இடுகைகள்

உண்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையை கண்டறிந்து வாழ்வதே வாழ்க்கை!

படம்
  எண்ணிப் பார்க்க வேண்டிய ஏராளமான விஷயங்கள் ஜே கிருஷ்ணமூர்த்தி இந்த நூலில் கேள்வி பதில் வடிவில் ஏராளமான விஷயங்களை ஜே கே பகிர்ந்திருக்கிறார். அனைத்துமே புதுமையான சிந்தனைகள்தான். அவர் எதையும் உடனே நம்பு என்று கூறவில்லை. யோசியுங்கள். விசாரணை செய்யுங்கள். நீங்களே உண்மையைக் கண்டுபிடியுங்கள் என்று கூறுகிறார். நூலில் அதிகம் பேசியுள்ளது கல்வி முறைகளைப் பற்றித்தான். அதற்கு காரணம், பெரும்பாலான கேள்விகளைக் கேட்டது அவர் நடத்திவரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள். இப்படியான கேள்விகளை அவர்கள் கேட்டிருப்பது ஆச்சரியம் தருகிறது. ஜே கே கல்வியை வாழ்க்கையைக் கற்றுக்கொள்வதாகவே பார்க்கிறார். தொழிலை பழகுவது, அதில் பணம் சம்பாதிப்பது, மணம் செய்துகொள்வது என்பதைப் பற்றி அவர் பெரிதாக கவலை கொள்ளவில்லை. அதைப்பற்றி அவர் விளக்கமாகவும் பேசவில்லை. காரணம், படித்து, மதிப்பெண் எடுத்து வேலையில் சேர்ந்தால் அடுத்து நடப்பது திருமணம்தான். வாழ்க்கையை விசாரணை செய்து அறிந்துகொண்டு வாழ்க்கையை நடத்தக்கூறுகிறார் ஜே கே. மற்றபடி அவர் குறிப்பிட்ட லட்சியம், நோக்கம், ஒழுங்கு என்பதில் ஆர்வம் காட்டவில்லை. இன்றைக்கு வார இதழ்களில் எழுதும...

புத்தமதம் பற்றிய அடிப்படைக் கருத்துகளை உரை வடிவில் முன்வைக்கும் நூல்!

படம்
    ஃபண்டமென்டல் ஆஃப் புத்திசம் பீட்டர் சான்டினா இ நூல் இணையத்தில் புத்தமதம் தொடர்பான கோடிக்கணக்கான நூல்கள் இலவசமாக படிக்க கிடைக்கின்றன. அப்படி கிடைத்த நூல்களில் ஒன்று, இந்நூல். நூலில் மொத்தம் பதிமூன்று உரைகள் உள்ளன. அத்தனையும் புத்தமதம் சார்ந்து பீட்டர் சான்டினா ஆற்றியவை. இதில் புத்த மதம், அதன் அடிப்படை கோட்பாடுகள், கருத்துகள் பலவும் பேசப்படுகிறது. எழுத்து வழியாக நிறைய கருத்துகளை விளக்க முயலவில்லை. ஏனெனில் இக்கருத்துகள் அனைத்தும் பேசப்பட்டவை. எனவே, புரிந்துகொள்வதற்கு ஏற்ற உதாரணங்களுடன் சற்று எளிமையாக உள்ளது என்றே கூறவேண்டும். இந்த நூலை படித்தாலே புத்த மதத்தைப் பற்றி அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியுமா என்றால் ஓரளவுக்கு என்றே பதில் கூறவேண்டும். எளிமையாக பேச்சு வழக்கில் மதம் சார்ந்த அடிப்படை கோட்பாடுகளை கூறுகிறது. அந்த வகையில் இந்நூலை தொடக்க வாசிப்பிற்கான ஒன்றாக கருதலாம். 136 பக்கங்களைக் கொண்ட எளிய நூல், வேகமாக வாசித்துவிட எண்ணுவீர்கள். ஆனால் மத நூல் என்பதால், அந்தளவு வேகமாக வாசித்து கடக்கமுடியாது. அந்தளவுக்கு முக்கியமான யோசித்து கடக்கவேண்டிய நிறைய சொற்கள் உள்ளன. துன்பம், மகிழ்ச...

ஒழுக்கம் நாணயம் உண்மை ஆகியவற்றை ஆராய்ச்சிப் படிப்பிலும் காதல் வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தும் இளைஞனின் போராட்டம்!

