இடுகைகள்

வல லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறந்தவர்கள் பேச மாட்டார்கள்! சைக்கோ டைரி

படம்
  இறந்தவர்கள் பேச மாட்டார்கள் சீரியல் கொலைகாரர்கள் பொதுவாக வல்லுறவு செய்து இரையை கொன்றுவிடுவதே வழக்கம். வல்லுறவு மட்டும் செய்துவிட்டு விட்டுவிடுவது சாத்தியமாகியிருக்கிறதா என்றால், அதற்கும் வாய்ப்புண்டு. அப்படி செய்திருந்தால் அது கொலைகளை தொடங்கும் முன்னர் செய்யும் ரிகர்சலாக இருக்கும்.  வல்லுறவு செய்வதை விட கொலை செய்வது அதிக இன்பமளிக்கும் செயலாக சீரியல் கொலைகாரர்களுக்கு தோன்றலாம். இப்படி செய்வது சீரியல் கொலைகளுக்கு அச்சாரமாக கூட இருக்கும் வாய்ப்புண்டு. கொலை செய்வது பெரிய விஷயம் கிடையாது. அது வல்லுறவை விட மனதிற்கு மகிழ்ச்சி தரும்படியாக இருந்தாலே போதும். சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை அவர்கள் செய்யும் ஒவ்வொரு கொலையுமே கனவில் ஏற்கனவே இப்படி செய்யவேண்டும் என திட்டமிட்டதுதான்.  உண்மையான பிரச்னை இதற்குப் பிறகுதான் தோன்றுகிறது. கொலை செய்த தடயங்களை மறைக்க வேண்டும். குறிப்பாக உடலை.....இதெல்லாம் கொலை செய்யவேண்டாம் என கொலையாளியை முடிவு செய்ய வைக்கிறது. கொலை என்பதை பொறுத்தவரை தீர்மானித்துவிட்டால் சீரியல் கொலைகார ர்கள் அதற்கான வாய்ப்பைத் தேடி செய்தே தீருவார்கள். இதற்கு காரணம் அவர்களின் மனநிலைதான்