பிட்காயினுக்கு அனுமதி வழங்கிய எல்சால்வடோர் நாடு!
பிட்காயினுக்கு அனுமதி எல் சால்வடோர் நாடு பிட்காயினை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது . உலகில் முதன்முதலாக டிஜிட்டல் கரன்சிக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது . இதற்குப்பிறகு நாட்டின் தலைவர் நயீப் புகாலே பிட்காயின் மாநாட்டில் இதனை மீண்டும் ஒருமுறை கூறினார் . இனி எல் சால்வடோரில் பிட்காயின் வழியாக வணிகத்தை செய்பவர்களுக்கு அனுமதி உண்டு . இது கட்டாயமல்ல . அமெரிக்க டாலரும் எல் சால்வடோரின் அதிகாரப்பூர்வ கரன்சிதான் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது . இந்த இரு கரன்சிகளின் மதிப்பும் சந்தையின் மதிப்பில் தீர்மானிக்கப்படும் . டாலர் இதற்கு அடையாள மதிப்பாக இருக்கும் . நாட்டிலுள்ள எழுபது சதவீத குடிமக்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பணப்பரிமாற்ற முறை போதுமானதாக இல்லை . தாராள வர்த்தகத்திற்கு ஏற்றது போல பணப்பரிமாற்ற முறை டிஜிட்டல் கரன்சியில் செய்யப்படுவது நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சியைத் தரும் என்று கூறுகிறது அரசு . கிரிப்டோ கரன்சிகளைப் பொறுத்தவரை தொழில்நுட்பம் வெளிப்படையானது என்றாலும் இதனைப் பின்பற்றி ஏராளமான கொள்ளையர்கள் வருவார்கள் என்பது