இடுகைகள்

வெயில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடை செய்யப்பட்ட நூல்களை படிக்க உதவிய நூலகர்! - டைம் 100 போராளிகள்

படம்
  நிக் ஹிக்கின்ஸ் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கலாம் நிக் ஹிக்கின்ஸ்   45 புத்தக விற்பனையாளர் சங்கமே மாஃபியா குழு போல நடந்துகொண்டு சில நூல்களை விற்க கூடாது என மிரட்டும் சூழல் இருக்கிறது. சில இடங்களில் தங்களுக்கு ஒவ்வாத கருத்துகளை கொண்ட நூல்களை விற்க கூடாது என காவல்துறை அதிகாரமீறல்களை செய்வது உண்டு. இந்த சூழலில் நூல்களை காப்பாற்றி வைத்து அதை வாசகர்களுக்கு கொண்டு செல்வது வேறு யார்? நூலகர்கள்தான். ப்ரூக்ளின் பொது நூலக தலைவரான நிக் ஹிக்கின்ஸ், பல்வேறு மாகாணங்களில் தடைசெய்யப்பட்ட நூல்களை சேகரித்து அதை டிஜிட்டலாக சேமித்து வாசகர்கள் படிப்பதற்கு உதவுகிறார். பொதுவாகவே உலகின் பல்வேறு நாடுகளில் பழமைவாதிகள், பழமைவாத அரசுகள் அமைந்து வருகின்றன. எனவே, ஏராளமான நூல்களை தடை செய்து வருகிறார்கள். இதற்கு எதிராக நிக் ஹிக்கின்ஸ் நிற்கிறார். நிக்கும் அவரது குழுவினரும் தடை செய்யப்பட்ட நூல்களை வாசகர்கள் படிக்க வசதி ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். தணிக்கை செய்வது, தடை செய்வது என்பது குழந்தைகள், வயது வந்தோர் குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதே ஆகும். இப்படிப்பட்ட நெ

நீருக்கு மாற்றாக பழச்சாறுகளை குடிக்கலாமா?

படம்
  தண்ணீர் குடிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறதா? நீரைப் பொறுத்தவரை ஆற்றுத்தண்ணீர், ஆழ்குழாய் தண்ணீர் என வேறுபட்ட சுவை கொண்ட நீரை குடித்திருப்பீர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் அக்வாஃபினா, கைஃண்ட்லி ஆகியவற்றை குடித்தாலும் அதன் பயன் ஒன்றுதான். நீங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் மயங்கி விழாமல் இருப்பீர்கள். உடலின் வளர்சிதைமாற்ற செயலுக்கு நீர் அவசியம். இதில் உள்ள கணக்கு பற்றி அறிந்திருப்பீர்கள். தினசரி எந்தளவு நீரை குடிப்பது? எட்டு கிளாஸ் குடியுங்கள், மூன்று அல்லது ஐந்து லிட்டர் குடியுங்கள் என்று பலர் வாய்க்கு வந்ததைக் கூறுவார்கள். உண்மையில் உடலுக்கு எந்தளவு நீர் தேவை என்பதை உடல்தான் தீர்மானிக்கும். தேவைப்படும்போது நீர் குடிக்கலாம்.. தவறில்லை. சில மருத்துவ இதழ்கள் சினிமா பிரபலங்களின் டயட் முறைகளை எழுதி மக்களை நிர்பந்தப்படுத்துகிறார்கள். உண்மையில் எது உண்மை, எதைப் பின்பற்றுவது? உடலுக்கு நீர்த்தேவை குறைவாக இருந்தால் தலைவலிக்கும்.,அடுத்து, செரிமான பிரச்னை வரும். உடலின் ரத்த அழுத்தம் குறைந்து   கண்கள் இருண்டு கீழே விழுந்துவிடுவீர்கள். மேற்சொன்னது உடனே நடக்கும் விளைவுகள். நீண்டகால அடிப

கிரிக்கெட்டை விளையாடமுடியாத அளவுக்கு வெயில்!

