பிராமணாள் ஹோட்டல் பெயர்ப்பலகை! - பெரியார் ஆயிரம் நூலில் இருந்து....

 

 

 

 


 

 

பெரியார் வாக்கு!

இந்து மதத்தை ஒழிக்கவேண்டும் என்று கூறியதைக் கேட்ட ஒருவர், இந்து மதத்திற்கு மாற்றாக என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு பெரியார் சொன்னது என்ன?

வீட்டிற்குள் அசிங்கம் இருக்கிறது. எடுத்து எறியுங்கள் என்றால் அதற்கு மாற்றாக அந்த இடத்தில் எதை வைக்கலாம் என்பது சரியா என்று கேட்டார்.

கடவுள் இல்லை என்று கூறுறீர்களே, கடவுள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டவருக்கு பெரியார் கூறியது என்ன?
வந்துவிட்டால் கடவுள் உண்டு என்று ஒத்துக்கொள்வேன் என பதிலளித்தார்.

பிராமணாள் ஹோட்டல் பெயர்ப்பலகையை ஏன் அழிக்கவேண்டும் என பெரியார் நினைத்தார்?

தெருவில் உள்ள ஒரு வீட்டில் இது பதிவிரதை வீடு என்று  எழுதினால் பக்கத்து வீடுகள் தேவடியாள் வீடுகள் என்பது போல பிராமணாள் என்று எழுதினால் மற்றவர்கள் சூத்திரர்கள் என்றுதானே அர்த்தம் என பொருள் சொன்னார்.

படிப்பறிவின்மையை முற்றிலும் நீக்க பெரியார் பரிந்துரைத்த யோசனை?

ஆறு மாதத்திற்குள் கையெழுத்து கூடப் போட தெரியாதவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை அளிக்க வேண்டும்.

 மனுதர்மத்தில் சாதிக்கு ஒரு நீதி இருந்ததைக் கண்டித்துப் பேசும்போது பெரியார் வெளிப்படுத்திய தொடர்

தாடிக்கொரு சீயக்காய், தலைக்கொரு சீயக்காய்

பெரியார் தம் சொத்துக்கள் முழுமையையும் என்ன செய்தார்?

அறக்கட்டளை மூலம் பொதுச் சொத்தாக்கினார்.

நன்றி பற்றி பெரியாரின் கருத்தென்ன?

நன்றி உணர்வென்பது உதவியைப் பெற்றவர் காட்ட வேண்டிய கடமையே தவிர, உதவி செய்தவன் அதை எதிர்பார்ப்பது சிறுமைக்குணம் என்றார்.

1909ஆம் ஆண்டில் பெரியார் யாருக்கு விதவை மறுமணம் செய்துவைத்தார்?

தங்கையின் மகளுக்கு.

பெரியார் மனிதநேய மாண்பாளர் என்பதற்கு எடுத்துக்காட்டு?

ஈரோட்டில் பிளேக் நோய் வந்து பலரும் இறந்தபோது, அனேக பிணங்களை தனது தோள் மீது தூக்கிச் சென்று அடக்கம் செய்தார்.

இந்தியாவில் சாதிப்பிரிவினையை ஏற்படுத்தியவர்கள் யார்?

ஆரியர்

சாதி அமைப்பின் அடித்தளம் என்ன?

பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது.

நன்றி
பெரியார் ஆயிரம்
pinterest
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்