இடுகைகள்

சுரங்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் ரஷ்யாவில் நடைபெற்ற மோசமான விபத்துகள்

படம்
  பிரிட்டனில் நடைபெற்ற சுரங்க விபத்து   மோசமான சுரங்க விபத்து என்பது பிரிட்டனில் நடந்த ஆண்டு 1966. இங்கு அபெர்ஃபான் என்ற கிராமப் பகுதியில் சுரங்கம் ஒன்று தோண்டப்பட்டு செயல்பட்டு வந்தது. சுரங்க வேலைக்காக வந்த மக்கள் அங்கேயே தங்கத் தொடங்கினர். இதனால் அங்கு மக்கள்தொகையும் அதிகரித்து வந்தது. சுரங்கம் தோண்டுபவர்கள் அதில் உருவாகும் கழிவை முறையாக அப்புறப்படுத்தவேண்டும். ஆனால் பெரும்பாலும் அதற்கு தனியாக வேறு செலவழிக்க வேண்டுமாக என அங்கேயே அருகில் உள்ள இடங்களிலேயே கழித்துக் கட்டுவது வழக்கம். அப்படித்தான். இந்த சுரங்கத்தில் உருவான கழிவுகளையும் கிராமத்தில் குவித்து வைத்தனர். அது பெரிய பிரச்னையாகவெல்லாம் இல்லை. அதுவும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 1966 வரைதான். அப்போதுதான் அங்கு 17 மி.மீ மழை பெய்திருந்தது. இதனால் நிலம் மென்மையாக குழைந்துபோய் கிடந்தது. கழிவுகள் உயரமாக குவித்து வைக்கப்பட்டிருந்ததால் அவை அப்படியே கீழே பள்ளமாக இருந்த கிராமத்தை நோக்கி வரத் தொடங்கின. இப்படி வந்த சுரங்க கழிவுகளின் மேகம் மணிக்கு 21 மைல். பள்ளி, மருத்துவமனை, 18 வீடுகள் என அனைத்தையும் சுரங்க கழிவுகள் மேலே விழுந்து உடைத்த

தெரியுமா? புவியியல் சார்ந்த அருஞ்சொற்கள்!

படம்
  தெரியுமா? ஆக்சலரோகிராஃப் (Accelerograph) நிலநடுக்கத்தை துல்லியமாக கணக்கிடும் கருவி. இதிலுள்ள மூன்று ஆக்சலரோமீட்டர் தலைப்பகுதி, நிலநடுக்கத்தை அளவிடுகிறது. இதனை இணையத்தில் நேரடியாகவும் இணைத்து பயன்படுத்தலாம்.  ஆக்சலரோமீட்டர் இக்கருவியை ஹெலிகாப்டர், கப்பல், விமானம் ஆகியவற்றில் ஈர்ப்புவிசை சார்ந்த ஆய்வுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். சீஸ்மோமீட்டரையும் ஆக்சலரோமீட்டராக பயன்படுத்தலாம்.   ஆசிட் ராக்  பாறையில் 60 சதவீத அளவுக்கு சிலிகா  இருந்தால் அல்லது சிலிகா கனிமங்களாக இருந்தால் அதற்கு ஆசிட் ராக் என்று பெயர். இதில் பத்து சதவீதம் அளவுக்கு குவார்ட்ஸ் இருக்கும். 

