இடுகைகள்

திராவிடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களின் உணர்ச்சி தான் எனக்கு முக்கியம்! - ராஜமௌலி, தெலுங்கு சினிமா இயக்குநர்

படம்
  ராஜமௌலி தெலுங்கு சினிமா இயக்குநர் கருத்தியல் ரீதியாக வலதுசாரிகளுக்கு ஆதரவாக படமெடுப்பவர். காட்சிரீதியாக பார்வையாளர்களுக்கு நிறைவான அனுபவம் தருபவர். பாகுபலி மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் தெரிய வந்தவர். அதற்குமுன்னர் தெலுங்கில் இயக்கிய ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்ரி, எமதொங்கா, விக்ரமார்குடு, சத்ரபதி என அனைத்து படங்களிலும் ஏதாவதொரு புது விஷயத்தை முயற்சி செய்திருப்பதை பார்த்தாலே அறியலாம்.  நீங்கள் தெலுங்கு மொழியில் படம் எடுக்கிறீர்கள். ஆனால் அதை இந்தி மக்கள் வரவேற்கிறார்களே? நான் இந்தி, தெலுங்கு என எதையும் வேறுபடுத்தி பார்க்கவில்லை. காட்சிரீதியாக தான் நான் கதை சொல்லுகிறேன். மொழி ரீதியாக அல்ல. மொழி என்பது தகவல் தொடர்புக்கானது தான். அதை நடிகர்கள் பேசுகிறார்கள். எனது படங்களில் பெரும்பகுதி தகவல் தொடர்பு காட்சி ரீதியாகவே நடைபெறுகிறது. மொழியை நான் தடையாக நினைக்கவில்லை.  தென்னிந்தியப் படங்கள் இந்தி திரையுலகில் வெற்றி பெற காரணம், அவர்கள் சரியான முறையில் படங்களை எடுக்காததே காரணம். வெற்றிக்கான காரணம் என நம்மை நாமே கூறிக்கொள்ள முடியாது. 90களில் இந்தி திரையுலகம் அற்புதமாக கதை சொல்லும் ஏராளமா