இடுகைகள்

சிமெண்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிமெண்ட், கான்க்ரீட் வேறுபாடு என்ன?

படம்
  சிமெண்ட் கால்சியம், சிலிகன், அலுமினியம், இரும்பு ஆகியவற்றின் கலவையே சிமெண்ட். இக்கலவையை  அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தும்போது,பாறையை ஒத்த கடினமான பொருளாகிறது. இதை அரைத்து பொடியாக்கினால், அதுதான் வீடுகட்டப் பயன்படுத்தும் சிமெண்ட்.சிமெண்டை முதலில் பயன்படுத்தியவர்கள், மாசிடோனியர்கள். பிறகு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு ரோமானியர்கள் பயன்படுத்தினர். இவர்கள் வேசிவியஸ் (Mount Vesuvius)எரிமலையில் கிடைத்த சாம்பலையும் , சுண்ணாம்புக்கல்லோடு கலந்து பயன்படுத்தினர். நாம் பயன்படுத்தும் சிமெண்டில் எரிமலை சாம்பலுக்கு பதிலாக நிலக்கரியை எரித்துப் பெறும் எரிசாம்பலைப் பயன்படுத்துகின்றனர்.   சுண்ணாம்புக்கல், வண்டல் மண் ஆகியவற்றை ஒன்றாக கலந்து போர்ட்லேண்ட் சிமெண்ட் என்பதை முதலில் உருவாக்கியவர், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோசப் ஆஸ்ப்டின் (Joseph Aspdin). 1817இல் போர்ட்லேண்ட் சிமெண்டை உருவாக்கும் பரிசோதனைகளை செய்தார். அதில் வெற்றிகண்டவர், 1824ஆம் ஆண்டு தனது கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையை பதிவு செய்தார்.  கான்க்ரீட் இதில் மணல், சரளைக்கற்கள், நீர் ஆகியவற்றோடு சிமெண்ட்டை கலக்கி பசைபோலாக்கினால்  அதன் பெயர்தான், கா

இறந்தவர்களின் சாம்பலில் உருவாகும் பாறைப்பந்து- பவளப்பாறைக்கு மாற்று என மாறுகிறது டிரெண்ட்!

படம்
  ஆழ்கடலில் உருவாக்கப்படும் பாறைப்பந்து! கடலில் பவளப்பாறைகள் அழிவதைப் பற்றிய செய்திகளை நிறைய வாசித்திருப்போம். தற்போது, அமெரிக்காவில், புதிதாக பவளப்பாறைகளை உருவாக்குகிறோம் என சிலர் முயன்று வருகிறார்கள்.  இதன்படி, காலமானவரின் பிணத்தை எரித்து, சாம்பலை கான்க்ரீட் கலவையில்  கலக்குகிறார்கள். அதனை, பந்து வடிவில் (Reef ball) மாற்றுகிறார்கள். பிறகு, அப்பந்தை ஆழ்கடலில் கொண்டுபோய் வைக்கிறார்கள்.  250 கிலோ முதல் 1000 கிலோ வரை எடைகொண்டது பாறைப் பந்து. இதனைக் கடலின் தரைப்படுகையில் வைக்கின்றனர். பவளப் பாறை போன்ற இதன்  கரடு முரடான வடிவத்திற்குள் மீன்கள் வாழ்கின்றன. அதன்மேல் பாசிகள் படருகின்றன. இதனைத் தொழிலாகச் செய்யும் நிறுவனங்கள், பாறைப் பந்தை சூழல் காக்கும் முயற்சி என்கிறார்கள்.    கடல் உயிரினங்களை நேசிப்பவர்கள்தான், புதிய பாணியைத் தொடங்கி வைத்துள்ளனர்.  இது கடலுக்கடியில் ஒருவருக்கு அமைக்கப்பட்ட கல்லறை என்பதே உண்மை. அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த எடர்னல் ரீஃப் என்ற நிறுவனம், கடல் படுகையில் பாறைப் பந்துகளை அமைத்துக் கொடுக்கிறது. பிஹெச் (pH) அளவு நடுநிலையுள்ள கான்க்ரீட் கலவையில், இறந்துபோனவரின் ச

சிமெண்டிற்கும் கான்க்ரீட்டிற்கும் இதுதாங்க வித்தியாசம்!

படம்
மிஸ்டர் ரோனி சிமெண்டிற்கும் கான்க்ரீட்டிற்கும் என்ன வேறுபாடு? கட்டிடத்தில் பயன்படும் கலவையை நாம் கான்க்ரீட் என்றும் வீடு கட்ட கலப்பதை சிமெண்ட் என பாதிப்பேர் நினைக்கிறார்கள். அப்படி அல்ல. கான்க்ரீட்டில் பகுதிப்பொருளாக கலக்கப்படுவதுதான் சிமெண்ட். சிமெண்ட் என்பது தனி. அதில் தேவைக்கேற்ப லைம்ஸ்டோன், களிமண், கிளிஞ்சல்கள் ஆகியவற்றை கலந்து தயாரிப்பதுதான் கான்க்ரீட். கலக்கப்பட்ட பொருட்களை 2642 டிகிரி வெப்பத்திற்கு சூடு செய்து அதனை குளிர்வித்து பாக்கெட்டுகளில் நிரப்பினால், கான்க்ரீட் ரெடி. உடனே இதனை எடுத்து கட்டிடங்களில் பூசி காய்ந்தால் உடனே குடி போய்விடலாமா என்று கேட்காதீர்கள். இதில் சிமெண்ட், மணல் கலவையை சரியாக கலக்கினால்தான் ரெடி டூ பேஸ்ட் பத த்திற்கு வந்து சேரும். வெறும் சிமெண்டை பூசினால் கட்டிடம் நிற்காது. அதற்கு சரிநிகராக அதில் மணல் இருப்பது அவசியம். நன்றி- மென்டல் ஃபிளாஸ்