புவியியல் சொற்கள்! - சிலிகா பாறை, கடல் படுகை, இயக்கநிலை எரிமலை, அமில கழிவுநீர்

படம்
  Acidic Rock அதிகளவு சிலிகா கொண்டுள்ள பாறை. எடு. கிரானைட் (Granite), ரியோலைட் (Rhyolite) Accumulation Zone பனிமலையின் மேற்பகுதி. அதிகளவு பனி குவியும் இடம் என்று கூறலாம். இதன் கீழ்ப்பகுதிக்கு அபிளேஷன் ஜோன் (Ablation zone)என்று பெயர்.  Accretionary Wedge கடல் படுகை, கண்டத்தட்டு ஆகியவற்றுக்கு இடையிலுள்ள வண்டல் மண் பகுதி.  Active Volcano தற்போது இயக்கநிலையில் உள்ள எரிமலையைக் குறிக்கிறது Acid Mine Drainage (AMD) சுரங்கப்பணிகளின்போது அதிலிருந்து வெளிவரும் அமில கழிவுநீர். சுரங்கப்பணியின் போது, சல்பைடு கனிமங்கள் ஆக்சிஜனோடு வினைபுரிந்து அமில கழிவு நீர் உருவாகிறது. 

பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம் எடுக்கமுடியுமா?

படம்
  பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம்! பிரான்சில் உள்ள நகரம், ஏவியன். இங்கு முன்னர் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது பயன்பாடற்ற அதிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவை சேகரித்து மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறார்கள். 50 அடி ஆழத்தில் குழாய்களைப் பதித்து அதன் மூலம் மீத்தேன் வாயுவை சேகரித்து பயன்படுத்துகிறார்கள்.  பொதுவாக பயன்பாடற்ற நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெளியாகும். இதனைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் சிலர் முயன்று வருகிறார்கள். மீத்தேனிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது புதிய முயற்சி அல்ல. 1950ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் பயன்பாடற்ற சுரங்கங்களிலிருந்து மீத்தேன் வாயுவிலிருந்து மின்சாரத்தை பெற்று வருகிறார்கள். ஜெர்மனியில் இப்படி பெறும் மின்சாரம் மூலம் 1,50,000 வீடுகள் பயன்பெறுகின்றன.  சுரங்கத்தில் வெளியாகும் மீத்தேனை தடுப்பது கடினம். இந்த வாயு, நீருடன் சேர்ந்தால் நச்சுத்தன்மையை உருவாக்கும். வாயுவை அப்படியே வளிமண்டலத்தில் சேருமாறு விட்டால், பசுமை இல்ல வாயுக்களின் அளவு கூடும். பிரான்ஸில் ஃபிராங்கைஸ் டி எனர்ஜி என்ற அமைப்பு, மீத்தேனை சேகர

புவியியல் - கனிமத்தைக் கண்டறிவது எப்படி?

படம்
  கனிமத்தை அறிதல் சில கனிமங்கள் நீலம், மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களைக் கொண்டிருக்கும். இப்படி இருந்தால் இவற்றை எளிதாக கனிமங்கள் என அடையாளம் காணலாம். கனிமங்களுக்கு ஏற்படும் நிறத்தை குறிப்பிட்ட அலைநீளத்தில் உள்ள ஒளியை உள்வாங்கும் காரணம் எனலாம். கனிமங்களின் வடிவமைப்பிற்கு ஏற்றபடி ஒளியை உள்வாங்கும் தன்மை அமையும். இதன்காரணமாக இதன் நிறங்களும் மாறும்.  கிரிஸ்டல் பொதுவாக அனைத்து கனிமங்கள் கிரிஸ்டல் அமைப்பில் இருக்கும். அனைத்து அணுக்களும் குறிப்பிட்ட ஒழுங்குமுறையில் முப்பரிமாண தன்மையில் அமைந்திருப்பதை கிரிஸ்டல் அமைப்பு எனலாம். அணுக்களும் அதன் பிணைப்பும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும். அணு அல்லது மூலக்கூறுகள்  ஒரே மாதிரியான அமைப்பில் இணைந்திருப்பதை யூனிட் செல் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த யூனிட் செல்களே, கிரிஸ்டல் அமைப்பை தீர்மானிக்கின்றன.  யூனிட் செல்கள் ஒரே மாதிரியான கட்டமைப்பில் இருந்தாலும் கனிமங்கள் பல்வேறு வேதிப்பொருட்களின் சேர்க்கைகளைக் கொண்டவை. கிரிஸ்டல் அமைப்பு, அணுக்களின் கட்டமைப்பு, நிலப்பரப்பு சூழல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைகிறது.  தகவல் Nature guide rocks and minerals

பயன்பாடு இல்லாத கைவிடப்பட்ட சுரங்கத்திலிருந்து மின்சாரம்!

படம்
  பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம்! பிரான்சில் உள்ள நகரம், ஏவியன். இங்கு முன்னர் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது பயன்பாடற்ற அதிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவை சேகரித்து மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறார்கள். 50 அடி ஆழத்தில் குழாய்களைப் பதித்து அதன் மூலம் மீத்தேன் வாயுவை சேகரித்து பயன்படுத்துகிறார்கள்.  பொதுவாக பயன்பாடற்ற நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெளியாகும். இதனைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் சிலர் முயன்று வருகிறார்கள். மீத்தேனிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது புதிய முயற்சி அல்ல. 1950ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் பயன்பாடற்ற சுரங்கங்களிலிருந்து மீத்தேன் வாயுவிலிருந்து மின்சாரத்தை பெற்று வருகிறார்கள். ஜெர்மனியில் இப்படி பெறும் மின்சாரம் மூலம் 1,50,000 வீடுகள் பயன்பெறுகின்றன.  சுரங்கத்தில் வெளியாகும் மீத்தேனை தடுப்பது கடினம். இந்த வாயு, நீருடன் சேர்ந்தால் நச்சுத்தன்மையை உருவாக்கும். வாயுவை அப்படியே வளிமண்டலத்தில் சேருமாறு விட்டால், பசுமை இல்ல வாயுக்களின் அளவு கூடும். பிரான்ஸில் ஃபிராங்கைஸ் டி எனர்ஜி என்ற அமைப்பு, மீத்தேனை சேகர

எது கனிமம்?

படம்
  தெரியுமா ?  எது கனிமம்? நிலக்கரி, எரிபொருள், இயற்கை எரிவாயு ஆகியவற்றையும் கூட கனிமம் என பொதுவாக கூறலாம். இவை தேசத்தின் முக்கியமான இயற்கை வளங்களாகும். மேற்சொன்ன பொருட்களை துல்லியமாக அடையாளப்படுத்த ஹைட்ரோகார்பன் எனலாம். திரவங்கள் மற்றும் வாயுக்களை கறாரான விதிகளின்படி பார்த்தால் கனிமம் இல்லை என்று கூறிவிடலாம். வைரம், மரகதம் ஆகியவை ஆய்வகத்தில் உருவாக்கப்படுகின்றன. இயற்கையாக உருவாகவில்லை என்பதால் இவற்றை கனிமம் என்று கூறமுடியாது. உணவில் உள்ள கனிமங்கள் என்று கூறப்படுபயான இரும்பு, கால்சிய்ம, ஜிங்க் ஆகியவற்றையும் துல்லியமாக கனிமம் என்ற வகையில் வரையறுக்க முடியாது.  ஒரே வேதிப்பொருட்களைக் கொண்ட உலோகங்கள்  தங்கம், செம்பு.  உலோகமல்லாத சல்பர், கார்பன் ஆகியவற்றை இயற்கையான கூறுகள் (Native elements) எனலாம்.   உலோகம் அல்லது பகுதியளவு உலோகம் சல்பருடன் இணைந்தால், அதனை சல்பைடு எனலாம். எ.டு. சால்கோசைட் (Chalcocite) இதிலுள்ள உலோகம், செம்பு.  நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய வேதிப்பொருட்கள் உலோகத்தோடு இணைந்தால் அதனை ஹைட்ராக்சைடு எனலாம். எ.டு. ப்ரூசைட் (Brucite), இதிலுள்ள உலோகம், மாங்கனீசு.  ஹாலோஜன் பொருட்களான குளோரின

ஆராய்ச்சியில் கிடைத்த புதிய கனிமம்

படம்
  புவியியல் பூமியிலிருந்து கிடைத்த புதிய கனிமம்! போட்ஸ்வானா நாட்டில்  தொன்மையான வைரம் ஒன்று பெறப்பட்டது. இதனை ஆராயும்போது தற்செயலாக அதில் கிடைத்த கனிமம் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த புதிய கனிமத்திற்கு டேவ்மாவோய்ட் (davemaoite)என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  போட்ஸ்வானாவின் ஆரபா நகரிலுள்ள சுரங்கத்தில், வைரம் கண்டறியப்பட்டது. . நான்கு மில்லிமீட்டர்  அகலம் கொண்ட வைரத்தின் எடை 81 மில்லிகிராம் ஆகும். 1987ஆம் ஆண்டு இதை வைத்திருந்த வைர வியாபாரி, இதை கலிஃபோர்னியா தொழில்நுட்ப கழக விஞ்ஞானியிடம் விற்றுவிட்டார். விற்றவருக்கோ, அதை வாங்கிய விஞ்ஞானிக்கோ கூட வைரம் எந்தளவு சிறப்பான அம்சம் கொண்டது என்று அப்போது தெரியவில்லை.  தற்போது இந்த வைரம், கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நெவடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆலிவர் சானர் ஆய்வு செய்துள்ளார். பொதுவாக, வைரம் பூமியின் கீழ்ப்பகுதியில் 120 முதல் 250 கி.மீ. தொலைவில் உருவாவது வழக்கம். இன்னும் சில வைரங்கள் மீசோஸ்பியர் அடுக்கில் அதாவது, மேற்பரப்பிலிருந்து 660 கி.மீ. தொலைவில் உருவாகும் வாய்

ரத்தினங்கள் - அறிவோம்

படம்
  ரத்தினங்கள் ரத்தினங்களை, சுரங்கங்களிலிருந்து அகழ்ந்து எடுக்கிறார்கள். துளையிடுவது, வெடிவைப்பது ஆகிய முறையில் பாறைகளை உடைத்து ரத்தினக்கற்களை வெளியே எடுக்கிறார்கள். அரியவகை, குறைந்த தேய்மானம், அழகு ஆகியவற்றைப் பொறுத்து கற்களை பட்டைதீட்டி விலை வைத்து விற்கிறார்கள். சுரங்கத்திலிருந்து எடுத்து சுத்தம் செய்து அதன் வடிவமைப்பை மாற்றுகிறார்கள். பிறகு அதனை பாலீஸ் செய்து தனியாக அல்லது நகையில் பொருத்தி விற்கிறார்கள். வைர சந்தையில் வைரங்களை அகழ்ந்தெடுத்து விற்பதில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது.  கி.மு.25 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான காலகட்டம் தொடங்கி ரத்தினங்களை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எகிப்தில் மார்பில் அணியும் தொன்மை ஆபரணம் ஒன்று கண்டறியப்பட்டது. இதில் லாசுலி, கமேலியன், லாபிஸ் போன்ற அரிய கற்கள் பதிக்கப்பட்டிருந்தன என்பதை புவியியல் வல்லுநர்கள் கண்டுபிடித்தனர். இதேபோல மாசடோமியாவில் (தற்போதைய ஈராக்) நெக்லஸ் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதிலும் மேற்சொன்ன அரியவகை ரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன. இதன் காலம் கி.மு.2500 ஆகும்.  தகவல் nature guide rocks and minerals book

