இடுகைகள்

ஜெர்மனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஈகோ சோசலிசம் - முதலாளித்துவத்ததிற்கு மாற்றா?

படம்
ஜனநாயகப் பாதை வழியாகவே சர்வாதிகாரம் உள்ளே நுழைகிறது. இதை தவறு என்று சொல்ல முடியாது. அந்தந்த காலகட்ட மக்கள் சர்வாதிகாரியை அவர்களாகவே வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள். பின்னாளில் செய்த தவறின் விளைவை அனுபவிக்கிறார்கள். அரசும் அதன் செயல்பாட்டில் பல்வேறு மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது. இந்தியா போன்ற நாட்டில் என்ஜிஓ அரசு என்பது சற்று புதிது. ஆனால் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற ஒன்றை காங்கிரஸ் காலத்தில் வலதுசாரி ஆளுமைகள் நடத்தினர். அந்த போராட்டத்தின் வழியாக ஆம் ஆத்மி கட்சி தோன்றியது. இந்த கட்சியின் செயல்பாடு, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒத்தது. மக்களுக்கு நன்மை கிடைத்தாலும் கூட அக்கட்சி தலைவர், தவறான குற்றச்சாட்டில் சிறைபடும்போதுகூட மக்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை, சாலையில் நின்று தாங்கள் தேர்ந்தெடுத்த முதல்வரை விடுவியுங்கள் என்று கோஷமிடமில்லை. அமைதியாக அரசு காரியங்கள் நடைபெறுகின்றன. இப்படிக்கூட அரசு செயல்பட முடியும் என்ற ஜனநாயக அவலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு நாட்டில் எதற்கு போராட்டம் நடைபெறுகிறது? மக்களின், விவசாயிகளின், தொழில்துறையினரின், சிறுபான்மையினரின் கோரிக

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கான அர்த்தம் - விக்டர் ஃபிராங்கல்

படம்
மேன்ஸ் சர்ச் ஃபார் மீனிங் விக்டர் ஃபிராங்கல் உளவியல் நூல்  ஆஸ்திரியாவைச் சேர்ந்தவரான விக்டர், நாஜிப்படையினரால் பிடிபட்டு வதைமுகாமில் சித்திரவதை செய்யப்பட்டு உயிர் பிழைத்த வரலாறு கொண்டவர். இதுபற்றி அவர் எழுதிய நூல்தான் இது. சித்திரவதை முகாம் என்றதும், முழுமையாக நூல் முழுவதும் மோசமான சித்திரவதை அனுபவங்கள்தான் இருக்கும் என நினைக்கவேண்டியதில்லை. நூல் 69 பக்கங்களைக் கொண்டது. ஆனால் படித்து முடிக்க அந்தளவு எளிமையாக இல்லை. அந்தளவு அனுபவங்களின் அடர்த்தி உள்ளது.  நூல் இருபாகங்களாக உள்ளது. முதல்பகுதி முழுக்க வதை முகாம்களின் அனுபவங்கள் உள்ளன. இரண்டாம் பகுதியில், தனது வதைமுகாம் அனுபவங்களின் அடிப்படையில் அவர் கண்டறிந்த லீகோதெரபி எனும் உளவியல் உத்தியை விளக்கியிருக்கிறார். இந்த உத்திகளை படித்து புரிந்துகொள்வது அவர் சார்ந்த துறையினருக்கு எளிமையாக இருக்கலாம். சாதாரணமாக ஒருவர் அதைப் படித்தால் சற்று தலைச்சுற்றிப்போகும் அபாயம் உள்ளது. முயற்சி செய்யலாம். சில நோயாளிகளைப் பற்றிய அனுபவங்களைக் கூறியுள்ளார். அதைப்படிக்கும்போது முன்முடிவுகளின் ஆபத்து கண்களுக்குத் தெரிகிறது.  நூலின் தொடக்கத்திலேயே தான் வதை முகாம்

வாழ்க்கையில் வலி, வேதனை, இன்பம், துன்பம் என அனைத்தையும் உள்ளடக்கிய சிகிச்சை முறை!

