இடுகைகள்

கார்பன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவின் பசுமை அரசியல்! - கார்பனை அடிப்படையாக கொண்ட காலனியாதிக்க முறை வளருகிறதா?

படம்
சீனா, ஆசிய அளவில் பெரிய பொருளாதார சக்தி. அதை ஏற்றுக்கொள்ள முடியாத மேற்குலக நாடுகள் அந்நாட்டை கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் இழிவும் அவதூறும் செய்து வருகின்றன. அதில் முக்கியமானது. மாசுபாடு தொடர்பானது. இந்தியா, கருத்தியல் அல்லது பொருளாதார அளவில் கூட சீனாவின் அருகே நிற்க முடியாத நாடு. ஆனால் தொடர்ச்சியான சீனாவுடன் அதை ஒப்பீடு செய்து தாழ்வுணர்ச்சி கொண்ட ஆய்வாளர்கள் மனதை ஆற்றிக்கொள்கிறார்கள். அதனால் என்ன பயன் கிடைக்குமோ அவர்களது மனதிற்கே தெரியும். இந்தியா தலைநகரான டெல்லியில் கூட மாசுபாட்டை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. மாநில அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அதன் முதல்வருக்கான அதிகாரங்கள் மிக குறைவு. சீனாவில் மாசுபாடு பாருங்கள் இதோ என புகைப்படங்கள் எடுத்த மேற்குலகு கூட இப்போது சீனாவில் மாசுபாடு வெகுவாக கட்டுப்பட்டிருப்பதை ஏற்க முடியாவிட்டாலும் நெசந்தானுங்க அய்யா என ஒருவழியாக ஒப்புக்கொள்ள தலைப்பட்டிருக்கிறார்கள். பொறாமையும், வயிற்றெரிச்சலும் மட்டுமே ரு நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லமுடியாது. சூழியல், காலநிலை மாற்றம் ன்பன மக்...

சீனாவை வீழ்த்த இறக்குமதி வரியை உயர்த்தும் ஐரோப்பிய கமிஷன்

படம்
            சீனாவை வீழ்த்த இறக்குமதி வரியை உயர்த்தும் ஐரோப்பிய கமிஷன் வணிக ரீதியான போட்டியை, தொழில் சார்ந்து நிறுவனங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். போட்டியை சமாளிக்க ஆராய்ச்சி செய்யவேண்டும். கரிம எரிபொருள் வாகனமோ, மின் வாகனமோ புதுமைகளை புகுத்த வேண்டும். ஆனால், மக்களுக்கு குறைந்த விலையில் தரமாக கிடைக்கக்கூடிய சீன மின் வாகனங்களை ஐரோப்பிய கமிஷன் முப்பத்து மூன்று சதவீத வரியை விதித்து தடுக்க முயல்கிறது. குறிப்பாக அவர்களது இலக்கு, பைடு என்ற சீன மின் வாகன நிறுவனம்தான். இந்த நிறுவனம், மின்வாகனங்களை டெஸ்லாவை விட தரமாகவும் விலை குறைவாகவும் தயாரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு விற்று வருகிறது. இதைப் பயன்படுத்தி 2025ஆம் ஆண்டுக்கான கார்பன் வெளியீட்டு இலக்கைக் கூட ஐரோப்பிய கமிஷன் அடையமுடியும். பதிலாக, சீனாவின் மின்வாகன இறக்குமதிக்கு அதிக வரியை விதித்து அமெரிக்காவுடன் கைகோத்திருக்கிறது. இந்த வரி விதிப்பிற்கு சீன அரசு எதிர்ப்பு தெரிவித்து உலக வர்த்தக கழகத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சீனாவில் உள்நாட்டு நிறுவனங்களான பைடு, ஜீலி ஆகியவற்றோடு வெளிநாட்டு நிறுவனங்களான டெஸ்லா கூட மின் வ...