வைரத்திற்குள் இருந்த புதிய கனிமம்! - புதிய ஆராய்ச்சியில் வெளிப்பட்ட கனிமம்

படம்
  வைரத்திற்குள் இருந்த புதிய கனிமம்! போட்ஸ்வானா நாட்டில்  தொன்மையான வைரம் ஒன்று பெறப்பட்டது. இதனை ஆராயும்போது தற்செயலாக அதில் கிடைத்த கனிமம் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த புதிய கனிமத்திற்கு டேவ்மாவோய்ட் (davemaoite)என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  போட்ஸ்வானாவின் ஆரபா நகரிலுள்ள சுரங்கத்தில், வைரம் கண்டறியப்பட்டது. . நான்கு மில்லிமீட்டர்  அகலம் கொண்ட வைரத்தின் எடை 81 மில்லிகிராம் ஆகும். 1987ஆம் ஆண்டு இதை வைத்திருந்த வைர வியாபாரி, இதை கலிஃபோர்னியா தொழில்நுட்ப கழக விஞ்ஞானியிடம் விற்றுவிட்டார். விற்றவருக்கோ, அதை வாங்கிய விஞ்ஞானிக்கோ கூட வைரம் எந்தளவு சிறப்பான அம்சம் கொண்டது என்று அப்போது தெரியவில்லை.  தற்போது இந்த வைரம், கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நெவடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆலிவர் சானர் ஆய்வு செய்துள்ளார். பொதுவாக, வைரம் பூமியின் கீழ்ப்பகுதியில் 120 முதல் 250 கி.மீ. தொலைவில் உருவாவது வழக்கம். இன்னும் சில வைரங்கள் மீசோஸ்பியர் அடுக்கில் அதாவது, மேற்பரப்பிலிருந்து 660 கி.மீ. தொலைவில் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

எதிரிகளை ஆல் இன் ஆலாக வதம் செய்யும் அகோரி அகண்டா! - அகண்டா - பொயபட்டி ஸ்ரீனு- தெலுங்கு

படம்
  அகண்டா - பாலகிருஷ்ணா(NBK) அகண்டா பொயபட்டி ஸ்ரீனு என்பிகே, பிரக்யா ஜெய்ஸ்வால் முரளி கிருஷ்ணா, புகழ்வாய்ந்த பணக்கார விவசாயி. இவர், தன்னுடைய பிராந்தியத்தில் உள்ள ரவுடிகளை அடித்து திருத்தி நம்நாடு எம்ஜிஆர் போல பக்குவப்படுத்துகிறார். அப்படி ஒருவரை அடித்த அடியில் நேர்மையான மனிதராக மாறி, அத்தொகுதியில் வென்று எம்.பியாகிறார். இந்த நேரத்தில் அங்கு சாமியாராக உள்ளவர், தனக்கென ரவுடி கூட்டத்தை வைத்து சுரங்கங்களை தோண்டுகிறார். அதில் கிடைக்கும் யுரேனிய பாதிப்பு பற்றி அரசு அதிகாரிகளுக்கு கூட சொல்லுவதில்லை.  கழிவுகளை ரிவர்ஸ் போரிங் முறையில் நிலத்திற்கு அடியில் செலுத்துகிறார்கள். இதனால் மண், நீர் மாசுபட மக்களும் , குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் முரளி கிருஷ்ணாவிற்கும் சுரங்க மாஃபியாவிற்கும் முட்டல் மோதல் தொடங்குகிறது. இதன் அடுத்த விளைவாக, முரளி கிருஷ்ணாவின் மருத்துவமனையில் குண்டு வைத்து வெடிக்க வைக்கப்படுகிறது. இதில் பிராந்திய எம்பி பலியாகிறார். சாமியாரின் தந்திரத்தால் தேசிய புலனாய்வு முகமையால் முரளி கிருஷ்ணா கைதாகிறார். அவரது மனைவியின் மாவட்ட ஆட்சியர் பதவியும் பறிபோகிறது. இப்போது அவர்களை யா

பழங்குடி மக்களிடம் உள்ள கனிம வளங்களை பற்றி மட்டுமே இந்திய அரசு கவலைப்படுகிறது! பிரகாஷ் லூயிஸ்

