இடுகைகள்

சிலந்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்களுக்கு மட்டுமே குறட்டை விடும் பழக்கம் உள்ளதா?

  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி விலங்குகளால் நிறங்களை இனம்பிரித்து அறிய முடியுமா? ஊர்வன, பறவைகளுக்கு நிறங்களை இனப்பிரித்து அறியும் திறன் உண்டு. ஆனால் பெரும்பாலான பாலூட்டிகளுக்கு நிறங்களை அறியும் திறன் இல்லை. மனிதகுரங்கு, குரங்கு ஆகியவை நிறங்களை அறியக்கூடியவை. நாய்கள், நீலம், பழுப்பு ஆகியவற்றின் அடர்த்தியை அறிந்துகொள்ளும். பூனை, பச்சை மற்றும் நீல நிறத்தை அறிகின்றன. அனைத்து விலங்குகளுக்கும் ரத்தம் சிவப்பாக இருக்குமா? முதுகெலும்பு கொண்ட விலங்குகளுக்கு பெரும்பாலும் ரத்தம் சிவப்பாக இருக்கும். பிராண வாயுவில் ஆக்சிஜனை அடிப்படையாக கொண்டு ரத்த நிறம் அமைகிறது. ஹீமோகுளோபின் அணுவில் இரும்பு உள்ளது. இதுவே சிவப்பு நிறத்திற்கு காரணம். ஹெமோசயானின் இருந்தால் ரத்தம் நீலமாகவும், குளோரோகுரோனின், ஹெமெரித்ரின் இருந்தால் பச்சை நிறமாகவும் இருக்கும். மனிதர்களுக்கு மட்டுமே குறட்டை விடும் பழக்கம் உள்ளதா? நாய், பூனை, பசு, காளை, ஆடு, யானை, ஒட்டகம், சிங்கம், சிறுத்தை, புலி, கொரில்லா, சிம்பன்சி, குதிரை, வரிக்குதிரை என பல்வேறு விலங்களுக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளது. ஜெல்லி மீன்களில் மனிதர்களைக் கொல்லு...

சிவப்பு இறைச்சியில் கசியும் திரவம், கிராமபோன் கண்டுபிடிப்பாளர், ராட்சஷ சிலந்தி - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு

படம்
        மாட்டிறைச்சியில் இருந்து வெளியாகும் சிவப்பு நிற திரவத்தின் பெயர் என்ன? மாட்டிறைச்சியை வெட்டி வைத்த பிறகு அதிலிருந்து மெல்லிய சிவப்பு நிறத்தில் திரவம் ஒன்று கசியும். அது ரத்தமோ என பலரும் பதற்றமடைகிறார்கள். அது ரத்தமல்ல. அதன் பெயர் மையோகுளோபின். இது நீரில் கரையக்கூடியது. இந்த வேதி திரவம், உடலில் உள்ள ஆக்சிஜனை தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொள்ளும் வேலையை செய்கிறது. ஒரு ஹீமோகுளோபின் மூலக்கூறு, நான்கு ஆக்சிஜன் மூலக்கூறுகளை கவர்ந்திழுத்து சேமித்துக்கொள்கிறது. ஆனால் மையோகுளோபின் மூலக்கூறு, ஒற்றை ஆக்சிஜன் மூலக்கூறை மட்டுமே சேமிக்கிறது. இரண்டின் பணிகளைப் பார்ப்போம். ஹீமோகுளோபின், உடல் முழுக்க ஆக்சிஜனை கொண்டு செல்கிறது. ஆனால், மையோகுளோபின் தற்காலிகமாக ஆக்சிஜனை சேகரித்து வைத்துக்கொள்கிறது. கடலில் உள்ள உயிரினங்களான திமிங்கலம், சீல் ஆகியவற்றின் உடலில் மையோகுளோபின் அதிகளவில் காணப்படுகிறது. இவை. மூச்சு விடுவதற்காக சிலமுறை மட்டுமே நீரின் மேற்பரப்பிற்கு வரும். மற்ற நேரங்களில் மையோகுளோபின் சேகரிப்பு உதவுகிறது. பிட்ஸ் சிவப்பு இறைச்சியை ஒருவர் சமைக்கும்போது, அதன் சிவப்பு நிறம் ...

வைத்தியரின் கல்லறையைத் திருடச்செல்லும் நல்லவர்களின் கூட்டம்!

படம்
  மெடிசின் கிங் காபின் சீன திரைப்படம்  ஒருமணிநேர படம்  நாயகன், சிறு மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். அதற்கு ஒரு இளம்பெண் வருகிறாள். வந்தவள், தன்னுடைய மாமா, நாயகனின் அப்பாவுடன் மெடிசின் காபின் பள்ளத்தாக்குக்கு சென்றார். ஆனால் திரும்பவில்லை. உன்னுடைய அப்பா தான் வராதபோது மகன் உன்னை அழைத்துக்கொண்டு அதே இடத்திற்கு செல்லச்சொன்னார் என கடிதம் ஒன்றைக் காட்டுகிறாள். நாயகனின் உதவியாளர் அவளை கிண்டல் செய்து பேச, மருத்துவமனையில் சண்டை தொடங்குகிறது.  நாயகியின் இனக்குழுவில் 35 வயதுக்கு மேல் யாருமே வாழ்வதில்லை. ஆயுள் முடிந்துவிடும் சாபம் உள்ளது. அதை சரிசெய்யவே அவள், நாயகனை அழைத்துக்கொண்டு பள்ளத்தாக்குக்கு சென்று நோய்க்கு தீர்வறிய நினைக்கிறாள். கூடவே, வெளிநாட்டு மருத்துவர்களின் வற்புறுத்தலில் ரவுடி ஒருவரும் நாயகனை அதே இடத்திற்கு செல்லலாம் வா என்று அழைக்கிறார். நாயகனுக்கு அங்கு செல்வதில் பெரிய விருப்பமும் இல்லை. மறுப்பும் இல்லை. அவன் அங்கு சென்று எதையும் பெறவேண்டும் என நினைக்கவில்லை.  நாயகன், நாயகி, கூடவே மொட்டைத்தலை வெளிநாட்டுக்காரர்களின் கையாள் ஆகியோரோடு போகும்போது, சிறு கொள்...

