சூழல் மாசுபாடுகளால் புயல்களின் வலிமை அதிகரித்து வருகின்றன! - வானியலாளர் ரகு முர்டுகுடே
கடல் வெப்பமாவதால் புயல்கள் வலிமையாகின்றன ரகு முர்டுகுடே, தட்பவெப்பநிலை வானியலாளர்(மேரிலேண்ட் பல்கலைக்கழகம்) வரலாற்றுரீதியாக புயல்கள் அரபிக்கடலில்தான் உருவாகி வந்துள்ளன. வங்காள விரிகுடாவில் புயல்கள் அதிகம் உருவாகி வரவில்லை. இப்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? பருவகாலத்திற்கு முன்னர் நீங்கள் கூறியபடி வங்காள விரிகுடா, அரபிக்கடல்களில் புயல்கள் உருவாகின்றன. நவம்பரில் வங்காள விரிகுடாவில் மட்டும் 80 சதவீத புயல்கள் உருவாகின்றன. அரபிக்கடலில் உருவாகும் புயல்கள் சற்று குழப்பமானவை. நம்மிடம் ஆழமான தகவல்கள் இல்லை என்றாலும் மாசுபாடு, அரபிக்கடலில் ஏற்படும் புயல்களை தீவிரப்படுத்துவதாக தோன்றுகிறது. இந்தியா புயல்களிலிருந்து எப்படி தப்பி பிழைப்பது? பொதுவாக, பேரிடர் மேலாண்மைகளில் கவனம் செலுத்துவது அவசியம். இந்திய தட்பவெப்பநிலை நிறுவனத்தின் கருத்துகளை காதுகொடுத்து கேட்பது அவசியம். நகரத்திலுள்ள கழிவுநீர் அமைப்புகளை சீர்படுத்துவது முக்கியம. மாங்குரோவ் காடுகள் அழிவு, நகரிலுள்ள மரங்கள் தீவிரமாக அழிக்கப்படுவது அனைத்தும் புயல்கள் தீவிரமடைவதை ஊக்குவிக்கின்றன. அதற்கு முன்னரே அதனைத் தவிர்க்கும், பாதிப்ப