இடுகைகள்

பதற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பதற்றக் குறைபாடுகளுக்கான சிகிச்சை முறையை உருவாக்கிய பால் சால்கோவ்ஸ்கிஸ்!

படம்
  இருபதாம் நூற்றாண்டின் அரைபகுதியில் மருத்துவ உளவியலில் நிறைய மாற்றங்கள் நடைபெற்றன. அதில் ஒன்று, மனநல குறைபாடுகளுக்கு அதுவரை பயன்படுத்திய தெரபி முறைகளை மாற்றத் தொடங்கினர். 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகிலுள்ள பல்வேறு உளவியலாளர்கள் ஃப்ராய்டிய முறையை மாற்றி உளவியலாளர் ஆரோன் பெக் கண்டறிந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தினர். பின்னாளில், காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரபி சிபிடி என்று அழைக்கப்பட்ட சிகிச்சை முறையை பால் சால்கோவ்கிஸ் என்பவர் கண்டறிந்தார்.  இதை ஆண்டுக்கு ஆண்டு உளவியலாளர்கள் மாற்றி மேம்படுத்தி வந்தனர். சிபிடியைப் பயன்படுத்தி அப்செசிவ் கம்பல்சிவ் டிசார்டர் குறைபாட்டிற்கு சிகிச்சை செய்தனர். ஆனால் இப்படி ஒரு குறைபாடு தோன்றுவதற்கு என்ன அடிப்படைக் காரணம் என்று தெரியாமல் தவித்தனர்.  எதிர்காலத்தில் அப்படி நடக்குமோ, இப்படி நடந்துவிடுமோ என்று மனதி்ல் எழுதும் கருத்துகள் வலிமையாகும்போது அப்செசிவ் குறைபாடு உருவாகிறது என பால் கண்டறிந்தார். இப்படியான மனக்கருத்துகளுக்கு எந்த அடிப்படையும் இருக்காது. அவருக்கு ஏதாவது துக்கம் அல்லது நோய் வந்திருக்கும். ஆனால் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில்

உளவியல் பிரச்னைக்கு நேரடி தீர்வு!

படம்
  உளவியல் சிகிச்சை என்பது முதலில் நோயாளியை அடிப்படையாக கொண்டு இயங்கியது. அதாவது, தனக்கு நேர்ந்த பிரச்னைகளை அனுபவங்களை அவர் கூறுவது சிகிச்சையில் முக்கியமான அங்கம். இந்த வகையில் மருத்துவர் நோயாளியின் நோய் வரலாறு, உணர்வுரீதியான வலி, வேதனை, குண இயல்புகளின் மாற்றம் ஆகியவற்றை அறிந்துகொண்டார். இந்த வகையில் சிகிச்சை அளிப்பதை இன்சைட் என்று ஆஸ்திரிய அமெரிக்க உளவியலாளர் பால் வாட்ஸ்லாவிக் குறிப்பிட்டார்.  உலகில் பலரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஆனால் ஒருவர் துயரத்தில் முழ்கியிருந்தால் அவரைப் பற்றி ஆழ்ந்து அறிவது முக்கியம் என்று பால் கூறினார். இதனால், அவர் பிரச்னைகளின் மீது நேரடியான சிகிச்சையை செய்தார். அதற்கு முன்னர் வரை ஒருவரின் கடந்தகாலத்தை அறிந்து பிறகே நோயின் வேரைக் கண்டுபிடித்து அதை தீர்க்க நினைத்தனர். ஆனால் இந்த முறை நோயாளியை மேலும் துயரத்தில் தள்ளியது. எடுத்துக்காட்டாக, ஒருவரை அன்பாக பார்த்து வளர்த்த அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறார். அவரது மகனால் அதிலிருந்து மீள முடியவில்லை. அவருக்கு சிகிச்சை அளிக்க மீண்டும் தாய் இறந்ததைப் பற்றி நினைவுபடுத்துவது மேலும் வலியை வேதனையை உருவாக்கும். இ

நாய் எழுப்பும் ஒலிக்கு என்ன அர்த்தம்?