படம்
  சார் வணக்கம். நலமா? கடும் வெயில். உடல் சூடு அதிகம். பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டை விளையாட முடியவில்லை. மழையில் ஒதுங்கினால் தேவலை என்பது போல வெயில் வாட்டுகிறது. நேற்று (ஞாயிறு) குடும்பமாக அக்கா வீட்டிற்குச் சென்றோம். அங்கேயே நாளைக் கழித்தோம். எங்கள் வீட்டிற்குத் திரும்பவில்லை. வீட்டில் கடும் புழுக்கம். என்னுடைய முதல் அக்கா வீடு காற்றோட்டமாக நன்றாக இருக்கும். தாய்மாமனுக்கே அக்காவைக் கொடுத்ததால் அவர்கள் வீட்டில் எங்களுக்கு உரிமை அதிகம். பனங்காய், தோண்டி கிடையில் அறுத்து சாப்பிட்டோம். குடும்பம் சூழ இருந்ததால் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி.   மாணவர் இதழ் பற்றி சொல்ல ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. டிசைனர் சீஃப் போனதில் இருந்து, அவரது குழுவினர் சிறப்பாக டிசைன் செய்கிறார்கள். புதுப்புது லோகோ வைத்து எனது பக்கத்தை மெருகேற்றுகிறார்கள். விரைவான லே அவுட் இனி நடக்கும் என நம்புகிறேன். கணபதி சார், இப்போதெல்லாம் என்னிடம் நிறைய பேசுகிறார். கொடுக்கு அந்தளவிற்கு கொட்டுவதில்லை. அவரது பெண்ணை நல்ல கல்லூரியில் சேர்க்க படாதபாடு படுகிறார். மாணவர் இதழ் எடிட்டரும் தாய் நாளிதழும் உதவி புரியவில்லை என்ற புலம்

வெளியே வெயில், உள்ளே புழுக்கம்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
        இயற்கை நேசனின் அற்புத காட்சி அனுபவம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? சில நாட்களுக்கு முன்னர் வெயில் குறைந்தது போல தெரிந்தது .. இப்போது வெயில் மீண்டும் தன் இயல்பான நிலையில் சுட்டெரித்தது . ஒருமுறை சட்டை போட்டு மதியம் சாப்பிட் அறைக்கு சென்றாலே எனக்கு வியர்வையால் குளித்தது போல ஆகிவிடுகிறது . குங்குமம் தோழியில் வேலை பார்த்த அன்னம் அரசு இப்போது ஜூனியர் விகடன் இதழுக்கு ப் போய்விட்டார் . இந்த தகவலை நான் தாமதமாகவே தெரிந்துகொண்டேன் . நான் இந்த வாரமும் குங்குமம் இதழை வாங்கவில்லை . முன்பு போல அதன் கட்டுரைகள் சிறப்பாக இல்லை . உள்ளடக்க விஷயங்களில் தடுமாறுவது போல தோன்றியது . எங்கள் நாளிதழ் வேலைகளை ஓரளவுக்கு நிறைவு செய்துவிட்டேன் . ஜூலை மாதம் வரை எழுதிவைத்தாயிற்று . ஆகஸ்ட் மாத கட்டுரைகளை இனிமேல்தான் எழுதி தயாரித்து வைக்க வேண்டும் . இன்ஃபோகிராபி வேலைதான் அதிக நாட்களை இழுத்துக்கொள்ளும் என நினைக்கிறேன் . அதையும் அவ்வப்போது தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் . வனவாசி - விபூதிபூஷன் பந்தோபாத்யாய நாவலைப் படித்தேன் . கோவையிலுள்ள விடியல் பதிப்பக வெளியீடு . கல்கத்

