இடுகைகள்

உருவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தியின் உருவத்தைப் பார்த்து நாம் பெறும் செய்தி!

படம்
  பொதுவாக காந்தியின் வழிமுறைகளாக கூறுவது என்ன ? அமைதி , அநீதிக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு , எதிர்ப்பது , போராடுவது ஆகியவைதான் . இதைத் தாண்டி உணவு , உடை , குடிநீர் , மின்சாரம் ஆகியவற்றை வீணாக்காமல் பயன்படுத்துவதை காந்தியின் பெயர் சொல்லித்தான் சொல்லுவார்கள் . உள்நாட்டு துணிவகைகளைப் பயன்படுத்துவது இதில் முக்கியமானது . காதியில் கிடைக்கும் காடாத்துணிகளை தைத்து உடைகளாக்கி போடுவது ஒரு காலத்தில் நாகரிகமாக இருந்தது . இன்று காதி , சர்வோதய சங்கத்தில் விற்கும் சட்டைகள் சற்று பெரிதாக வினோதமான வடிவமைப்பில் இருந்தாலும் , துணிகளை வாங்கி சாதுரியமாக தையல்காரரிடம் விருப்பம் போல தைத்துக்கொள்ளும் புத்திசாலிகளும் உண்டு . உடைகளை பழசாகிவிட்டால் தூக்கி எறிவதை காந்தி வெறுத்தார் . அதை கிழியும் வரையில் பயன்படுத்தலாம் . கிழிந்துவிட்டாலும் கூட அதை பயன்படுத்தும் வழிகள் உண்டு . இது நம்மை காசு செலவழிக்காத கருமியாக காட்டலாம் . ஆனால் அப்படி பயன்படுத்த கற்றால் உங்களுக்கு செலவுகள் குறையும் . பொருட்களால் வீட்டை நிறைக்க மாட்டீர்கள் . வாழ்க்கையும் எளிமையாக மாறும் . காந்தியின் சத்திய சோதனை நூலை ஒருவர் படிக்கும்போது அவர் பள