படம்
      மிஸ்டர் கிங் சரண்குமார் (சிவா), யாஷ்விகாநிஷ்கலா (உமா தேவி), ஊர்வி சிங்(வெண்ணிலா),முரளி சர்மா இசை மணி சர்மா இயக்கம் சசிதர் சாவாலி வாழ்க்கையில் நேர்மை முக்கியம். பொய்யான விஷயங்களே பேச மாட்டேன். செய்யவும் மாட்டேன் என அடம்பிடித்து வாழும் பிஹெச்டி மாணவர் சந்திக்கும் காதல், தொழில் பிரச்னைகளைப் பற்றிய படம். படத்தின் நாயகன் சரண், தனது கதையை சுனிலிடம் சொல்வதுபோல கதை தொடங்குகிறது. சிங்கிள் சிவா என்பதுதான் நாயகனின் பெயர். அவர் பகுதி நேரமாக ரேடியோ சிட்டியில் தொகுப்பாளராக வேலை செய்கிறார். மீதி நேரத்தில் முனைவர் படிப்புக்கான புராஜெக்டில் இருக்கிறார். இந்த நேரத்தில்தான் அவர் பெற்றோர் வீட்டை மாற்றுகிறார்கள். அப்போது சிவா, அருகிலுள்ள வீட்டுக்குச் செல்லும்போதுதான் அங்கு பெண் பார்க்க மாப்பிள்ளை வீடு வந்திருப்பது தெரிகிறது. அங்குதான் நாயகியை(யாஷ்விகா) சந்திக்கிறான். அந்த சந்திப்பு இருவருக்குமே தீப்பொறி போல அமைகிறது. யாஷ்விகா, அப்பாவின் பேச்சுக்கு அடங்கிய பெண். அப்பா முரளி சர்மாவோ, தான் எடுத்த முடிவுதான் இறுதி என மேலாதிக்கம் கொண்டவராக வலம்வருகிறார். அவருக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து ...

நேரடி சாட்சியத்தில் ஏற்படும் பிழைகளை கண்டறிந்த உளவியலாளர்!

படம்
  ஒரு மோசமான விபத்து நடைபெற்றிருக்கும். அதை பல்லாண்டுகளுக்கு பிறகும் சம்பவ இடத்தில் இருப்பவர் நினைவுகூரலாம்.அதற்கு என்ன காரணமாக இருக்கும்? அந்த விபத்தில் அவருக்கு சம்பந்தமான யாரோ ஒருவர் மாட்டிக்கொண்டு இறந்திருப்பார். அல்லது நினைத்துப் பார்க்க முடியாத அதி்ர்ச்சியை விபத்து சம்பவம் உருவாக்கியிருக்கும். காலப்போக்கில், இதை ஒருவர்  எத்தனை முறை மீள கூறினாலும் அதில் தகவல்கள் மாறிப்போயிருக்க வாய்ப்பகள் உள்ளது. குறிப்பாக எதனால் தூண்டப்பட்டு விபத்து சம்பவத்தை ஒருவர் நினைவுகூருகிறார் என்பது முக்கியம்.  கார்கள் இரண்டு சாலையில் எதிரெதிரே வருகின்றன. திடீரென மோதிக்கொள்கின்றன. இதைப் பார்த்தவர்களிடம் கார்களின் வேகம், உடைந்த பொருட்கள், அங்கு சுற்றியிருந்த பொருட்கள் பற்றி கேள்வி கேட்டால் பலரும் பலவிதமாக பதில்களை கூறுவார்கள். இதிலுள்ள உண்மையைக் கண்டுபிடிப்பது கடினம். இதைத்தான் உளவியலாளர் ஆய்வு செய்து கண்டுபிடித்து கூறினார். இதற்கான அவசியம் என்ன வந்தது? நீதியைக் காப்பாற்றத்தான்.  அப்போது நீதிமன்றங்களில் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்தவர்களுக்கு எதிரான வழக்குகள் அதிகம் வந்தன. இதில் நேரடி ...

ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வு கொள்கை மீது சந்தேகப்பட்ட உளவியலாளர்!

படம்
  உளவியல் உலகில் இரண்டு ஆளுமைகள் முக்கியமானவர்கள் ஒருவர் இவான் பாவ்லோவ், அடுத்து, சிக்மண்ட் ஃப்ராய்ட். இவர்களின் உளவியல் சிகிச்சை முறைகள் வேறுபட்டவை. சிக்மண்ட் ஃப்ராய்டின் முறைகள் நோயாளியை அடிப்படையாக கொண்டவை. இந்த முறையில் முறையாக ஆய்வுப்பூர்வ கருத்து சிந்தனை ஒன்றை உள்ளதாக கூறமுடியாது. நிரூபிக்கவும் முடியாது. இவான் பாவ்லோவின் முறைகளில் ஆய்வு நிரூபணம் உண்டு. தொடக்க கால உளவியலாளர்கள் கூறிய தத்துவம் சார்ந்த விளக்கங்களை பின்னாளில் வந்த உளவியலாளர்கள் ஏற்கவில்லை. காரணம், அவர்களுக்கு ஆய்வுப்பூர்வ காரணங்கள், விளக்கங்கள் தேவைப்பட்டன.  உளவியல் பல்வேறு வடிவங்களில் பரிணாம வளர்ச்சி பெற்றது. அதில்  உளப்பகுப்பாய்வு, தன்னுணர்வற்ற நிலையை ஆராய்வது என்பது பொதுவான அம்சமாக இடம்பெற்றது. இதை கேள்வி கேட்டவர்களில் ஆரோன் பெக்கும் ஒருவர். 1953ஆம் ஆண்டு உளவியலாளராக படித்து பணியாற்றத் தொடங்கினார். அப்போது சோதனை உளவியல், மனதின் நிலைகளை ஆராயத் தொடங்கியது. இதை அறிவாற்றல் புரட்சி என உளவியல் வட்டாரத்தில் கூறினர். உளவியல் பகுப்பாய்வு படித்துவிட்டு பணிக்கு வந்தாலும் பின்னாளில் அதன் உண்மைத்தன்மை பற்றிய சந்த...