படம்
  நாய் எழுப்பும் குரைப்பொலி பற்றிய விளக்கங்கள் இதோ….. தொந்தரவு செய்யாதே வீட்டுக்கு முன் செல்பவர், காலிங்பெல்லை அழுத்துபவர், சைக்கிளில் செல்பவர் என யார் சென்றாலும் ஒலி, ஒளி தென்பட்டாலும் நாய் உடனே குரைக்கத் தொடங்கும். குரைக்கும் தொனி, எதிராளி வீட்டின் கதவுக்கு அண்மையில் இருக்கிறாரா, தூரத்தில் இருக்கிறாரா என்பதைப் பொறுத்து மாறுபடும். கதவை ஒருவர் தட்டி திறக்க முயல்கிறார் என்றால் நாயின் குரைப்பொலி கடுமையாக மாறும். உரிமையாளரை தீர்க்கமாக எச்சரிக்கும் ஒலி இதுவே. வேட்டை மன்னன் தபால்காரர் வீட்டுக்கு வருகிறார் அல்லது நாயின் சக நாயினங்கள் ஒன்றாக இணைந்து மகிழ்ந்து ஒலி எழுப்புகின்றன என்றால் நாய் , இவ்வகையிலான ஒலியை எழுப்புகிறது. குரைப்புக்கும்,, ஊளைக்கும் இடையில் அமைந்த ஒலி. முனகல் ஒலி அப்பப்பா என முனகிக்கொண்டே வயதானவர்கள் கீழே உட்காருகிறார்கள் அல்லவா? அதுபோலவே அமைந்த முனகல் ஒலி. வயதான நாய், ஏதாவது இடத்திற்கு சென்றுவிட்டு வந்து சோபாவில் ஏறி உட்காரும்போது இப்படி முனகும். நீங்கள் நாய் தள்ளிவிட்ட பந்தை எடுக்காமல் கணினியைப் பார்க்கும்போது அல்லது அதற்கு போதிய கவனம் கொடுக்காதபோது சற்று வேறு

கெவூடில் நாயைப் பராமரிப்பது எப்படி?

படம்
  பெரும்பாலான மக்கள் இன்று  அபார்ட்மெண்ட், வில்லா என வசிக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களுக்கு ஏற்றதுபோலத்தான் செல்லப்பிராணிகளையும் வளர்க்கிறார்கள். அப்படியல்லாதபோது அது தனிப்பிரச்னையாக மாறிவிடும். கெவூடில், கெவாலியர் கிங் சார்லஸ் ஸ்பேனியல், பூடில் என இரு நாய் இனங்கள் சேர்ந்து உருவான நாய் இனம். சிம்பிளாக கிராஸ் ப்ரீட். சாலா கலப்பினம் ....லயன் +டைகர் = லைகர் போலத்தான்.  வீட்டுக்குள் இருந்தாலே போதும்.... கெவூடில் பெரும்பாலும்  வீட்டுக்குள் அறைக்குள் இருக்க நினைக்கும் நாய் தான். கூடவே அதன் சகாவாக மனிதர்கள் இருக்கவேண்டும். இல்லையெனில் விரைவில் ஏங்கிப்போய்விடும்.  பொதுவாக இதன் உயரம் 40 செ.மீ. எடை 5 முதல் 12 கி.கி தான். சிறியதாக இருக்கும். எளிதாக கையாளலாம். கன்றுக்குட்டி போல இருந்தால் பாசத்தால் மேலே தாவினால் ஓனரை ஐசியூவில் வைத்து காப்பாற்ற வேண்டியிருக்கும். சில கட்டளைகளை சொல்லி முதலிலேயே பழக்கினால், அதை கெவூடில் கேட்கும். பின்பற்றும். குறிப்பாக வெளியில் சென்று மலம் கழிப்பது, சிறுநீர் பெய்வது ஆகியவற்றை.... வியாபாரம் வேண்டாமே? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் குடும்பத்தொழிலே ஆடை வி

டவுன்சிண்ட்ரோம் குறைபாட்டை நெசவு மூலம் சமாளிக்கும் இளைஞர்!