படம்
  பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தத்துவவாதி இமானுவேல் கான்ட், மனிதர்கள் சிந்திக்கும் திறன் பற்றிய கருத்தொன்றைக் கூறினார். மனிதர்கள் தம்மைக் கடந்து வெளி உலகம் என்ற ஒன்றை முழுமையாக அறியவில்லை. நாம் அறிந்த அனைத்துமே அனுபவங்களாக அமைந்தவற்றை மட்டுமே என்றார். இது அன்றைய காலத்தில் பெரும் விமர்சனங்களைப் பெற்ற கருத்தாக அமைந்தது. இதுதான் கெஸ்சால்ட் தெரபியின் அடிப்படை கருத்து.  மனிதர்களின் வாழ்கையில் உள்ள மோசமான அனுபவங்கள், சிக்கல்கள், கஷ்ட நஷ்டங்கள், லட்சியம், ஆசை என அனைத்துமே முக்கியம்தான் என்ற கருத்தை கெஸ்சால்ட் தெரபி ஏற்றது. உலகில் பார்க்கும் புகைப்படங்கள், கேட்கும் பாடல்கள் என அனைத்தையும் நாம் உணர்ந்து பார்க்க முடியாது. அதில் நாம் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்யவேண்டும்.  எதார்த்த நிகழ்ச்சியை ஒரு மனிதர் எப்படி உள்வாங்குகிறார் என்பதே அவரின் பார்வைக்கோணம் உருவாகுவதில் முக்கியமான அம்சமாக இருக்கும். இதைத்தான் கெஸ்சால்ட் தெரபி முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான ஃப்ரிட்ஸ் பெரிஸ் என்பவரின் கருத்தாக இருந்தது. உண்மை என்பது ஒருவரின் தனிப்பட்ட கருத்து, கோணம் அதை எப்படி பார்க்கிற

ரேடார் எப்படி செயல்படுகிறது?

படம்
  quantum radar, china ரேடார் எப்படி செயல்படுகிறது? இரண்டாம் உலகப்போர். அதுதான் பிரிட்டனுக்கு ரேடாரின் முக்கியத்துவத்தை சொன்ன முக்கியமான வரலாற்று காலகட்டம். அப்போது ஜெர்மனியின் அதிபர் ஹிட்லர், தன்னை உலக அதிபராக நினைத்து பல்வேறு நாடுகளை ராணுவத்தால் ஆக்கிரமித்து வந்தார். அந்த வகையில் பிரிட்டனை எப்படியாவது அடக்கி ஆளவேண்டும் என்பது அவரது ஆசை.   வெறும் ஆசை மட்டுமல்ல, அதற்கான தயாரிப்புகளோடுதான் அவர் கனவையும் கண்டார். ஜெர்மனியின் விமானங்கள், கப்பல்கள் களம் கண்ட போர்களில் எல்லாம் வெற்றிவாகை சூடின. நோக்கம் உயர்வாக இருந்தாலும் அதைநோக்கிய பயணத்திற்கு உழைப்பும் முக்கியம். அதுவும் ஹிட்லரிடம் இருந்தது. ரேடியோ அலைகளை வானில் ஏவி அது விமானத்தில் பட்டு திரும்பி வந்தால் வல்லுநர்கள் மூலம் விமானத்தின் அளவு, வேகம், தூரம் என அனைத்தையும் கணக்கிட முடியும். இதற்கு பயன்படுவதுதான் ரேடார். ரேடியோ டிடெக்ஷன் அண்ட் ரேஞ்சிங். 1885ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து இயற்பியலாளர் ஜேம்ஸ் கிளர்க் மேக்ஸ்வேல்   ரேடியோ அலைகள் உலோகங்களில் மோதும்போது பிரதிபலிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்தார். ஏறத்தாழ ஒளி அலைகளின் இயல்பும் அதுதான

அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்த தியோடர் ஸ்க்வான்!