உண்மையைத் தேடுவதே இளைஞர்களின் முதல்பணி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார் – விக்டர் காமெஸி மனிதர்கள் செய்யும் பணியில் இறுதியில் எஞ்சுவது அழிவும், அழிவும், விரக்தியும்தான். இதற்கு எதிரே சொகுசான பொருட்களும், கொடூர வறுமையும் நோயும், பட்டினியும் உள்ளன.   இதனோடு குளிர்பதனப்பெட்டியும், ஜெட் விமானங்களும்   இருக்கின்றன. இவை எல்லாமே மனிதர்கள் உருவாக்கியவைதான். நம்மால் உருவாக்க முடிந்தது இதைத்தானா, உண்மையில் மனிதர்களால்   செய்ய முடிந்த எந்திரங்கள் எவை?   துணி துவைக்கும் எந்திரங்கள், பாலங்கள், விடுதிகள் என மனிதர்கள் உருவாக்கிய பலவும் வேறுவேறு பொருட்களைக் கொண்டவை. மனிதர்கள் உண்மையாக உருவாக்கியது எதுவென தெரியாதவர்களுக்கு, அதில் சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் செய்யமுடியாது. மனிதர்களின் உண்மையான பணி, உருவாக்கம் என்பது என்ன? உண்மையைத் தேடுவதும், கடவுளைக் கண்டடைவதும்தான் என்று கூறலாம். இந்த மூடிய செயல்பாடுகளில் அன்பு தட்டுப்படுவதில்லை. மனிதர்கள் ஒருவருக்கொருவர் செலுத்திக்கொள்ளும் அன்பே புதிய உலகை உருவாக்குகிறது. திங் ஆன் திஸ் திங்க்ஸ் எது உண்மை, கடவுள் யார் என்பதைத் தேடுவது உண்மையான தேடல். பிற விஷயங்கள்...

மனிதர்களால் உருவாக்கப்படுவதே உண்மையான நெருக்கடி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி, தத்துவவியலாளர் உண்மையான நெருக்கடி ஜே கிருஷ்ணமூர்த்தி காப்புரிமை (ஆங்கில மூலம்) – கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் இந்தியா வரலாறு முழுவதும் பார்த்தால், அதில் மனிதர்கள் உருவாக்கிய பேரழிவுகள் நம்மை ஆச்சரியத்திலும் அதேசமயம் அதிர்ச்சியிலும் ஆழ்த்தும்படி அமைந்துள்ளது. பல்வேறு வல்லுநர்கள் கூறிய கணிப்புகள், அறிவுஜீவிகளின் கருத்துகள் என அனைத்தையும் கடந்து   உருவாகும் பல்வேறு மோசமான சூழல்கள் மனிதர்களை ஆதரவில்லாத நிலையில் தள்ளியிருக்கின்றன. நெருக்கடியான நிலை, பொய் ஆகியவற்றுக்கு இடையே வாழ்க்கை அமைந்துள்ளது. நாம், இந்த வாழ்க்கையை வாழவே பெருமளவு ஆற்றலையும், காலத்தையும் செலவழிக்கிறோம். ஆனால், வாழ்க்கை பற்றிய உண்மையான தேடல், மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான காரணம் பற்றி யோசிப்பதில்லை. இப்படி வாழும் வாழ்க்கையால் உலகில் பெரும் நெருக்கடி நேருமா இல்லையா என்பது பற்றி நாம் எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை. உண்மையில் அப்படி கேள்வி கேட்டால் கூட அந்த சூழ்நிலையை நேரடியாக எதிர்கொள்ள பயப்படுகிறோம். அடுத்து நீங்கள் வாசிக்கப்போவது ஜே கிருஷ்ணமூர்த்தி 1934-1985 வரையிலான காலகட்டத்தில் பேசி...