படம்
  பிரகாஷ் லூயிஸ்  எழுத்தாளர் நீங்கள் ஸ்டேன் சுவாமியிடம் அவரைப் பற்றி நூல் எழுதுவதாக கூறினீர்களா? இல்லை. சில சம்பவங்களால் நான் அவரைப் பற்றி நூல் எழுதுவதை கூறமுடியவில்லை. அவரின் அலைபேசி அவரிடம் இருந்து நீக்கப்பட்டுவிட்டதும் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. அவரைச்சுற்றி இருந்தவர்களிடம் பேச முயன்றாலும் அதுவும் சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால் முன்னாடியே சிலரிடம் இதுபற்றி பேசியிருக்கிறேன்.  நான் எழுதியுள்ள நூலில் ஸ்டேன் சுவாமி, அவரது காலகட்டம், அவரின் செயல்பாடுகள் ஆகியற்றை விளக்கியுள்ளேன்.  ஸ்டேன் சுவாமி இறந்து சில மாதங்களிலேயே அவரைப் பற்றிய நூலை வெளியிட்டு விட்டீர்கள். ஜூலை 5 இல் அவர் மறைந்தார். அதற்குப் பிறகு சில மாதங்களிலேயே அவரது செயல்பாடுகளைப் பற்றி தகவல் சேகரித்து எழுத முடிந்ததா? 2018ஆம் ஆண்டு பீமாகரேகான் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போதிலிருந்தே நான் நூலுக்கான தகவல்களை சேகரித்து வந்தேன். தேசிய புலனாய்வு முகமை உள்ளே வந்தபோது நான் தகவல்களை சேகரித்து ஆராய்ந்துகொண்டிருந்தேன். பிறகுதான் ஸ்டேன்சுவாமி கைதுசெய்யப்பட்டார். சட்டவிரோத செயல்களுக்காக அக்டோபர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சட்டவிரோ

செயற்கை வைரங்களை நோக்கி நகரும் வைர விற்பனை நிறுவனங்கள்! - இயற்கை வைரத்தை அகழ்ந்தெடுக்க கூடுகிறது பொருட்செலவு

படம்
            செயற்கை வைரங்களை நோக்கி நகரும் உலகம் ! செய்தி ஆஸ்திரேலியாவின் கிழக்கு கிம்பர்லி பகுதியில் செயல்பட்டு வந்த பழமையான ஆர்கைல் வைரச்சுரங்கம் , லாபகரமாக இயங்கவில்லை என்பதால் மூடப்பட்டிருக்கிறது . பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் வைரச்சுரங்கங்கள் காமதேனு போல வைரங்களை கொடுத்துக்கொண்டே இருக்காது . ஆர்கைல் வைரச்சுரங்கம் லாபகரமாக இயங்கவில்லை என்று அதன் உரிமையாளர் ரியோ டின்டோ கூறி , அதனை மூடியுள்ளார் . 1983 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கிய இச்சுரங்கத்தில் 8 கோடியே 65 லட்சம் கேரட் வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன . உலகில் விற்பனையாகும் 90 சதவீத பிங்க் வைரங்கள் ஆர்கைல் சுரங்கத்திலிருந்துதான் பெறப்பட்டன . தொண்ணூறுகளில் அதிக விலைக்கு விற்காத தரம் குறைந்த பழுப்பு மற்றும் பல்வேறு நிறமுடைய வைரக்கற்களை வாங்கி , பட்டை தீட்டி விற்பனை செய்தது இந்தியாவிலுள்ள குஜராத் மாநில வியாபாரிகள்தான் . ஆர்கைல் சுரங்கம் மூடப்படுவதால் இனி இருப்பிலுள்ள வைரங்களை நகை வணிகர்கள் விற்கலாம் . அரியவை என்பதால் அதன் விலை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது . இனி விற்பனைக்கு வரும் வைரங்கள் ஆய்வகத