பசுமை இல்ல வாயுக்கள் இல்லாத உலகம், மத நெருக்கடிகளை எதிர்கொண்ட ரோஜர் பேக்கான்

படம்
            அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி உலகில் பசுமை இல்ல வாயுக்களே இல்லை என்றால் பூமியின் வெப்பம் என்னவாக இருக்கும்? தோராயமாக மைனஸ் 15 டிகிரி தொடங்கி மைனஸ் இருபது டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். பசுமை இல்ல வாயுக்களின் காரணமாகவே பூமியில் தோராய வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாக உள்ளது. முற்றாக பசுமை இல்ல வாயுக்களே இல்லை என்றால் நம் வாழ்க்கை முற்றாக பூமியில் இல்லாமல் போய்விடும். அளவோடு இருப்பது நல்லது. கூடவும் கூடாது, குறையவும் கூடாது. சூரிய வெப்பம் பசுமை இல்ல வாயுக்களின் ஊடாகவே பூமிக்கு வருகிறது. இந்த வெப்பம் வாயுக்களின் காரணமாகவே பூமியில் தங்குகிறது. பசுமை இல்ல வாயுக்கள் அளவை தாண்டாமல் இருந்தால் பூமியில் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வதற்கான காலநிலையை உருவாக்குகிறது. குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு, தாவரங்கள் வளர்வதற்கு அத்தியாவசியம். கார்பன் அனைத்து தாவரங்கள், விலங்குகள் வாழ்க்கைக்கும் தேவையான ஒன்று. ரோஜர் பேக்கான் என்பவர் யார்? 1214 அல்லது 1220 ஆண்டில் பிறந்தவர் என்றே கூறவேண்டியுள்ளது. இவர் ஒரு அறிவியலாளர். ரோஜர் பேக்கானை பலரும் தத்துவவாதி பிரான்சிஸ் பேக்கானோட...

ஆண்டுக்கு நூறு பில்லியன் - காலநிலை மாற்ற திட்டங்களுக்குத் தேவை நிதி!

படம்
  ஆண்டுக்கு நூறு பில்லியன் - காலநிலை மாற்ற திட்டங்களுக்குத் தேவை நிதி! ஜெர்மனியின் போன் நகரில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாடு எதிர்பார்த்த இலக்கை அடையவில்லை. இதில், பொருளாதார இலக்கு ஒன்றை தீர்மானிக்க இருந்தனர். 2024ஆம் ஆண்டு இறுதியில் ஆண்டுக்கு நூறு பில்லியன் டாலர்கள் என்ற இலக்கு தாண்டி செல்லவேண்டும் என்பதே லட்சியம். அப்போதுதான் காலநிலை மாற்ற திட்டத்திற்கு வளரும் நாடுகளுக்கு உதவ முடியும். வரும் நவம்பர் மாதம் அஜர்பைஜானில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்ற மாநாடுக்கு முன்னதாக நிதி இலக்கை திட்டமிட இருந்தனர். ஆனால் நோக்கம் நினைத்த திசையில் செல்லவில்லை. காலநிலை மாற்ற அறிக்கையில் நாற்பத்தைந்தாவது பக்கம், இன்புட் பேப்பர் என்ற சொல் உள்ளது. இதில், நாடுகள் வழங்கும் நிதி, அது செலவழிக்கப்படும் விதம், அதை அமைப்பினர் கண்காணிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகளும் தங்கள் கருத்துகளை அழுத்தம் கொடுத்து கூற வாய்ப்புள்ளது. காலநிலை மாற்றத் திட்டங்களில் நிதியாதாரமே முக்கியப் பங்கு வகிக்கிறது. பணம் செலவிடப்படும் விதம், ஏற்பட்ட தாக்கம் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுவது 2015ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை...

சூழல் மாநாடுகளை இயக்கும் பெட்ரோலிய, நிலக்கரி பெருநிறுவனங்கள் - மாறாத கொள்கைகள், அபகரிக்கப்படும் பழங்குடிகளின் நிலங்கள்