மனப்பூர்வமாகத் தேடினால் சுதந்திரத்தைப் பெறலாம்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி எப்படி தேர்ந்தெடுப்பது -2 உங்கள் வாழ்க்கை என்பது தேர்வுகளாக அமைந்துள்ளது. உங்களின் தேர்வு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தருவதால் அதை நீங்கள் விரும்புகிறீர்கள்.  இந்த தேர்வு, உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த நாள் இந்த தேர்வு உங்களுக்கு பிடிக்காமல் போய்விடலாம். எனவே, நீங்கள் தேர்ந்தெடுத்த விஷயங்களை உடனே கைவிட்டுவிட்டு வேறு விஷயங்களுக்கு நகர்ந்துவிடலாம். ஆகவே,  உங்களது தேர்வு என்பது உணர்வுநிலையைச் சேர்ந்தது. நீங்கள் அதை சுயநினைவு சார்ந்தும் இருநிலைப்பாடுகள் சார்ந்தே எடுக்கிறீர்கள். ஆனால் எடுக்கும் தேர்வு நிலைப்பாடு, எதிர்மறையாக அமைகிறது. எதிர்மறையாகச் செல்லும் தேர்வுகள் பற்றி நீங்கள் கவனமுடன் இருந்தால்,  உண்மை எதுவென அடையாளம் கண்டுகொள்ளலாம். உண்மையை அடையாளம் காண்பதற்கான ஆர்வம், வேட்கை இல்லை என்பதால் உணர்வு நிலை சார்ந்து எதிர்மறையான தேர்வுகளே கிடைக்கின்றன. இந்த நிலையில் மனம் முழுக்க எதிர்மறை தேர்வுகளிலிருந்து எளிதாக விடுதலையாவதில்லை. இச்சூழலில், விழிப்புணர்வாக, செழிப்பான நிலையில் மனம் இருக்காது. ஒருவரின் எதிர்மறைத் தேர்வுகளில் சுதந்திரம் இருப...

வாழ்ந்து அனுபவித்தலே உண்மையை புரிந்துகொள்வதற்கான வழி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  வரையறுக்கப்படாதபடி வாழ்க்கையை நிஜத்தில் வாழ்தல் நம்மில் பெரும்பாலானோர் உண்மையான வாழ்க்கை இருப்பதாக நம்புகிறார்கள். அதை அழியாத ஒன்றாக நினைக்கிறார்கள். ஒருவர் , வாழ்க்கையில் அழியாத தன்மை கொண்ட விஷயங்களை உணர்வது அரிதிலும் அரிதாகவே வாழ்க்கையில் நடைபெறுகிறது. என்னைப் பொறுத்தவரை நிஜம் என்பது, கடவுளாக இருக்கலாம். அதை அமரத்துவம், அழியாத தன்மை   அல்லது வேறு எந்த பெயர்களைக் கொண்டும் குறிப்பிடலாம். உயிர்வாழக் கூடிய புதுமைத்திறன் கொண்ட விஷயங்களை வரையறை செய்து குறிப்பிட முடியாது. நிஜ வாழ்க்கை என்பது இந்த வரையறைகளைக் கடந்தது. உண்மையை நீங்கள் வரையறை செய்து கூறினால்,அது நிலையானதாக இருக்காது. வார்த்தைகளைப் பயன்படுத்தி உருவாக்கும் மாயமாகவே இருக்கும். பிறர் கூறும் வார்த்தைகளின் அடிப்படையில் காதலை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. காதலை நீங்கள் அனுபவித்தால்தான் அதை உணர முடியும். உப்பின் சுவையை அறிய, நீங்கள் அதை சுவைத்துப் பார்க்கவேண்டும். நாம் பெரும்பாலான நேரம், உண்மையைத்   தேடி உணர்வதை விட அதைப் பற்றி குறிப்புகளை வரையறைகளையே விரும்புகிறோம்.   நான் அதை வரையறை செய்யப்போவதில்லை....

உண்மையைச் சொன்னால் மனதுக்கு உறுத்துமே? - கடிதங்கள் - கதிரவன்

படம்
  21.11.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?   அலர்ஜிக்கான மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருகிறேன். பிரன்ட்லைன் சந்தா முடிந்துவிட்டது. இதுவரை வந்த இதழ்களை முழுமையாக படிக்க முடியவில்லை. நிதானமாகத்தான் படித்து வருகிறேன். இரண்டு இந்தியா  பற்றிய மீம்களைப் பார்த்து இருப்பீர்கள். வீர்தாஸ் என்ற தனிக்குரல் கலைஞர் அமெரிக்காவில் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. தீக்கதிர் நாளிதழிலும் அதை செய்தியாக்கியிருந்தார்கள். உண்மையத்தான் பேசியிருந்தார். பெண்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலைப் பற்றி பேசி இருந்தார். உண்மையைச் சொன்னால் பலரின் மனதுக்கு உறுத்துமே? சங்கிகள் உடனே வரிந்துகட்டி  கிளம்பிவிட்டனர். இவர்களால் தேவையில்லாமல் கோர்ட்டின் நேரம் வீணாகிறது. வெட்டியாக ஒரு குற்றச்சாட்டு சொல்லி வழக்குகளை போட்டு வருகிறார்கள்.  கடந்த 16ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் செயல்படுத்தப்பட்டதை நினைவுகூரும் விதமாக தீக்கதிர் நாளிதழில் கட்டுரை வெளியாகியிருந்தது. அதைப் படித்தேன். இந்த செய்தியில் கார்ட்டூன் கதிரின்  கார்ட்டூனும் இடம்பெற்றிருந்தது. அதைப் பார்க்க மகிழ்ச...

