இடுகைகள்

பன் கீ ஜாம்: வின்சென்ட் காபோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பன் கீ ஜாம்: மக்களோடு ஒரு உளறாடல்

படம்
எனதருமை நாட்டு மக்களே! வணக்கம். இன்று மனதின் குரலை ஒலிக்கச் செய்ய , எனது மனம் இடம் கொடுக்கவில்லை , கனக்கிறது , மனம் கவலையில் ஆழ்ந்து கிடக்கிறது. கடந்த மாதம் நான் உங்களோடு பேசிக் கொண்டிருந்த போது , ஆலங்கட்டி மழை , பருவம் தப்பிப் பெய்யும் மழை , விவசாயிகளின் பெருந்துயரம் ஆகியவை நடைபெற்றிருந்தன. சில நாட்கள் முன்பாகக் கூட பீஹார் மாநிலத்தில் திடீரென்று பேய்க் காற்று வீசியது , அதில் பல பேர்கள் உயிரிழந்தார்கள் , கணிசமான லாபம் அரசுக்கு ஏற்பட்டது. நேற்று , சனிக்கிழமையன்று பயங்கரமான நிலநடுக்கம் உலகத்தையே உலுக்கியது. நான் பதவி ஏற்றதிலிருந்து ஏதோ இயற்கைப் பேரழிவுகள் சங்கிலித் தொடர் போல நடைபெற்று வருகின்றன. நேபாளத்தில் பயங்கரமான நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவம் ….. இந்தியாவிலும் கூட இந்த நிலநடுக்கம் சில மாநிலங்களின் பல பகுதிகளில் பல பேர்களின் உயிரைக் குடித்திருக்கிறது. பலரது உடைமைகள் அழிந்து பட்டிருக்கின்றன ஆனால் நேபாளம் சந்தித்திருக்கும் பேரழிவோ படு பயங்கரமானது. நான் 2001 ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ம் தேதி குஜராத்தின் கட்ச் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன