இடுகைகள்

மூளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பகல் கனவு, தவறான நினைவுகள், தண்டனை வழங்கப்பட்டால் குற்றம் குறையுமா?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பகல் கனவு காண்பதால் நன்மையா, தீமையா? பகலில் கனவு காண்பது என்பது பொதுவாக நிறைவேறாத ஒன்றாக அனைத்து மக்களும் கருதுகிறார்கள். ஆனால், அதை ஒருவர் தீர்மானிக்க முடியாது. ஏதோ ஒரு நேரத்தில் சடாரென நினைவுகள் சூழ, ஒருவர் கனவுக்குள் செல்கிறார். ஒருநிமிடம் அவர் முழுமையாக அந்த கனவுக்குள் போய்விடுகிறார். இது மூளையின் செயல்பாடுதான். இதை ஒருவர் தானாக உருவாக்குவதில்லை. இப்படி நடக்கும் செயல்பாடு புதுமைத்திறனை ஊக்குவிக்கிறது என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அதாவது, பிரச்னைகளை தீர்க்கும் நிலையில் இருப்பதாக கணிக்கிறார்கள். சுதந்திரமாக யோசிக்கிறது என புரிந்துகொள்ளலாம். உணர்வு ரீதியான செயல்பாடு, எதிர்காலத்தை திட்டமிடுவது ஆகியவற்றுக்கும் பகல் கனவு காண்பது உதவுகிறது.  தவறான நினைவுகள் என்றால் என்ன? மூளையில் உள்ள நினைவுகளை நாம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போதுதான் அவை மேலே வருகின்றன. சிறு கற்களாக வீடுகள் கட்டப்படுவது போல நினைவுகள் அடுக்கப்படுகின்றன. வீடியோ கேமராவில் ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்தால் அது எப்போதுமே மாறாது. அப்படியேதான் இருக்கும். ஆனால், மூளையி...

மூளை என்பது பிளாஸ்டிக்கை போன்றதா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மூளையை பிளாஸ்டிக் என்று கூறுவது ஏன்? மூளை, ஒருவர் பெறும் அனுபவங்களைப் பொறுத்து தன்னை வடிவமைத்துக் கொள்கிறது, பரிணாம வளர்ச்சி பெறுகிறது. இதன் காரணமாக அதை பிளாஸ்டிக் என்று கூறுகிறார்கள்  மூளை இளம் வயதில் எப்படி மாறுகிறது? பிறக்கும்போது குழந்தைக்கு மூளை 350 கிராமாக உள்ளது. பின்னர், வயது வந்தவராக மாறும்போது அதன் எடை 1450 கிராம்களாக மாறுகிறது. பிறக்கும்போது மூளையில் நியூரான்களின் தொடர்பு முழுமை பெற்றிருப்பதில்லை. வயது வந்தோராக மாறும்போதுதான் அதன் முழுமையாள வளர்ச்சி நிறைவுபெறுகிறது.  மூளையை ஆரோக்கியமாக பாதுகாப்பது எப்படி? மதுபானம் அருந்தக்கூடாது. அடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க வேண்டும். புகைப்பிடித்தல் கூடாது. உடற்பயிற்சியை தினசரி செய்யவேண்டும். அடிப்படையாக மூளையில் டிமென்சியா போன்ற நோய்கள் வரக்கூடாது என்றால், அங்கு ரத்தவோட்டம் சீராக இருக்கவேண்டும். குழந்தையாக இருக்கும்போது பல்வேறு மொழிகளைக் கற்பது எளிது. நடப்பது, பேசுவது, சமூக வாழ்க்கையை புரிந்துகொள்வது, எழுதுவது, வாசிப்பது ஆகியவற்றை செய்யமுடியும். இதையெல்லாம் தொடக்கத்தில் க...

அரிய ரத்தவகை எது?