படம்
  தியோடர் ஸ்க்வான் தியோடர் ஸ்க்வான் (theodor schwann 1810 - 1882) 1810ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள நியூயஸ் என்ற நகரில் பிறந்தார். அச்சுத்தொழில் செய்துவந்த லியோனார்ட் ஸ்ச்வான் என்பவருக்கு நான்கு மகன். 1834ஆம்  ஆண்டு மருத்துவராக பட்டம் பெற்றார். ஜோகன்னஸ் முல்லர் என்ற தனது பேராசிரியருக்கு ஆராய்ச்சியில் உதவியாளராக இணைந்தார்.  நுண்ணோக்கியில் ஏற்பட்டு வந்த பல்வேறு முன்னேற்றங்களை கவனித்து வந்தார் தியோடர். பொருட்களை பதப்படுத்துதலில் ஈஸ்டின் பங்களிப்பு  பற்றிய ஆய்வின் முன்னோடி.  இவருக்குப் பிறகுதான் நோய்க்கிருமிகள் பற்றி பிரெஞ்சு நுண்ணுயிரியாளர் லூயிஸ் பாஸ்டர் ஆராய்ச்சி  செய்து சாதித்தார்.  இதைத் தவிர செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள், தசை மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றின் பணிகளை ஆராய்ந்து வந்தார். வயிற்றில் செரிமானத்திற்கு உதவும் வேதிப்பொருளான பெப்சினைக் கண்டறிந்தார். விலங்கின் திசுக்களிலிருந்து பெறப்பட்ட முதல் என்சைம் இதுவே.    லீஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் வாய்ப்பை ஏற்றார்.  இவர் கண்டுபிடித்த பல்வேறு அறிவியல் முறைகளுக்காக இன்றும் பேசப்பட்டு வருகிறார். 1839ஆம் ஆண்டு நுண்ணோக்கி

ரஷ்யாவின் பெருமைக்குரிய ஹீரோ! - யூரி ககாரின்

படம்
  யூரி ககாரின் யூரி ககாரின் பலரும் அமெரிக்க வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்ததைப் பற்றி பேசுகிறார்கள். அவ்வளவு ஏன் பாடல் கூட எழுதிவிட்டார்கள். ஆனால் யூகி க காரின் அவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விண்வெளிக்கு சென்று சாதித்தவர். அவர் ரஷ்யாவில் பிறந்தார் என்பதற்காகவே ஒதுக்குகிறார்களோ எனும்படி இருக்கிறது ஊடகங்களின் செய்திகள்.  விண்வெளி காலம் என்பது நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்த காலத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. ரஷ்ய விண்வெளி வீரர் யூரி, 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று 9.07 மணிக்கு வோஸ்டாக் 1 என்ற விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார்.  சோவியத் யூனியனின் குளுசினோ எனும் நகரில் 1934ஆம் ஆண்டு பிறந்தவர் யூரி. இவரது பெற்றோர்கள் அன்றைய நடைமுறையான கூட்டுப்பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் யூரி மூன்றாவது ஆள்.  இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. அதில் ஜெர்மனி சோவியத்திற்குள் முன்னேறி வந்தது. அவர்களிடம் குளுசினோ நகரம் பிடிபட்டது. இதனால் குடும்பத்தின் பண்ணையும் அவர்களின் கைக்கு போய்விட்டது. வீர ர்களுக்கு உணவிட யூரியின் பெற்றோர் வற்புறுத்தப்பட்டனர். யூர

ஜெர்மனியின் அம்மா! - ஏஞ்சலா மேர்கல்

படம்
  ஏஞ்சலா மேர்கல் ஏஞ்சலா மேர்கல் முன்னாள் ஜெர்மனி அதிபர் தமிழ்நாட்டில் அம்மா எப்படியோ ஜெர்மனிக்கு ஏஞ்சலாதான் அம்மா. அந்தளவு செலவாக்கு பெற்றவர். ஐரோப்பிய யூனியன் என்ற அடையாளத்திற்கு ஜெர்மனியின் ஏஞ்சலாவும், பிரான்சின் மேக்ரானும்தான் தூதுவர்களாக இருந்தார்கள்.  1954ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று ஏஞ்சலா மேற்கு ஜெர்மனியின் ஹாம்பர்க் என்ற இடத்தில் பிறந்தார். 2005ஆம் ஆண்டு ஜெர்மனியின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர்.  இவரது பெற்றோர் பெயர் ஹார்ஸ்ட், ஹெர்லிண்ட் காஸ்னர். கணிதம், ரஷ்யமொழி ஆகியவற்றில் தேர்ந்தவர். கார்ல்மார்க்ஸ் பல்கலையில் இயற்பியல் படிப்பில் பட்டம் பெற்றார். 1986ஆம் ஆண்டு பிசிக்கல் கெமிஸ்ட்ரி பாடத்தில் முனைவர் பட்டம் வென்றார். 1989ஆம் ஆண்டு பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. அந்த சமயத்தில் டெமோக்ரடிக் அவேக்கனிங் என்ற கட்சியில் சேர்ந்தார். 1990ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று, பண்டேஸ்டாக் எனும் நாடாளுமன்றத்தில் உறுப்பினரானார்.  பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான துறையின் அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு ஏஞ்சலாவுக்கு சூழல் அணு பாதுகாப்பு துறையில் பதவ

