இடுகைகள்

கண்பார்வை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பார்வையற்றவர்களுக்கு லூயிஸ் ப்ரெய்லியின் பங்களிப்பு!

படம்
இன்றிலிருந்து சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பிரான்ஸ் நாட்டுக்குச் செல்வோம். அங்கு கூப்ரே என்ற சிறுநகரத்தில் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தார். அவன் பெயர் லூயிஸ் ப்ரெய்லி. இவரது அப்பா தோல் பொருட்களை தயாரித்து வந்தார். லூயிஸ் விளையாடிக் கொண்டிருக்கும்போது அப்பாவின் ஊசியை தவறுதலாக எடுத்து கண்ணில் குத்திக்கொண்டான். கண்ணில் தொற்று வேகமாக பரவ, விரைவில் பார்வையை இழந்தான். புத்திசாலி என்பதால் கண்பார்வை குறைவை சமாளித்து பாடங்களை சிறப்பாக படித்தான். பின்னாளில் பார்வையற்றோருக்காக ராயல் சொசைட்டியில் உதவித்தொகை பெற்று படித்தான். இங்கு இருந்த நூல்களை எளிதாக லூயிஸ் படிக்க முடிந்தது. இதுபோல அனைவரும் படிக்கும்படி நூல்களை உருவாக்கினால் என்ன என்று யோசித்தார். இதனால் அதற்கெனவேஏ ப்ரெய்லி முறையை உருவாக்கினார். நூல்களை எழுதினார். ப்ரெய்லி முறைக்காக இவர் பயன்படுத்திய கருவி, தனது கண்களை எதைக்கொண்டு தவறுதலாக குத்திக்கொண்டாரோ அதுதான் என்பதை நகைமுரணானது. ஆனால் காலம் அவரை அப்படித்தான் செய்ய வைத்தது. லூயிஸ் பாடுபட்டு இம்முறையை உருவாக்கினாலும் கூட இதனை பலரும் கண்டுகொள்ளவே இல்லை. லூயிஸ் இறந்தபிறகு அவரது மு

கேரட் தின்றால் இருட்டில் பார்க்க முடியுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி கேரட் தின்றால் இருட்டில் கண்கள் தெரியுமா? கண்களில் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள் நல்லது. கேரட்டும் அப்படியே. அதற்காக நாய், பூனை போல உங்கள் கண்கள் இருட்டிலும் கவனிக்கும் திறன் பெறமுடியாது. கேரட்டிலுள்ள பீட்டா கரோட்டின், கண்களிலுள்ள ரெட்டினாலுக்கு உதவுகிறது. இதனால் கண்பார்வை ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறலாம். இரண்டாம் உலகப்போரில் இரவில் தாக்கிய ஜெர்மனி நாட்டு விமானங்களை சுட்டுவீழ்த்த கண்பார்வை இல்லை என வீர ர்கள் தடுமாறினர். அப்போது அவர்களுக்கு அரசு கேரட்டை வழங்கியதாகவும், அதனால் அவர்கள் ஜெர்மனியை வீழ்த்தியதாகவும் கதை உண்டு. ஆனால் அது உண்மையல்ல. ரெட்டினாலிலிருந்து கிடைக்கும் ரெட்டினல் எனும் சுரப்பி கண்பார்வை, பெருக உதவுகிறது. மற்றபடி விட்டமின் ஏ வீக்காக இருந்தால் ஸ்பெக்ஸ் மேக்கர்ஸிடம் அப்பாய்ட்மெண்ட் கேட்டு கண்ணாடி வாங்கி போட்டுக்கொள்வதே நல்லது. நன்றி - பிபிசி