இடுகைகள்

குடியேற்றம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரோனி சிந்தனைகள் - பொற்கால ஆட்சியை விரும்பாமல் வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடும் மக்கள்

படம்
  தொடக்கத்தில் கல்லடி பட்ட நாய் போல ஓரிடத்தில் நுழைபவர்கள்தான் பின்னாளில் போடா மயிரே என்று கூறும் அளவுக்கு தந்திரக்காரர்களாக, ஆணவம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். முட்டாள்தனத்தை ஒருமுறை நீங்கள் அடையாளம் கொண்டுவிட்டால் போதும். முட்டாள்கள் அப்படியே இருப்பார்கள், முட்டாள்தனம் மட்டுமே வீரியமாக மாறிக்கொண்டே வரும். ஒரு நாட்டை அழிக்க எதிரிகள், உளவுப்படை, கூலிக்கொலைகாரர்கள் எதுவுமே தேவையில்லை. இவை செய்யும் அனைத்தையும் மதமும், மூடநம்பிக்கைகளுமே செய்துவிடும். ஒருவருக்கு சலுகை கொடுப்பது வேறு. அந்த சலுகையை பயன்படுத்துமாறு அவரின் வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொடுப்பது வேறு. வெட்டப்பட்ட கிராப் தலையை சீவ உயர்தர சீப்பு, விற்றுவிட்ட வாட்சிற்காக அழகிய உயரிய உலோக பட்டை என ஓ ஹென்றியின் கதை மனிதர்கள் போலவேதான் அர்த்தமே இல்லாத அவலங்கள் நம் வாழ்க்கையில் சில சமயங்களில் நடந்து தொலைக்கின்றன. ஆட்டு எலும்பு கடினமோ இல்லையோ, கடித்தே தீருவேன் என்று தின்ற நாய்க்கு கடைவாய் பல் விழுந்துவிட்டது. ஆபீஸ்ல வேலை செய்யறவங்கெல்லாம் எப்படி என்று கேட்டதற்கு, பரவாயில்லைங்க, ஒரு பிகர் தேறும் என்று பதில் சொல்லுவதெல்லாம் விதியல்லாம...

அகதிகளை சிறையில் அடைக்கும் இங்கிலாந்து அரசு!

படம்
  ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த இங்கிலாந்து அரசு, தனது நாட்டுக்கு வந்து குடியேற விரும்பும் மக்களை போர்ட்லேண்டில் உள்ள பிபிஸ்டாக்ஹோம் எனும் மிதக்கும் சிறையில்(கப்பலில்) அடைத்து வருகிறது. ஏற்கெனவே தங்கள் நாடுகளில் இருந்து உயிர்பிழைக்க சிறு படகுகளில் தப்பித்து வருபவர்களை இப்படி கடல் நடுவில் கட்டுமானத்தை உருவாக்கி தங்கச் செய்யலாமா, இது அவர்களது உடல், மனநிலையை பாதிக்கும் என மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால், ஒப்பீட்டளவில் அகதிகளை வெறுக்கும் வலதுசாரித்துவத்திற்கு அதிக ஆதரவு கிடைத்துவருகிறது. மகத்தான இந்திய வம்சாவளி பெருமை கொண்ட பிரதமர் ரிஷி சுனக், அகதிகள்   இங்கிலாந்து நாட்டிற்கு வருவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அதில் ஒன்றுதான், இப்படி வரும் மக்களை குடும்பமாக 500 படுக்கைகள் கொண்ட மிதக்கும் சிறையில் அடைத்து வைப்பது. அடுத்து, அகதிகளுக்கு வேலை கொடுக்கும், தங்க இடம் கொடுக்கும் உள்நாட்டு மக்கள் மீது அதிகளவு அபராதம் விதிப்பது ஆகிய அரிய செயல்களை முன்னெடுத்து தனது முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறார்.   கடந்த ஆண்டு அகதிகளை ஹோட்டலில் தங்க வைத்த வகையில் அரசுக்...

அமெரிக்காவிற்கு சாகச பயணமாக இடம்பெயர்ந்த வங்கதேச மனிதரின் கதை!