படம்
சூழல் மாநாடுகளை கவனித்தால், அதில் பங்கேற்பவர்கள் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், சூழல் ஆர்வலர்கள் என இருப்பார்கள். ஆனால் அதன் பின்னணியில் இருந்து அனைத்தையும் இயக்குவது, பெருநிறுவனங்கள்தான். எனவே, மாநாடுகளில் எடுக்கும் முடிவுகள் வணிகத்தை பாதிக்காதவாறு மாற்றிக்கொள்கிறார்கள். சூழலைக் காப்பது பற்றி பேசினால், பொருளாதார வளர்ச்சி ஏழைகளின் வாழ்வை மாற்றியமைக்கும் என அதை மறுத்து பேசுகிறார்கள். ஏழை மக்களின் வறுமை, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி என்ற லேபிள்களின் பின்னணியில் பெரு நிறுவனங்களின் லாபவெறி மட்டுமே உள்ளது. போட்ட முதலீடுகளுக்கு குறையாத லாபம் வரவேண்டும். அதை சூழல் கட்டுப்பாடுகளுக்கு இசைந்து குறைத்துக்கொள்ள மனம் வரமாட்டேன்கிறது என்பதே உண்மை. காலநிலை மாற்ற மாநாடு நடக்கும் இடங்களுக்கு வெளியில் இளைஞர்கள், சூழல் ஆர்வலர்கள் உலக நாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பலருக்கும் பழகிவிட்டது. சூழல் பிரச்னைகள் மேற்கு நாடுகளில் எண்பதுகளிலேயே தொடங்கிவிட்டன. அப்போதே அதை சரிசெய்யவேண்டும் என கூறத் தொடங்கிவிட்டனர். சூழல் மேம்பாட்டிற்கான வணிக கௌன்சில் என்ற உலகளாவிய அமைப்பு இயங்கி வருகிறது. இதில், உள்ள அ...

கார்பன் டை ஆக்சைடு, பயிர்களுக்கு நல்லது - நச்சு பிரசாரம் செய்யும் வலதுசாரி பெருநிறுவனங்களும், கைக்கூலி சிந்தனை அமைப்புகளும்

படம்
சமூக பகிரலுக்கு எடுத்துக்காட்டு, நூலகம். இன்று தமிழ்நாட்டிலுள்ள பல நல்ல நூலகங்கள் போட்டித்தேர்வு மாணவர்களுக்கான பயிற்சிக்கழகமாக மாறிவிட்டது. ஆனால், முன்னர் ஏராளமான நல்ல நூல்களுக்கான உறைவிடமாக இருந்தது. தனிநபராக ஒருவர் புத்தக திருவிழா அல்லது நூல் கடைக்குச் சென்று எதையும் வாங்க வேண்டியதில்லை. நூலகத்தில் அரசு நூல்களை வாங்கி வைத்திருக்கும். அதை ஒருவர் இலவசமாக அணுகி படிக்கலாம். வீட்டில் எடுத்து வந்து படிக்க காசு கட்டவேண்டும். இதன்மூலம் நிறைய நூல்களை வாங்கவேண்டிய தேவை இல்லை. சூழல் சார்ந்து அனுகூலங்கள் அதிகம். காகிதம் தயாரிக்க மரங்களை வெட்டி கூழாக்கவேண்டியதில்லை. மாசுபாடும் குறையும். கார் பூல் எனும் ஒரு காரை நிறைய பயணிகள் பகிர்ந்துகொண்டு பயணிப்பதைக் கூட சமூக பகிரலில் சேர்க்கலாம். சூழல் சோசலிசம் தனிநபர் உடைமையை எதிர்க்கவில்லை. வீணாக்குதலை தவிர்க்க கோருகிறது. இயற்கை வளம் சேதப்படுத்துதலை தடுக்க முயல்கிறது. பொருளாதார வளர்ச்சி நிச்சயம் நாட்டிற்கு தேவை. ஆனால், அதற்கான வழி இயற்கைச்சூழலை குறைந்தளவு பாதிப்பதாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அதை ஈடுகட்ட முடியாது. இயற்கை வளம் அழிப்பு சார்ந்த விஷயங்களை ச...