பெயர் அச்சிடுவதில் உருவான வெட்க கேடான அலுவலக அரசியல்! கடிதங்கள் - கதிரவன்

படம்
  26.2.2022 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  நான் இருவேளை வெளியிலும் ஒருவேளை அறையிலும் சமைத்து சாப்பிடுகிறேன். இதற்கு மட்டுமே நேரம் உள்ளது. இன்ஸ்டன்ட் உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். அத்தகைய உணவுப் பொருட்களில் எம்எஸ்ஜியை வெவ்வேறு பெயர்களில் சேர்க்கிறார்கள். வியாபாரம் என்றால் ஆறு பொய், நான்கு உண்மை சொல்வோம் என்பார்கள். இங்கு சொல்வது, அத்தனையும் பொய்யாக உள்ளது.  மதிய வேளையில் மெல்ல வெயில் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளாக வேலை செய்யும் கோ ஆர்டினேட்டர் பெயரை நாளிதழில் ஆசிரியர் போடவேயில்லை.  ஆசிரியர் மீது காட்ட முடியாத கோபத்தை அவருக்கு அடுத்த இடத்தில் பெயர் உள்ள என்மீது கொட்டுகிறார்  கோ ஆர்டினேட்டர். புறணி பேசுவது, சாடை பேசுவது, வன்மத்துடன் பழி போடுவது என சபை நாகரிகம் இன்றி வசை பாடி வருகிறார். ஆனால் இப்படி வன்மத்தாக்குதல் நடப்பதை சக உதவி ஆசிரியர்கள் அமைதியாக பார்த்தனர். நான் அவர்களின் நட்பு வட்டத்தில் இல்லை என்பதால் எனக்கு நேரும் பிரச்னைகளுக்கு கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். இப்படி வசை பாடுவது பட்டம் இதழுக்கு புதிதல்ல. இதற்கான

நியூரோமார்பிக் கேமரா மூலம் கிடைக்கும் பயன்!

படம்
  தெரியுமா? சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், 2021ஆம் ஆண்டு இறுதியில் நியூரோமார்பிக் கேமரா (Neuromorphic Camera) பொருத்தப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க விமானப்படை அகாடமியும், வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் என இரண்டு அமைப்புகள் இணைந்து நிறுவியுள்ளன. இக்கேமரா திட்டத்திற்கு ஃபால்கன் நியூரோ (Western’s Falcon Neuro project ) என்று பெயர். இந்த கேமரா தட்பவெப்பநிலை சார்ந்த மாற்றங்களை படம்பிடிக்க கூடியது. மின்னல், இடி, மேகங்களுக்கு இடையிலான மின்னோட்டம் ஆகியவற்றை பதிவு செய்து தகவல்களை பூமியில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்புகிறது.  தென்னாப்பிரிக்காவில் எம்போனெங் (Mponeng) என்ற தங்கச்சுரங்கம் உள்ளது. இது பூமியிலிருந்து 4 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகில், 3,900 மீட்டர் ஆழத்தில் டாவ்டானா (Tautona), சவுகா (Savuka) ஆகிய சுரங்கங்கள் தோண்டப்பட்டுள்ளன.  பூமியின் கீழே தோண்டப்படும் சுரங்கத்தில் வெப்பம்  70 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும். இதைக் குறைக்க ஐஸ்கட்டிகள் கரைத்த திரவத்தை சுரங்கத்தில் பீய்ச்சி அடித்து வெப்பம் தணிக்கிறார்கள். பலவீனமான சுரங்கப்பகுதியில் ஷாட

இருபது ஆண்டுகளில் பதினெட்டு பஞ்சம்! - விபச்சாரத்தில் தள்ளப்படும் பெண்கள்!

படம்
  அனந்தப்பூர், ஆந்திரப் பிரதேசம் தெலுங்கில் அனந்தப்பூர் என்றால் நிறைய விஷயங்களால் ஆசிர்வதிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் நிஜமோ படுமோசமாக இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் வறட்சி, பஞ்சத்தால் பதினெட்டு முறை பாதிக்கப்பட்டுள்ளது இந்த ஊர். காரணம் மழைப்பொழிவு குறைந்ததுதான். இதனால் அங்குள்ள மக்கள் நிறையப் பேர் இடம்பெயர்ந்து வருகிறார்கள்.  தென்னிந்தியாவின் வறண்ட மழைமறைவுப் பகுதியாக ராயலசீமாவின் அருகில் உள்ளது அனந்தப்பூர். இதன் வரலாற்றைத் தேடிப் பார்த்தால் 1882ஆம் ஆண்டு நெடும் பஞ்சங்களும் நீர் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது நடைபெற்றிருக்கும் பஞ்சங்கள் அதை விட மோசமாக இருக்கிறது.  இப்படி பஞ்சங்கள் வந்துகொண்டிருந்தால் எப்படி இங்கு விவசாயம் நடைபெற முடியும்.? கேள்வி நியாயமானதுதான். அதனால்தான் 30 லட்சமாக இருந்த விவசாய பரப்பு இப்போது 15 லட்சமாக குறைந்துவிட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு ஏற்படும் பஞ்சத்தின் நடைமுறை மாறுகிறது.  1989 முதல் 2018 வரையில் பெய்த மழை அளவை கணக்கிட்ட வானிலை ஆராய்ச்சி நிலையம், இங்கு பஞ்சம் அல்லது வெள்ளம் வரும் என கூறியுள்ளது. அனந்தப்பூரில் நடைபெ

