இடுகைகள்

சிலந்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதாள உலகில் வாழும் புதிய அரிய உயிரினங்கள்!

படம்
  பூமிக்கு அடியில் வாழும் உயிரினங்கள்!  இயற்கைச்சூழல் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ வாய்ப்பு அளிக்கிறது. ஹவாய் தீவில் உள்ள எரிமலை குழாய்களில் வாழும் உயிரினங்கள் பற்றி அறிந்தால் உங்களுக்கு இப்படி வியப்பு ஏற்படலாம். இங்கு நிலத்திற்கு கீழே வெளுத்த கண் பார்வையற்ற நிறைய உயிரினங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எரிமலைகள் ஹவாய் தீவு நெடுக அமைந்துள்ளன. இருளான வெளிச்சமில்லாத சூழலையும் சமாளித்து வௌவால், எலி தவிர நிறைய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சியை ஹவாய் பல்கலைக்கழக  ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர்.  பிக் ஐலேண்ட் எனும் இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் அறிவியலுக்கு புதிய உயிரினங்கள் (Planthoppers,Omnivores,Milipedes) தெரிய வந்துள்ளன. கடந்த மார்ச் மாதம், ஆராய்ச்சி குழுவினர் எரிமலைக்குழாயில் மேலும் ஆய்வு செய்ய ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. “இங்கு நாங்கள் ஆராய்ச்சி செய்யும்போது ஒவ்வொருமுறையும் புதிய உயிரினங்கள் கண்டறியப்படுகின்றன. அவை புதிய உயிரினங்கள் அல்லது அறிந்த உயிரனத்தின் புதிய வகையாகவே இருப்பது ஆச்சரியம்” என்றார் ஹவாய் பல்கலைக்கழக உதவி

சிலந்தி தான் கட்டிய வலையில் எப்படி மாட்டிக்கொள்ளாமல் இருக்கிறது?

படம்
giphy மிஸ்டர் ரோனி சிலந்தி தன் வலையில் இரைகளை எளிதாக வீழ்த்துகிறது. ஆனால் அதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது எப்படி? சிலந்தி பசையை வாயிலிருந்து குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குவித்து வைக்கிறது. அந்த இடங்களில் மட்டும் சிலந்தி நடந்து செல்வதில்லை. மேலும், அதன் கால்களில் வலையிலுள்ள பசையில் இருந்து விடுபடும்படியான அமைப்பு உள்ளது. நகம் போன்ற அமைப்பு அது. எனவே, சிலந்தி தான் கட்டியவலையில் சிக்கிக்கொள்வதில்லை. வைரஸ்கள்தான் நோயை ஏற்படுத்துகிறதா? அறிவியல்படி இல்லை என்றே கூறவேண்டும். ஆனால் அந்த பாதிப்பிற்கான தூண்டுதலாக இருக்கிறது என சொல்லலாம். எப்படியெனில், வைரஸ் பிற விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நோய் பரப்பிய குறிப்பிட்ட விலங்குகளான வௌவால், பன்றி, கொசு ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் நேருவதில்லை. ஆனால் மனிதர்களுக்கு வாந்தி, பேதி, காய்ச்சல், உடல் கொப்புளங்கள் ஏற்படுகிறது. இதன் விளைவாக உள்ளுறுப்புகள் சேதமடைந்து மரணம் நேருகிறது. வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்திதான் காய்ச்சலை, உடல்நலிவை ஏற்படுத்துகிறது. வைரஸை முழுமையாக உடல் எதிர்ப்பதால் நமக்கு உடல் நலிவின் தீவ

ரோபோக்களின் தயாரிப்பில் சிலந்தி!

படம்
பிபிசி சிலந்தியின் வலை உண்மையில் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. காரணம், அதன் பிரமாண்ட வடிவம். இதோடு ஆஸ்திரேலியாவில் பல கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படும் வலை கூட சிலந்தியின் கைவண்ணம்தான்.  தற்போது சிலந்தி வலைகளை ரோபோக்களின் உடலில் தசைகளாக பயன்படுத்த முடியுமா என யோசித்து வருகின்றனர். இது எதிர்காலத்தில் சிறந்த பயனை அளிக்கலாம். பேராசிரியர் மார்க்கஸ் ப்யூலெர் இதுகுறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளார். இவர் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி. சிலந்தி தன் எச்சிலை காற்றின் மூலம் நூலாக்கி பிரமாண்ட வலையை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சியில் இவர் ஈடுபட்டிருந்தார்.  காற்றில் 70 சதவீத ஈரப்பதம் இருக்கும்போது சிலந்தி மிக எளிதாக வலை பின்னுகிறது என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இச்சூழலில் 300 டிகிரி கோணத்தில் வலையை சிலந்தி எச்சிலை இழைத்து முறுக்கி பின்னுகிறது. இதற்கு காரணம், வலையை மிகவும் வலிமையாக்குவதுதான்.  இதனால் வலை மிக மெல்லிய அதிர்வையும் மையத்திலுள்ள சிலந்திக்கு எளிதாக கடத்துகிறது. இதனால் வலையில் சிக்கும் எறும்புகள் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. வலைய