இடுகைகள்

சத்யஜித்ரே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சத்யஜித்ரே - மறக்கமுடியாத சினிமாக்கலைஞன்

படம்
  சத்யஜித்ரேவுக்கு நிறைய அடைமொழிகள் உண்டு. சினிமா இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், இதழ் ஆசிரியர், ஓவியர், சித்திர எழுத்துக்கலைஞர், இசை அமைப்பாளர் என பல்வேறு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்.  1921ஆம் ஆண்டு மே 2 அன்று பிறந்தவர், சத்யஜித்ரே. வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பிறந்தார். இவரது குடும்பமே அன்று வங்காளத்தில் புகழ்பெற்றதுதான். பத்து தலைமுறையாக புகழ்பெற்ற மனிதர்கள் அந்த குடும்பத்தில் இருந்து வந்தனர். சத்யஜித்ரேவின் தாத்தா, உபேந்திர கிஷோர் ரே எழுத்தாளராக இருந்தார். கூடுதலாக, அன்றைய பிரம்ம சமாஜத்தின் தலைவராகவும் இருந்தார். சத்யஜித்ரேவின் தந்தை ஓவியராக இருந்தார். இவர் குழந்தைகளின் புத்தகங்களுக்கு நூல்களுக்கு படம் வரைந்துகொண்டிருந்தார்.  ரே, பாலிகுங்கே அரசுப்பள்ளி மேல்நிலைப்பள்ளியில் படித்தார். கொல்கத்தாவில் இருந்த பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரப் பாடத்தில் பட்டம் பெற்றார்.  ரேவுக்கு கலைகளின் மீது பெரும் ஆர்வம் இருந்தது. தொடக்கத்தில் இருந்தே வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக, விளம்பர ஏஜென்சி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார்.  இதன் மூலமாக வங்காள மொழி நூல்கள

திரைப்படங்களில் உணர்ச்சிகளை உருவாக்குவது கடினமானதுதான்! - சத்யஜித்ரே நூற்றாண்டு - நேர்காணல்

படம்
  சத்யஜித்ரே நூற்றாண்டு 2021 சத்யஜித்ரே வங்காளத்தைச் சேர்ந்த முக்கியமான திரைப்பட இயக்குநர். அவரின் நூற்றாண்டை முன்னிட்டு ஆங்கில மாத இதழான பிரன்ட்லைன் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நேர்காணல் இது.  செஸ் பிளேயர்ஸ் படத்தில் நவாப்புகளைப் பற்றி பேசியிருப்பீர்கள். குழந்தையாக இருக்கும்போது நீங்கள் லக்னோவிலிருந்து கல்கத்தா வந்தவர். எப்படி இதனை சித்திரித்தீர்கள்? நல்லது. அங்கு நவாப்புகள் யாருமில்லை. அங்கு எனது மாமா மட்டுமே இருந்தார். அதுல்பிரசாத் சென் எனும் அவர்தான் வங்காள பாடல்களுக்கு இசையமைத்து வந்த பிரபலமான ஆள். நாங்கள் அவரின் வீட்டுக்கு அருகில் வசித்ததால், பாடல்களை உருவாக்கப்படுவதையும் உருதை நல்ல முறையில் உச்சரிப்பதையும் அறிந்திருந்தேன். லக்னோவில் உள்ள பாரம்பரிய முறையும் எனக்கு தெரிந்த ஒன்றுதான். நான் லக்னோவிற்கு நடிகை அக்தாரி பாயை பார்க்கப் போனேன். ஜல்சாகர் என்ற படத்தில் அவரை நடிக்க வைக்க கேட்கலாம் என்று யோசனை இருந்தது. அங்கு அவருடைய கணவர் வழக்குரைஞராக இருந்தார். அவரின் உடல்மொழியைப் பார்த்தேன்.எனவே அவரை நவாபாக நடிக்க வைத்தேன்.  எனவே நான் சிறுவனாக இருந்தபோத