வெயிலை அள்ளிப்பருகுபவனின் கதை! கடிதங்கள்

படம்
          எழுத்தாளர்  ஜெயமோகன்   இனிய தோழர் இரா . முருகானந்தம் அவர்களுக்கு , வணக்கம் . நலமா ? எங்கள் அலுவலகத்தில் தற்போது தீபாவளி மலர் வேலைகள் நடந்து வருகின்றன . கட்டுரைகளை செம்மையாக்கும் பணியைக் கொடுத்திருக்கிறார்கள் . சேலம் கல்லாங்குத்து பஜார் , திண்டுக்கல் - பழநி நடைபாதை , சிவகாசி தீக்குச்சிகள் உள்ளிட்ட கட்டுரைகள் தயாராகி உள்ளன . நிருபர் வெ . நீலகண்டனின் இடத்தை நிரப்புவது கடினமானது . அவர் ஏகப்பட்ட வேலைகளை செய்துகொண்டிருந்தார் . என்னால் முடிந்தளவு வேலை செய்து வருகிறேன் . விகடனில் ஜெயமோகன் எழுதிய வெயிலில் தொற்றிக்கொள்வது கதை , புதுவித புனைவாக ஈர்த்தது . வெயிலை அள்ளிப்பருகும் மனிதர் ஒருவரின் கதை இது . தீராத பகல் , தனது காதலியின் இறப்பு ஆகிய நினைவுகளை பசுமையாக வைத்திருக்க வெளிச்சத்தின் போதையை நாடி விமானத்திலேயே திரியும் மனிதரின் வாழ்க்கை ஆச்சரியப்படுத்தியது . குங்குமத்தில் வரும் முகங்களின் தேசம் தொடர் , நூலாக வெளியாகும்போது முக்கியமான நூலாக இருக்கும் . இந்திய நிலப்பரப்பு , மனிதர்கள் , புழுதி , நீர் , உணர்வுகள் என மாயம் நிகழ்த்தும் எழுத்து . பேச்சு மற

வெயில், மழையால் மனநிலை மாற்றங்கள் நடக்குமா?

படம்
giphy.com மிஸ்டர் ரோனி வெயில் அதிகரிக்கும்போது நமக்கு ஏன் கோபம் அதிகரிக்கிறது? வரிசையில் ரேஷன் வாங்க நிற்கிறீர்கள். அப்போது டீன் ஒருவன் கேசுவலாக உள்ளே வந்து அண்ணே அரிசியைப் போடுங்க என்று கார்டை நீட்டினால், டேய் வரிசையில் வந்து நில்லு என்று சொல்லுவீர்கள்தானே?  அனைவரும் கடையில் நின்று பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கும்போது குறுக்கே ஒரு சிறுவன் புகுந்து இந்த லிஸ்டுல இருக்குற பொருட்களைக் கொடுங்க அங்கிள் என என்று சொன்னாலும் இதே போலத்தான் நமக்கு கோபம் பொங்கும். ஆனால் இந்த கோபத்திற்கும் அன்று உதித்த சூரியனுக்கும் தொடர்பு இருக்கிறது. 1990 களில் இதுபற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், வெயில் அதிகமாக இருந்தபோது குற்றச்சம்பவங்கள் 2.7 சதவீதம் அதிகரித்ததாக கண்டுபிடித்தனர். இது இந்த நாடு மட்டுமல்ல, வெயில் அதிகமாக உள்ள நாடுகளில் அனைத்திலும் கோபக்காரர்கள் அதிகம் இருக்கிறார்கள். இதனால் போலீஸ் ஸ்டேஷன்களும் நிறைந்து உள்ளன. 2016 ஆம் ஆண்டு டெக்ஸாசிலுள்ள டெக் பல்கலைக்கழகத்தில் இரண்டு விளையாட்டு வீர ர்களிடையே இச்சோதனையை செய்தபோது, வெயில் அதிகமாக இருந்தபோது நிறைய பந்துகளை பௌல் செய்து அலம்பல் செய்த

