இறந்துபோன மரத்தின் எமோஜி!

 

 



 

இறந்துபோன மரத்தின் எமோஜி!

இனி போன்களில் இறந்துபோன மரத்தின் எமோஜியை நாம் பயன்படுத்தலாம். ஆனால் இதை மகிழ்ச்சியான செய்தி என்று கருதமுடியாது. பகிரவும் முடியாது. 2022ஆம் ஆண்டு இறந்து மரத்தின் எமோஜி சிந்தனை உருவானது. அது அண்மையில் செயலாக்கம் பெற்றுள்ளது. யுனிகோட் கன்சோர்டியம் என்ற தன்னார்வ அமைப்பு, புதிய எமோஜியை ஏற்றுக்கொண்டுள்ளது.

இறந்த மரத்தின் எமோஜி, காலநிலை மாற்ற பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வுக்கானது. இயற்கையாகவே வறட்சி என்பது உலக நாடுகளின் பல பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது. மனிதர்கள் தங்கள் செயல்பாட்டால் ஏற்படுத்துவது வேறுவகையானது. புதிய எமோஜியை யோசித்தது சற்று முன்னரே என்றாலும் பல்வேறு பிரச்னைகளை பேசும்போது இன்றைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது என்றார் எமோஜி கமிட்டி தலைவரான ஜெனிபர் டேனியல். துருவத்தில் பனி உருகுவது, பிளாஸ்டிக் மாசுபாடு, கடல்நீர்மட்டம் உயர்வது, பன்மைத்தன்மை குறைவது என பல்வேறு பிரச்னைகளை எமோஜி மூலம் பேசலாம். 1970 தொடங்கி இன்றுவரை வறட்சியால் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் இறந்துள்ளதாக ஐ நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இன்று, 2.3 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் குடிநீருக்கு தவித்து வருகிறார்கள். 2050 காலகட்டத்தில் உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வறட்சியால், பஞ்சத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆப்பிள் ஐஓஎஸ் பதினெட்டில், பயனர்கள் புதிய எமோஜிகளை ஏஐ பயன்படுத்தி உருவாக்கிக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. எமோஜியை தினசரி வாழ்வில் மக்கள் பயன்படுத்தி செய்திகளை பரிமாறிக்கொள்வது வழியாக விழிப்புணர்வு உருவாவதுதான் முக்கியம். அதற்காக அதை உருவாக்கியுள்ளனர். ஆனால் மக்கள் எப்படி பயன்படுத்துவார்களோ, யாருக்குத் தெரியும்?

எப்இ - வைசாலி தார்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்