இடுகைகள்

‘பால் ஒரு உயிர்க்கொல்லி’ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நூல் அறிமுக விழாவில் வாசிக்க தயாரித்த உரை

இயல்வாகைப்பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பால் ஒரு உயிர்க்கொல்லி’ தமிழ் மொழிபெயர்ப்பு நூலின் நூல் அறிமுக விழாவில் வாசிக்க தயாரித்த உரை                                                                       ச.ஜெ அன்பரசு      வணக்கம் நண்பர்களே. பெரும்பாலான நண்பர்களை இங்கு சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. நான் மொழிபெயர்த்துள்ள பால் ஒரு உயிர்க்கொல்லி எனும் நூலின் மூலம் பினாங்கு தோழர்களின் வெளியீடான புத்தகம்தான். என் வயதும், முடி கருக்காததும் புத்தகம் குறித்த ஐயத்தை ஏற்படுத்துகின்றது என்பதை ஒரு பத்திரிகையின் ஆசிரியையின் பேச்சில் இருந்து அறிந்தேன். அறிவிற்கும் வயதிற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று உண்மையில் எனக்கு குழப்பமாக உள்ளது. இது நமது மரபான யாரையும் நம்பாத, நேர்மையில் நம்பிக்கை கொள்ளாது ஆனால் அனைவரும் நேர்மையாக நடக்கவேண்டும் என்று எண்ணுகிற இந்திய மரபின் தொடர்ச்சியாகவே எண்ணுகிறேன். குக்கூவில் யாரையும் எதிர்பார்க்க ஒன்றுமில்லை. இதில் உள்ள ஒவ்வொருவருமே தன்னகங்காரம், ஒற்றுமை, காட்டுப்பள்ளி குறித்து தனியாக ஒருமணி நேரத்திற்கும் மேலாக சொற்பொழிவு ஆற்றும் ந