இடுகைகள்

பிரிவினை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க குடியுரிமை அமைப்புகளுக்கும் நன்கொடை வழங்குவது அவசியம்!

படம்
  ஏசிஎல்யூ - அமெரிக்க குடியுரிமை சங்கம் அமெரிக்கன் சிவில் லிபர்டிஸ் யூனியன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்களா? இந்த அமைப்பு அமெரிக்காவில் இப்போதைக்கு முக்கியமான செயல் ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறது. அங்கு பெண்கள் கருக்கலைப்பை சுதந்திரமாக செய்துகொள்ளும் முறையை ஒழித்துக்கட்ட சில மாகாணங்கள் முயல்கின்றன. இந்த பிற்போக்குத்தனத்திற்கு எதிராக பெண்களின் உரிமையை வலியுறுத்தி ஏசிஎல்யூ போராடி வருகிறது. இத்தனைக்கும் இந்த அமைப்பு மக்களிடம் நன்கொடை பெற்றுத்தான் நூறு ஆண்டுகளாக உரிமைகளைக் காப்பாற்ற போராடி வருகிறது. இப்படி அரசின் சட்டத்திற்கு எதிராக போராடுவதால் அமலாக்கத்துறை தன்னார்வ குடியுரிமை அமைப்பின் அலுவலங்களில் சோதனையெல்லாம் நடத்துவதில்லை. வெளிநாட்டு பணத்தை பெறுகிறார்கள் என்று சொல்லி கேலி, அவதூறு செய்வதில்லை. நிறுவனர்களை, உறுப்பினர்களை, தன்னார்வலர்களை காவல்துறை மூலம் மிரட்டுவதில்லை. முக்கியமான பிணையில் வர முடியாதபடி சிறையில் அடைப்பதில்லை. வெளிநாட்டு மக்களைப் போலவே இந்தியாவில் பொதுமக்கள் நன்கொடை அளிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான பணம் ஆன்மிக அமைப்புகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் செல்கிறது. எல்லா

நம்மை பிரிக்கும் வெறுப்பு வேண்டாம்; ஒன்றுசேர்க்கும் அன்பு போதும் - ஜூடோபியா

படம்
  ஜூடோபியா டிஸ்னி கிராமத்தில் கேரட் விவசாயம் செய்யும் பெற்றோர். பாரம்பரியத் தொழிலான கேரட்டை விளைவித்து விற்பதைக் கைவிட்டு சிறுவயது ஆசையான காவல்துறை வேலைக்கு செல்லும் ஹாப்ஸ் என்ற முயல், ஜூடோபியா நகருக்குச் செல்கிறது. அங்கு சென்று சந்தித்த சவால்கள் என்ன, சாதித்த சாதனைகள் என்ன என்பதுதான் கதை. படத்தை சாதாரணமாக பார்த்தால் சாதாரண முயல் காவல்துறை அதிகாரியாகும் சாதனைக் கதை போலத் தெரியும். ஆனால், இன வேற்றுமை, வன்முறைக்கு எதிரான ஏராளமான செய்திகளை, போலிச்செய்திகளை பிரிவினைகளை பரப்பும் ஊடகங்களைப் பற்றியும் படம் மறைமுகமாக பேசுகிறது. படத்தை தனித்துவமான ஒன்றாக மாற்றுவதும் அதுதான். சிறுவயதில் பெற்றோர் வழியாக அல்லது சுய அனுபவம் வழியாக மனதில் பதியும் விரோதம், பகை எப்படி பல்வேறு முன்முடிவுகளை எடுக்க வைக்கிறது. நிறைய மனிதர்களை பாதிக்கிறது என்பதை படம் கலைப்பூர்வமாக நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள் வழியாக சொல்லுகிறது. ஹாப்ஸ்   என்ற முயல் கிராமத்தில் வாழ்கிறது. அங்கு பள்ளியில் நாடகம் ஒன்றில் நடிக்கிறது. அதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறது. அப்படியே அதே வேலைக்கு முயற்சி செய்யவேண்டும் என்பதே ஆசையாகிறது

காந்தியின் ராமன் - புதிய மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி ஆங்கில நாளிதழ்களில் சிறப்புக்கட்டுரைகள் வெளிவந்தன.அதனைத் தொகுத்து தமிழாக்கம் செய்துதான், காந்தியின் ராமன் நூல் வெளியாகியிருக்கிறது.  இந்த நூலின் தொடக்க வடிவம் பிரதிலிபி தமிழில் வெளியானது. ஆனால், அந்த கட்டுரைகள் எழுதப்பட்ட வேகத்தில் பதிவிடப்பட்டதால் அதில் ஒரு சீரற்ற தன்மை இருந்தது. காந்தியின் ராமன் நூல் வடிவத்தில் பிழைகள் நீக்கப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளன.  நூலின் அட்டைப்படம் மட்டும் இப்போது.... பின்னாளில் நூலை தரவிறக்கி வாசிக்கும்படியான இணைய முகவரி வெளியிடப்படும். நன்றி! நன்றி அட்டைப்படம் - dough belshaw, creative commons பிரதிலிபி தமிழ் வலைத்தளம்   டைம்ஸ் ஆப் இந்தியா  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

பிரிவினை காயங்களை ஆற்ற முயன்ற காந்தி!