படம்
   அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஒருவரின் தலைமுடியை வைத்து என்னென்ன விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியும்? ஒருவரின் பாலினம், வயது. என்ன மருந்துகளை சாப்பிட்டார் என்பதை கண்டுபிடிக்கலாம். பிள்ளைகளை அறிய டிஎன்ஏ பரிசோதனையும் செய்யலாம். இதயத்தின் வேலை என்ன? ஒரு நிமிடத்திற்கு எழுபத்தைந்து முறை துடிக்கிறது. ஒரு துடிப்பிற்கு 71 கிராம் ரத்தத்தை பல்வேறு உறுப்புகளுக்கு அனுப்புகிறது. இந்த வகையில் நாளுக்கு 9,450 லிட்டர் ரத்தத்தை உடலெங்கும் அனுப்புகிறது. இதயம் சிறியதாக இருந்தால், அதன் துடிப்பு அதிகமாக இருக்கும். பெண்களுக்கு நிமிடத்திற்கு ஆறு முதல் எட்டு துடிப்புகளாக உள்ளது. இது ஆண்களின் இதயத்துடிப்பை விட அதிகம். பிறந்த குழந்தைக்கு ஒரு நிமிடத்திற்கு 130 முறை இதயம் துடிக்கிறது. தூங்கும்போது இதயம் நின்றுவிடுகிறதா? இதயம் துடிக்கும் வேகம் மட்டுப்படுகிறது. அதனால் இதயம் வேலை செய்யவில்லையா என வதந்திகளை சிலர் பரப்புகிறார்கள். அது உ்ணமையல்ல. இதயம் எப்போதும் துடிப்பதை நிறுத்துவதில்லை. ஒருவரின் ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு இருப்பது உண்மையா? ஒரு லிட்டரில் 19-50 மில்லிமீட்டர் அளவு கார்பன் டை ஆக்சைடு ...

உடலில் உள்ள வியர்வை சுரப்பிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பூனையின் கண்கள் இரவில் மின்னுவது எப்படி? பூனையின் ரெட்டினாவுக்கு பின்புறம் டாபெடும் லுசிடும் என்ற பொருள் உள்ளது. பதினைந்து அடுக்குகள் கொண்ட  இதுவே ஒளியை குறிப்பிட்ட கோணத்தில் பிரதிபலிக்கிறது. கண்ணாடி போல இயங்குகிறது. எனவே, பூனையின் கண்கள் இருட்டில் மின்னுகிறது. பொதுவாக கண்களின் நிறம் பச்சை, பொன் நிறமாக தெரியும். சியாமிஸ் பூனைக்கு மட்டும் சிவப்பு நிறத்தில் தெரியும். பர்ரென்ற  ஒலி எங்கிருந்து வருகிறது? இதுவரை இதற்கு முடிவான தீர்வு ஏதும் கிடைக்கவில்லை. பூனையின் குரல்வளையில் இருந்து வருகிறது என ஒரு தரப்பு கூறுகிறது. இன்னொரு தரப்பு, நெஞ்சுக்கு செல்லும் ரத்தக்குழாயில் ரத்தம் செல்லும்போது ஏற்படும் ஒலி என்கிறார்கள். பூனை வலியில், வேதனையில் இருக்கும்போது குட்டிகளைப் போடும்போது, இறக்கும்போது பர் என்ற ஒலியை வெளிப்படுத்துவதாகவும் கூறுகிறார்கள். இவை எவையும் நிரூபணம் செய்யப்படவில்லை. மனித உடம்பு செல்களின் ஆயுள் எவ்வளவு? 200 பில்லியன் செல்கள் ஒரு மணிநேரத்திற்குள் இறந்துபோகின்றன். அவை மீண்டும் உற்பத்தியும் ஆகின்றன. தோல் செல்கள் 19-34 நாட்கள், கல்லீ...

கையால் எழுதுவதற்கும், மூளையின் சிந்தனைத்திறனுக்கும் தொடர்பு உண்டு!

