இடுகைகள்

ரான்சம்வேர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிட்காயினுக்கு அனுமதி வழங்கிய எல்சால்வடோர் நாடு!

படம்
            பிட்காயினுக்கு அனுமதி எல் சால்வடோர் நாடு பிட்காயினை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது . உலகில் முதன்முதலாக டிஜிட்டல் கரன்சிக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது . இதற்குப்பிறகு நாட்டின் தலைவர் நயீப் புகாலே பிட்காயின் மாநாட்டில் இதனை மீண்டும் ஒருமுறை கூறினார் . இனி எல் சால்வடோரில் பிட்காயின் வழியாக வணிகத்தை செய்பவர்களுக்கு அனுமதி உண்டு . இது கட்டாயமல்ல . அமெரிக்க டாலரும் எல் சால்வடோரின் அதிகாரப்பூர்வ கரன்சிதான் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது . இந்த இரு கரன்சிகளின் மதிப்பும் சந்தையின் மதிப்பில் தீர்மானிக்கப்படும் . டாலர் இதற்கு அடையாள மதிப்பாக இருக்கும் . நாட்டிலுள்ள எழுபது சதவீத குடிமக்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பணப்பரிமாற்ற முறை போதுமானதாக இல்லை . தாராள வர்த்தகத்திற்கு ஏற்றது போல பணப்பரிமாற்ற முறை டிஜிட்டல் கரன்சியில் செய்யப்படுவது நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சியைத் தரும் என்று கூறுகிறது அரசு . கிரிப்டோ கரன்சிகளைப் பொறுத்தவரை தொழில்நுட்பம் வெளிப்படையானது என்றாலும் இதனைப் பின்பற்றி ஏராளமான கொள்ளையர்கள் வருவார்கள் என்பது

ரான்சம்வேரின் எதிர்காலம்! - கிரிம் ஸ்பைடரின் கையில் உலகம்!

படம்
கணினிகளைத் தாக்கும் ரான்சம் வேர் தற்போது பல்வேறு நாடுகளிலுள்ள கணினிகளைத் தாக்கி தகவல்களை சிறைப்பிடித்து காசு கேட்டு மிரட்டி தகவல்களை மீளத் தருவது நடைமுறையாகி வருகிறது. ரையுக் எனும் ரான்சம்வேர் வகை புரோகிராம் இங்கிலாந்திலுள்ள தடயவியல் நிறுவனமான யூரோஃபின்ஸ் மீது நடத்தப்பட்டுள்ளது. இதன்விளைவாக, அங்குள்ள பிற நிறுவனங்களும் மிரண்டு போயுள்ளன. அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள நிறுவனம் 5,30,000 அமெரிக்க டாலர்களைத் தருமாறு மிரட்டப்பட்டுள்ளது. பணத்தையும் பிட்காயின்களாக அக்கவுண்டில் போடுமாறு சட்டவிரோத கும்பல் மிரட்டியுள்ளது. ரஷ்யாவில் செயல்பட்டு வரும் கிரிம் ஸ்பைடர் என்ற நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ரையுக் என்ற ரான்சம்வேரை உருவாக்கியது. இதன் மூலம் இந்நிறுவனம் 3.7 மில்லியன் டாலர்களை இதுவரை சம்பாதித்துள்ளது. இமெயில அட்டாச்மென்ட் மூலம் கணினிகளை தாக்கும் ரான்சம்வேர் கணினியில் உள்ள அனைத்து கோப்புகளையும் என்கிரிப்ட் செய்துவிடும். பின் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே கணினியிலுள்ள கோப்புகளை மீட்க முடியும் என செய்தி மட்டுமே வரும். இப்போது பணம் என்றாலும் இதன் எதிர்காலம் வேறுமாதிரியான அச்சுறுத்தலாகவே இருக்க