படம்
  ஷிரவண் குமார், டவுன் சிண்ட்ரோம் குறைபாடு கொண்டவர். இவர், மயிலாப்பூரிலுள்ள டவுன்சிண்ட்ரோம் ஃபவுண்டேஷனில் பயிற்சிகளை செய்துவந்தார். ஆனால் பெருந்தொற்று அனைவரையும் பாதித்தது. இதனால், அந்த மையம் மூடப்பட்டுவிட்டது. இதனால் ஷரவண் என்ன செய்வது என தெரியாமல் தவித்தார்.  இதற்காகவே இவரது பெற்றோர் நெசவு நெய்வதற்கான கருவியை (தறி) வீட்டிற்கு கொண்டு வந்தனர். இப்போது காலையில் நாற்பத்தைந்து நிமிடம், மாலை ஒரு மணிநேரம் நெசவு செய்வதில் ஷிரவண் ஈடுபடுகிறார். மீதி நேரங்களில், பெற்றோர் வாங்கிக்கொடுத்த மடிக்கணினி மூலம் டேட்டா என்ட்ரி செய்ய கற்று வருகிறார்.  தறியை வாங்குவதற்கு முன்னதாகவே அதனை எப்படி இயக்குவது என வீடியோ அழைப்பு மூலம் ஷிரவண் கற்றுக்கொண்டார். இவருக்கு டவுன் சிண்ட்ரோம் குறைபாடு கொண்ட ஸ்ரீனிவாஸ் உதவியிருக்கிறார். நெசவு செய்வதை இப்படிக் கற்றுக்கொண்ட ஷிரவண், 250க்கும் மேற்பட்ட துணிகளை நெய்து விற்றிருக்கிறார். இதை ஷிரவணின் பெற்றோர் வணிகமாக செய்யவில்லை. ஷிரவண், முடிந்தவரை கவனமாக நெசவு செய்வதை செய்யவேண்டும். உற்பத்தித் திறன் தன்மையில் அவன இருக்கவேண்டும் என விரும்புகிறார்கள். இப்படித்தான் தனது குடும்ப வாட

சமூகத்திலிருந்து ஒருவர் தனிமைப்படுவதற்கான காரணம்!

படம்
                  பல்வேறு விழாக்கள் , கலந்துரையாடல் , நிகழ்ச்சிகள் என்று செல்லும்போது வயிற்றுக்குள் வெடிகுண்டு வெடிக்கிறதா ? தலை கிறுகிறுவென வருகிறதா அத்தனைக்கும் அடிப்படைக் காரணம் சமூக பற்றிய பதற்றம்தான் . இது அனைவருக்கும் என்று கூற முடியாது . சிலருக்கு இதுபோல பதற்றம் இருக்கும் . மது அருந்துபவர்கள் , வேலையில் மன அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கு சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது கடினமாகவே இருக்கும் . இவர்கள் பெரும்பாலான கூட்ட நிகழ்வுகளை தவிர்த்து விடுவார்கள் . பொதுவாக வேட்டையாடி பிழைக்கும் காலத்தில் மனிதர்கள் ஒன்றாக குழுவாக வாழ்ந்தார்கள் . அவர்கள் யாருக்கு யார் என்பது சமூக அந்தஸ்து அடிப்படையில் தெளிவாக தெரியும் . ஆனால் இன்று குழப்பாக சூழல் நிலவுகிறது . மக்கள் தனியாக வசிக்கிறார்கள் . வாழ்கிறார்கள் . எனவே அவர்களை ஒன்றாக இணைக்கும்போது பிறரைப் பற்றிய பயம் ஏற்படுகிறது . பதற்றத்தைக் குறைக்க பெரிய விழாக்களில் பிறரை வரவேற்பது , நண்பர்களுடன் பேசுவது என நிதானமாக இருந்தாலே போதும் . அதில் அணியும் ஆடையைக் கூட ஒத்திகை பார்த்து கொள்ளலாம் . தன்னைப்பற்றிய கவனம் , பதற்றம் இல்லாமல் இருக்

