இடுகைகள்

சினிமா - சிங்கிள்ஷாட் சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிங்கிள்ஷாட்டில் முழுசினிமா!

படம்
சிங்கிள் ஷாட் சினிமா - ச.அன்பரசு சினிமாவில் கதை யோசித்து திரைக்கதை எழுதி படமாக்க எவ்வளவு நாட்கள் தேவைப்படும்? சராசரியாக மூன்று மாதங்கள் தேவை. ரைட்! அண்மையில் கன்னடத்தில் உருவாகியுள்ள பிம்பா என்ற படம் 90 நிமிடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே லொக்கேஷனில் ஒரு நடிகரை மட்டுமே வைத்து 90 நிமிடங்களில் ஒரே ஷாட்டில் படம் தொடங்கி நிறைவடைகிறது என்பது சொல்ல ஈஸி என்றாலும் சாத்தியப்படுத்துவது எளிதான காரியமல்ல. இருபதாம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் வாழ்ந்த இலக்கிய ஆளுமையான கவிஞர் சாம்சாவின்(சாமி வெங்கடாத்ரி ஐயர்) வாழ்வை கூறும் கதையே பிம்பா.   சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்று போலீசாரால் கைதுசெய்யப்பட்ட கவிஞர் சாம்சா, கடுமையான சித்திரவதைகளால் மனம் பிறழ்ந்தார். போலீஸ் தன்னை மீண்டும் கைது செய்துவிடும் என அஞ்சியே வாழ்ந்தவர் ஐந்தாவது முறை செய்த தற்கொலை முயற்சிக்கு பலியானார். “பதினைந்துக்கு பதினைந்து அடி அறையில் 90 நிமிடங்களுக்குள் படத்தைக் கொண்டுவர ரிகர்சல் செய்து படம்பிடித்தோம்.” என்று பேசுகிறார் துணை இயக்குநர், தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசன் பிரபு. பிம்பா படத்தில்   சாம்சாவாக உயிரோட்டமா