இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அம்மாவால் வல்லுறவு கொலையாளியான மகனின் கதை!

படம்
  லூகாஸ், ஹென்றி லீ அம்மாக்களைப் பற்றிய கதைகள், சினிமாக்கள் நிறைய பார்த்திருப்பவர்களுக்கு லூகாஸின் கதை பிடித்தமானதாக இருக்காது. அப்படியொரு அம்மாவாக பூமியில் வாழ்ந்தவர். குடும்பத்தில் மொத்தம் ஒன்பது பிள்ளைகள். அதில் கடைசியாக பிறந்து அம்மாவின் அனைத்து வெறுப்பையும் பெற்றவர் லூகாஸ். அதற்கு பதிலடியாக மொத்த சமூகத்தையும் பழிதீர்த்தார். அப்பா, ஆண்டர்சன்   மதுபானத்தை தயாரிப்பதே வேலை. வேலை முடிந்ததும்   தயாரித்த மதுவை குடித்துவிட்டு தெருவில் படுத்து உருள்வார். அம்மா, வயோலா மதுவை விற்று காசு சேர்ப்பதும், சீசனுக்கு விபச்சாரம் செய்வதும் வேலை. அவர் தன் கணவனையும், மகனையும் பழிவாங்குவதற்கு இருவரையும் தான் செக்ஸ் வைத்துக்கொள்ளும் அறையில் இருக்க வைப்பார். அதுதானே சிறந்த பழிவாங்கல். லூகாஸ் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினான். அவருக்கு, பெண்கள் உடையை அணிவித்துஅனுப்பினாள் வயோலா. காலில் ஷூக்கள் இல்லை. அதை ஆசிரியர் வாங்கிக் கொடுத்தார்.’’ எதற்கு அன்பளிப்புகளை வாங்கினாய்?’’ என அம்மா அடிக்காத அடி கிடையாது. லூகாஸ் ஆசையாக பூனை வளர்த்தால், அதை கொன்று தெருவில் வீசுவது அம்மா வயோலாவுக்கு பிடித்தமானது. மகனை எப்படியெல்

சொந்த சகோதரிகளை வல்லுறவு செய்த காமக்காளை!

படம்
  பீட்டர் கர்டன் ஜெர்மனியைச் சேர்ந்த கொலைமகன். 1883ஆம் ஆண்டு கோலன் முல்ஹெய்ம் எனும் நகரில் பிறந்தவர். வன்முறை நிறைந்த சிக்கலான குழந்தைப் பருவத்தைக் கொண்டவர். மொத்தம் பதிமூன்று பேர்களைக் கொண்ட குடும்பம். இவர்கள் வாழ்வதற்கு ஒற்றை அறை. ஒரே அறை என்பதால் கணவன், மனைவி, மகள், மகன் என அனைவரும் நெருங்கித்தான் படுக்கவேண்டிய சூழல், இதுவே அவர்கள் குடும்பத்தில் பாலியல் ரீதியான சிக்கலை உருவாக்கியது. குடிநோயாளியாகிவிட்ட பீட்டரின் தந்தை, பிள்ளைகளின் முன்பே அம்மாவை உறவுக்கு அழைத்து, உடலுறவு கொள்வார். பின்னாளில் அவர் தனது மகளுடன் வல்லுறவு கொள்ள முயன்று அப்புகார் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார். அப்பா செய்ய முடியாததை மகன் பீட்டர், தனது சகோதரிகளுக்கு செய்தார். கிடைத்த வாய்ப்புகளில் சகோதரிகளை தடவினார்.தேய்த்தார். ஆக மொத்தம் மகிழ்ச்சி கொண்டார். இவருக்கு ஊக்க உந்துதலைக் கொடுத்தவர், அருகில் வாழ்ந்த நாய் கண்காணிப்பாளர். இவர், நாய்களை அடித்து உதைத்து கொடுமை செய்ததோடு, விலங்குகளை சுய இன்பம் அனுபவிக்கச் செய்து அதை பார்த்து வந்தார். ஒன்பது வயதில் பீட்டரின் குற்ற வரலாறு தொடங்குகிறது. தன்னோடு விளையாடிக் கொண்ட

காய்கறிச்செலவுகளைக் குறைக்க மனித இறைச்சியை சாப்பிட்டவர்!

