மறந்துவிட்டாயா நண்பா? - கடிதங்கள்- குமார் சண்முகம்
மறந்துவிட்டாயா நண்பா? 786 வள்ளியம்பாளையம் 31.3.2001 அன்புள்ள என் உயிர் நண்பன் குமாருக்கு, அப்பாஸ் எழுதுவது., நான் இங்கு நலமாக இருக்கிறேன். அதுபோல அங்குள்ள நலத்தை அறிய ஆவலாக உள்ளேன். விடுமுறையில் நீ என்னை மறந்து இருக்கலாம். ஆனால், என்னால் உன்னை மறக்க முடியவில்லை. நீ எங்கு வேலை செய்கிறாய் என்று குறிப்பிடவும். அப்படியே எனக்கும் ஒரு வேலை இருந்தால் பார்க்கவும் என்று சொல்லி இருந்தேனே? நீ என்னை மறந்துவிட்டாயா? நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். அதனால் இந்த வாரம் அல்லது அடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை நீ என் வீட்டுக்கு வரவும். இடையில் மடல் வரையவும். மறந்திடாதே..நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன். இப்படிக்கு.. எம் அப்பாஸ் படம் - பிக்சாபே