டன்கிர்க்கில் போராடிய இந்திய முஸ்லீம் படையினரை உலகம் மறந்துபோய்விட்டது! - எழுத்தாளர் போவ்மன்

படம்
            நேர்காணல் ஜி போவ்மன்   உலக நாடுகளிடையே அரசியல் நிலைமை மாறியுள்ளது . பிரெக்ஸிட் , இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை என்று உள்ளது . இப்போது தெற்காசியாவில் உள்ள ராணுவ வரலாற்றைச் சொல்லுவது மக்களின் மனநிலையை மாற்றுமா ? நான் அப்படி நம்புகிறேன் . இதுவரை சொல்லாத ஆனால் மக்களுக்கு சொல்லவேண்டிய கதை இந்த நூலில் உள்ளது . இதன் மூலம் மக்கள் பற்றிய சின்னத்தனமான எண்ணம் , மதவெறி ஆகியவற்றை மாற்ற முடியும் என நினைக்கிறேன் . 2017 ஆம் ஆண்டு நோலன் டன்கிர்க் படத்தை எடுத்தார் . ஆனால் அதில் கூட இந்திய முகங்களை பார்க்க முடியவில்லையே , அது உங்களை ஆச்சரியப்படுத்தியதா ? நோலன் நினைத்திருந்தால் படத்தை நேர்மையாக எடுத்திருந்தால் அதில் இந்தியர்களின் முகத்தை பார்த்திருக்கலாம் . அப்படி இல்லாத்தை படத்தில் பார்த்து எனக்கு பெரும் ஏமாற்றமாகிவிட்டது . ஆனால் ஆச்சரியப்படவில்லை . ஏனென்றால் கடந்த எண்பது ஆண்டுகளாக யாருமே இந்தியர்களின் பங்களிப்பு பற்றி பேசவில்லை , நோலன் மட்டும் எப்படி பேசுவார் ? இப்போது நமக்கு இருக்கும் சவால் , இப்படிப்பட்ட சம்பவங்களை வைத்து தெற்காசியாவைச் சேர்ந்த இயக்

12 வயதில் இசைத்த பீத்தோவன்!

படம்
  1.இசைமேதை பீத்தோவன் பிறந்த ஆண்டை பலரும் 1772 என்று குறிப்பிடுவார்கள். ஆனால் அவர் பிறந்த ஆண்டு 1770, டிசம்பர் 17 ஆம் தேதி.  2.1783 ஆம் ஆண்டு பீத்தோவன் தன் இசைக்குறிப்புகளை இசைத்தார். அப்போது அவரின் வயது 12.  3.பீத்தோவனின் காது கேட்கும் திறன் 25 வயதில் குன்றத் தொடங்கியது. 46 வயதில் காது கேட்கும் திறனை முழுமையாக இழந்துவிட்டார் . அந்நிலையிலும் இசைக்குறிப்புகளை எழுதி வந்தார்.  4. பதினொரு வயதிலிருந்து குடும்பத்திற்காக உழைக்கத் தொடங்கினார். இசைக்கலைஞர்   கிறிஸ்டியன் காட்லப் நீஃபே (Christian Gottlob Neefe) என்பவரின் உதவியாளராகச் சேர்ந்து உழைத்தார்.  