படம்
  க்ரோல் ஜோச்சிம் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வல்லுறவு கொலையாளி. இவரது கொலை   செய்யும் பாணி என்பது, பெண்களை பிடிப்பது, வல்லுறவு செய்து கொல்வது, பிறகு அவர்களின் புட்டம், கைகளில் உள்ள தசையை அறுத்து சென்று சமைத்து தின்பதுதான். காவல்துறையில் பிடிப்பட்டபோது பதினான்கு பேர்கள் என கொலைக்கணக்கு கூறினார். ஆனால் உண்மையில் பதினான்கு ஆண்டுகளாக கொலை செய்து வருவதால் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு அதிகம். தான் வாழ்ந்த வீட்டில் ஏராளமான செக்ஸ் பொம்மைகளை வைத்திருந்தார். ஒருவரைக் கொன்றால் அவர்களின் கழுத்தை நெரித்தபடியே சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் உண்டு. வீட்டில் சுய இன்பம் அனுபவித்தாலும் வெளியில் வந்து குற்றம் செய்யும்போது அனைத்தும் லைவ்தான். எனவே, நேரடியாக வல்லுறவு செய்து கொன்றுபோட்டுவிட்டு வருவது வாடிக்கை. சில கொலைகளில் தசையை அறுத்து வரவில்லை. வல்லுறவு மட்டும் செய்துவிட்டு வந்தார். ஆனால், மனிதர்களை கொன்று சமைத்து தின்று தனது காய்கறி செலவை கட்டுப்படுத்த முயன்றதுதான் மாட்டிக்கொள்ள காரணமாக அமைந்துவிட்டது. கொலை செய்த குழந்தையின் உடல் உறுப்புகளை பாத்திரம் கழுவும் சிங்கில் தள்ளிவிட அது, குழாயில் மாட

தந்தையும் மகனும் சேர்ந்து கொலைகார இணையராக மாறிய வினோதம்!

படம்
  ஜோசப், மைக்கேல் அமெரிக்காவின் பிலடெல்பியாவைச் சேர்ந்தவர். 1936இல் பிறந்தார். சிறுவயதில் ஆஸ்திரிய அகதிகளான ஸ்டீபன், அன்னா கலிங்கர் ஆகியோருக்கு   தத்து கொடுக்கப்பட்டார். பெற்றோரால் கடுமையாக அடித்து துவைக்கப்பட்ட பால்யத்தைக் கொண்டவர். 1944ஆம் ஆண்டுமூத்த சிறுவர்களால் கத்தி முனையில் வல்லுறவு செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தின் விளைவாக கையில் கத்தி வைத்துக்கொண்டு சுய இன்பம் அனுபவித்து கைத்தொழில் மன்னனாக மாறினார். பதினேழு வயதில் திருமணம் செய்துகொண்டார். இந்த உறவுமூலம் பத்து குழந்தைகள் பிறந்தன.பிறகு, ஜோசப்பின் மனைவி இன்னொருவரோடு இணைந்து வாழச் சென்றுவிட்டார். இதற்குப் பிறகுதான் ஜோசப்பிற்கு விபத்து ஏற்பட்டது. அதில், தலையில் அடிக்கடி வலி ஏற்பட்டு சோதனை செய்து பார்த்து, சைக்கலாஜிகல் நெர்வஸ்   டிசார்டர் என்ற பிரச்னையைக் கண்டுபிடித்தனர்.   தனது பிரச்னைகள் ஒருபுறம் இருந்தாலும் அடுத்த திருமணம் பற்றி கவலைப்பட்டவர், திருமணத்தை செய்வோம் ஆண்டவன் அனுகிரகிப்பான் என மணம் செய்துகொண்டார். தான் வாழ்ந்த வீட்டையோ என்ன காரணத்தாலோ தீ வைத்தார். அதற்கு காப்பீடாக 1,600 டாலர்கள் கிடைத்தது.மனநல பிரச்னைகளால்,

