இடுகைகள்

பாற்கடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காவரி ஆற்று வெள்ளம் போல அலைபுரளும் காமம்! கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் அன்புத்தோழர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? வேலை இப்போது முழுக்க இணையம் சார்ந்து மாறிவிட்டது. சமாளித்து செய்து வருகிறேன். கரமுண்டார் வூடு நாவல் படித்துக்கொண்டிருக்கிறேன். கள்ளர்களுக்கும் பள்ளர்களுக்குமான பல்லாண்டு கால உறவை நாவல் பேசுகிறது. கள்ளர்களின் ஆவேசமும், கட்டற்ற காம உறவுகளும் பள்ளர்களுக்குள் உருவாக்கும் மோதல், பிரிவினை பற்றியதே நாவல். இதனை பேச்சு மொழியில் எழுதியுள்ளார் தஞ்சை ப்ரகாஷ்.  தஞ்சையில் வாழும் கள்ளர், பள்ளர் மக்களை இயக்குவதும், செயலின்மையை ஏற்படுத்துவதுமாக காமமே உள்ளது. காவிரி ஆற்றில் கட்டப்பட்ட பழமையான கரமுண்டார் வூடு அங்கு வரும் வெள்ள நீரின் தன்மைக்கு ஏற்ப தன்னை சமாளித்துக்கொண்டதா இல்லையா என்பது கூட குறியீடுதான். அடுத்து அங்கு அந்த வீட்டை தலைமை ஏற்க வரும் ஒருவனுக்காக பல்வேறு வகையிலும் காத்திருப்பது கதையை வாசிக்க வைக்கும் இடம். வயதான காலத்திலும் கரமுண்டார் ஆண் வாரிசுக்காக மனைவியின் பின்னாடியே சுற்றுவதும், உமா, உடலின் பொறுமலை சகிக்க முடியாமல் கலியனைத் தேடிப்போவதும், காத்தாயம்மா பத்தாயக்கட்டுக்குள் தன்னை இருத்தியப

தந்திரமான ஆட்களை எதிர்கொள்வது கடினமாக உள்ளது! - கடிதங்கள்

படம்
               பெண்களை மயக்கும் காமம்! - பரந்தாம ராஜூவின் வேட்கை   அன்புத்தோழர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? அஞ்சல் அட்டையில் எழுதுவது பற்றி நண்பர்களுக்கு நிறைய மாற்றுக்கருத்துகள் உள்ளன . அதனை யாரும் எளிதாக படித்துவிட முடியும் என்று கூறுகிறார்கள் . அது உண்மைதான் . ஆனால் இன்லேண்ட் கார்ட் வாங்கி எழுதும் அளவு்க்கு . என்னிடம் விஷயங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை . அஞ்சல் அட்டை எளிமையாக இருக்கிறது என்பதுதான் அதனைப் பயன்படுத்துவதற்கு முக்கியமான காரணம் . எங்களது பத்திரிக்கையில் புதிதாக கணித பாடத்திற்கென உதவி ஆசிரியர் இணைந்துள்ளார் . அவர் கொஞ்சம் தடுமாறுவதால் வானியல் , இயற்பியலை எனக்கென பொறுப்பாசிரியர் ஒதுக்கியுள்ளார் . ஆனால் எனக்கு துணுக்குகள் எழுத தெரியும் . ஆனால் நீண்ட கட்டுரைகளை எழுதுவது கடினமான காரியம் . குங்குமத்தில் அப்படி அறிவியல் கட்டுரைகளை இரண்டே இரண்டு பேருக்கு எழுதியுள்ளேன் . அங்கு அறிவியலை எழுதுவதற்கு ஆட்கள் இல்லாத சூழலில் எனது மேசைக்கு வந்த வாய்ப்பு அது . மற்றபடி இவற்றை எழுதுவதற்கான சரியான ஆள் நான்தானா என்பதில் எனக்கே சந்தேகம் உள்ளது . நான் எ

நினைவெனும் பாற்கடலை தோண்டியபோது...- பாற்கடல் - லா.ச.ராமாமிர்தம்

படம்
            பாற்கடல் லா.ச.ராமாமிர்தம் மதுரை புராஜெக்ட் ப. 284 இந்த நூல் இலக்கியம் சார்ந்த தன்மை கொண்டதல்ல என பலரும் விவாதிக்க வாய்ப்பிருக்கிறது. படிக்கும்போது கூட வாசகருக்கு அப்படி தோன்றலாம். ராமாமிர்தத்தின் சுயசரிதை என்று தாராளமாக சொல்லலாம்.  நூலில் ராமாமிர்தத்தின் குடும்ப உறுப்பினர்களின் வினோதமான குணங்கள் பற்றி பகடியாக எழுதப்பட்டுள்ளது. சில இடங்களில் இந்த குடும்பத்திற்கு இந்தளவு கஷ்டமாக எனும்படி நெகிழ்ச்சியாக உள்ளது.  இதில் நினைத்துப் பார்க்கவே ஆச்சரியம் தரும்படி லா.ச.ராவின் அம்மா பற்றி விரிவாகவே பேசப்பட்டுள்ளது. நூலைப் படித்து முடிந்தாலும் கூட அம்மா பற்றி குணம், காட்சி வர்ணனைகள் மனதை விட்டு நீங்கவில்லை. எழுத்துகளில் அதிக விவரிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருவரின் குணத்தை தராசில் இட்டு நிறுப்பது போல கூறும் இடம். உணவு பற்றி எழுதும் இடங்களில் எழுத்து வசீகரம் கொள்கிறது. இது வாசிப்பவரகளுக்கு நேரும் மாயமா, எழுத்தாளருக்கு பிடித்த விஷயம் என்பதால் தனித்துவமாக அந்த பத்தி தெரிகிறதா என்று அறியமுடியவில்லை. எதுவானாலும் வாசிக்க நன்றாக இருக்கிறது. அம்மன் கோவிலிலுள்ள ஈட்டியில் செருகி வைக்கப்