உலகப்போரை தடுத்து நிறுத்தும் அசாதாரண படை! - டிசி காமிக்ஸின் கொஞ்சம் கிளாசிக் அவெஞ்சர்! லீக் ஆப் எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்மேன்

படம்
              லீக் ஆஃப் எக்ஸ்ட்ராடினரி ஜென்டில்ஸ்மேன் 2003   Director: Stephen Norrington Produced by: Trevor Albert, Rick Benattar, Sean Connery, Mark Gordon, Don Murphy, Michael Nelson Screenplay by: James Dale Robinson Based on The League of Extraordinary Gentlemen by Alan Moore , Kevin O'Neill   Music by Trevor Jones Cinematography Dan Laustsen   1899 ஆம் ஆண்டு நடைபெறும் கதை . சீன் கானரிதான் படையின் தலைவர் . படம் இன்றைய மார்வெல்லின் அவெஞ்சர் படத்தின் கதைதான் . படத்தின் கதை , இங்கிலாந்தின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுகிறது . உளவுத்தகவல்களில் ஜெர்மனிதான் அத்தாக்குதல்களை நடத்தியது என தெரியவருகிறது . உண்மையில் இப்படி ஐரோப்பிய நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதால் ஜெர்மனி நாட்டுக்கு என்ன லாபம் ? இதனால் உலகப்போர் நடைபெறுமா என பலரும் பயந்து நடுங்குகிறார்கள் . இதனை செய்வது பேன்டம் என்ற முகமூடி அணிந்த மனிதர் . இவை அழித்தால் போதும் . போரைத் தடுத்துவிடலாம் என தெரிகிறது . இதனால் எம் என்ற பணக்கார பேராசிரியர் இதற்கென ஒரு படையை அமைக்க திட்டமிடுகிறார் . அத

இந்தியாவின் கலாசார பன்மைத்துவத்தை புரிந்துகொள்ள எனக்கு 50 ஆண்டுகள் தேவை! - வால்டர் ஜோ லிண்ட்னர், ஜெர்மன் தூதர்

படம்
                வால்டர் ஜோகன்னஸ்  லிண்ட்னர் போனிடெய்ல் குடுமி வைத்துள்ள ஜெர்மன் நாட்டு தூதர் வால்டர். இவர் தூதரக பணிகளைத் தாண்டி இசைத்திறமைக்காகவும் மெச்சப்படுகிறார். ஹிப்பி இசைக்கலைஞராக இருந்து தூதராக மாறிய வால்டர், பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியாவுடன் கிடார் வாசித்த அனுபவம் கொண்டவர். நீங்கள் அண்மையில் உருவாக்கிய விண்ட் ஆப் சேஞ்ச் பாடலை இந்திய முறையில் உருவாக்கி இருந்தீர்கள். அதில் என்ன சவால்களை சந்தித்தீர்கள்? அசல் பாடலின் கவர் வெர்ஷனை உருவாக்குவது இப்போதைய டிரெண்டாகி வருகிறது. விண்ட் ஆப் சேஞ்ச் பாடல், சுதந்திரம், தாராள உலகை வலியுறுத்துகிற ஒன்று. பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு பிறகு அந்த பாடல் உருவாக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு நாடுகளுக்கு இடையிலான பாலங்களை அப்பாடல் குறிக்கிறது. இந்த பாடல் வீடியோவை உலக மக்கள் பலரும் பார்த்திருப்பார்கள்.  கோவிட் -19 சமயம் இதனை பலரும் பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கும். பெர்லின் சுவர் போலவே நாமும் இந்த பெருந்தொற்று பிரச்னையை நாம் தாண்டி வரமுடியும். நிறைய மனிதர்கள் ஒரு விஷயத்தில் கவனம் கொள்வதே கடினம். நீங்கள் எப்படி அதிகாரி, இசைக்கலைஞ