முன்முடிவுகளை களைந்தால்தான் புத்தாண்டு புதியதாக இருக்கும் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி புதிதாக தொடங்கலாமா? புதிய ஆண்டிற்கான தொடக்கம் இது. புதிய ஆண்டு என்றால் அதற்கான அர்த்தம் என்னவென்றபுரிந்துகொள்கிறோம்? புதியது, முழுக்கவே புதியது, இதுவரை நடைபெறாத ஆண்டா? புதியது என பேசிக்கொள்கிறோம் என்றால் சூரியனுக்கு கீழ் உருவாகும் புதிய   ஒன்றா?   புத்தாண்டு, மகிழ்ச்சியான புத்தாண்டு என ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைக் கூறுகிறோம். உண்மையிலேயே புதிய ஆண்டு என்பது மகிழ்ச்சியானதாக நமக்கு அமையுமா?   புத்தாண்டு, புதியதாக அமையுமா அல்லது பழைய மாதிரியே வடிவத்தில் பழகியதாக ஆண்டுதோறும் நடக்கிறதா, இருக்குமா? அதே பழைய சடங்குகள், பழைய கலாசாரம், பழைய பழக்க வழக்கங்கள், இதுவரை என்ன செய்துகொண்டிருந்தோமோ அதை அப்படியே செய்துகொண்டிருப்போமா?   அதே பழைய விஷயங்களை புதிய ஆண்டிலும் செய்துகொண்டிருப்போமா? புதிதாக ஏதேனும் இருக்குமா? புதிதாக நாம் இதுவரை பார்க்காத ஒன்றாக இருக்குமா? நீங்கள் இதுபோன்ற கேள்வியைத்தான் பின்தொடர்ந்து செல்லவேண்டும். வாழ்க்கையின் அனைத்து நாட்களிலும் இதுவரை செய்யாத விஷயங்களை செய்யவேண்டும்.   புதிய செயல்களை செய்யும்போது மூளை அதன் முன்முடிவுகள், தீர்ப்புகள், கருத்துகள்,

மனதில் வெறுமை நிலை உருவாவது எப்படி? - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி எப்படி முடிவெடுப்பது? நீங்கள் தேர்வுகளின் அடிப்படையில் வாழ்கிறீர்கள். நீங்கள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் எதற்காக ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? என்ன தேவை, எந்த விசை உங்களை தேர்ந்தெடுக்க உந்துகிறது? நான் ஒருவரை இப்படி உந்தும் விசையை, ஒருவரின் உள்ளே உள்ள வெறுமை நிலை அல்லது தனிமை   என்று கூறுவேன். இந்த முழுமை இல்லாத நிலை ஒருவரை தேர்ந்தெடுக்க தூண்டுகிறது. இப்போது கேள்வி, வெறுமை நிலையை எப்படி நிரப்புவது என்பதல்ல. அதற்கு பதிலாக வெறுமை நிலையை எது உருவாக்குகிறது என்பதுதான். தேர்வுகளின் செயல்பாட்டால் வெறுமை நிலை உருவாகிறது , செயலின் முடிவில் என்ன கிடைக்கிறது என்பதை நோக்கி செல்வதால் வெறுமை உருவாகிறது என்கிறேன். வெறுமை நிலை உண்டாகும்போது, ஒரு கேள்வி உருவாகிறது, எப்படி இந்த வெறுமை நிலையை நிரப்புவது, தனிமை நிலையை, நிறைவுறாத நிலையை அழிப்பது எப்படி?   என்னைப் பொறுத்தவரை வெறுமை நிலையை நிரப்புவது என்பது ஒரு பதில் கிடைக்கும் கேள்வியாகவே தெரியவில்லை. ஏனெனில் வெறுமையை எதனாலும் நிரப்பவே முடியாது.   ஆனால் பெரும்பாலான மக்களை அதை நிரப்பவே முயன்று வருகிறார்கள். இ

மகளின் திருமணத்தை நடத்த பள்ளி ஆசிரியர் படும் பாடுகள் - விஷ்மயம் - இன்னொசன்ட், திலீப், ஶ்ரீதுர்கா