அதீத நிலையை எட்டும் காலநிலை மாற்ற விளைவுகள்

படம்
  காலநிலை மாற்றம் குடிநீர் பற்றாக்குறை, காட்டுத்தீ, கடல் மட்டம் உயர்வு, மழை வெள்ளம் சமயத்தில் மட்டும் நாளிதழ்கள் பத்திரிகைகள் உறக்கத்திலிருந்து எழுந்து செய்திகளை வெளியிடுவார்கள். மற்ற நேரங்களில் கோவிலுக்கு செல்ல பிரதமர் செய்த விரதம் என சொம்படிக்கும் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பார்கள். இதற்கு, சில ஆங்கில தேசிய நாளிதழ்கள் விதிவிலக்காக உள்ளன. அவர்களை பெரிதாக குறை சொல்ல ஏதுமில்லை. வாங்கிய பணம் அப்படி பேச, எழுத வைக்கிறது. பிழைப்புவாதிகள் அவர்களுடைய வேலையைப் பார்க்கட்டும். நாம், காலநிலை மாற்றம் பற்றிய விஷயத்தைப் பார்ப்போம்.  1850ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை உலகளவில் 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதற்கு இயற்கை ஒரு காரணம் என்றாலும், மனித செயல்பாடுகள் மற்றொரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது.   வெப்பம் அதிகரித்து வருவதால் வெப்ப அலை, பஞ்சம், வெள்ளம், புயல், காட்டுத்தீ சம்பவங்கள் உலகமெங்கும் நடந்துவருகின்றன. காலநிலை மாற்றத்தில் எல் நினோ, லா நினோ ஆகியவை ஏற்படுத்திய தாக்கம் பற்றி அமெரிக்க தேசிய அறிவியல் கழகம், ராயல் சங்கம் ஆகிய இரு அமைப்புகள் கிளைமேட் சேஞ்ச...

2015ஆம் ஆண்டு சூழல் ஒப்பந்தம் மீறப்பட்டால் என்ன விளைவுகளை சந்திக்க நேரும்?.....

படம்
  2015ஆம் ஆண்டு பாரிஸ் சூழல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்குப் பிறகு எட்டாண்டுகள் கழிந்துள்ள நிலையில், என்னென்ன மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. 1.5 டிகிரி செல்சியஸ் என வரையறை செய்துகொண்டு நாடுகள் முயற்சிகளை செய்தன. ஆனால், காலப்போக்கில் பெருநிறுவனங்கள் கார்பன் வெளியீடு பற்றி கண்டுகொள்ளாமல் தங்களுடைய வருமானம் எந்தளவு பெருகியுள்ளது. பங்குச்சந்தையில் பங்கு விலை அதிகரித்துள்ளது பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். அரசும் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை.  திரைப்படத்தின் வருமானம் என்பதைவிட அதைப்பற்றிய கருத்தியல் ரீதியான விமர்சனமே முக்கியம். ஆனால் இன்று மோசமான படம் கூட வருமான சாதனை செய்கிறது. அதை வைத்தே படத்தின் கருத்து சரியில்லை என்று கூறுபவர்கள் மீது வழக்கு தொடங்குகிறார்கள். அவர்களின் பதிவுகளை நீக்க முயல்கிறார்கள். உலகம் முழுவதும் வலதுசாரி தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்தபிறகே, மாசுபாடு, கார்பன் வெளியீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இத்தலைவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான நிதிகளை அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துவருகிறார்கள். போராளிகளை சிறையில் அடைத்து வருகி...

சூழலுக்கு இசைந்த விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் தடுமாறும் லீகோ!

படம்
  லீகோ குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என்பதை அறிவீர்கள். இந்த நிறுவனம் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான அடிப்படை ஆதாரம், கச்சா எண்ணெய்தான். ஆனால் சூழலியல் கட்டுப்பாடு, அதைப்பற்றிய அறிவு மக்களுக்கு அதிகரித்து வருவது நிறுவனத்திற்கு சங்கடமாகி வருகிறது.  எனவே லீகோ தனது உற்பத்தியை மாசுபாடு அதிகம் ஏற்படுத்தாத மறுசுழற்சி செய்யும் பொருட்களுக்கு மாற்றி வருகிறது. தற்போது அக்ரிலோனைட்ரில் பூட்டாடையின்  ஸ்டைரீன்  சுருக்கமாக ஏபிஎஸ் என்ற பொருளை பயன்படுத்தி வருகிறது. இதை மறுசுழற்சி செய்யலாம். உயிரியல் ரீதியாக மட்க கூடியது. ஆனால் அதற்கான காலம் அதிகம்.  தற்போது, லீகோ பிராண்டின் மதிப்பு ஏழு பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்த நிறுவனம் சூழலுக்கு உகந்த பொருளை கண்டுபிடித்து அதை உற்பத்திக்கு பயன்படுத்தினால் மட்டுமே வணிக வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லீகோ நிறுவனம், ஆர்பெட் எனும் பிளாஸ்டிக்கை பற்றி பெருமையுடன் கூறியது. இதை பயன்படுத்தி மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரிக்கலாம் என்றது. ஆனால் இந்த வகை பிளாஸ்டி...