ஹிட்லருக்கு உதவிய ஐந்துபேர் கொண்ட குழு - ஜெர்மனியின் தலைவிதியை மாற்றியவர்கள்

படம்
பிக்ஸாபே ஹிட்லரின் மூளைக்கார படை! எந்த மனிதரும் பெரிய ஆளாக உயர சூழல்கள், தனிப்பட்ட ஆளுமை முக்கிய காரணம்தான். மறுக்கவில்லை. ஆனால் அதையும் தாண்டி அவருக்கு உதவ ஆபத்துதவி படை என்று ஒன்று உண்டு. அவர்கள் அவரை நெருக்கடியான தருணங்களில் காப்பாற்றுவார்கள். என்ன செய்யவேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். அப்படி ஐந்து பேர்தான் ஹிட்லரை மாபெரும் தலைவராக்கி பிற நாடுகளை அலற வைத்தார்கள். அவர்களில் சிலரைப் பார்ப்போம். கத்தோலிக்க சக்தி! ஃபிரான்ஸ் வான் பாபன் 1879- 1969 கத்தோலிக்க குடும்ப வாரிசு. 1921ஆம் ஆண்டு கத்தோலிக்க அரசியல் கட்சியின் உறுப்பினரானார். இவர்தான் 1932ஆம் ஆண்டு வெய்மர் இறக்கும்போது ஜெர்மனியின் அதிபராக பதவியேற்றார். ஹிட்லர் தலைமை பொறுப்புக்கு வர முக்கியமான ஆதரவு சக்தியாக இருந்தார். தன் காலம் முடியும்வரை அரசின் முக்கியமான பதவிகளை வகித்தார். துருக்கியின் தூதராக தொடர்ந்தார். பின்னாளில் நாஜிக்களை கொன்றதற்கான குற்றவிசாரணையைச் சந்திக்க நேரிட்டது. கம்யூனிஸ்ட்களின் எதிரி ஆல்ஃபிரட் ஹியூகென்பர்க் 1856 – 1951 வெய்மர் காலத்தில் ஊடகங்களுக்கான மனிதராக இருந்தார் ஆல்ஃபிரட். 1928 ஆம் ஆண்டு வர

அரசின் அநீதியால் உயிர்துறந்த கணினி மேதை - ஆலன் டூரிங்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர் ஆலன் டூரிங் கணினி சாதனையாளர். இன்று அமேசான், கூகுள் எல்லாம் கோயில் கட்டி வழிப்படும் அளவுக்கு ஏ.ஐ விஷயங்களைச் செய்தவர். என்க்ரிப்ஷன் முறைகளைக் கண்டுபிடித்தவர். ஜெர்மனியைத் தோற்கடிக்க பிரிட்டிஷாருடன் இணைந்து உழைத்தார். ஆனால் அதற்கு பரிசாக பிரிட்டிஷ் அரசு, எதிரிக்கு உதவினார் என்ற பெயரில் ஆலனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. எழுத்தாளர் ஆஸ்கர் வைல்டும் இதேபோல் அப்போது கைது செய்யப்பட்டிருந்தார். அரசு அவரின் திறமையை விட தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டியெடுக்க முயன்று வெற்றியும் பெற்றது. இதன்விளைவாக ஆலன், இன்னொருவருடன் வைத்திருந்த ஓரினச்சேர்கை உறவு வெளிவர, மக்களால் இகழப்பட்டார். இதனால் இரண்டே ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்து இறந்தார். சயனைடு அவரின் படுக்கையறையில் இருந்து பெறப்பட்டது. அன்று ஓரினச்சேர்க்கையாளர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று கருத்து நிலவி வந்தது. இதனை நியாயப்படுத்த பிரிட்டிஷ் அரசு, அவரின் மனநிலை சரியில்லை என்று கூறியது. அவர் தற்கொலை செய்துகொண்டது உண்மை. அதற்கான காரணம் என்ன என்று உறுதியாக தெரியவில்லை என்று அரசு கூறிவிட்டது. ஆனால் அரசி