படம்
  விஷ்மயம் திலீப் , ஶ்ரீதுர்கா, இன்னொசன்ட், ஜெகதி ஶ்ரீகுமார் ஒரு பள்ளி ஆசிரியர், தனது கடன்களுக்கக நிலங்களை, அருகிலுள்ள குரூப்பு ஒருவருக்கு விற்கிறார். அவர் நிலத்தை வாங்கியதோடு சுற்றிலும் உள்ள மனிதர்களின் வீட்டிலுள்ள பொருட்களை திருடர்களை வைத்து திருடி வைத்து விற்று பணக்காரராக மாறுகிறார். அவரை எப்படி சுற்றிலும் உள்ள மக்கள் கண்டுபிடித்து திருத்துகிறார்கள் என்பதே கதை. படத்தில் முக்கியமான   மகேஷ் நாராயணன் என்ற ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் பாத்திரத்தில் இன்னொசன்ட் நடித்துள்ளார். தனது மறைந்துபோன மனைவியை சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு நினைத்துப் பார்த்து சந்தோஷப்படுவதும், அவளது நினைவாக மகளுக்கு பிரச்னை இல்லாத இடத்தில் மணம் செய்து வைப்பதுமான கனவு அவருக்கு இருக்கிறது. அவர் மகளுக்கு ஏழு பவுன் தங்கத்தை சேர்த்து வைத்திருக்கிறார். அதை குரூப் திருடி வைத்து திருமணத்தை தடுக்கிறார். அதை ஆசிரியரும், அவரது மகன் தினகரன், ஊர் மக்களில் அவரது நண்பர்களும் சேர்ந்து திருடி எடுத்து வர திட்டமிடுகிறார்கள். திருடப்போன இடத்தில் தற்கொலை செய்துகொள்ள முயலும் ருக்மணி என்ற பெண்ணையும் பார்த்து, தடுத்து   அவளையும் த

காது கேட்காத மாற்றுத்திறனாளியை காதலிக்கும் இளம்பெண்ணின் வாழ்க்கை! - சைலன்ட் - ஜப்பான்

படம்
  சைலன்ட் டிவி தொடர் ஜப்பான் - ஜே டிராமா  ராகுட்டன் விக்கி ஆப்   பள்ளிப்பருவ காதல்கதை. பள்ளிப்பருவத்தில் உற்சாகமாக தொடங்கும் காதல்,   பின்னாளில் காதலனின் உடல்நலப் பிரச்னையால் பிரிந்து மீண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக தொடங்குகிறது. அவர்களின் காதல் மீண்டும் தொடங்கியதா, ஒன்று சேர்ந்ததா என்பதே கதை. ஒரு எபிசோட் ஒரு மணிநேரம் என மொத்தம் பதினொரு எபிசோடுகள் உள்ளன. காசு கட்டினால் விளம்பரத்தொல்லையின்றி பார்க்கலாம். இல்லையென்றால் விளம்பரத்தைப் பார்க்கவும் ஏராளமான டேட்டா செலவாகும். சௌக்கு என்ற சகுரா, பள்ளியில் படிக்கிறார். இவரை மினாட்டோ என்ற மாணவர் ஆவோவா என்ற தனது தோழிக்கு அறிமுகப்படுத்துகிறார். அவளுக்கு சகுராவைப் பார்த்த உடனே காதல் தோன்றிவிடுகிறது. சகுராவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.   எப்போதும் பாப் பாடல்களை கேட்டுக்கொண்டே இருப்பான். அவனுக்கு ஸ்பிட்ஸ் எனும் இசைக்குழுவின் பாடல்கள் இஷ்டம். அதுவரை அப்படி பாடல்கள் கேட்காத ஆவோவா மெல்ல இசையின் வசமாகிறாள். சௌக்குவிடம் இரவல் வாங்கும் பாடல்களைக் கேட்டுக்கொண்டே தனது படிப்பைத் தொடர்கிறாள். வகுப்பறையில் வெளியில் என சகுராவும் ஆவோவாவும

தொழிலதிபரைத் தாக்கும் மாயவலி, மருத்துவருக்கு ஏற்படும் பதற்றக்குறைபாடு என இரண்டையும் இணைக்கும் காடு! ஃபாரஸ்ட்