ஒளிச்சேர்க்கை மூலம் கார்பன் டை ஆக்சைடை காற்றில் இருந்து அகற்றும் தொழில்நுட்பம் - அசத்தும் லிவ்விங் கார்பன் நிறுவனம்

            காடுகளை வளர்த்து அதாவது அதை செயற்கையாக கூட வளர்க்கலாம் . ஆனால் அதன் மூலம் மாசுபாடுகளை குறைக்கவேண்டும் என எண்ணும் காலம் வந்துவிட்டது . காடு , இயற்கை சூழல் என எதற்காகவும் மக்கள் தங்கள் சுகங்களை தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாது . நாளிதழ்கள் , வார இதழ்கள் எல்லாம் ஏழைகளிடம் , சாதாரண மக்களிடம் சிவப்பு இறைச்சியை சாப்பிடாதீர்கள் , மீத்தேன் அதிகரித்துவிடும் என பிரசாரம் செய்து வருகின்றன . ஆனால் இந்த பிரசாரத்தை அவர்கள் தொழிலதிபர்களிடம் செய்தால் நெஞ்சுக்கு நேர்மையாக இருக்கும் . ஆனால் அவர்கள்தான் ஊடகங்களை நடத்துகிறார்கள் . அல்லது விளம்பரங்கள் மூலம் படியளக்கிறார்கள் . அவர்களை எதிர்க்க த் துணிவார்களா கடினம் தான் . குறிப்பிட்ட மண் சார்ந்த மர வகைகளை கண்டறிந்து அதை மண்ணில் ஊன்றிவைத்து கார்பனை உறிஞ்சுகிறதா என பார்த்துவந்தது கடந்த காலம் . இப்போது காற்றிலுள்ள கார்பனை உறிஞ்சுவதற்காகவே நூறுக்கும் மேற்பட்ட மர வகைகளை ஆய்வகத்தில் உருவாக்கி அதை மண்ணில் ஊன்றி வருகிறார்கள் . இதை வணிகமாகவே சில நிறுவனங்கள் செய்து வருகின்றன . 2019 ஆம் ஆண்டு லிவ்விங் கார...

மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகளால் ஏற்படும் சூழல் பாதிப்பு!

படம்
  மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகள் உலோகங்கள், வேதிப்பொருட்கள், சிமெண்ட் ஆகிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய பொருட்கள் கரிம எரிபொருட்களை சார்ந்தே இருக்கின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் செயல்முறையில் பெருமளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன. 0.98 டன்   ஸ்டீலை உற்பத்தி செய்யும்போது 1.87 டன் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகிறது. இப்படி வெளியாகும் வாயுவை குறைக்க முடியாது. ஏனெனில் ஸ்டீல், சிமெண்ட் என இரண்டுமே நகரங்களைக் கட்டமைப்பதில் முக்கியமானவை. இவற்றுக்கு மாற்று இன்றுவரை வெற்றிகரமாக அமையவில்லை. எனவே, காற்றில் வெளியாகும் கார்பன் என்பது மென்மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.   கனரக தொழில்துறைக்கு இப்போதைக்கு கையில் உள்ள மாற்று முறை ஸ்டீம் மீத்தேன் ரீஃபார்மிங் எனும் முறைதான். இதில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் கனரகத் தொழில்துறை 22 சதவீத கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டிற்கு காரணமாக உள்ளது. இதை மட்டுமே குறையாக கூற முடியாது. ஜவுளித்துறையிலும் அதிக சூழல் பாதிப்பு உள்ளது. ஆடைகளைப் பற்றிப் பார்ப்போம். இங்கிலாந்தில் விற்கப்படும் எண்பது சதவீத ஆடைகள் மறுசுழற்...

