இடுகைகள்

குடியுரிமை மசோதா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இருண்டு போன இந்தியா - இணையத்தை முடக்கும் சர்வாதிகாரம்!

படம்
உலகம் முழுக்கவே இணையம் சார்ந்த தாக தொழில்கள் மாறி வருகின்றன. இந்த நேரத்தில் மின்சாரமும், இணையமும் தடைபட்டால் மொத்த நாடுமே ஸ்தம்பித்து விடும். இந்த கவனம் யாருக்கு இருக்க வேண்டும்? அரசுக்குத்தானே, ஆனால் அரசு தன் பொருளாதார, நிர்வாக முடிவுகளில் உள்ள சிக்கல்களை மக்களிடம் காட்டி வருகிறது. இதன் காரணமாக, இந்திய அரசு இந்த ஆண்டில் மட்டும் 95 முறை இணைய சேவையை தடை செய்துள்ளது. காஷ்மீரில் செயல்படுத்தி வெற்றி கண்ட முறையை உள்துறை அமைச்சகம், தற்போது எந்த பிரச்னை ஏற்பட்டாலும் அமல் செய்து வருகிறது. இதன்விளைவாக இணையம் சார்ந்த அனைத்து தொழில்களும் பலத்த அடி வாங்கி வருகின்றன. குறிப்பாக ஊபர், ஓலா ஆகிய ஆப் சார்ந்த தொழில்கள் நிலைமை என்னாகும்? காஷ்மீரில் உலக நாடுகளிலேயே 137 நாட்கள் இணையத்தை இந்திய அரசு முடக்கியுள்ளது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக டில்லி, மேற்கு வங்கம், அசாம் போன்ற இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றைத்தடுக்க இந்த மாநிலங்களில் இணையத்தை முடக்கும் முடிவை உள்துறை அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது. இதனால் எல்லாம் போராட்டம் நிற்பதா