குடும்பங்களை நெருக்கடிக்குள்ளாக்கி பிரிக்கும் பிரிட்டிஷ் அரசின் விசா கொள்கை!
இங்கிலாந்து அரசு, நாட்டில் உள்ள குடிமகன்கள் வெளிநாட்டில் உள்ளவர்களை காதலித்து மணக்க புதிய கட்டுப்பாடு ஒன்றை உருவாகியுள்ளது. இதன்படி, வெளிநாட்டில் உள்ளவர் இங்கிலாந்தில் வந்து குடும்பத்துடன் வாழ வேண்டுமெனில் 48,500 டாலர்கள் வருமானம் தேவை. அப்போதுதான் குடும்ப விசாவை அரசு வழங்கும். அரசின் புதிய விதிமுறை காரணமாக வேறு நாட்டினரை காதலித்து மணந்தவர்கள், பிரச்னைக்கு உள்ளாகியுள்ளனர். அரசின் வரம்பிற்குட்பட்ட ஆண்டு வருமானத்தை ஒருவர் பெற்றிருப்பது கடினம். ஆண்டுக்கான தொகை என்று கூறினால் கூட அதை கணவர் அல்லது மனைவி சம்பாதித்து கூடவே குழந்தைகளையும் வளர்ப்பது கடினமான காரியம். அரசின் நெருக்கடி காரணமாக வறுமை நிலையில் உள்ளவர்கள் பலரும் தங்கள் மனைவி அல்லது கணவரை வெளிநாட்டில் தங்கவைக்க வேண்டியுள்ளது. அல்லது பிரிந்திருக்க வேண்டியுள்ளது. ஒன்றாக இருப்பவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது. அரசு கூறும் தொகையை கணவன், மனைவி இருவரும் சம்பாதித்தால் மட்டுமே ஒன்றாக சேர்ந்திருக்கவேண்டிய நிலை. இதில், அவர்கள் எப்படி குழந்தை பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வாழ முடியும்? பெரும்பகுதி வாழ்க்கை அலுவலகத்தில் அல்லது