அப்பாவின் வெறுப்பால் குடும்பத்தை விட்டு தனி மனிதனாகும் சத்யம்! சத்யம் -2003

படம்
  சத்யம் சுமந்த் அக்கினேனி படத்தின் தலைப்புதான் நாயகனின் குணம். அவன் உண்மை சொல்லும் சந்தர்ப்பம் எல்லாம் தவறாகவே போகிறது. இதனால் அவன் வீட்டை விட்டு வெளியே போய் வாழும்படி ஆகிறது. பிறரின் நலனுக்காக தன்னையே தியாகம் செய்யும் குணம், அவனுக்கு நான்கு நண்பர்களை சம்பாதித்துக் கொடுக்கிறது. இருவர் அவனது அறையில் தங்கி நண்பர்களானவர்கள், மீதி இருவர்களில் ஒருவர் ஜோதிடர், மற்றொருவர் இவர்கள் தங்கியிருக்கும் அறைகளின் உரிமையாளர்.  படம் நெடுக நான்கு நண்பர்கள் சுமந்திற்கு எப்பாடு பட்டேனும் உதவுகிறார்கள். அவர்களுக்கும் சுமந்த் பார்ட்டி கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். விடுங்கள் கதை பார்ட்டி பற்றியது அல்ல.  சத்யத்தை நம்பும் ஒரே நபர், அவனது தங்கை மட்டும்தான். சத்யத்தைப் பொறுத்தவரை மனத்திற்கு தோன்றினால் வேலைகளை செய்வது இல்லையெனில் அதை செய்யக்கூடாது அவ்வளவுதான். இது பலருக்கும் புரிவதில்லை. ஏன் அவனது பெற்றோருக்கு கூட. குறிப்பாக அவனது அப்பாவுக்கு அவனை புரிந்துகொள்ள முடியாத இயலாமை மெல்ல கோபமாக மாறுகிறது. சத்யத்தைப் பொறுத்தவரை கவிதை எழுதுவது அதற்கான கவியுலகிலேயே இருப்பது பிடித்தமானது. இப்படி இருப்பவன் ந...

உண்மையின் விலை என்ன? - ஜல்சா - வித்யா பாலன்

படம்
  ஜல்சா வித்யாபாலன், ஷெபாலி ஷா அமேஸான் பிரைம் அடுத்தவர்கள் நேர்மையாக மனசாட்சிப்படி நடந்துகொள்ளவேண்டும் என நினைப்பவர்கள், தங்கள் வாழ்க்கையில் அப்படி இருக்கிறார்களா என்பதை பேசும் படம்.  மாயாமேனன், வேர்ட் எனும் வலைத்தள செய்தி நிறுவனத்தின் எடிட்டர். பிறரிடம் கேள்வி கேட்டு உண்மையை வாங்குவதில் திறமையானவர். இது, நிறைய அதிகாரிகளை நீதிபதிகளை சங்கடப்படுத்துகிறது. ஆனால் மாயாவுக்கு அதுபற்றி பெரிய வருத்தமில்லை. எனது வேலை கேள்வி கேட்பது என உறுதியாக நம்புகிறார். இவரின் ஸ்ட்ரெய்ட் டாக் என்ற நிகழ்ச்சி புகழ்பெற்ற ஒன்று. இதற்காக உருவாக்கப்படும் பேனர்கள் நகரமெங்கும் வைக்கப்படுகின்றன. பின் வரும் காட்சிகளில் இந்த போர்ட்டுகளே ஒரு கதாபாத்திரமாக மாறுகிறது. மாயாமேனன், செய்தி வலைத்தளத்தின் எடிட்டர். நெடுநேரம் அலுவலகத்தில் வேலை செய்பவர். வீட்டில் உள்ள அம்மா, மகன் ஆகியோரை தன் கையிலுள்ள போன் மூலமே பார்த்து எப்படியிருக்கிறார்கள் என தெரிந்துகொள்கிறார். அனைத்துமே அவரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக நினைக்கிறார். ஆனால், ஒருநாள் இரவு வேலைப்பளுவால் நள்ளிரவு தாண்டி வேலை செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்புகிறார். ஏறத்தாழ அ...

