இடுகைகள்

தான்சானியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தான்சானியாவில் நிலவிய ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க உதவிய சீன வேளாண்மை உத்திகள்!

      சீனா  - ஆப்பிரிக்க வேளாண்மை ஒப்பந்தத்தால் வலிமை பெறும் பெண்கள், குழந்தைகள்! ஆப்பிரிக்காவின் ஜாம்பியா, டான்சானியா, மலாவி ஆகிய நாடுகளில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. 2023ஆம் ஆண்டு செய்த ஆய்வில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் முப்பது சதவீதம் பேர் ஊட்டச்சத்து இன்றி வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. மேற்கு நாடுகள் ஆப்பிரிக்காவிற்கு உதவி செய்கிறோம் என வெற்றுப்பேச்சு பேசி வந்த நிலையில் சீனா செய்த உதவியால், ஆப்பிரிக்க நாடுகள் மெல்ல வளர்ச்சியை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளன. இதற்கான முதல்கட்டமாக 2019ஆம் ஆண்டு, சீனாவும், ஆப்பிரிக்க நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்தன. இதன்படி சீன வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண்மை சாந்த முறைகளை, தொழில்நுட்பத்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கி வருகிறது. ஆப்பிரிக்க மாணவர்கள் சீனாவுக்கு வந்து புதிய வேளாண்மை முறைகளை வீரிய பயிர்களைப் பற்றி பயிலத் தொடங்கியுள்ளனர். இந்த மாணவர்களின் எழுச்சியால், ஆப்பிரிக்க நாடுகளான மலாவி, தான்சானியாவில் சோளம், சோயாபீன்...

சானிடரி பேடுக்கு வரி - தான்சானியாவின் புதுமை!

படம்
கடந்த ஜூன் 13 அன்று தான்சானியா, நிதி அமைச்சகம் பெண்கள் பயன்படுத்தும் சானிடரி பேடுக்கு புதிதாக வரி விதித்துள்ளது. கடந்த ஆண்டு சானிடரி பேடுக்கு வரி கிடையாது என்று அறிவித்த அமைச்சர் பிலிப்பியோ பாங்கோ, திடீரென தடம் மாறியுள்ளார். நான் முன்பு வரி இல்லை என்று சானிடரி பேடுக்கு அறிவித்தது உண்மைதான். ஆனால் அதன் விளைவாக அதன் விலைகள் குறையும் என்று நினைத்தேன். எதிர்பார்த்த விளைவுகள் நடைபெறவில்லை எனவேதான் இந்த முடிவு என மனம் திறந்திருக்கிறார். வணிகம் என்பது அனைத்து நாடுகளிலும் ஒன்றுபோலத்தானே. அமைச்சர் வரியைக் குறைத்தவுடன் குஷியான உற்பத்தியாளர்கள், லாபம் சம்பாதிக்க முயற்சித்தார்களே ஒழிய மக்களுக்கு ஒரு ரூபாய் கூட குறைக்கவில்லை. எனவே தற்போது அமைச்சர் அதற்கு மாற்றாக கார்ப்பரேட் வரியை 30 லிருந்து 25 ஆக குறைத்துள்ளார். இதன்விளைவாக, உள்நாட்டிலேயே சானிடரி பேடுகளை குறைவான விலையில் தயாரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என அமைச்சர் நம்புகிறார். அமைச்சரின் ஓராண்டு வரி விலக்கு, உற்பத்தியாளர்களுக்கு போதுமானது அல்ல என்று வர்த்தகத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கூறினாலும் அதனால் எந்த விளைவும் ஏற்படாது என ப...