படம்
  ஃபாரஸ்ட் - கே டிராமா ஃபாரஸ்ட் தென்கொரியா டிவி தொடர் பதினாறு எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் தென்கொரியாவின் சியோலில் நான்செங் என்ற முதலீட்டு நிறுவனம், ஆர்எல்ஐ என்ற பெருநிறுவனத்தின் பகுதியாக இயங்கி வருகிறது. அதன் தலைவர் காங் சன் சியோக். அவருக்கு பாண்டம் பெயின் என்ற உளவியல் குறைபாடு உள்ளது. இந்த குறைபாட்டால், அவரது வலது கை தீயால் எரிந்து பொசுங்குவது போல தோன்றுகிறது. நிஜத்தில் கை எரிவது போல வலியால் துடிக்கிறார். அப்போது அவர் மனக்கண்ணில் ஒரு காடு தோன்றுகிறது. அதில் நெருப்பு பற்றுவது போல காட்சிகள் தோன்றுகின்றன. மருத்துவமனையில் பான்டம் பெயின் தோன்றுவதற்கு காரணம், அவரது பால்ய கால பிரச்னைகள்தான். அதை தீர்த்தாலே பிரச்னை தீரும் என மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் காங்கிற்கு   அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. அப்போது தொழில்ரீதியாக அவர் மிர்யாங் எனும் காடு பற்றி அறிகிறார். அங்கு டேசங் எனும் தொழில்நிறுவனம் ரிசார்ட் கட்டவிருப்பதாக அறிகிறார். அந்த திட்டத்தை காங் பெற நினைக்கிறார். தனது நிறுவனத்திடம் அனுமதி பெற்று மிர்யாங் காட்டில் உள்ள தீயணைப்பு துறை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். அதேநேரத்

கொடைக்கானலை உருக்குலைத்து வரும் பாதரசக் கசிவு!

படம்
  எழுத்தாளர் அமீர் சாகுல் கொடைக்கானலில் கசியும் பாதரசம் ஆங்கிலோ டச்சு   நிறுவனம் யுனிலீவர், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இந்திய நிறுவனம், இந்துஸ்தான் யுனிலீவர். இதன் தொழிற்சாலை கொடைக்கானலில் அமைக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு தொடங்கி தெர்மோகோல் தயாரிப்பு யுனிலீவரின் தொழிற்சாலையில் நடந்து வருகிறது. இங்கு சரியான பாதுகாப்பு அணுகுமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக தொழிற்சாலையில் வேலை செய்த இருபத்தெட்டு பேர் உயிரிழந்தனர். 2001ஆம் ஆண்டு க்ரீன்பீஸ் அமைப்பும், உள்ளூர் மக்களும் இணைந்து போராடியதால் தொழிற்சாலை மூடப்பட்டது. தொழிற்சாலை மூடப்பட்டாலும் கசிந்த பாதரசத்தால் இயற்கை வளமும் கெட்டது. ஊழியர்களும் நரம்பு நோய்கள், சிறுநீரக பாதிப்பு ஆகிய சிக்கல்களுக்கு உள்ளாகினர். இதற்கு என்ன பதில் என சூழல் அமைப்புகளும், ஊழியர்களும் போராட 2016ஆம் ஆண்டு, யுனி லீவர் நிறுவனம் வேலை செய்த 591 முன்னாள் ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக அறிவித்தது. இந்த விவகாரம் பற்றி முன்னாள் பத்திரிகையாளரும், க்ரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்தவருமான அமீர் சாகுல் நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். ஹெவி மெட்டல் ஹவ் எ குள

இரண்டு கதை சொல்லிகளின் பழக்க வழக்கங்கள் - செகன் கருணதிலகா, ஜேனிஸ் பாரியட்

படம்
  கவிஞர் ஜேனிஸ் பாரியட் எழுத்தாளர் செகன் கருணதிலகா கதை சொல்லிகளின் பழக்க வழக்கங்கள் செகன் கருணதிலகா புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் படிப்பது… நான் ஒரே நேரத்தில் நிறைய நூல்களைப் படிப்பேன். செவ்வியல் இலக்கியம், கட்டுரைகள், என்னுடைய துறை சாராத நூல்கள், இப்போது அசோக் ஃபெர்ரியின் தி அன் மேரேஜபிள் மேன், ஆர்மிஸ்டிட் மௌபினின் மோர் டேல்ஸ் ஆப் தி சிட்டி ஆகியவற்றை படித்து வருகிறேன். எலிசபெத் கில்பெர்டின் கமிட்டட் – எ ஸ்கெப்டிக் மேக்ஸ் வித்   மேரேஜ், அன்னா ரோஸ்லிங் ரோன்லண்ட்டின் ஃபேக்ட்புல்னெஸ், ஹன்ஸ் ரோஸ்லிங்க், ஆலா ரோஸ்லிங்க், இரா லெவினின் ரோஸ்மேரி பேரி ஆகியோரது நூல்களை படித்து முடித்தேன். எழுதும்போது..   மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு எழுதுவேன். என்னைச் சுற்றிலும் கத்தரிப்பூ, மெஜந்தா நிற விளக்குகள் எரியும்.   செவ்வியலான இசையைக் கேட்பேன். எழுதி முடித்தவுடன் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பேன். ஒரு கிளாஸ் என்பதைத்   தாண்டினால் எழுத்து வேலைகளை செய்ய முடியாது. எப்போதும் பிடித்த நூல்கள் குழந்தையாக இருக்கும்போது தி குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா. அகதா கிறிஸ்டியின்   அண்ட் தென் தேர் வேர் நன் நூல்.