நாஜி கொடுமைகளை உலகறியச் செய்தவர்! - ஹென்ரிக் ராஸ்

படம்
போலந்து புகைப்படக்காரர் ஹென்ரிக் ராஸ் போலந்து நாட்டை நாஜிப்படையினர் ஆக்கிரமித்தனர். ஆண்டு 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம். இப்போரின் விளைவாக 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு லோட்ஸ் கெட்டோ சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் யூத புகைப்படக்காரரான ஹென்ரிக் ராஸ், லோட்ஸ் கெட்டோ நகரில் பணியாற்றி வந்தார். அங்குள்ள சிறைக்கைதிகள் அடையாள அட்டை பணிக்கான புகைப்படங்களை இவரே எடுத்தார். இவர் யூதர் என்ற அடையாளம் தெரிந்தால் தானும் தன் குடும்பமும் சித்திரவதை செய்து கொல்லப்படுவோம் என்பதை அவர் அறிந்திருந்தார். 1944 ஆம் ஆண்டு கோடையில் மட்டும் 44 ஆயிரம் மக்கள் நாஜிப்படையின் சித்திரவதை, பட்டினியால் இறந்துபோனார்கள். இவர்களில் பலர் வதைமுகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டும், நச்சு வாயு சேம்பர்களில் அடைக்கப்பட்டும் இறந்தனர். இம்மக்களை பதிவு செய்த ராஸ் உதவியால்தான், அன்று நடந்த ஹிட்லரின் கொடுமைகளை உலகம் அறிந்தது. சிலுவைப்போர்களாலும மக்கள் வதைபட்டு இறந்துள்ளனர். ஆனால் குறிப்பிட்ட இனத்தை பழிகூறி அதனை வேட்டையாடி அழித்த சுவடுகள் என்பது ஹிட்லரின் ஆட்சியில்தான் நடைபெற்றது. இறுதியில் ரஷ்ய செம்

81 ஆண்டுகள் புகழ்பெற்ற பீட்டில் கார்!

படம்
பீட்டில் கார் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட புகழ்பெற்ற கார். ஹிட்லரை வெறுத்தாலும் அவர் உருவாக்கிய இந்த ஃபோக்ஸவேகன் பீட்டில் கார், அதன் சிக்கனத்திற்காக பெரிதும் மக்களால் விரும்ப ப்பட்டது. 1960களில் இக்கார்தான் அதிகம் வாங்கப்பட்ட கார். சுமார் 23 மில்லியன் கார்கள் இதுவரை விற்கப்பட்டு இருக்கின்றன. கடந்த மாதம் பீட்டில் கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டது. காலம்தோறும் மாறிவரும் கார்களின் பாதுகாப்பு மற்றும் சொகுசு அம்சங்களை கிளாசிக் காரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?   ஆனால் தயாரிப்பாளர்கள் சுலபமாக பீட்டில் என்ற காரை விட்டுக்கொடுத்துவிட மாட்டார்கள் என்றே தெரிகிறது. காரணம். இக்காரின் எலக்ட்ரிக் வெர்ஷனைக் கொண்டுவரப்போகிறோம் என்று நிறுவனம் அறிவித்திருக்கிறது. 1933 ஆம்ஆண்டு ஹிட்லர் அமெரிக்காவின் ஃபோர்டு டி மாடல் காரை காரசாரமாக விமர்சித்தார். டிமாடல் கார் மக்களின் வர்க்கவேறுபாடுகளை அதிகரித்த து தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்று பேசினார். இதனை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பிரசுரித்தது. பீட்டில் கார் உருவாக்கப்பட என்ன காரணம், ஐந்துபேர் பயணிக்கும்படியான எளிமையான கார். பாகங்கள் எளிதில்

சார்பியல் விதிக்கு வயது 100!

படம்
சார்பியல் தியரிக்கு வயது 100! 1919 ஆம் ஆண்டு பிரபல இயற்பியலாளர் ஐன்ஸ்டீனால் கூறப்பட்ட சார்பியல் தியரிக்கு இந்த ஆண்டு நூறு வயதாகிறது. 1919 ஆம் மே 29 அன்று ஏற்பட்ட சூரிய கிரகணம், ஐன்ஸ்டீனின் சார்பியல் தியரியை அறிவியலாளர்  மட்டுமல்ல மக்களுக்கும் புரிய வைத்தது. சிறப்பு சார்பியல் விதி, பொது சார்பியல் விதி என இருவிதிகள் உண்டு. இங்கு கூறப்படுவது பொது சார்பியல் விதி. இதன் அடிப்படையில்தான் இன்று விண்வெளி ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இப்போது சார்பியல் விதி எளிய வடிவில்: எழுபது கி.மீ வேகத்தில் செல்லும் பேருந்தில்  சென்று கொண்டிருக்கிறீர்கள். இப்போது உங்கள் கையிலுள்ள பந்தை முன்னோக்கி பத்து கி.மீ. வேகத்தில் எறிகிறீர்கள். பந்தின் வேகம் என்ன என்று உங்களைக் கேட்டால், பத்து கி.மீ. என்று கூறுவீர்கள். பேருந்துக்கு வெளியே நிற்பவர், எண்பது கி.மீ. வேகத்தில் பந்தை எறிந்தீர்கள் என்பார். ஒருவர் இருக்கும் இடம் சார்ந்து பொருளின் வேகத்தைப் புரிந்துகொள்கிறார். வேகம் என்ற இடத்தில் ஒளியைப் பொறுத்துங்கள். இங்கு வேறுபாடு, ஒளியின் வேகம் மாறாது என்பதுதான். இதுதான் பொது சார்பியல் விதி.  சூரியன் போன்ற

