இடுகைகள்

ரவுடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வில்லனின் வீட்டிற்கு சென்று கடத்தி வரப்பட்ட காதலியை கல்யாணம் செய்யும் தைரிய நாயகன்!

படம்
                சீதாராமுலு கல்யாணம் லங்காலோ நிதின் , ஹன்சிகா , சுமன் , அலி , பிரம்மானந்தம் கல்லூரியில் படிக்கும் நிதின் , அவரை சிகரெட் பிடிக்காதே என்று சொல்லும் நாயகியால் ஈர்க்கப்பட்டு காதலிக்கிறார் . காதல் செய்தவுடனே கல்யாணம் நடந்துவிட்டால் படத்தை குறும்படமாகவே முடிக்கவேண்டியது வரும் என காதலியின் அப்பா கிராமத்தில் பெரிய ரவுடி , அவருக்கு எதிரியாக ஒரு ரவுடிக்கூட்டம் இதற்கு இடையில் மாட்டிக்கொள்ளும் காதலர்கள் என கதையைக் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் . படத்தில் உருப்படியான விஷயம் பிரம்மானந்தம் மட்டுமே . அவரின் காமெடி மட்டுமே சற்று ஆறுதலாக உள்ளது . சுமன் பெரிய ரவுடி . சுருட்டி பிடித்தபடி அவர் நிதினை கேட்பது , உன்னால் என் மகளை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியுமா , அப்படி முடிந்தால் பெண்ணைக் கட்டித்தருகிறேன் என்கிறார் . உடனே நிதினும் முதுகில் மாட்டியுள்ள ரோஷன் பேக்கோடு வருங்கால மாமனாரின் ஆட்கள் நால்வரை உதைத்து மலைப்பாதையில் உருட்டிவிடுகிறார் . பிறகுதான் சுமன் மனம் மாறி சூப்பர் செலக்‌ஷன் என தைரியம்கொள்கிறார் . ஆனால் கர்மா ஈஸ் பூமராங் அல்லவா ? எதிரிகள் மாப்பி

இரக்கமில்லாத ரவுடியோடு தொழிலதிபர் மகன் ஆடும் போங்காட்டம்!

படம்
            ஆட்டாடிஸ்தா நிதின் , காஜல் அகர்வால் தொழிலதிபரின் மகனான நிதின் , தனது அப்பா பெயரை சொல்லாமல் அவர் பாட்டிற்கு கல்லூரிக்கு செல்வது , நண்பர்களோடு சுற்றுவது , வம்பு வழக்குகளை இழுத்து வருவது என குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் கட்டுப்படாமல் வாழ்கிறார் . சுருக்கமாக அவரது குடும்பத்தில் அவர் படிக்காதவன் . பிறர் படித்தவர்கள் . இந்த நிலையில் நிதின் , ரவுடிகளை அடித்து உதைக்கும்போது , அந்த இடத்தில் காஜலின் தோழிக்கு பிறந்தநாள் பார்ட்டி நடைபெறுகிறது . அந்த விழாவே சண்டையால் களேபரமாகி சங்கடமாகிறது . இதைப்பற்றி காஜல் காவல்துறையில் புகார் செய்கிறார் . அங்குதான் நிதின் மிகப்பெரிய பணக்காரர் வீட்டு பிள்ளை என தெரிய வருகிறது . இன்ஸ்பெக்டர் அவரை விட்டுவிடுகிறார் . ஆனால் நிதின் காஜலை விடுவதாக இல்லை . அவரை பின்தொடர்ந்து செல்கிறார் . நிதினின் அப்பா நாக பாபு , மனிதர்களின் வாழ்வை கெடுக்காத தொழில் செய்ய நினைப்பவர் . இவரின் தொழில் போட்டியாளர் ரகுவரன் . அவருக்கு நாக பாபுவை எப்படியேனும் தோற்கடித்தால் போதும் என்ற வெறி . இப்படி போட்டி போட்டதில் இருவரின் நிறுவனங்களும் கீழேத

ரவுடிகளை அசாத்திய துணிச்சலோடு பந்தாடும் கல்லூரி மாணவன்!