ஓசோன் படலம் அழிந்தால் என்னாகும்? - சிஎஃப்சி விபரீதம்

படம்
giphy.com மிஸ்டர் ரோனி குளோரோஃப்ளோரோ கார்பன் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன ஆகும்? குளோரோப்ளோரோ கார்பன்களைப் பற்றி ஏராளமான விஷயங்களை  பள்ளியில் படம் வரைந்து பாகம் குறித்து படித்திருப்பீர்கள். பசுமை இல்ல வாயுக்களில் ஒன்று, நம் தலைக்கு மேல் உள்ள 30 கி.மீ. பரப்பில் உள்ள ஓசோன் படலத்தைப் பாதிக்கிறது. ஓசோன் வாயுவின் அளவைக் குறைக்கும் குளோரோஃப்ளோரோ கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் ரூம் போட்டு யோசித்தனர். இதன்விளைவாக பிறந்ததுதான் மான்ட்ரியல் நெறிமுறை ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் 197 நாடுகள் இணைந்துள்ளன. இந்நாடுகளுக்கு ஒரு நோக்கம் உண்டு. ஒரே நோக்கம்தான் ப்ரோ. , 2050 க்குள் உலகில் பல்வேறு செயல்பாடுகளின் விளைவாக வெளியேறும் குளோரோஃப்ளோரோ கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவதுதான். இல்லையெனில் கட்டுப்படுத்த முடியாத மழை, வெள்ளம், அனல் காற்று என வெப்பமயமாதலின் விளைவுகள் அதிகரிக்கும். கூடுதலாக புற ஊதாக்கதிர்கள் உள்ளே வருவதால் தோல் புற்றுநோய் பாதிப்பும் அதிகரிக்கும். நன்றி - பிபிசி

கலக்கும் சோலார் கார்!- வாங்க முடியுமா? - லைட்இயர் ஒன்!

படம்
உலகம் முழுக்க சோலார் காய்ச்சல் பரவி வருகிறது. ஆனால் பேட்டரி கார்களை, பைக்குகளை நம்பி பயணிப்பது பலருக்கும் அலர்ஜியாக உள்ளது. டக்கென எங்காவது நின்றுவிட்டால் என்ன செய்வது என்று?  டெஸ்லா போன்ற நிறுவனங்கள் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை. வந்தாலும் விலை அதிகம். என்ன செய்வது? நெதர்லாந்தைத் சேர்ந்த லைட் இயர் எனும் நிறுவனம் ஆற்றல் வாய்ந்த சோலார் காரை உருவாக்கி நம்பிக்கை தருகிறது. இதன் ஒன் எனும் வகைக்கார் ரேசில் கலந்து வெற்றி வாகை சூடியுள்ளது. 2013, 15,17 ஆண்டுகளில் இந்த சம்பவத்தை ஒன் கார் நிகழ்த்தியது. சோலார் காருக்கு வானிலை முக்கியம். இந்த ஒன் வகைக்கார் மழை பெய்யும் காலத்தில் 400 கி.மீ, வெயில் காயும் நேரங்களில் 725 கி.மீ தூரம் என பயணிக்கும் என்று கம்பெனி கூறுகிறது. பொதுவாக ஒருநாள் இரவு மட்டும் சார்ஜ் செய்தால், 250 வோல்ட்ஸ் கரண்ட் தேவை. 350 கி.மீ தூரம் ஜரூராக பயணிக்கலாம் என கேரண்டி தருகிறது லைட் இயர். இந்தியா போன்ற நாடுகளில் சார்ஜிங் பாய்ண்ட் தேவையில்லை. காரணம் இங்கு கொளுத்தும் வெயில்தான். கார் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும். எனவே, பாரத் பெட்ரோல் பங்க் சென்று சார்ஜ் போடும் அவஸ்த