யூதர்கள் தொப்பி அணியக்கூடாது!

படம்
ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அவர்களை அடையாளம் காட்டும் தொப்பியை அணியவேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. யூதர்களுக்கு எதிரான தாக்குதல் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் இந்த விகிதம் 20 சதவீதமாக உள்ளது. எனவே யூதர்கள் பெரும்பாலான நேரங்கள் தங்கள் தொப்பியை அணியாமல் இருப்பது நல்லது என அரசு கமிஷனர் ஃபிளெக்ஸ் கிளெய்ன் கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் யூதர்களுக்கு எதிரான வன்முறை 89 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கருத்துக்கு 85 பேர் தீவிரமான பிரச்னை என கருத்து தெரிவித்துள்ளனர். ஜெர்மனியில் 2017 ஆம் ஆண்டு 37 ஆக இருந்த இந்த யூத தாக்குதல், 62 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசு கமிஷனரின் கருத்தை ஜெர்மனிக்கான அமெரிக்க தூதர் கடுமையான விமர்சனம் செய்துள்ளார். யூதர்களின் தொப்பியை அணிவது பிரச்னையா? அப்படியெனில் அந்த தொப்பியை நண்பர்களிடமிருந்து வாங்கி அணிந்து கொள்ளுங்கள் என்று டிவிட்டரில் கூறியுள்ளார். அரசு யூதர்களுக்கு எதிரான பிரச்னைகளை இப்போதேனும் உணர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறத

முதல் உலகப்போர் - சாதித்த தலைவர்கள்

படம்
முதல் உலகப்போரில் முக்கியமான தலைவர்கள்! கெய்சர் வில்ஹெய்ம்(2): ஜெர்மனியைச் சேர்ந்த கொடூரமான மன்னர். அதிகாரம், வட்டார அரசியல் விவகாரத்தைத் தொடங்கியவர் இவரே. ஆஸ்திரியா ஹங்கேரியா நாடுகளுடன் இணைந்து செர்பியாவின் மீது போர் அறிவித்தார். இதனை பின்னாளில் ஜெர்மனி அப்படியே பின்பற்றியது. அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் அமெரிக்காவுக்கு போரில் ஈடுபட விருப்பம் இல்லை என்று கூறி தேர்தலில் நின்று வென்ற ஆளுமை. இவரே. 1913 முதல் 21 வரை அதிபராக இருந்தவரின் போர் குறித்த முடிவை ஜெர்மனி மாற்றியது. அமெரிக்க வணிகர்களின் கப்பலை ஜெர்மனி தாக்க, அமெரிக்கா போரில் குதித்தது. டேவிட் லாய்டு ஜார்ஜ் இங்கிலாந்து முதலில் போரில் ஈடுபட வேண்டாம் என்றே நினைத்தது. ஆனால் ஜெர்மனியின் அதிகார வேட்கை இங்கிலாந்தின் அந்தஸ்தை குலைத்துவிடுமோ என்று நினைத்தவுடனே போரில் குதித்தது. அதனை தீர்மானித்தவர் பிரதமரான டேவிட்தான். ப்ரீமியர் ஜார்ஜஸ் கிலிமென்சியு பிரான்ஸ் நாட்டின் புலி என அழைக்கப்பட்ட தலைவர். பாரிஸ் மாநாட்டில் ஜெர்மனிக்கு எதிராக பல்வேறு முன்மொழிவுகளை கூறி அந்நாட்டை முடக்கியது இவர் சாதனை. ஜார் நிக்கோலஸ்