சலூன் நடத்தியபடியே இலக்கிய சிற்றிதழை நடத்திய மனிதர்! - கடிதங்கள்
அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? சென்னையில் வெயில் அதிகரித்து வருகிறது . பகலில் மட்டுமல்ல இரவிலும் கூட பயங்கரமாக புழுங்குகிறது . கீழே உட்கார்ந்து வேலை செய்வது கடினமாக உள்ளது . தேர்தல் முடிந்தபிறகு ஈரோடு செல்வேன் என்று நினைக்கிறேன் . எழுதுவதற்கான விஷயங்களை மெல்ல திரட்டி வருகிறேன் . படிப்பதற்காகவும் நேரம் ஒதுக்கவேண்டும் . ஐ யம் அலைவ் என்ற வெப் தொடரை எம்எக்ஸ் பிளேயரில் பார்த்தேன் . தமிழில் பார்க்க முடியும் . புனைவு கலந்த தொடர் . போலீஸ்கார தந்தை குடும்பத்தின் மீது பாசம் கொண்டவர் . தனது இரண்டு பெண்களின் மீதும் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறார் . சீரியல் கொலைகாரன் ஒருவனை பிடிக்கப் போகும்போது , அவரது சகா உதவிக்கு வர மறுத்து சூதாட்டத்திற்கு சென்றுவிடுகிறார் . அவனை பிடிக்கும் நினைக்கும்போது , எதிராளியின் தாக்குதலில் இறந்துபோய் விடுகிறார் . இறந்த போலீஸ்காரருக்கு திரும்ப உலகிற்கு வர வாய்ப்பு கிடைக்கிறது . போலீஸ்காரராக இருக்கும் மற்றொரு மனிதரின் உடலில் ஆன்மா புகுகிறது . இவரும் வேலை பார்ப்பது , இறந்த போலீஸ்காரரின் பெண் டிடெக்டிவாக உள்