படம்
  விவேக் பால்ட் ஆவணத் திரைப்பட இயக்குநர் இன் சர்ச் ஆஃப் பெங்காலி ஹர்லேம் என்ற படத்தை அண்மையில் உருவாக்கியுள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்தவர் எப்படி அமெரிக்காவிற்கு வந்து பிழைக்கிறார் என்பதை சொல்லும் படம். படத்தின் உதவி இயக்குநரான அலாவுதீன் உல்லா என்பவரின் தந்தை பற்றிய கதை இது.  அகதி ஒருவரைப் பற்றிய கதையை எப்படி எடுத்தீர்கள்? 1999ஆம் ஆண்டு அலாவுதீனின் தனிக்குரல் நிகழ்ச்சியைப் பார்த்தேன். நிகழ்ச்சிக்குப் பிறகு என்னை சந்தித்த அலாவுதீன், தனது தந்தை பற்றிய கதையை சொல்லி அதை படமாக்க கேட்டார். அந்த கதை இதுவரை நான் அறிந்த விஷயங்களை மாற்றிப்போட்டது. 1965ஆம் ஆண்டு வரையில் கூட அமெரிக்காவில் வெளிநாட்டினர் வந்து குடியேற முடியாத நிலையை சட்டம் உருவாக்கியிருந்தது. ஆன்டி ஆசியன் இமிகிரேஷன் என்பதுதான் அதன் பெயர். ஆனால் 1920ஆம் ஆண்டில் அலாவுதீனின் தந்தை அமெரிக்காவிற்கு வந்து புவர்டோ ரிகோ பகுதியைச் சேர்ந்த பெண்ணை மணந்து வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமான கதைதான். இப்படி இடம்பெயர்ந்த மனிதர்களைப் பற்றிய தகவல்கள் வரலாற்றில் இதுவரையில் இல்லை.  இவர் இப்படி அமெரிக்கா சென்றது விதிவிலக்கான செயல் என நினைக்கிற...

முஸ்லீம்களின் மீதான வெறுப்பை இயல்பானதாக்குகிறது பாஜக! - மனித உரிமை வழக்குரைஞர் அமான் வதூத்

படம்
  மனித உரிமைகள் வழக்குரைஞர் அமான் வதூத் முஸ்லீம்களை இப்படி குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுவது அரசின் மிகப்பெரிய திட்டம் என்று கூறுகிறீர்களா? ஆமாம். இது பெரிய திட்டத்தின் சிறிய பகுதிதான். இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, பிற மாவட்டங்களிலிருந்து மக்கள் எதற்கு இங்கு வந்து தங்கவேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார். இந்திய அரசியலமைப்புச்சட்டம் 19(டி, இ எஃப்) ஆகியவற்றின் படி இந்தியாவில் வாழும் மக்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சென்று குடியேறி வாழலாம். அதற்கான உரிமை அம்மக்களுக்கு உண்டு.  மக்களை வெளியேற்றும்போது நான்கு மசூதிகளை இடித்தார்கள் ஆனால் அங்குள்ள கோவிலை எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறதே உண்மையா? மக்கள் கோவிலின் அருகே குடியிருந்தார்கள் என அரசு வாதிடுகிறது. ஆனால் கோவில் மக்களின் வாழிடத்திலிருந்து தூரமாகவே இருந்தது.  மக்களின் குடியிருப்புகளிலிருந்து அவர்களை வெளியேற்றிய அரசு, அவர்களுக்கான மறுவாழ்வு குடியேற்றங்களை அமைத்து தருவதாக கூறியது. ஆனால் அத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லையே? 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்க...

ஒடிஷாவில் அழிவைச் சந்தித்து வரும் கடலோர கிராமங்கள்! - கடல்மண் அரிப்பால் நேரும் பரிதாபம்!

படம்
                  ஒடிஷாவில் அழியும் கிராமங்கள் ஒடிஷாவில் உள்ள கேந்திர பாரா மாவட்டத்தில் கடற்புற பகுதியில் ஏழு கிராமங்கள் உள்ளன . இதில் மொத்தம் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர் . இங்கு மெல்ல கடல் மணல் உள்ளே புகுந்து வருவதால் , அங்குள்ள மக்கள் வேறிடம் நோக்கி நகர்ந்து வருகி்ன்றனர் . மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் அடிபம்பு கூட அரைப்பகுதி மணலால் மூடப்பட்டுவிட்டது . இங்குள்ள கால்நடை கொட்டில் , கோவிலைக் கூட கைவிட்டு மக்கள் வெளியேறத்தொடங்கிவிட்டனர் . மக்கள் கைவிட்ட அந்த கோவிலுக்கு வந்து போகும் ஒரே பார்வையாளர் பக்தர் பிரபுல்ல லெங்கா என்பவர்தான் . கடல்மண்ணில் ஏற்பட்ட அரிப்பால் , ஏழு கிராமங்களும் ஒடிஷா மாநில வரைபடத்தில் இருந்து விரைவில் காணாமல் போகவிருக்கிறது . 571 குடும்பங்களுக்கு வேறு இடங்களுக்கு சென்று வாழ்வதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது . பிஜூ புக்கா கர் யோஜனா எனும் திட்டத்தின்படி மக்களுக்கு வீடு கட்டித்தரப்படுகிறது . இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கேரளா , தமிழ்நாடு , கர்நாடகம் என பல்வேறு மாந...