படம்
  காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய சத்தியாகிரகத்தின் இந்திய முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினார் . ஆனால் வெளிநாட்டில் பெற்ற வெற்றபோல உடனே இங்கு வெற்றி கிடைக்கவில்லை . 1930 ஆம் ஆண்டு ரௌலட் சட்டத்தை எதிர்த்து போராடியபோது மக்கள் ஆங்கிலேயர்களை அடித்து வன்முறையை உருவாக்கிய சம்பவங்கள் நடந்தன . இயக்கத்தைத் தொடங்கிவிட்டோம் எனவே , அப்படியே நடத்தி சுதந்திரத்தைப் பெறுவோம் என காந்தி நினைக்கவில்லை . போராட்ட அமைப்பைத் தொடங்கி திடீரென இடையில் போராட்டத்தை நிறுத்துவது தனக்கு அவமானம் என காந்தி நினைக்கவில்லை . தான் நினைத்த வடிவில் போராட்டம் நடைபெறவேண்டும் என பிடிவாதமாக இருந்தார் . இதன் விளைவாக சிலமுறை தான் தான் நடத்த்திட்டமிட்ட போராட்டங்களை நோக்கம் நிறைவேறும் முன்னரே நிறுத்தியிருக்கிறார் . பிறரைப் புரிந்துகொண்டு மக்களின் நலன்களை முன்னிறுத்த காந்தி முயன்றார் . அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் . தோல்வியும் அடைந்திருக்கிறார் . நீதிமன்றத்தில் வாதிட முடியாமல் தனது சக வழக்குரைஞர்களிடம் வழக்காடுவதற்கு கோரியவர்தான் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற ஊடகவியலாளர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி பேசினார் . அவர்களையும

வெறுப்பின் வாசம் வீசும் ரத்தம் தோய்ந்த காற்று - இந்தியாவின் மதவாத வன்முறைக்கு எதிராக காந்தி

படம்
            காந்தி இந்தியாவின் தேசப்பிதா என்று அழைக்கப்பட்ட காலம் இருந்தது . ஆனால் அவர் மக்கள் மீது காட்டிய பாசங்கற்ற அக்கறையும் அன்பும் அவரது உயிரைப் பிரித்தது . அவரது உடலில் பாய்ந்த மூன்று தோட்டாக்கள் உடலை நம்மிடமிருந்து பிரித்திருக்கலாம் . பிறரைப் பற்றி அக்கறை கொள்ளும் காந்தியின் மதிப்புகளை அல்ல . இன்று காந்தி பிறந்த தேசத்தில் அவருக்கு இருக்கும் மதிப்பு எதிர்காலத்தில் இருக்கும் என்று கூறமுடியாது . இந்து - முஸ்லீம் பிரச்னையில் காந்தியின் நிலைப்பாடு காரணமாக அவர் மீது விரோதம் பாராட்டி கருத்துகளைப் பேசும் பதிவிடும் குழுக்கள் அனைத்து இடங்களிலும் உருவாகி வளர்ந்து வருகிறார்கள் . காந்தி தமிழ்நாட்டில் மதுரைக்கு வந்தபோதுதான் வறுமையில் உள்ள விவசாயிகளின் நிலையைப் பார்த்து தனது உடையை அரையாடையாக மாற்றிக்கொண்டதாக கூறுவார்கள் . அவர் அந்த ஆடையை தனது செயல்பாடுகளுக்கு கருவியாக கொண்டார் . தனது போராட்டத்திற்கு தனது உடலையே ஆயுதமாக பயன்படுத்த காந்தி கற்றிருந்தார் . இதனால்தான் இங்கிலாந்தின் பக்கிங்காம் மாளிகைக்கு காந்தி அரையாடையில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . உண்மையில் அப்படி

நெருக்கடியான சூழலில் நமக்கு உதவும் காந்தி!

படம்
                      காந்தியை , இந்தியாவில் எப்போது நெருக்கடியான சூழல் வந்தாலும் நினைத்து பார்க்கிறோம் . அவர் எப்படி சூழலை , நிலையைக் கையாண்டிருப்பார் என சிலர் பேசுகிறார்கள் . இடையறாது , தேசிய நாளிதழ்களில் பத்தி எழுதப்படுகிறது . இதற்கு என்ன காரணம் ? நவீன இந்திய சிற்பிகளில் உள்ள பிற தலைவர்களை இப்படி யாரும் எதிர்பார்ப்பதில்லையே ? அதற்கு காரணம் , காந்திக்கு இந்தியா பற்றியும் , மக்கள் பற்றியும் அடிப்படையான உள்ளுணர்வுத்தன்மை இருந்தது . அதனால்தான் காந்தியின் எழுத்துகளைப் படிக்காதவர்கள் கூட அறியும்படி தனது உருவத்தை வடிவமைத்துக்கொண்டார் . தகவல்தொடர்பு வேகமாக இல்லாத காலத்தில் கூட காந்தி என்ற பெயர் அனைத்து இடங்களிலும் பரவியிருந்தது . 1915 ஆம் ஆண்டு காந்தி வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பினார் . அப்போதும் அவருக்கு பிரிட்டிஷார் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை . அதற்கான சக்தியும் அவருக்கு அப்போது உருவாகியிருக்கவில்லை . ஆனால் அதற்கான முயற்சியை அரசியலமைப்பு மூலம் செய்யவேண்டுமென்ற தெளிவு அவருக்கு இருந்தது . ஆனால் இதைக்கூட காந்தியின் பேராசைக