இடுகைகள்

கெஸ்சால்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன்னைப் பற்றி உணர உதவும் உளவியல் சிகிச்சை முறை

படம்
  கெஸ்சால்ட் தெரபி என்பது நிகழ்காலத்தில் உள்ளவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டது. ஒருவர் தனது உணர்ச்சிகளை கையில் கையாளத் தெரிந்துகொண்டாலே எளிதாக பிரச்னைகளிலிருந்து வெளியே வரமுடியும். தனது மனதில் குறிப்பிட்ட நேரத்தில் எந்த மாதிரியான உணர்ச்சிகள் ஏற்படுகின்றன என்பதே இதில் உணரவேண்டியது. இப்படி உணர்ந்துகொண்டால் ஒருவரால் கவனமாக தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். தன்னைப் புரிந்துகொள்ளலாம்.  உணர்ச்சிகளின் மீதான கவனத்தை ஒருவர் கொண்டிருப்பது, கூறுவதைப்போல எளிதானது அல்ல. கடினமானது. இதை நிகழில் வாழ்தல் என்று கூறுவார்கள். இதை ஒருவர் மெல்ல பழகினால் எளிதாக தனது சூழல், அதில் அவரது அனுபவம் என இரண்டையும் மெல்ல மாற்றிக்கொள்ள முடியும். கெஸ்சால்ட் தெரபியில் என்னால் முடியாது என்று கூறுவதை நான் அதை செய்ய விரும்பவில்லை என மாற்றிச்சொல்ல வைக்கிறார்கள். செயல்பட வைக்கிறார்கள். முதலில் பேசவேண்டும். பிறகு அதுவே செயலாகிறது. அதாவது, நான் என்ற தன்மை மாறுதல் அடைகிறது. விஷயங்களை வாய்ப்பாக பார்க்கும் குணம் கூடுகிறது. குறிப்பிட்ட சூழல் காரணமாக அல்லது அதை காரணம் காட்டி தன்னை பாதிக்கப்பட்டவர்கள