துப்பறியும் கதைகளின் அணிவகுப்பு! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  சென்னையில் விநாயகர் சதுர்த்தி பாடல், சோறு, பூஜை என அமர்க்களப்பட்டது. கடலில் சிலைகளை கரைக்கச் செய்யும் போது கூட்டம் அதிகமாக இருக்கும். விகடன் இதழ்கள் சிலவற்றை நிறுத்துவது பற்றி அறிந்திருப்பீர்கள்.  டெலிகிராம் செயலியில் நிறைய மின்நூல்கள் கிடைக்கின்றன. தினசரி பத்திரிக்கைகளையும் இதிலேயே படித்துக்கொள்ள முடிகிறது. பத்திரிகைகள், மாத இதழ்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சரி, தவறு என்பதைவிட காலமாற்றத்திற்கேற்ப மக்கள் டிஜிட்டலுக்கு மாறி வருகின்றன. இப்படி படிக்கும் செய்திகள் மனதில் நிற்குமா என்று கேட்கிறார்கள். தேவையான விஷயங்களை இதில் படித்துக்கொள்ள வேண்டியதுதான்.  இணையத்தில் இந்த வகையில் ஏராளமான செய்திகள், மின்நூல்கள் கொட்டிக்கிடக்கின்றன.  தாளின் விலையேற்றம், நூல்களை சேமிக்க முடியாதது என இதற்கு பின்னால் நிறைய காரணங்கள் உண்டு. சத்யஜித்ரேயின் பெலுடா சீரிசில் இரண்டு கதைகளைப் படித்தேன்.  பம்பாய் கொள்ளையர்கள், தங்கவேட்டை என்று இரண்டு நூல்களும் நன்றாக இருந்தன. மொழிபெயர்ப்பு வீ.பா. கணேசன் . மொத்தம் இந்த வரிசையில் இருபது நூல்கள் உள்ளன.  வங்காளத்தில் பியோம்க

பெலுடா கதைகள் - பம்பாய் கொள்ளையர் மற்றும் தங்கக்கோட்டை!

படம்
புத்தக விமர்சனம் பம்பாய் கொள்ளையர்கள் - தங்க கோட்டை சத்ய ஜித்ரே பெலுடா தொடர்கதை வரிசை தமிழில்: வீ.பா. கணேசன் பாரதி புத்தகாலயம் இரண்டு நாவல்களும் சந்தேஷ் என்ற பத்திரிகையில் தொடராக வெளிவந்த துப்பறியும் கதைகள்தான்.  பெலுடா, தபேஷ் என்ற இருவர்தான் இதில் நாயகர்கள். பெலுடா  எனும் பிரதேஷ் மித்தர் புகழ்பெற்ற உண்மை ஆய்வாளர். இவரின் உறவினர், சிறுவன் தபேஷ். பம்பாய் கொள்ளையர்கள் கதையில் எழுத்தாளர் லால்மோகன், ஒரு கதை எழுதுகிறார். அதில் மும்பையிலுள்ள சிவாஜி கோட்டை பற்றி பெலுடா தகவல் கொடுக்க, கடத்தல் கும்பல் தங்கியிருப்பதாக எழுதிவிடுகிறார். இதனைப் படிக்கும் கடத்தல்காரர், அவரைப் பின்தொடர்கிறார். அப்போது, அதிர்ஷ்டவசமாக அவரது கதையை படமாக தயாரிக்க மும்பையைச்சேர்ந்த கோரே என்ற தயாரிப்பாளர் இசைகிறார். அதற்கு மும்பைக்குச் செல்லும்போது, அவரின் கையில் சன்யால் எனும் மற்றொரு படத்தயாரிப்பாளர் பார்சல் ஒன்றை கொடுக்கிறார். அதனை மும்பையில் சிவப்பு சட்டைக்கார ரிடம் ஒப்படைக்கிறார். ஆனால் இப்பணியை பெலுடா விரும்பவில்லை. எழுத்தாளர் லால்மோகன் சின்ன உதவிதானே, அடுத்த கதையை சன்யால் வாங்கிக்கொள்கிறார் என