திருமணம் பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய நூல்! புத்தக அறிமுகம்

படம்
                புத்தகம் புதுசு ! பியாண்ட் பேட் கிறிஸ்பே ஹாசெட் ரூ .699 அறம் என்பது நமது வாழ்க்கையில் எந்த விதமான பங்கை வகிக்கிறது , நாம் பேசுவதில் செயல்படுவதில் ஆற்றும் பங்கை இந்த நூல் விவரிக்கிறது . அலுவலக வேலை , தனிப்பட்ட வாழ்க்கை , சமூக வலைத்தளங்களில் எழுதுகிற பதிவுகள் என அனைத்திலும் அறத்தின் பங்கு உண்டு . இது ஒரு வகையில் கண்ணாடி போலத்தான் . நாம் பார்க்கிறதைவிட நம்மை நம்முடைய கருத்துகள் பிறருக்கு அடையாளம் காட்டும் நூலைப் படித்தால் நீங்கள் அதனை உணரலாம் .                  ஃபோர்த் லயன் வேணு மாதவ் , கோவிந்த் ஶ்ரீநாத் ஆலெப் ப .312 ரூ .699 எழுத்தாளர் கோபால கிருஷ்ண காந்தியின் அருமை பெருமைகளை பல்வேறு கட்டுரையாளர்கள் கட்டுரையாக எழுதியிருக்கிறார்கள் . மொத்தம் 26 கட்டுரைகள் உள்ளன . இதன்மூலம் அவரின் ஆளுமையை பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ளமுடியும் . ஏஜ் ஆப் ஆங்க்சைட்டி அம்ரிதா திரிபாதி , காம்னா சிப்பர் சைமன் ஸ்ஹஸ்டர் ரூ 139 கொரோனா காலத்தில் அனைவருக்குள்ளும் வேலை , குடும்பம் , எதிர்கால

மன அழுத்தம் போக்கும் விட்டமின்கள்!

படம்
இன்று நோய் பாதிப்பு என்பது உடலுக்கு உள்ளிருந்தே ஏற்படுகிறது. வெளியிலிருந்து வரும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றின் தாக்குதல்களை விட நமது வாழ்வு சார் பிரச்னைகள், பழக்க வழக்கங்கள் ஏராளமான வியாதிகளை உருவாக்குகின்றன. அவற்றிலிருந்து மீள அதற்கான மருந்துகளை விட்டமின்களை சாப்பிட வேண்டிய தேவை உள்ளது. உணவு மூலம் எடுத்துக்கொள்வதே சரியானது என்றாலும் சில நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அவற்றை தனியாக சாப்பிடுவதும் அவசியமானது என்கிறார்கள் மருத்துவர்கள். ரோடியோலா ரோசியா ஆசியா, ரஷ்யா ஆகிய பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் விளையும் மூலிகை. உடலில் மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகளை சமாளிக்கும் திறனை வளர்க்கிறது. உறக்கமின்மை பாதிப்பு கொண்ட நூறு பேரிடமும் இரண்டு மாதங்கள் ஆய்வு நடத்தப்பட்டது. ரோசியாவின் மூலக்கூறு கொண்ட மருந்துகள் வழங்கப்பட்டன. இதன் விளைவாக அவர்களுக்கு ஒரு வாரத்திலேயே நல்ல பயன் கிடைத்தது. உடலில் ஏற்படும் பதற்றம், விரக்தி, மனச்சோர்வு ஆகியவற்றுக்கும் இவை பயன்தருகின்றன. இதனை 400 மி.கி எடுத்துக்கொண்டால் பயன் தெரியும். மெலடோனின் தூக்கம் வருவதற்கான ஹார்மோன். சூரிய வெளிச்ச

