இடுகைகள்

கோயில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குணச்சித்திரம் - இரு திருடர்கள்

படம்
  இரு திருடர்கள்.  எங்கள் தெருவில் இரு திருடர்கள் இருக்கிறார்கள். இந்த இரு திருடர்களும் ஒருவரையொருர் நன்றாக அறிவார்கள். இருவரும் பெண்கள். இவர்களின்  கணவன்மார்கள் சகோதர்கள். சொத்துக்களை தனியாக வைத்துக்கொண்டு குடித்தனம் செய்கிறார்கள். பெரிதாக இருவருக்கும் இடையே நட்பும் கிடையாது. விரோதமும் கிடையாது. பொதுவாக யாராவது ஒருவரிடம் திருட வேண்டுமென்றால் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள்.   முதல் திருடரைப் பார்ப்போம். இவரது கணவர் தென்னை மரம் ஏறி பிழைப்பவர். இப்போது வயதாகிவிட்டது. இவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் அப்படியே திருட்டு, கொள்ளை, மோசடி, வஞ்சகம், துரோகம் ஆகியவற்றை செய்வதில் கைதேர்ந்தவர்கள். ஐந்து பிள்ளைகள். மூன்று பெண் பிள்ளைகளில் ஒருவர் மட்டுமே அந்தளவு மோசமில்லை என்று சொல்லாம். கடைசியாக பிறந்தது ஆண் பிள்ளை. இருப்பதிலேயே ஈவு இரக்கம் இல்லாத ஈனப்பிறவி.  முதலில் மின் பொருட்கள் சார்ந்த தொழிலை கற்றவர், பிறகு காப்பீடு முகவராக மாறினார். ஏஜெண்டாக மக்களிடம் பெற்ற பணத்தை அரசு நிறுவனத்திற்கு செலுத்தவில்லை. தன்னுடைய சொந்த கணக்கில் போட்டுக்கொண்டார். பிறகு நல்ல நாள் பார்த்து ராகு எமகண்டம்...

பொதுத்தொண்டர் என்பவர் நேரம், காலம் தனிப்பட்ட மான அவமானம் என்று எதையும் பார்க்கக்கூடாது!

படம்
      பெரியார் ஆயிரம் தர்மம் என்று இதிகாசங்களான இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பகவத் கீதையிலும் அதற்கு முன் பழக்கத்திலிருந்த வேதங்களிலும் கூறப்பட்டது வர்ண தர்மத்தையே ஆகும் மனிதர்களை பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் என நான்கு வர்ணங்களாக பிரித்து பிராமணர்களுக்கு சலுகையும் சூத்திரர்களுக்கு அநீதியும் வழங்குவது மனுதர்மம். எல்லார்க்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையகம் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பொதுவாழ்க்கைக்கு வருவோருக்கு இருக்கவேண்டிய குணங்கள்- அவர்கள் செய்யும் பொதுநலப் பணியால் பிழைப்பவர்களாக இருக்கக்கூடாது. செய்யும் பொதுப்பணியில் பதவி பெருமை, இலாகா, தனி அந்தஸ்து போன்ற எந்த பலனும் பெற நினைக்கக்கூடாது. ஒரு பொதுத்தொண்டர் என்பவர் நேரம், காலம் தனிப்பட்ட மான அவமானம் என்று எதையும் பார்க்கக்கூடாது. எந்த காரியமானாலும் காரண காரியம் அறிந்து செய். சரியா தப்பா என்பதை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் விட்டுவிடு. எந்த நிர்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு. நீதி கெட்டது யாரால் என்ற நூலில் பார்ப்பனர் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலி வாழும் காடு என்கிற...