கொத்தடிமை ஒழிப்புச்சட்டம் - 50 ஆவது ஆண்டு -2030இல் 70 சதவீதம் ஒழிக்கப்பட வாய்ப்பு
கொத்தடிமை ஒழிப்புச்சட்டம் - 50 ஆவது ஆண்டு கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிற சூழலில் விரைவில் தமிழ்நாட்டில் தேர்தல் வரவிருக்கிறது. நாடே மூடநம்பிக்கையில் எது நடந்தாலும் ஆட்சித்தலைவரை ஏதும் சொல்லக்கூடாது என்ற பக்தியில் காலை நக்கிக்கொண்டிருக்கும் ஊடகங்கள் உள்ளன. தி இந்துவும் அப்படியான பத்திரிகைதான். தமிழ்நாடு முதலமைச்சரின் செய்தி அருகே, எல் முருகன் என்ற பட்டியலின பொறுக்கித் தின்னும் அமைச்சர் ஒருவரின் செய்தி இடம்பெறுகிறது. இதை அனுமதிக்கிறவர்கள் மனநிலை எப்படியானது என புரிந்துகொள்ளலாம். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு மனநிலைதான். இருந்தாலும் தி இந்துவில் ஆச்சரியப்படுத்தும் சில கட்டுரைகளை எழுதும் அதிசய பத்திரிகையாளர்களும் உண்டு. அப்படி ஒருவர் எழுதிய கட்டுரையின் அடிப்படைச் சாரம் மட்டும் இங்கே... தமிழ்நாட்டில் கொத்தடிமை முறை இப்போதும் இருக்கிறது. இந்த முறை இப்போது கல்குவாரி, செங்கல் சூளை மட்டும் இல்லாமல் ஜவுளிக்கடை, சூப்பர் மார்க்கெட், பல்லடுக்கு வணிக மால்கள், கட்டுமான இடங்கள், ஹோட்டல்கள், ரிசார்டுகள் என பரந்துள்ளது. எனவே, கொத்தடிமையாக உள்ளவர்களை கண்டுபிடித்து மீட்...