படம்
கையால் எழுதினால் சிந்தனைத்திறன் கூடும்! அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் கோப்புகளில் கையெழுத்திடும் புகைப்படங்களை நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். உண்மையில் அமெரிக்க நாட்டினர், அதிபர் கையெழுத்தை பதிவு செய்து வைத்து அதை கோப்புகளில் பயன்படுத்தவென ஆட்டோபென் என்ற கருவியை தொண்ணூறுகளிலேயே உருவாக்கிவிட்டனர். இதைக் கேட்கும்போது, எந்திரம் கையெழுத்திடுவதைப் பற்றிய சந்தேகம் மனதில் தோன்றலாம். ஆட்டோபென் கருவி, இன்றும் பயன்பாட்டில் உள்ளது. கையால் எழுதுவது என்பது ஒருமுறை எழுதியது போல மறுமுறை இருக்காது. எந்திரம் கையெழுத்தை அப்படியே நகல் செய்துவிடும். கோப்புகளில் எழுதுவது, கையெழுத்திடுவது இன்றும் சமூக, அரசியல், பொருளாதார வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கையால் எழுதுவது இளையோரிடம் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. 2012ஆம் ஆண்டு, அமெரிக்க பள்ளி நிர்வாக சங்கம் ஆய்வொன்றைச் செய்தது. அதில், 33 சதவீத அமெரிக்க மாணவர்கள் பெரிய, சிறிய ஆங்கில எழுத்துகளை எழுதுவதில் தடுமாறுவது தெரிய வந்தது. இளையோரும் தாளில் தங்களது கருத்தை நண்பர்களுக்கு எழுதக்கூட திணறினர். தட்டச்சு எந்திரம் தொட...

திசை கண்டறிவதில் தடுமாற்றம் ஏன்?

படம்
      திசை கண்டறிவதில் தடுமாற்றம் ஏன் ? ஆதிகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடி சமூகமாக இருந்தபோது உணவுக்கான தேடுதலை முடித்துவிட்டு குகைக்கு திரும்பி வரு வதில் பிரச்னைகள் எழவில்லை . அப்போது , மக்கள் தாம் கடந்து சென்ற வழித்தடத்தை மறந்துவிடவில்லை . அப்படி மறந்தால் உயிரை இழக்க வேண்டி வரும் . இன்று முன்பை விட வசதிகள் கூடி யுள்ளது . புதிய இடங்களுக்கு சென்று வர , செயற்கைக்கோளோடு இணைந்த வரைபட வசதிகள் உள்ளன . அவற்றைப் பயன்படுத்தியும் கூட மக்கள் வழிதவறி விபத்துகளை சந்தித்து வருகிறார்கள் . கிராமங்களில் வாயிருக்க வழி கிடைக்காமலா போகப்போகிறது என்பார்கள் . ஆனால் இன்று , மக்கள் பிறருடன் உரையாடுவதை விட தொழில்நுட்பத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார்கள் . புதிய இடங்களுக்கு செல்வது என்றால் காரிலோ , இருசக்கர வாகனங்களோ உடனே அலைபேசியில் உள்ள வரைபட வசதியை சொடுக்கி இயக்குகிறார்கள் . அதில் கூறும் பரிந்துரைகளை மாறாமல் பின்பற்றுகிறார்கள் . இந்த வசதி பெரும்பாலான நேரம் சரியாக வழி காட்டுகிறதுதான் . மறுக்க முடியாது . ஆனால் சில சமயங்களில் தவறாக வழிகாட்டி விபத்து ஏ...

மக்களின் புகார்களை பரிசீலித்து தீர்த்து வைக்க முயலும் அமலாக்கத்துறை! என்போர்ஸ்மென்ட் டிபார்ட்மென்ட் - சீன தொடர்

