இடுகைகள்

இரா.முருகானந்தம் கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறநெறி சார்ந்த கல்வியின் தேவை….!!!

அறநெறி சார்ந்த கல்வியின் தேவை….!!!                                                           இரா.முருகானந்தம்             கல்வியளிக்கும் ஆசிரியர்கள் அறம் சார்ந்த பணியாக ஆசிரியர் பணியைக் கருதியும், கல்வி என்பது மதிப்பீடுகள் சார்ந்த வாழ்க்கை முறைக்காகப் பெறும் அறிவு என்கிற மாணவர்களின் எண்ணமும், கல்வியை ஒரு சமூக அறமாக கருத வைத்தன. நான் எனது தோழியுடன் காலச்சுவடு இதழின் நேர்காணல் ஒன்றிற்காக சுதந்திரப்போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான கோபிசெட்டிபாளையம் ஜி.எஸ் லட்சுமண அய்யரை சந்தித்தபோது, தனக்கு ஆசிரியராக இருந்த கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி ஆசிரியரான தமிழறிஞர் பெரியசாமி தூரன் குறித்து மிகவும் மனம் நெகிழ்ந்து பேசினார். பிறகு பெரியசாமித்தூரன் அவர்களின் பணிகளைக் குறித்து நான் விரிவாக அறிந்தபோது அக்கருத்தின் பொருத்தப்பாடு குறித்து வியந்துபோனேன். தூரன் ஒரு தமிழ் பேரறிஞர் என்பது ஒரு புறம் இருக்க அவர் சிறந்த குழந்தை இலக்கியவாதியாகவும் இருந்திருக்கிறார். ‘’ அம்மா இங்கே வா வா !’’ எனும் நாம் நன்கறிந்த குழந்தைப்பாடல் அவர் இயற்றியதே. கடந்த ஆண்டுகள் முன்பு ‘குழந்தை உள்ளம்’, ‘குழந்தை மனமும்

டி.எம் சௌந்தர்ராஜன்

அஞ்சலி வெகுஜன இசையின் செவ்வியல் கலைஞன் டி.எம் சௌந்தர்ராஜன் (24.03.1922 – 25.05.2013)             திரு. டி.எம் சௌந்தர்ராஜன்  அவர்கள் மறைந்த 25.05.2013 அன்று இரவு நான் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன். சில மணி நேரம் முன்புதான் அவரின் மறைவு செய்தி அறியப்பட்டிருந்தது. திருமண கச்சேரியில் சாக்ஸபோன் கலைஞர் திரு. டி.எம்.எஸ் அவர்கள் பாடிய புகழ்பெற்ற ‘’புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…’’ பாடலை தனது இசைக்கருவியில் இசைக்கத்தொடங்கினார். திருமண சந்தடியிலும் எனது கற்பனையின் சஞ்சாரத்தில் அவரின் குரல் ஒலிப்பதாகவே உணர்ந்தேன். பாடல் முடிந்து நிகழ்வுலகில் உணர்ந்த தருணத்தில் டி.எம்.எஸ் இல்லாத உலகில் வாழ்வது என்கிற எண்ணம் தந்த வெறுமை என்னைச் சூழ்ந்தது.             எண்பதுகளின் பிற்பகுதியில் எனக்கு ஆறுவயதிருந்த போதெல்லாம் வானொலியே என் உற்ற துணைவன். தமிழக கிராமப் பகுதியில் அன்று தொலைக்காட்சிப் பெட்டிகள் பரவலாக இல்லை. நான் அதிகாலை 5.30 க்கு டெல்லியிலிருந்து ஒலிபரப்பாகும் ‘’திரைகடலாடி வரும் தமிழ்நாதம் ’’ தொடங்கி ஆல் இந்தியா ரேடியோவின் உள்ளூர் ஒலிபரப்பு, இலங்கை வானொலி, பி.பி.சி தமி