படம்
  அசாத்யுடு - கல்யாண் ராம், தியா அசாத்யுடு தெலுங்கு கல்யாணம் ராம், தியா   கல்லூரியில் படிக்கும் பார்த்துவுக்கு ஒரு செயலை செய்தால் அதன் முன்பின் என்ன நடக்கும் என்பது தெரியும். இதனால் அடுத்தவர்களின் பிரச்னையில தானாக சென்று தலையிட்டு அதை முடித்து வைக்க தயங்குவதில்லை. இவனது குணத்தால் பெத்த ரவுடியின் தம்பியை தன்னியல்பாக அடித்து கொல்கிறான். இதனால் ஏற்படும் பிரச்னைகளை காவல்துறை உதவியுடன் எப்பபடி கையாள்கிறான். ரவுடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியொருவனாக அசாத்திய துணிச்சல் கொண்ட மனிதனாக எப்படி உதவுகிறான் என்பதே கதை. கல்யாண் ராமின் படங்களில் கொஞ்சமேனும் கதைக்காக மெனக்கெடுகிறார்கள். அந்த வகையில் படத்தை பார்ப்பதில் அந்தளவு சலிப்பு ஏற்படுவதில்லை. இதற்காக அவரது அத்தனை படங்களும் சிறப்பானவை என்று கூற முடியாது. இந்த படத்தில் பார்த்து என்ற பாத்திரத்தின் வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. ஒரு கல்லூரியில் ஒரு இளம்பெண்ணை ராக்கிங் செய்து அவளை பாலியல் வல்லுறவு செய்ய துரத்துகிறார்கள். கல்லூரி தலைவரின் மகன் என்று தெரிந்தும் அவனை அடித்து உதைத்து பெண்ணைக் காப்பாற்றுகிறான் பார்த்து. இதன் விளைவாக அவனுக்க

ஊரே மிரளும் கனி, பாலுவாக மாறுவதற்கு காரணமான மருத்துவக் காதலி! - பாலு - கருணாகரன்

படம்
  பாலு இயக்கம் கருணாகரன் இசை பவன், ஷிரியா சரண், சுனில், ஜெயசுதா, பிரம்மானந்தம்   டெல்லியில் நீங்க என்ன செஞ்சுட்டிருந்தீங்க என கேட்கும் டான் டைப் கதை. ஹைதராபாத்தில் பூக்கடை வைத்து ஹோட்டல்களுக்கு பூ விற்றுக்கொண்டிருக்கும் பாலுவைக் கொல்ல டெல்லியில் இருந்து வரும் மாஃபியா டான் கான் பாய் முயல்கிறார். அவரும், உள்ளூர் தாதா நாயுடம்மா என்பவரும் இணைந்து பாலுவை கொல்ல நினைக்கிறார்கள். ஏன் இந்த வன்மம், பழிவாங்க நினைக்கிறார்கள் என்பதே முக்கியக் கதை. அவன் வீட்டிலுள்ளவர்கள் யார் என்பதையும் இயக்குநர் நிதானமாக கூறுகிறார். படத்தின் காட்சிகளை மணிசர்மா இசையால் தாங்கியிருக்கிறார்.  கனி, பாலு என இரண்டு பாத்திரம் இரண்டிலும் பிஎஸ்பிகே கலக்கியிருக்கிறார். முதல் காட்சியில் சுனிலுடன் பண்டு பாத்திரங்களுடன் வரும்போதே வசீகரிக்கிறார். பிறகுதான், அங்குள்ள தாஸ் என்பவரின் அம்மா போட்டோவை கடையில் வைத்து தண்டல் வசூலிப்பதை தடுக்கிறான். அனைத்தையும் நுட்பமாக செய்து நாயுடம்மா குழுவை ஏமாற்றுகிறான். ஏமாற்றும் பணத்தை அங்குள்ள சந்தை ஆட்களுக்கே கொடுக்கிறான். அந்த சந்தைப்பகுதி யாருடையது, ஏன் அங்கு ரவுடிக்கள் தண்டல் வசூலித