படம்
    என்ஃபோர்ஸ்மென்ட் டிபார்ட்மென்ட் சீன தொடர் 40 எபிசோடுகள் யூகு ஆப் சீனதொடர்களைப் பொறுத்தவரை இழு இழுவென இழுக்குதடி என பார்வையாளர்கள் சொல்லாவிட்டாலும் தயாரிப்பாளர்களே நாற்பது எபிசோடுகள் அவர்களாகவே போய்விடுகிறார்கள். இதில் உள்ளூர் ஓடிடியான யூகு சில எபிசோடுகளை இலவசமாகவும் மீதி அனைத்தையும் விஐபி என சந்தா கட்டி பார்க்கும்படி மாற்றி வைத்திருக்கிறது. அந்த வகையில் இத்தொடரின் பதினெட்டு எபிசோடுகள் மட்டுமே யூட்யூபில் இலவசமாக கிடைக்கிறது. பதினெட்டு எபிசோடுகளில் கதை எதை நோக்கி நகர்கிறது என புரிந்துகொள்ளலாம். கு லின், நீதிபதியாக இருக்கிறார். சட்டம் பற்றிய பரவலான அறிவுக்காக ஆறுமாதங்கள் வேறு துறையில் வேலை செய்வதற்காக பணிக்கிறார்கள். அப்படி அவர் குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுகிறார். அங்கு அதன் தலைவர் நீதிபதி சு என்பவரோடு முட்டல், மோதல் ஏற்பட்டு பிறகு உறவு நட்பாகி காதலாக மாறவும் தொடங்குகிறது. காதலுக்கு போகவேண்டாம். மக்கள் சேவையை எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போம். எழுதி வைத்த சட்டமே பிரதானம். அதை உரியபடி நிறைவேற்றினால் போதும் என இறுக்கமாக நடந்துகொள்கிறார் சு.கு லின், சட்டம் இருக்கிறபடி இருக்க...

தலையில் அடிபடுவதால் மூளையில் ஏற்படும் பாதிப்பு!

படம்
    அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி   கான்கஷன் என்றால் என்ன? தலையில் அடிபடுவதால் மூளையில் ஏற்படும் பாதிப்பு. இதன் காரணமாக ஒருவருக்கு உயிரபாயம் ஏற்படாது. ஆனால் சிலருக்கு சுயநினைவு இருக்கும். சிலருக்கு இருக்காது. ஆனால் மெல்ல பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கும் அவற்றைப் பார்ப்போம். தலைவலி, கழுத்துவலி எப்போதும் இருக்கும். முடிவெடுப்பது, நினைவில் வைத்துக்கொள்வது, கவனத்தை குவிப்பது கடினமாக மாறும். சிந்திப்பது, பேசுவது, வாசிப்பது ஆகிய செயல்கள் மெதுவாக மாறிவிடும் எப்போதும் உடலில் களைப்பு இருக்கும். மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். தூங்கும் பழக்கம் மாறும் மயக்கம், உடல் சமநிலை தவறும் சூழல் உருவாகும். வாந்தி வருவது போல தோன்றும் கண் பார்வை மங்கும், கண்ணில் எளிதாக சோர்வு தோன்றும். ஒளி, ஒலி சார்ந்து கவனக்குறைவு ஏற்படும் வாசனை, சுவையறியும் திறன் இழப்பு காதில் ஓலி கேட்கத் தொடங்கும் இரண்டு வகை வாதங்கள் உள்ளனவா? ஐசீமிக், ஹெமோர்ஹேஜிக் என இரு வாதங்கள் உள்ளன. ஐசீமிக், மூளையில் செல்லும் ரத்தம் தடைபடுவதால் உண்டாவது. இந்த வகையில் மனிதர்களுக்கு எண்பது சதவீத வாதம் உருவாகிறது. அடுத்து, ஹெமோர்ஹேஜிக் ...

சப்லைமினல் அட்வர்டைசிங் என்றால் என்ன?

படம்
              சப்லைமினல் அட்வர்டைசிங் என்றால் என்ன? மிஸ்டர் ரோனி ஒரு திரைப்படத்தில் அல்லது கே டிராமாவில் குளிர்பானம், ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனைக் காட்டி விளம்பரம் செய்வது அதிகரித்து வருகிறது இப்படி காட்டினால் அதை மக்கள் பின்பற்றுவார்கள் என நிறுவனத்தினர் நம்புகிறார்கள். இதை ஜேம்ஸ் விகாரி என்பவர், திரைப்படத்தின் வழியாக சோதித்து பார்த்தார். அதற்காக இவர் கொக்ககோலாவையும், சோளப்பொரியையும் கையில் எடுத்தார். படத்தில் மிகச்சில நொடிகளே வரும்படி கோலாவைக் காட்டினார். இதன்மூலம், கோலாவின் விற்பனையும், சோளப்பொரியும் விற்றுத் தீர்ந்தது. கோலா 18.1 சதவீதமும், சோளப்பொரி 57.5 சதவீதமும் விற்பனை கூடியதாக விகாரி தகவல் கூறினார். வெளிநாடுகளில் குளிர்பானம், சோளப்பொரி ஆகியவை சேர்த்தே காம்போவில் டிக்கெட்டோடு வாங்குவது விதியாக உள்ளது. இதை மனதில் கொள்ளுங்கள். இந்தியாவில் பிவிஆர் நிறுவனம், தற்போது திரையரங்கில் விற்கும் சோளப்பொரிகளை தனியாக கடைபோட்டு விற்க தொடங்கியுள்ளது. நொறுக்குத்தீனிக்கான வேட்கை மக்களிடையே அந்தளவு பெருகியுள்ளது. திரையரங்கில் தீனிகளை தின்பது என்பதே தனி சந்தையாக மாறி வர...