வெகுஜன இசையின் செவ்வியல் கலைஞன் டி.எம் சௌந்தர்ராஜன்

அஞ்சலி வெகுஜன இசையின் செவ்வியல் கலைஞன் டி.எம் சௌந்தர்ராஜன் (24.03.1922 – 25.05.2013)             திரு. டி.எம் சௌந்தர்ராஜன்  அவர்கள் மறைந்த 25.05.2013 அன்று இரவு நான் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன். சில மணி நேரம் முன்புதான் அவரின் மறைவு செய்தி அறியப்பட்டிருந்தது. திருமண கச்சேரியில் சாக்ஸபோன் கலைஞர் திரு. டி.எம்.எஸ் அவர்கள் பாடிய புகழ்பெற்ற ‘’புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…’’ பாடலை தனது இசைக்கருவியில் இசைக்கத்தொடங்கினார். திருமண சந்தடியிலும் எனது கற்பனையின் சஞ்சாரத்தில் அவரின் குரல் ஒலிப்பதாகவே உணர்ந்தேன். பாடல் முடிந்து நிகழ்வுலகில் உணர்ந்த தருணத்தில் டி.எம்.எஸ் இல்லாத உலகில் வாழ்வது என்கிற எண்ணம் தந்த வெறுமை என்னைச் சூழ்ந்தது.             எண்பதுகளின் பிற்பகுதியில் எனக்கு ஆறுவயதிருந்த போதெல்லாம் வானொலியே என் உற்ற துணைவன். தமிழக கிராமப் பகுதியில் அன்று தொலைக்காட்சிப் பெட்டிகள் பரவலாக இல்லை. நான் அதிகாலை 5.30 க்கு டெல்லியிலிருந்து ஒலிபரப்பாகும் ‘’திரைகடலாடி வரும் தமிழ்நாதம் ’’ தொடங்கி ஆல் இந்தியா ரேடியோவின் உள்ளூர் ஒலிபரப்பு, இலங்கை வானொலி, பி.பி.சி தமி

திண்ணையில் அவர் இல்லை

சு.ரா. நினைவுகள்  திண்ணையில் அவர் இல்லை இரா.முருகானந்தம்             இருமாதங்களாகிவிட்ட போதும் சு.ரா மறைந்துவிட்டார் என்ற உண்மையை நம்ப மனம் மறுத்தவண்ணம் உள்ளது. இருந்தாலும் நிதர்சனம் அதுவேயாகும். எதிர்பாராததொரு தருணத்தில் நிகழ்ந்துள்ள இவ்விழப்பு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே படுகிறது.             அகில இந்திய வானொலியின் மதியச்செய்தியை பெரும் சலசலப்புக்கிடையே கேட்டபோதும் சு.ரா மறைந்துவிட்ட செய்தி உள்வாங்க இயலாத வகையில் கிடைத்தவுடன் ஒரு விதமான பதற்றம் தொற்றிக்கொண்டது. இதனைத் தெளிவு படுத்திக்கொள்ள யாரைத்தொடர்பு கொள்ளலாம்? கண்ணணை தொடர்பு கொள்வது உசிதமாகப்படவில்லை. அடுத்து யாரை?  சென்னையிலிருந்த நண்பர் என். ஸ்ரீராமை தொடர்பு கொண்ட போது, அவருக்கும் ஏதும் தெரிந்திருக்க வில்லை. அவர் மணா உள்பட சிலரிடம் விசாரிப்பதாக சொன்னார். எனது பதட்டமும், தவிப்பும், தாறுமாறாக அதிகரித்தபடியே இருந்தது. அப்படி இருக்கக் கூடாது என மனம் ஓயாது கூவிக்கொண்டு இருந்த தருணத்தில் ஆமாம் சு.ரா காலமாகி விட்டார் என்கிற செய்தி இடியென தாக்கியது எனச்சொல்லமுடியாவிட்டாலும் மிகுந்த மன அதிர்வினை ஏற்படுத்தும