ஆதரவற்றோரைக் கொன்றால் உடையும் லாபம், உடலும் லாபம்!

படம்
  ‘’பழைய துணிகளை ஆதரவற்றோருக்காக கொடுங்கள்’’ என சிலர் வந்து வீட்டு படியேறி கேட்டிருப்பார்கள். அப்படி பெற்ற துணிகளை சலவை செய்து ரோட்டோரக்கடையில் போட்டு விற்பார்கள். இதுபோல மோசடிகள்   உலகமெங்கும் நடப்பவைதான். அதைத்தான் ஹார்மன் செய்தார். இவர் ஆதரவற்றோரை கொலை செய்து உடலை கறிக்கடைக்கும். உடைகளை பழைய துணிகள் விற்கும் சந்தையில் விற்றார். 1879ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹனோவரில் பிறந்தவர் ஹார்மன். ரயில்வேயில் தீயணைப்புத்துறையில் பணியாற்றும் தந்தைக்கு ஆறாவது பிள்ளை. அம்மா செல்லமாக வளர்ந்தார். இதனால், அப்பாவின் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டார். சக நண்பர்கள் விளையாட்டு என வெளியில் சுற்றும்போது ஹார்மன் பொம்மைகளை வைத்து வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தார். பதினாறு வயதில் ராணுவப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், வலிப்பு இடையறாமல் வந்த காரணத்தால் படிப்பை தொடர முடியவில்லை. திரும்பி ஹனோவருக்கு வந்த பிறகு சிறு குழந்தைகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த காரணத்தால், காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். ஆறே மாதங்களில் அங்கிருந்து தப்பி ஓடினார். சிறு குற்றங்கள், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது ஆகியவற்ற

''கொலைகளை செய்யாமல் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை''

படம்
  1928ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சிகாகோவின் புறநகரான லிங்கன்வுட்டில் பிறந்தார். அப்பா, தனியார் உருக்காலையில் வேலை செய்து வந்தார். வில்லியமிற்கு செக்ஸ் என்பது மகா பாவம் என சொல்லி வளர்த்தனர். செக்ஸ் வைத்துக்கொண்டால் நோய் வரும் என கூறினார்கள். பிறரது வீட்டுக்குள் பிறந்து, அங்கு வாழும் பெண்களின் ஜட்டி, பேன்டீசை திருடுவது வில்லியமிற்கு   மகிழ்ச்சியாக   இருந்தது. ஏறத்தாழ பாலுறவு கொள்வது போன்ற சந்தோஷம். 1942ஆம் ஆண்டு வில்லியமிற்கு பதிமூன்று வயது. அப்போதே குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்துச் சென்று காவல்துறையால் கைதானார். வில்லியமின் பெற்றோருக்கு காவல்துறை தகவல் அளிக்க, அவர்கள் பதற்றத்துடன் அங்கு வந்து சேர்ந்தனர். அப்போதே பதினொரு கொள்ளைகளை வில்லியம் செய்திருந்தான். ரைபிள், நான்கு பிஸ்டல்கள் என திருடி வைத்திருந்தான். பெற்றோர் தம் செல்வாக்கைப் பயன்படுத்த வில்லியம் மீது வழக்கு பதியப்பட வில்லை. இந்தியானாவில் உள்ள பள்ளியொன்றில் பதினொரு மாதங்கள் இருந்த வில்லியம், பின்னர் ஊருக்குத் திரும்பினார். வில்லியம் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருட வில்லை. அதை வாய்ப்பு கிடைக்கும்போது அணிந்தும