ஒருவரின் இறந்தகாலம் தினசரி வாழ்க்கையை மாற்றுகிறது, வடிவமைக்கிறது என விவரிக்கிறது. 60 ஆண்டுகள் கழித்தாலும் கூட இந்த விளைவுகள் நடைபெறுகின்றன. வரலாற்றோடு ஒருவர் சரியான உறவை எப்படி பேணுவது? நாவலில் வரும் இறந்தகாலம் என்பது 50-60 ஆண்டுகள் ஆகும். இறந்த காலத்தின் பாதிப்புகள் நம்மை

அமெரிக்காவைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் - கீதாஞ்சலி ராவ்

படம்
  பிறரது வாழ்க்கையை மாற்ற விரும்புகிறேன்!  கீதாஞ்சலி ராவ், இந்தியாவை பூர்விகமாக கொண்ட அமெரிக்க மாணவி.  அமெரிக்காவின் கொலராடோவில் ஹைலேண்ட் ரான்ஞ்சில் பள்ளிப்படிப்பு படிக்கிறார் கீதாஞ்சலி. கூடவே, கொலராடோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் ஆராய்ச்சி செய்து வருகிறார். தான் கேள்விப்படும் செய்தியிலிருந்து பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்குவது கீதாஞ்சலியின் வழக்கம். ஜிகா வைரஸ் நோய் பரவியபோது,  ஜீன் எடிட்டிங் செய்வதன் மூலம் நோயை கட்டுப்படுத்த முடியுமா என்று யோசித்தார்.2014ஆம் ஆண்டு மலேசிய விமானம் காணாமல் போனபோது, கருப்பு பெட்டியை கண்டுபிடிப்பதற்கான கருவியைக் கண்டுபிடித்தார்.  அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஃபிளின்ட் நகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, குடிநீரில் உள்ள காரீயம் என்ற நச்சுப் பொருளைக் கண்டுபிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தார்.  அண்மையில், கைண்ட்லி (Kindly) எனும் ஆப் ஒன்றை கோடிங் எழுதி உருவாக்கியுள்ளார். இதனை ப்ரௌசரில் இணைத்து கொள்வதன் மூலம், இளம் வயதினர் சைபர் தாக்குதல்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியும்.  இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவியுடன் செயற்கை நுண்ணற