உணவு வீணாவதால் உருவாகும் மீத்தேன் வாயு!

படம்
  ஆண்டுதோறும் 1.4 பில்லியன் டன் உணவுப்பொருட்கள் வீணாகி வருகின்றன. உற்பத்தியாகும் மூன்றில் ஒரு பங்கு உணவுப்பொருள், வீணாகிவருவதாக ஐ.நா அமைப்பு கூறுகிறது. உணவு வீணாவது எந்தெந்த நிலையில் நேரிடுகிறது? உற்பத்தி, அதை ஓரிடத்திலிருந்து சந்தைக்கு கொண்டு செல்வது, விற்பனை, வீட்டு பயன்பாடு என பல்வேறு செயல்களில் உணவு வீணாகிறது. உலக நாடுகளில் நாற்பது சதவீதம் உணவுப்பொருட்கள் அதன் விற்பனை நிலையில்தான் வீணாவது தெரிய வந்துள்ளது. மனிதர்கள் சாப்பிட உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள் வீணாவது, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த உணவுப் பொருட்கள் பட்டியால் தசை உருகி கிடக்கும் மக்களுக்கு சென்று சேருவது பல்வேறு உலகளவிலான பொருளாதார கொள்கைகளால் தடுக்கப்படுகிறது.   மக்களுக்கு பயன்படாமல் கெட்டு அழுகிப்போகும் பொருட்களால் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுவான மீத்தேனின் அளவு கூடுகிறது. உணவு வீணாவதால் உலகளவில் 28 சதவீத வேளாண்மை நிலங்களின் பயன்பாடு சீர்கெடுகிறது.   60 க்யூபிக் கி.மீ அளவு நீர் வீணாகிறது. வீணாகும் உணவை உற்பத்தி செய்யும் செயல்முறையில் வெளியாகும் கார்பன் அளவு 3.6 பில்லியன் டன் ஆகும். உணவை உற...

மக்கள்தொகை பெருக்கமே, கார்பன் வெளியீட்டுக்கு முக்கியக் காரணம்!

படம்
  தொழில்துறை வளர்ச்சி பெறுவதற்கு முன்னர், மக்கள் கிராமத்தில் உள்ள தங்கள் வீடுகளில் உழைத்து வந்தார்கள். பின்னாளில், தொழிற்சாலைகள் நகரத்தில் உருவாகின. அதைச் சுற்றி பல்வேறு உபதொழில்கள் தொடங்கப்பட்டன. தொழிலாளிகள் எந்திரம் போல அதிக நேரம் வேலை வாங்கப்பட்டனர். அவர்கள் வேலை செய்யும் இடத்தில் போதிய வசதிகளும் இல்லாமல் இருந்தன. தொழில்துறை வளர்ச்சி அதிகரித்தபோது வளிமண்டலத்தில் 48 சதவீத கார்பன் டை ஆக்சைடு கலந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வேளாண்மை பொருளாதாரத்தில் இருந்து பெரும் உற்பத்தி சார்ந்த தொழில்துறைக்கு மாறினர். இந்த தொழில்புரட்சி மெல்ல பிற நாடுகளுக்கும் பரவியது. இரும்பு, ஸ்டீல் ஆகியவற்றைத் தயாரிக்க அதிகளவு நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. பொருட்களை கொண்டு செல்ல உதவி நீராவி எஞ்சினுக்கு முக்கிய ஆதாரமே நிலக்கரிதான். அன்று உலக நாடுகள் ஆற்றல் தேவைக்கு நம்பியிருந்த ஒரே பொருள், நிலக்கரிதான். தொழில்புரட்சி மேற்கு நாடுகளுக்கு பெரும் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுத் தந்தன. அதேசமயம் அவை நிலம், நீர், காற்றை   மாசுபடுத்தவும் செய்தன. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு,...