இடுகைகள்

பிளாஸ்டிக் கழிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இமாலயப்பகுதிகளைப் பாதுகாக்கும் வேஸ்ட் வாரியர்ஸ் அமைப்பு!

படம்
  கழிவு மேலாண்மையில் தடுமாறும் இமாலய மாநிலங்கள்! இந்தியாவில் இமாலயப் பகுதிகளை உள்ளடக்கி பத்து மாநிலங்கள் உள்ளன. இதில் முக்கியமானவை, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம்.  இங்குள்ள மலைப்பகுதிகளைக்  காண லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகிறார்கள். இதனால் கிடைக்கும் வருவாய், மாநிலங்களுக்கு முக்கியமான பொருளாதார ஆதாரமாகும்.  இமாலயப் பகுதிகளில், தோராயமாக ஆண்டுக்கு 80 லட்சம்  டன் கழிவுகள் தேங்கிவருகின்றன. நகரத்தில் தேங்கும் குப்பைகளைச் சேர்த்தால் அளவு இன்னும் கூடும். இதே வேகத்தில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை வந்தால் 2025ஆம் ஆண்டில், 24 கோடி சுற்றுலாப் பயணிகள் வருவர் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்தது.  இமாலய மாநிலங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைவு. இமாச்சலப் பிரதேசத்தின் கங்க்ரா (Kangra), குலு (Kullu) ஆகிய மாவட்டங்களின் பள்ளத்தாக்கு பகுதிகளில் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலும் இங்கு வருகை தருபவர்களில் சுற்றுலாப் பயணிகள், ஆன்மிக பயணிகள், மலையேற்ற வீரர்கள் ஆகியோர்தான் அதிகம். வெளியிலிருந்து வருபவர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பைகள், உணவு

வாட்டர் வாரியர் விருது பெற்ற கோவை மணிகண்டன்! - கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

படம்
  கோவையைச் சேர்ந்தவர், மணிகண்டன். இவர் மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சக வாட்டர் வாரியர் விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இதற்கான விருதை இன்று, ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் வழங்குகிறார்.  மணிகண்டன் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். 2017ஆம் ஆண்டு தொடங்கி கோவையிலுள்ள பல்வேறு குளம், குட்டை, ஏரிகளை மீட்டு வருகிறார். இவரது செயல்பாடுகளைப் பார்த்து ஜல்சக்தி அமைச்சக அதிகாரிகள், சில மாதங்களுக்கு முன்னர் இவரைத் தொடர்புகொண்டுள்ளனர். குளங்களை புனரமைப்பு செய்த தகவல்களை தொகுத்து அனுப்பக்கூறியுள்ளனர். இப்படித்தான் விருதுக்கு மணிகண்டன் தேர்வானார்.  இவர்களது முதல் வேலை, பேரூர் பெரியகுளத்தில் பணியைத் தொடங்கினர். பிறகு ஏரி என செயல்பாடு வளர தன்னார்வலர்களும் ஆர்வமாகி இணைந்தனர். இப்படி 24 ஏரிகள், 900 குளங்கள், 27 கால்வாய்களை புனரமைப்பு செய்துள்ளனர். 224 வாரங்களில் சீமை கருவேல மரங்கள் போன்ற அந்நிய தாவர இனங்களையும் அகற்றியுள்ளனர்.  புனரமைப்பு பணியோடு பசுமை பரப்பை அதிகரிக்க மியாவகி வகை காடுகளையும் உருவாக்கி வருகின்றனர். இந்த முறையை ஜப்பானைச் சேர்ந்த  அகிரா மியா