சாலையில் ஆம்லெட் போட முடியுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சாலையில் முட்டையை ஆம்லெட் போடுமளவு வெப்பம் உருவாகுமா? வெயில் கொடுமையை விளக்க சிலர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள். நீங்கள் அதனை நினைத்துத்தான் இப்படி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என்னதான் வெயில் உங்களை படுத்தினாலும், முட்டையை முழுமையாக வேக வைக்க முடியாது. உங்களுக்கு முட்டையை முழு மையாக வேக வைக்க வேண்டுமெனில் அதற்கு 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவை. ஆனால் இதற்கும் தரை உதவாது. அதற்கு பாதாளச்சாக்கடை இரும்பு மூடி பயன்படும். உலோகம் கான்க்ரீட் அல்லது தார் சாலையை விட வேகமாக சூடேறும் என்பதால் இந்த ஐடியா. மற்றபடி இந்த சோதனையைச் செய்து முட்டையை வீணாக்காதீர்கள். முட்டை 5 ரூபாயை பச்சை குதிரை போல தாண்டிக் குதிக்கும் போது இதுபோன்ற சோதனைகள் வேண்டாமே ப்ரோ. நன்றி: பிபிசி

வெயிலில் நின்றால் கொழுப்பு குறையுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சூரிய ஒளியில் நின்றால் கொழுப்பு குறையுமா? சூரிய ஒளி தோலில்பட்டால் உடல் விட்டமின் டி சத்தை தயாரித்துக்கொள்கிறது. இது கொழுப்பு குறைய உதவுகிறது என்று புரிந்துகொள்ளுங்கள். கோடையில் நீங்கள் தோட்டவேலை செய்தால் வியர்வை வரும். எடை குறையும். பனிக்காலத்தில் இதைச் செய்யமுடியாது. எனவே டயட்டில் இருந்து எடை குறைப்பதே சிறப்பு. கொழுப்பு குறைய வெயிலில் நின்று நீர்ச்சுருக்கம் ஏற்பட்டுவிடப்போகிறது. ஜாக்கிரதை நன்றி: பிபிசி

காதல் காமம் 2

படம்
SF ஒருமுறை பார்த்தாலே காதல் வரும் என்பது உண்மையா? இதுமாதிரி மேஜிக் எல்லாம் நடப்பது இயல்புதான். இயல்பாகவே நாம் ஒருவரைப் பார்க்கிறோம். ஏதோ ஒரு விஷயம் நம்மை ஈர்க்கிறது. நட்பாகிறோம் இல்லை, பரிசல் கிருஷ்ணா சிறுகதை போல நீ ரொம்ப ஸ்பெஷல்டா என கொஞ்சுகிறோம் ஏதாவது நடந்தால்தானே வீக்எண்டிற்கு பிளான் செய்ய முடியும்.  சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து சோதித்தனர். கறுப்பு வெள்ளை புகைப்படங்களை நிறையப்பேரிடம் கொடுத்தனர். அவர்களின் கண்களின் அசைவு எப்படி இருக்கிறது? படங்களில் எந்த உறுப்புகளை கவனிக்கின்றனர் என சோதித்தனர். அவர்கள் தமக்கு பிடித்த படங்கள் என்று கூறிய படங்களில் அவர்களின் கண்களின் முகம், கைகால் என எக்ஸ்ரே போல மேய்ந்தன. ஆண், பெண் பேதம் எல்லாம் செக்ஸ், காதலுக்கு கிடையாது. பெஸ்ட் நமக்குத்தான் கிடைக்கணும் என்கிற வெறிதான் இதற்கு காரணம்.  மனிதர்களுக்கு செக்ஸ் என்பதற்கு ஏன் சீசன் கிடையாது? நாய், பூனை, சிம்பன்சி என அனைத்துக்கும் காதல் செய்ய கட்டிப்புரள நேரமுண்டு. ஆனால் மனிதர்களுக்கு ஏன் இருபத்திநான்கு மணிநேர சேவையை ஆண்டவன் விதித்தார்?  காரணம் விலங்குகளின் இ