பாதாள உலகில் வாழும் புதிய அரிய உயிரினங்கள்!

படம்
  பூமிக்கு அடியில் வாழும் உயிரினங்கள்!  இயற்கைச்சூழல் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ வாய்ப்பு அளிக்கிறது. ஹவாய் தீவில் உள்ள எரிமலை குழாய்களில் வாழும் உயிரினங்கள் பற்றி அறிந்தால் உங்களுக்கு இப்படி வியப்பு ஏற்படலாம். இங்கு நிலத்திற்கு கீழே வெளுத்த கண் பார்வையற்ற நிறைய உயிரினங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். எரிமலைகள் ஹவாய் தீவு நெடுக அமைந்துள்ளன. இருளான வெளிச்சமில்லாத சூழலையும் சமாளித்து வௌவால், எலி தவிர நிறைய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சியை ஹவாய் பல்கலைக்கழக  ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர்.  பிக் ஐலேண்ட் எனும் இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் அறிவியலுக்கு புதிய உயிரினங்கள் (Planthoppers,Omnivores,Milipedes) தெரிய வந்துள்ளன. கடந்த மார்ச் மாதம், ஆராய்ச்சி குழுவினர் எரிமலைக்குழாயில் மேலும் ஆய்வு செய்ய ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. “இங்கு நாங்கள் ஆராய்ச்சி செய்யும்போது ஒவ்வொருமுறையும் புதிய உயிரினங்கள் கண்டறியப்படுகின்றன. அவை புதிய உயிரினங்கள் அல்லது அறிந்த உயிரனத்தின் புதிய வகையாகவே இருப்பது ஆச்சரியம்” என்றார் ஹவாய...

சிலந்தி தான் கட்டிய வலையில் எப்படி மாட்டிக்கொள்ளாமல் இருக்கிறது?

படம்
giphy மிஸ்டர் ரோனி சிலந்தி தன் வலையில் இரைகளை எளிதாக வீழ்த்துகிறது. ஆனால் அதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது எப்படி? சிலந்தி பசையை வாயிலிருந்து குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குவித்து வைக்கிறது. அந்த இடங்களில் மட்டும் சிலந்தி நடந்து செல்வதில்லை. மேலும், அதன் கால்களில் வலையிலுள்ள பசையில் இருந்து விடுபடும்படியான அமைப்பு உள்ளது. நகம் போன்ற அமைப்பு அது. எனவே, சிலந்தி தான் கட்டியவலையில் சிக்கிக்கொள்வதில்லை. வைரஸ்கள்தான் நோயை ஏற்படுத்துகிறதா? அறிவியல்படி இல்லை என்றே கூறவேண்டும். ஆனால் அந்த பாதிப்பிற்கான தூண்டுதலாக இருக்கிறது என சொல்லலாம். எப்படியெனில், வைரஸ் பிற விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நோய் பரப்பிய குறிப்பிட்ட விலங்குகளான வௌவால், பன்றி, கொசு ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் நேருவதில்லை. ஆனால் மனிதர்களுக்கு வாந்தி, பேதி, காய்ச்சல், உடல் கொப்புளங்கள் ஏற்படுகிறது. இதன் விளைவாக உள்ளுறுப்புகள் சேதமடைந்து மரணம் நேருகிறது. வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்திதான் காய்ச்சலை, உடல்நலிவை ஏற்படுத்துகிறது. வைரஸை முழுமையாக உடல் எதிர்ப்பதால் நமக்கு உடல் நலிவின் தீவ...

ரோபோக்களின் தயாரிப்பில் சிலந்தி!

படம்
பிபிசி சிலந்தியின் வலை உண்மையில் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. காரணம், அதன் பிரமாண்ட வடிவம். இதோடு ஆஸ்திரேலியாவில் பல கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படும் வலை கூட சிலந்தியின் கைவண்ணம்தான்.  தற்போது சிலந்தி வலைகளை ரோபோக்களின் உடலில் தசைகளாக பயன்படுத்த முடியுமா என யோசித்து வருகின்றனர். இது எதிர்காலத்தில் சிறந்த பயனை அளிக்கலாம். பேராசிரியர் மார்க்கஸ் ப்யூலெர் இதுகுறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளார். இவர் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி. சிலந்தி தன் எச்சிலை காற்றின் மூலம் நூலாக்கி பிரமாண்ட வலையை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சியில் இவர் ஈடுபட்டிருந்தார்.  காற்றில் 70 சதவீத ஈரப்பதம் இருக்கும்போது சிலந்தி மிக எளிதாக வலை பின்னுகிறது என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இச்சூழலில் 300 டிகிரி கோணத்தில் வலையை சிலந்தி எச்சிலை இழைத்து முறுக்கி பின்னுகிறது. இதற்கு காரணம், வலையை மிகவும் வலிமையாக்குவதுதான்.  இதனால் வலை மிக மெல்லிய அதிர்வையும் மையத்திலுள்ள சிலந்திக்கு எளிதாக கடத்துகிறது. இதனால் வலையில் சிக்கும் எறும்புகள் ஓடவும் முடியாது. ஒளியவும் ...