பூமிக்கு அடியிலுள்ள மர்மத்தை சீலன் நண்பர்கள் குழு கண்டுபிடித்ததா? - பூமிக்கு அடியில் ஒரு மர்மம் - பாலபாரதி

படம்
  சென்னை புத்தக காட்சி 2021 நந்தனம்  பூமிக்கு அடியில் ஓர் மர்மம் யெஸ். பாலபாரதி வானம் பதிப்பகம் பக்கம் 164 ரூ. 140 விகடன் விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதியின் மற்றொரு சிறார் நாவல். கதை நடைபெறுவது நாகப்பட்டினத்தில். அங்கு வாழும் சிறுவர்கள் சீலன், புகழ்மணி, அன்வர் ஆகியோர்தான் நாயகர்கள். இவர்கள் அங்குள்ள அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்களுக்கு அங்குள்ள சுயம்புநாதர் கோவிலிலுள்ள சுரங்கம் பற்றிய தகவல் கிடைக்கிறது. இவர்களோடு கண்ணன், ஜெமி, ஜெஸி ஆகியோர் இணைந்துகொள்கிறார்கள் சுரங்கம் என்றாலே உடனே நமக்கு என்ன தோன்றும்? ஆகா, பொக்கிஷத்தை அடையப்போகிறோம் என்கிற கற்பனை சந்தோஷம்தானே? அதேதான் கதையின் மாந்தர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.  கதையின் போக்கில் பாலபாரதி சொல்லும் பல்வேறு விஷயங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. ஆட்டிச சிறுவனை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் சிறுவர்கள் குழு. அவனது செயல்பாடு வினோதமாக தோன்றினாலும் அவன்தான் குயிலானோடு இயல்பாக பழகுகிறான். அவனது நண்பர்கள் குயிலானை எதிரியாக பார்க்கும்போது கூட கண்ணன் அப்படி பார்ப்பதில்லை.  அவனை விட்டுக்கொடுக்காத ஜெமி, ஜெஸி பாத்திரங்கள் அழ

நிலவில் சுரங்கம்!

படம்
  நிலவில் சுரங்கம் நிலவில் கால்வைத்து சாதனை செய்து இன்று சூரியன் வரை ஆராய சென்றுவிட்டனர். இப்போது மீண்டும் நிலவு மீதான ஆராய்ச்சி மோகம் ஆராய்ச்சியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. நிலவில் நமக்குத் தேவையான என்ன விஷயங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என பார்ப்போம்.  சிலிகான் நாம் பயன்படுத்தும் போன் திரை முதற்கொண்டு பயன்படும் முக்கியமான வேதிப்பொருள். நிலவில் கிடைக்கும் தூசி துப்புகளை தட்டியெடுத்து சுத்திகரித்தால் சிலிகான் பிரச்னை தீர்ந்துவிடும். இதனைப் பயன்படுத்தி சோலார் பேனல்களை தயாரித்து ஆற்றலைப் பெருக்கலாம்.  அரிய உலோகங்கள் பூமியில் நாம் சுரங்கங்கள் மூலம் சிரமப்பட்டு பெறுவது 17 அரிய உலோகங்கள். இவைதான் போன் முதல் பேட்டரி வரை நாம் பயன்படுத்த உதவுகின்றன. பாஸ்பரஸ் முதல் பொட்டாசியம் வரை நிலவில் கிடைப்பது உறுதியானால், அங்கேயே சென்று தங்குவது சுலபம். பிளாட்டினம் வகையறா உலோகங்கள் கிடைத்தால் ஃபேஸ்மேக்கர் கருவிகளை செய்வது எளிதாகிவிடும்.  நீர் பூமியில் குறைந்து வரும் நீர், நிலவின் துருவப்பகுதிகளில் உள்ளது. 2.9 பில்லியன் மெட்ரிக் டன்கள் நீர், கிடைத்தால் குடிநீராகவும், விவசாயம் செய்யவும் பயன்படுத்தலாம். இதிலிர