அதிகரிக்கும் சுயமருத்துவ சோதனைகள்

படம்
மருத்துவர்களிடம் செல்வதற்கு முன்னதாக நோய் பற்றி அறியும் பழக்கம் இன்று அதிகரித்திருக்கிறது. செகண்ட் ஒப்பீனியனாக நோய் பற்றி அறிவது செலவு குறித்தும், மருந்து குறித்தும் அறிய இது உதவுகிறது. அதேசமயம், உடலுக்கு தகுந்தாற்போல அல்லாது நோய் குறித்த பொதுவான தன்மைகளைப் படிக்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. இதனை சைபர் காண்டிரியா என்று குறிப்பிடுகின்றனர். 205 ஐடி பணியாளர்களிடம் இது குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் 19.5 சதவீதம் பேர் இணையத்தில் நோய் குறித்து தகவல்களைத் தேடுவதும், 20 சதவீதம் பேர் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதுகுறித்து இணையத்தில் தேடுவதும் தெரிய வந்துள்ளது. 24.4 சதவீதம் பேர் பாடல், படங்கள் பார்த்துக்கொண்டிருந்தாலும் திடீரென  நோய் குறித்து இணையத்தில் தேடியுள்ளனர்.  10.7 பேர் நோய் குறித்து பாதிப்புகள் குறித்தும் படிக்கின்றனர். 17.6 சதவீதம் பேர் இணையத்தில் படித்த நோயின் பாதிப்பு தங்களிடம் உள்ளதாக நினைத்து அஞ்சி நடுங்குகின்றனர். இதில் இணையத்தில் உள்ள பாதிப்புகளால் 9.8 சதவீதம் பேர் கவலைப்பட்டுக்கொண்டே உள்ளனர். இணையத்தில் தான் படிப்பதை மருத்துவரிடம் விவரிக்கும்

சந்தோஷ புத்தகங்கள்!

படம்
மகிழ்ச்சியின் அரத்தம் என்ன? இத்தாலியர்கள் டோல்ஸ் ஃபார் நீன்டே என்று கூறுவது இதைத்தான். இந்த புத்தகம் உலகம் முழுக்க கொண்டாட்டம் மகிழ்ச்சி ஆகியவற்றை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதைக் கூறுகிறது.  மகிழ்ச்சியின் பின்னே உள்ள அறிவியலை விளக்குகிற புத்தகம் இது.  சமூக வலைத்தளம், டிவி, நாளிதழ் என பார்க்கும் இடங்களில் எல்லாம் செய்திகள். நாம் எப்படி நிம்மதியாக வாழ்வது?  இதனால் நாம் பதற்றமாக, பரபரப்பாக வாழும் நிமிடங்களை தவற விடுகிறோம்.  இந்த தேவையில்லாத பதற்றத்திலிருந்து விடுபட்டு நம் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதை இந்த நூல் விளக்குகிறது. நன்றி: பிபிசி 

பதற்றத்தைக் கட்டுப்படுத்தும் உணவுகள் உண்டா?

படம்
blackdog institute ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி பதற்றத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் எது? ஈஸ்ட்டை அடிப்படையாகக் கொண்ட உணவுகள், பி வைட்டமின்கள் என சாப்பிட்டாலே மனதில் ஏற்படும் பதற்றம் குறையும் என்கிறது ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா பல்கலைக்கழக ஆராய்ச்சி செய்தி. வைட்டமின் பி12,  நம் மனநிலையைக் கட்டுப்படுத்தும் செரடோனினை உற்பத்தி செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதோடு பருப்புகள், மீன் உள்ளிட்ட ஒமேகா 3 அமிலம் கொண்ட உணவுகள் பதற்றத்தை குறைக்க உதவுவதாக தைவான் ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன. நன்றி:பிபிசி