இடுகைகள்

எமோஜி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இறந்துபோன மரத்தின் எமோஜி!

படம்
      இறந்துபோன மரத்தின் எமோஜி! இனி போன்களில் இறந்துபோன மரத்தின் எமோஜியை நாம் பயன்படுத்தலாம். ஆனால் இதை மகிழ்ச்சியான செய்தி என்று கருதமுடியாது. பகிரவும் முடியாது. 2022ஆம் ஆண்டு இறந்து மரத்தின் எமோஜி சிந்தனை உருவானது. அது அண்மையில் செயலாக்கம் பெற்றுள்ளது. யுனிகோட் கன்சோர்டியம் என்ற தன்னார்வ அமைப்பு, புதிய எமோஜியை ஏற்றுக்கொண்டுள்ளது. இறந்த மரத்தின் எமோஜி, காலநிலை மாற்ற பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வுக்கானது. இயற்கையாகவே வறட்சி என்பது உலக நாடுகளின் பல பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது. மனிதர்கள் தங்கள் செயல்பாட்டால் ஏற்படுத்துவது வேறுவகையானது. புதிய எமோஜியை யோசித்தது சற்று முன்னரே என்றாலும் பல்வேறு பிரச்னைகளை பேசும்போது இன்றைக்கும் அது பொருத்தமாகவே உள்ளது என்றார் எமோஜி கமிட்டி தலைவரான ஜெனிபர் டேனியல். துருவத்தில் பனி உருகுவது, பிளாஸ்டிக் மாசுபாடு, கடல்நீர்மட்டம் உயர்வது, பன்மைத்தன்மை குறைவது என பல்வேறு பிரச்னைகளை எமோஜி மூலம் பேசலாம். 1970 தொடங்கி இன்றுவரை வறட்சியால் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் இறந்துள்ளதாக ஐ நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இன்று, 2.3 பில்லியனுக்கும...

மாற்றுத்திறனாளிகளுக்கான எமோஜி ஐகான்கள் ரெடி!

படம்
மாற்றுத் திறனாளிகளுக்கான எமோஜி ஐகான்கள் ரெடி!  மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில்  59 எமோஜிக்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. எழுத்தை விட படமாக பார்த்துப் புரிந்துகொள்வது எளிது. குறுஞ்செய்திகளை பயன்பாட்டை எமோஜிகள் அறிமுகமாகி முடித்து வைத்தன. தற்போது மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும்படி 59 புதிய எமோஜிக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜப்பான் மொழியில் எமோஜி என்ற சொல்லில் ’இ’(E) என்பதற்கு படம் என்றும், மோஜி(Moji) என்பதற்கு கதாபாத்திரம் என்றும் பொருள். இப்புகழ்பெற்ற வார்த்தை 2013 ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு அகராதியிலும் சேர்க்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி ஆப்பிள், கூகுள் மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் எமோஜிக்களை யுனிக்கோட் கான்சார்டியம் (The Unicode Consortium) என்ற அமைப்பு, தர நிர்ணயம் செய்து வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஐகான்களை அனுமதிக்க ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டே யுனிக்கோட் கான்சார்டியத்திடம் கோரியது. புதிய எமோஜிக்களைத் தயாரிக்க ஆப்பிள் பார்வையற்றோர் கௌன்சில், செரிபெரல் பால்சி பவுண்டேஷன், காதுகேளாதோர் சங்கம் ஆகிய அமைப்புகளின் உதவிகளைக் கோரி ப...