உண்மையைப் பேசத் தயங்கும் ஊடகங்கள்! - இந்தியாவில் சிறப்பாக நடக்கும் சம்பவங்கள் - ஆகார் படேல்

படம்
அண்மையில் என்டிடிவி தொகுப்பாளர் ரவிஷ்குமார் ஒரு செய்தியை சொன்னார். இன்றைய ஊடகங்கள் எதில் கவனம் செலுத்தவேண்டுமோ அதனை செய்வதில்லை என்றார். அது உண்மைதான். இன்னும் சில மாதங்கள் நாம் பாஜகவின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியை பார்க்கப்போகிறோம். இது ஒரு ஆட்சிக்கு நீண்ட காலம். அவர்கள் செய்ய நினைத்த திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றியிருக்கமுடியும். இப்படி ஏதாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.  பொருளாதார ரீதியாக நிறைய சீர்திருத்தங்கள் செய்திருக்கிறார்கள் என்று கூறி வந்தார்கள். பல்வேறு விலைபோன ஊடகங்களும் அதனை அப்படியே ஊதுகுழலாக ஒப்பித்தன. ஆனால் பொருளாதாரம் முன்னெப்போதையும் விட பாதிக்கப்பட்டுள்ளது. இதோடு ஒப்பிடுகையில் சீனா, தைவான், சிங்கப்பூர், தென்கொரியா ஆகிய நாடுகள் சிறப்பாக உள்ளன. அவ்வளவு தூரம் கூட போக வேண்டாம். 2014இல் இந்தியாவை விட உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 50 சதவீதம் பின்தங்கிய வங்கதேசம் இன்று நம்மை விட முன்னேறியுள்ளது. இதேபோல வியட்நாம் நாட்டையும் சொல்லலாம்.  உற்பத்தித்துறை சார்ந்த வேலைகள் மிகவும் குறைந்துவிட்டன. இப்போது மிச்சமிருப்பது விவசாயம் மட்டுமே. தற்போது ...

உண்மையைப் பேசியதற்கான விலையைக் கொடுத்துள்ளேன்! - அபய் தியோல், சினிமா நடிகர்

படம்
  அபய் தியோல் நேர்காணல் அபய் தியோல் 1962 சீனா, இந்தியப்போரை பெரிதாக யாரும் பேசமாட்டார்கள். நீங்கள் அதை திரைப்படமாக எடுக்கிறீர்களே? பொதுவாக போரில் வெற்றி பெற்ற நாடு அதைப் பற்றி படமாக எடுக்கும். ஆனால் போரில் வெற்றி தோல்வி என்பதே கிடையாது. ஒருவேளை 1962ஆம் ஆண்டு போரில் கவனம் செலுத்தியிருந்தால் வென்றிருக்க வாய்ப்பிருந்தக்கூடும்.  போரைப் பற்றிய படம் எடுப்பதே ஆதரவா, எதிர்ப்பா என்ற கருத்தில் நிற்கவேண்டிய சூழலை ஏற்படுத்தும். இதனை எப்படி சமாளித்தீர்கள்? இயக்குநர் மஞ்சுரேக்கர் இதில் திறமையான ஆள். நான் போருக்கு எதிரானவன். போருக்கு ஆதரவான அதை ஊக்குவிக்கும் விஷயங்கள் படத்தில் இருக்காது. படம், போரில் பாதிக்கப்பட்ட ராணுவ வீர ர்கள், அவர்களின் குடும்பம், சமூகம் ஆகிய விஷயங்களைப் பேசும். குறிப்பாக எதிரிகளைப் பற்றியும் கூட.  நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்கள் உங்கள் தனித்தன்மையைக் காட்டுகிறது. தற்போது கிடைத்துள்ள ஓடிடி தளங்கள் கூட சினிமாவுக்கு மாற்றாக உதவுகிறதா? நான் சினிமாவில் நடித்த படங்கள் அனைத்துமே புது இயக்குநர்கள், எழுத்தாளர்களுடையது. ஓடிடி தளங்களைப் பொறுத்தவரை இது மாறுபட்ட ஊடகம் என்பதோடு...

நேர்மையான அதிகாரிகளை பறையர்களைப் போல நடத்துகிறது இந்திய அரசு!

படம்
நேர்காணல் தினேஷ் தாக்கூர் அமெரிக்காவில் ரான்பாக்சி மீது குற்றச்சாட்டு எழுப்பி அதனை அபராதம் கட்ட வைத்திருக்கிறீர்கள். இந்தியாவில் இது சாத்தியம் என நினைக்கிறீர்களா? அமெரிக்காவில் உள்ளது போன்ற சட்டங்கள் இந்தியாவில் இருந்தால் சாத்தியமாகலாம். இடுப்பெலும்பு மாற்று சாதனங்களை தரம் குறைந்து ரான்பாக்சி தயாரித்து விற்றது. இது காசு கொடுத்து வாங்கும் மக்களை ஏமாற்றுவதல்லவா? அதற்காகத்தான் நான் அந்த நிறுவனத்தை குற்றம் சாட்டினேன். அமெரிக்காவையும் இந்தியாவையும் ஒப்பிட்டு சட்டங்கள் பற்றி பேசுவது ஆப்பிளையும், ஆரஞ்சையும் ஒன்றாக ஒப்பிட்டு பேசுவது போல. ரான்பாக்சியின் ஊழியர் என்ற லேபிளில் இருந்துகொண்டு எப்படி குற்றச்சாட்டுகளை சுமத்தினீர்கள். அரசின் சட்டப்பாதுகாப்பு எனக்கு கிடைத்தது. குற்றச்சாட்டை எழுப்பியவர் பெயரை அவர்கள் வெளியிடவில்லை. அதனால்தான் என்னால் சுதந்திரமாக சில விஷயங்களை பேச முடிந்தது. இந்தியாவில் புகார் கொடுப்பவர்களை காப்பாற்றுவார்கள் என நினைக்கிறீர்களா? அசோக் கெம்கா என்ற ஐஏஎஸ் அதிகாரி (ஹரியானா), உத்தர்காண்டைச் சேர்ந்த சஞ்சய் சதுர்வேதி என்ற அதிகாரிகளை இந்திய அரசு, பறையர்...