ஆட்டிச குறைபாடு கொண்டவர்களுக்கு உள்ளது ஆண் மூளை!

படம்
  சைமன் பாரோன் கோகன் simon baron cohen பிரிட்டனின் லண்டனில் பிறந்தவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியல் படிப்பை படித்தார். யுனிவர்சிட்டி காலேஜில் முனைவர் படிப்பை நிறைவு செய்தார். 1995ஆம் ஆண்டு, டிரினிட்டி கல்லூரியில் சோதனை உளவியலைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். தற்போது ஆட்டிசம் தொடர்பான ஆராய்ச்சியை செய்துவருகிறார். ஆட்டிசத்தின் தீர்வு, அதை ஏற்படுத்தும் காரணிகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். 2009-2011ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சர்வதேச ஆட்டிச ஆராய்ச்சி சங்கத்தில் துணைத்தலைவராக இருந்தார். தற்போது தேசிய ஆட்டிஸ்டிக் சங்கம்(இங்கிலாந்து) அமைப்பில் துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார். அதிபர் விருது, ஸ்பியர்மேன் பதக்கம், பாய்ட் மெக்கேண்ட்லெஸ் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.  1993 ஆட்டிசம் - தி ஃபேக்ட்ஸ்  1995 மைண்ட்பிளைண்ட்னெஸ் 1999 டீச்சிங் சில்ட்ரன் வித் ஆட்டிசம் மைண்ட் ரீட்  2003 தி எசன்ஷியல் டிஃபரன்சஸ்  புற உலக சிந்தனையற்ற மதி இறுக்கம் - இதுதான் ஆட்டிசத்திற்கான தமிழக அரசின் தமிழ்மொழி வழக்குச்சொல். அதன் நீளம் காரணமாக மதி இறுக்கம் என்று சுருக்கமாக கூறலாம...

4டி பிரின்டிங்கில் என்னவெல்லாம் சாத்தியமாகும்?

படம்
  நல்ல செய்தி  கண்டுபிடிப்புகள் 2021 ஆண்டு முழுக்க நாளிதழ்களில் காட்டுத்தீ பற்றிய செய்திகளைப் பார்த்திருப்பீர்கள். டிவி, சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பகிரப்பட்டன. அமெரிக்க அரசு, காட்டுத்தீயை கட்டுப்படுத்தவென 4 பில்லியன் டாலர்களை ஒதுக்கியது. காட்டுத்தீயை முன்னதாக கண்டுபிடித்து கட்டுப்படுத்தினால்தான் இழப்பை கட்டுப்படுத்த முடியும். அதுதான் சரியான தீர்வு. ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரைச் சேர்ந்த டிரையாட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளோடு வந்துள்ளது.  இந்த நிறுவனத்தின் சென்சார்கள், காற்றில் உள்ள காட்டுத்தீ பரவலால் உருவாகும் வேதிப்பொருட்களை அடையாளம் காண்கிறது. உடனே வயர்லெஸ் முறையில் அதிகாரிகளுக்கு தகவல்களை அனுப்புகிறது. அண்மையில் செய்த சோதனையில் பதினைந்து நிமிடங்களில் சமிக்ஞைகளை அனுப்பி நம்பிக்கை அளித்துள்ளது. அமெரிக்காவில் இந்த புதிய சென்சார்களை வாங்கிப் பயன்படுத்த உள்ளனர். 2030ஆம் ஆண்டுக்குள் டிரையாட் தனது பேரளவிலான சென்சார்களை மரத்தில் பதிக்க திட்டமிட்டுள்ளது.  2 முதுகெலும்பில் அடிபட்டவர்கள் திரும்பி இயல்பாக நடப்பது கடினம். பெர...

