இடுகைகள்

ம.பி. தலித் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மலம் கழித்தால் மரணதண்டனை - ஆல் இஸ் நாட் வெல்!

படம்
மத்தியப்பிரதேசத்திலுள்ள பஞ்சாயத்து பவன் அருகில் திறந்த வெளியில் மலம் கழித்த ரோஷினி என்ற சிறுமியும், அவினாஷ் என்ற சிறுவனும் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். குச்சிகளால் கடுமையாக தாக்கப்பட்ட இருவரும் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்துள்ளனர். சிறுவர்களை  சோதித்த மருத்துவர்கள் அவர்கள் முன்னமே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். கொலைகாரர்கள் யாதவ் சாதியைச் சேர்ந்தவர்கள். அடித்துக்கொன்றதாக கைது செய்யப்பட்ட இருவருமே சகோதர ர்கள்தான். சிறுவன், சிறுமியைக் கொல்லும் முன்பு அவர்களை புகைப்படம் எடுத்துள்ளனர். கடவுள் சாத்தான்களை கொல்ல உத்தரவிட்டுள்ளார் என போலீசில் வாக்குமூலம் கூறியுள்ளார் கொலைகாரர்களில் ஒருவரான  ஹக்கீம் யாதவ். கொல்லப்பட்ட சிறுவர்களின் வீட்டில் கழிப்பறை இல்லை. கட்டுவதற்கு சில முட்டுக்கட்டைகள் இருந்துள்ளன. அதற்காக மலம் கழிக்காமல் இருக்க முடியுமா? 2016 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ள குற்ற சம்பவங்களின் அளவின் படி அதுவே நம்பர் 1 இடத்தில் உள்ளது. தலித் மற்றும் பட்டியலின மக்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஊரில் இருந்த ஒரே தலித் குடும்பம் அதுதான் என்பதோடு, அங்கு