காந்தியை எதிர்க்கும் இன்றைய எதிரிகள் யார்?

படம்
காந்தியின் அன்றைய எதிரிகளும் இன்றைய எதிரிகளும்! டக்ளஸ் ஆலன், பேராசிரியர் மைன் பல்கலைக்கழகம்.  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வாழ்ந்த காலத்திலும், அவரை நினைவுகூரும் 150 ஆம் ஆண்டு தினத்திலும் கூட அவரின் கொள்கைகளும், அவை பெற்றுத்தந்த எதிரிகளையும் மறக்க முடியாது. இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கே புதுமையான மனிதராக காந்தி தெரிந்தார். காந்தி வாழும் காலத்தில் அவரை எதிர்த்தவர்களின் முக்கியமானவர்கள் அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சாவர்க்கர் ஆகியோர் முக்கியமானவர்கள். இன்றும் இவரது எதிரிகளின் தொண்டர்கள் காந்தியையும், அவரது கொள்கைகளையும் எதிர்த்து வருகின்றனர். அவரின் பல எதிரிகளின் தமக்கான கொள்கைகளை காந்தியின் பேச்சு மற்றும் எழுத்துக்களிலிருந்து எடுத்து பயன்படுத்தி வரும் விநோதமும் நடைபெற்று வருகிறது. அதையும் காந்தி அனுமதிக்கிறார்தான். காந்தி பத்தொன்பதாம் நூற்றாண்டு மனிதர். நமது 20 ஆம் நூற்றாண்டு எப்படியெல்லாம் மாறியிருக்கிறது. அணுஆயுதங்கள், சுயலமான அரசியல், தன் முனைப்பை மட்டுமே கொண்ட நுகர்வு, இனக்குழு சார்ந்த வன்முறை அதிகரிப்பு என காந்தி தன் காலத்தில் வலியுறுத்திய பல்வேறு வி...

காந்தி புழங்கிய இடங்கள் - ஒரு பார்வை!

படம்
காந்தி 150 காந்தி இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவிலுள்ள நகரங்களிலும் புழங்கியுள்ளார். அவர் அப்படி சென்று வந்த இடங்கள் ஒரு பார்வை. போர்பந்தர் காந்தி  1869 ஆம் ஆண்டு பிறந்த இடம். இவரது தந்தை திவானாக இருந்தார். தற்போது இந்த இடம் மியூசியமாக உள்ளது. குஜராத் தண்டி 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம் செய்த இடம். இங்கு காந்திக்கு சிலை உண்டு. இந்த இடத்தை சுற்றுலாப்பயணிகள் வரும்படி ஈர்க்க தண்டி பாரம்பரிய காரிடாராக மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. சம்பரான் காந்திய போராட்ட ங்களில் ஒன்றான சத்தியாகிரகத்தை காந்தி இங்கிருந்தான் தொடங்கினார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளுக்கு உதவினர் என்ற காந்தியின் எண்ணம் நொறுங்கியது. கௌசானி காந்தி இங்கு அனசக்தி யோகம் நூலை எழுத தங்கியிருந்தார். டெல்லி காந்தி, தன் வாழ்க்கையில் இறுதி 144 நாட்களை கடும் மனவேதனையுடன் கழித்த இடம் இது. இங்குள்ள சாலையின் பெயர் 30 ஜனவரி மார்க். ஆம். காந்தி இறந்த நாள்தான் சாலையின் பெயரும் கூட. பிர்லாஹவுஸ் என்ற இடத்தில் தங்கியிருந்தார். அந்த இடத்தின் இன்றைய பெயர் காந்தி ஸ்மிரு...

சிலர் பேசுவதை மட்டும் விரும்பிக் கேட்க காரணம் இதுதான்!

