வன்முறையாளர்களுக்கு ஜிம் வசதி - ஹரியானா அரசு புதுமை
நான் தலித் அல்ல ! அண்மையில் எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பாக நொய்டாவில் நடந்த போராட்டத்தில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மக்கள் பலரும் கைதானார்கள் . அதில் ஆர்எஸ்எஸ் தலைவரும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ராகேஷ் சின்காவும் அடக்கம் . என்ன செய்தார் ராகேஷ் சின்கா ? டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுக்க வந்திருந்தவரை போலீஸ்காரர்கள் போராட்டக்காரர் என்று நினைத்து கெடுபிடியாக ஜீப்பில் ஏற்றி , செம்மொழியான இந்தியில் திகட்ட திகட்ட அர்ச்சனை செய்திருக்கின்றனர் . நொந்துபோன சின்கா " நான் தலித்தல்ல , போராடவும் வரவில்லை " என ஐடிகார்டை கொடுத்து காலில் விழுந்து மன்றாட விடுதலை கிடைத்திருக்கிறது . பின்னர் சமூக வலைதளத்தில் கைது செய்யப்பட்டவர்களை இப்படி நடத்துவார்கள் என கனவிலும் நினைத்ததில்லை என சுய அனுபவம் பகிர்ந்துள்ளார் பேராசிரியர் ராகேஷ் சின்கா . எலிப்புழுக்கைக்கு அங்கே என்ன வேலை ? 2 விட்டுக்கொடுக்கிறதா இந்தியா ? அண்மையில் இந்தியாவின் சுகாதாரத்துறையும் , உலக சுகாதாரநிறுவனமும் இணைந்து பங்கேற்ற விழாவில் வெளியிட்ட இந்தியாவின் வரைபடத்தில் இ