இடுகைகள்

கூ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூ சமூக வலைத்தள நிறுவனம் மூடப்பட்டதன் காரணம்!

படம்
            நிறுவனம் தோற்கலாம், நிறுவனர்கள் தோற்பதில்லை இப்படியொரு வாசகத்தை ஒருவர் எதற்கு சொல்லவேண்டி வரும்? கடையை அடைக்கும்போதுதானே? கூ என்ற ட்விட்டரை உல்டா செய்து உருவாக்கப்பட்ட இந்திய நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கடைசியாக நிறுவனர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மாயங்க் பிடாவட்கா ஆகியோர் மேற்சொன்ன செய்தியை சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார்கள். இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்பு  ஒன்றை உருவாக்க பெரிதாக ஆராய்ச்சி ஏதும் செய்வதில்லை. பணம் வீண் பாருங்கள். பெரும்பாலும் மக்களிடம் வெற்றி பெற்ற அயல்நாட்டு வணிக வடிவத்தை அப்படியே எடுத்து செப்பனிட்டு தாய்மொழியான வடமொழி அல்லது ஆங்கிலத்தில் பெயர் வைத்து தொடங்கிவிடுவார்கள். அப்படி நிறைய நிறுவனங்கள் ஸ்டார்ட்அப்களாக உருவாகின. அதுவும் இந்தியாவில் சீன நிறுவனங்கள், ஆப்கள் தடை செய்யப்பட்டபோது, நகல் நிறுவனங்களின் எண்ணிக்கை கூடியது. அப்படி இயங்கினால் கூட கூகுள், மெட்டா, அமேசான் போல எந்த நிறுவனங்களும் உருவாகவில்லை. உருப்படியாக நின்று சாதிக்கவில்லை. தனித்துவம் இல்லாமல் உள்ளூர் மொழி என்று மட்டும் ஆப் ஒன...

நிச்சயமற்ற எதிர்கால வாழ்வு - கடிதங்கள்

படம்
  அன்பு நண்பர் முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா?  போஸ்ட் ஆபீஸ் செல்ல முடியாததால், அஞ்சல் அட்டைகளை வாங்க முடியவில்லை. தபால் ஊழியர்களைப் பார்த்தாலே திடீரென எரிச்சலாகிறது. ஏன் என்றே தெரியவில்லை.  கூண்டுப்பறவை ஏன் பாடுகிறது  - மாயா ஏஞ்சலோ சுயசரிதையை இன்றுதான் படித்து முடித்தேன். மொழிபெயர்ப்பு அவை நாயகன். நேர்த்தியான தமிழாக்கம் மோசமில்லை. கருப்பர் இனம், பாகுபாடு, பாலுறவு என தன்னை நிர்வாணமாக முன்வைத்து கருத்துக்களை பகிர்ந்துகொண்ட மாயாவின் துணிச்சல் வாசகர்களுக்கு வாசிக்கும்போதே பயம் தருகிறது. சிறுவயது துயர வாழ்க்கை, சூதாடும் அம்மா, கட்டற்ற பாலியல் விருப்பம் கொண்ட தந்தைமார்கள், பாலியல் வன்புணர்வு, நிச்சயமற்ற எதிர்கால வாழ்வு, தமக்காக மட்டுமே வாழ்க்கை என கருப்பர் இனம் குறித்த பதிவுகள் திகைக்க வைக்கின்றன.  வெள்ளையர்கள் காரணமின்றி கருப்பர்களை ஒதுக்கும் பகுதி படிக்கும்போதே ரத்தத்தை சூடாக்குகிறது. குறிப்பாக மாயாவுக்கு பல் மருத்துவம் பார்க்கும் பகுதி. டிஸ்கவரி ஆப் இந்தியாவில் எட்டே பக்கங்கள்தான் படித்திருக்கிறேன். சிறையில் ஒன்றே கால் ஆண்டுகள் செலவழ...