படம்
புத்தக விமர்சனம் உளவியலும் உண்மையும் நூல் ஆசிரியர், பல்வேறு கல்லூரிகளிலும் மருத்துவமனைகளிலும் உளவியலாளராக பணியாற்றியுள்ளார். இதில் தான் சந்தித்த விஷயங்களைப் பற்றி ஆழமாக பேசுகிறார். தந்தைக்கு சிறுநீரகம் கெட்டுவிட, மகன் அவருக்கு சிறுநீரகத்தை தானம் தர முன்வருகிறார். சோதனையில் மகனுடைய சிறுநீரகம் பொருந்துகிறது. இதன் விளைவாக, அவருடைய உயிரியல் ரீதியான மகன் அவரில்லை என்ற உண்மையும் வெளிவருகிறது.இதனால் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றை அழகாக எழுதியுள்ளார் ஆசிரியர். செய்தி சொல் கிளியே! சிலர் சொல்வதை நாம் கவனித்துக் கேட்கிறோம். சிலர் சொல்ல வந்தால் வேறு பக்கம் கிளம்பி ஓடிவிடுகிறோம். அதற்கு என்ன காரணம்? அதைத்தான் இந்த நூல் கூறுகிறது. இதற்கான எடுத்துக்காட்டுகளை பிரெக்ஸிட் முதற்கொண்டு எடுத்து வைத்து கூறுகிறார்கள். படித்து பார்த்து வாழ்க்கையில் முயற்சித்து பாருங்கள். உதவக்கூடும். பழக்கங்கள் எனும் சங்கிலி! எப்படி பழக்கங்களுக்குள் நமது மனம் சிக்குகிறது? அதிலிருந்து வெளியே வருவது எப்படி? வாழ்க்கையை உருப்படியாக வாழச்செய்யும் பழக்கங்கள் எவை என ஆசிரியர் நம் கைபிடி...

பொய் சொன்னால் போலீஸ் கண்டுபிடிப்பது இப்படித்தான்!

படம்
இந்துஸ்தான் டைம்ஸ் மிஸ்டர் ரோனி பொய் சொன்னால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? உண்மையைச் சொல்லுங்க சார் என்று சொன்னால் எந்த குற்றவாளியும் தெரிந்த விஷயங்களை சொல்வதில்லை. எனவே குறைந்தபட்சம் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை, காலை முறித்துக்கொள்ளுமளவு சுதந்திரம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது. மாஜிஸ்டிரேட் கூட மாவுக்கட்டை பார்த்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டாயா என்று கேட்பதில்லை. அவருக்கும் பழகி யிருக்கும். நாம் கூறப்போவது சற்று ஜென்டிலமேன் தனமான விசாரணை முறை. இதில் இன்னொரு வகைதான் உண்மை கண்டறியும் சோதனை. இதில் நம் இதயத்துடிப்பு, கண்கள், நாடி என பல்வேறு விஷயங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு டிமிக்கி கொடுக்கும் விஷயங்கள் அமெரிக்க உளவுத்துறையில் கற்றுத்தரப்படுகின்றன. 1921 ஆம் ஆண்டு ஜான் அகஸ்டஸ் லார்சன், லை டிடெக்டர் கருவியைக் கண்டுபிடித்தார். 1. குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கு தொடர்பான விவரங்களை முதலில் ஆராய்ந்து, கேள்விகளைத் தயாரிப்பார்கள். இக்கேள்வி முழுக்க குற்றம் சாட்டப்பட்டவரை பல்வேறு அடுக்குகளாக ஆராய்வதாக இருக்கும். ராபிட் ஃபயர் ரவுண்ட் போல கேள்விகளை எறிவார்கள...

கண்கள் பொய் சொல்கிறதா? - புதிய ஆராய்ச்சிகள்!

படம்
பொய் சொல்லும் கண்கள்? போலீசில் சில பெயர் பெற்ற ஆட்கள் உண்டு. கண்ணைப் பார்த்தாலே தெரியுமேப்பா? திருடனா இல்லையான்னு... இதில் சிலர் மட்டும் விதிவிலக்காக தப்பிப்பார்கள். தற்போது ஜப்பானில் குற்றவாளிகளின் கண்களைப் பின்தொடர்ந்து உண்மை அறியும் சோதனையைச் செய்து வருகின்றனர். இதனை சிஐடி என சுருக்கமாகச்சொல்கின்றனர். இதன்மூலம் குற்றம்நடந்த இடம், ஆயுதம் ஆகியவற்றை அறிய முயற்சிக்கின்றனர். ஆனால் இன்னும் இது மக்களின் முகத்தை அறியப் பயன்படவில்லை. ஸ்காட்லாந்தில் மற்றொரு ஆய்வு, வேறுவிதமாக நம்மை ஈர்க்கிறது. இதில் குறிப்பிட்ட புகைப்படங்களை குற்றவாளிகளைப் பார்க்க வைக்கிறார்கள். அவர் தொடர்புடையவரா, இல்லையான என்றால் அதற்கான பட்டன்களை அழுத்த வேண்டும். கூடவே கண்களின் நகர்வும் பதிவு செய்யப்படுகிறது. இந்த ஆய்வின் பெயர் கான் ஃபேஸ் புராஜெக்ட். இதனை டாக்டர் அலிசா மிலன் செய்கிறார். இதற்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழகம் ஸ்டிர்லிங் நிதியுதவி செய்கிறது. இதில் தெரிந்த முகங்களைப் பார்த்து உண்மையை மறைக்க முயன்றால் சோதனையில் தெரிந்துவிடும். ”காவல்துறையில் நடத்தப்படும் சோதனையில் சிலர் வேண்டுமென்றே அல்லது பயத்தால்...