இடுகைகள்

சிந்துதாய் சிப்கல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்ம விருதுகளைப் பெற்றவர்களைப் பற்றிய சிறு அறிமுகம்!

படம்
இந்தியாவைப் பொறுத்தவரை விருது என்பதே அப்ளிகேஷன் போட்டு வாங்குவது என்று மாறிவிட்டது. அரசு தனக்கென தனி குழுவை வைத்து சமூகத்திற்கு உழைப்பவர்கள், அதன் பாரத்தை தனது தோளில் சும்பபவர்களை பரிசளித்து கௌரவித்தால் நன்றாக இருக்கும். பெரும்பாலும் அரசுக்கு விழா கொண்டாடுவது முக்கியமே ஒழிய, அதற்கான உழைப்பை போட எப்போதும் சோம்பல் பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் சில மனிதர்களை அதிகாரிகள் குழு எப்படியோ தேர்ந்தெடுத்து கௌரவம் செய்துவிடுகிறார்கள். அவர்கள் பெயர் நமக்கு தெரியாவிட்டாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மூலம் நாம் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். அப்படி பத்ம விருது வென்ற சில மனிதர்களைப் பற்றி பார்க்கலாம். நந்தா கிஷோர் ப்ரஸ்டி கைவிளக்கு ஏற்றிய ஆசிரியர் கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் பரிசு வழங்கப்பட்ட மனிதர். கடந்த ஆண்டு டிசம்பரில் காலமாகிவிட்டார். ஆனால் இவர் கற்பித்த கல்வி பலரது வாழ்க்கையில் இருளை விலக்கியிருக்கிறது. அறிவு விளக்கை மனதில் ஏற்றியிருக்கிறது. ஒடிஷாவைச் சேர்ந்த கிஷோர், எழுபது ஆண்டுகாலம் கல்வியை குழந்தைகள் முதல் வயது வந்தோருக்கும் கற்பித்து வந்திருக்கிறார். இச்ச