இடுகைகள்

திராவிடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திராவிடர்கள் யார், திராவிடம் என்றால் என்ன என்பது பற்றி தெளிவாக விளக்கும் நூல்!

படம்
  திராவிடம் - தமிழ்தேசியம் ஒரு விளக்கம் கா.கருமலையப்பன் பெரியார் திராவிடக்கழகம் இந்த நூலில், கருமலையப்பன், தமிழ் தேசியவாதியான மணியரசனின் பார்ப்பன ஆதரவு அரசியலை கருத்துகளை சாடுகிறார்.இழிவான கருத்துகளால் அல்ல. முறையாக ஆதாரங்களை வைத்தே வாதிடுகிறார். இன்று ஒருவர் பொதுக்காரியங்களில் பொறுப்பான ஒருவரைப் பற்றி கேள்வி கேட்டுவிட்டால், தனிநபரின் அந்தரங்களை சொல்லி திட்டுவது, வசைபாடுவது வழக்கமாகிவிட்டது. இந்தசூழலில் அப்படியான இயல்பு இல்லாமல், முழுக்க ஆதாரங்களை வைத்தே எதிர்த்தரப்பை எதிர்கொள்வது எளிதல்ல.  பெரியார் கூறிய கருத்துகளின் படி, காலத்திற்கேற்ப மாறும் விஷயங்களை கருத்தில் கொண்டும் கருமலையப்பன் பல்வேறு வாதங்களை முன்வைக்கிறார். அடிப்படையில் பெரியார், இந்தியா, இந்து என்ற வகைமையை விரும்பவில்லை. எனவேதான் தனித்தமிழ்நாடு கோரிக்கை உருவானது. அந்த அடிப்படையில் திராவிடர்கள் என்ற கருத்தை உருவாக்கினார். திராவிடர்கள் என்பதும் தமிழர்கள் என்பதும் வேறு வேறல்ல.  தமிழர்கள் என்று சொல்லி திராவிடத்தை வெறுக்கும் மணியரசன், தமிழ்தேசியம் சார்ந்த பத்திரிகை ஒன்றை நடத்துகிறார். அந்த பத்திரிகையை நூலகத்தில் தம...

மக்களின் உணர்ச்சி தான் எனக்கு முக்கியம்! - ராஜமௌலி, தெலுங்கு சினிமா இயக்குநர்

படம்
  ராஜமௌலி தெலுங்கு சினிமா இயக்குநர் கருத்தியல் ரீதியாக வலதுசாரிகளுக்கு ஆதரவாக படமெடுப்பவர். காட்சிரீதியாக பார்வையாளர்களுக்கு நிறைவான அனுபவம் தருபவர். பாகுபலி மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் தெரிய வந்தவர். அதற்குமுன்னர் தெலுங்கில் இயக்கிய ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்ரி, எமதொங்கா, விக்ரமார்குடு, சத்ரபதி என அனைத்து படங்களிலும் ஏதாவதொரு புது விஷயத்தை முயற்சி செய்திருப்பதை பார்த்தாலே அறியலாம்.  நீங்கள் தெலுங்கு மொழியில் படம் எடுக்கிறீர்கள். ஆனால் அதை இந்தி மக்கள் வரவேற்கிறார்களே? நான் இந்தி, தெலுங்கு என எதையும் வேறுபடுத்தி பார்க்கவில்லை. காட்சிரீதியாக தான் நான் கதை சொல்லுகிறேன். மொழி ரீதியாக அல்ல. மொழி என்பது தகவல் தொடர்புக்கானது தான். அதை நடிகர்கள் பேசுகிறார்கள். எனது படங்களில் பெரும்பகுதி தகவல் தொடர்பு காட்சி ரீதியாகவே நடைபெறுகிறது. மொழியை நான் தடையாக நினைக்கவில்லை.  தென்னிந்தியப் படங்கள் இந்தி திரையுலகில் வெற்றி பெற காரணம், அவர்கள் சரியான முறையில் படங்களை எடுக்காததே காரணம். வெற்றிக்கான காரணம் என நம்மை நாமே கூறிக்கொள்ள முடியாது. 90களில் இந்தி திரையுலகம் அற்புதமாக கதை ச...