காலப்போக்கில் காலாவதியாகும் முக்கிய சம்பவங்களின் நினைவுகள்!

படம்
  பெற்றோர் அடித்து உதைப்பது, சகோதரன் குளிக்கும்போது காலை நீருக்குள் இழுத்து மூச்சு திணறச் செய்வது, ஆருயிர் நண்பன் என நினைப்பவன் காசு கையில் வந்ததும், பஸ் செலவுக்கு பணம் கொடுப்பது, நினைத்து பார்க்காத நேரத்தில் கிடைத்த காதலியின் முத்தம் என நிறைய விஷயங்கள் ஒருவரின் மனதில் இருக்கலாம். அதாவது தினசரி வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விஷயங்களும் மூளையில் சேகரமாகாது. அப்படி குறிப்பாக சேகரமாகும் விஷயங்களும் மெல்ல அழிந்துகொண்டே வரும். அப்படி அழிக்கப்பட்டால்தான் புதிய விஷயங்களை சேமிக்க முடியும்.  முக்கியம் என மனதில் நினைத்த விஷயங்கள் திடீரென அழிந்துபோகும்போது, நினைவுக்கு வராமல் போகும்போது சற்று வருத்தமாகவே இருக்கும். நினைவுகள் அழிவது மட்டும் பிரச்னை அல்ல. அவற்றை நீங்கள் சேமித்த வைக்கும் இடங்கள் கூட பிரச்னையானவைதான். இதை உளவியலாளர் டேனியல் ஸ்ஹாக்டர் ஏழு பாவங்கள் என்று கூறுகிறார். நினைவுகளின் தேய்மானம், நினைவுகூர தவறுவது, தடுப்பது, தவறான அங்கீகாரம், தேர்வு, பாகுபாடு, உறுதி ஆகியவற்றைக் கூறலாம்.  உங்கள் வாழ்க்கையின் பின்னே நடந்த விஷயங்களை திரும்ப நினைவுபடுத்துவது காலப்போக்கில், சற்று கடினமா...

முடிவெடுப்பதை எப்படி தீர்மானிக்கிறோம்?

படம்
  இஸ்ரேலிய அமெரிக்க உளவியலாளரான டேனியல் காஹ்னெமன், அமோஸ் வெர்ஸ்கி ஆகியோர் புதிய கொள்கைகளை உருவாக்கினர். இவை எதிர்பாராத நிலையில் நாம் எப்படி முடிவெடுக்கிறோம் என்பதைப் பற்றியவை. ஜட்ஜ்மென்ட் அண்டர் அன்செர்டனிட்டி ஹியூரிஸ்டிக்ஸ் அண்ட் பயாசஸ் என்ற நூல் 1974ஆம் ஆண்டு வெளியானது. மக்கள், புள்ளியல், வாய்ப்பு அடிப்படையில் எந்த தகவலையும் யோசித்து அதன் அடிப்படையில் முடிவெடுப்பது இல்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.  மனிதர்கள் எடுக்கும் முடிவுகள் ஒருவரின் மனதில் உள்ள தகவல்கள் அடிப்படையில் அமைந்தால் அவை தவறாக மாற வாய்ப்புள்ளன. ஒரு விமானத்தில் பயணம் செய்கிறீர்கள். திடீரென அந்த விமானம்,எஞ்சின் பழுதாகி கடலில் வீழ்கிறது. விபத்துக்குள்ளாகிறது. இதை உண்மையில் யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆபத்தான நேரத்தில் நீங்கள் உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விமானத்தில் உள்ள உதவிகளை நாடலாம். அப்படி உயிர் பிழைத்தால் பிறருக்கும் உதவ முடியும். இது எதிர்பார்க்காத நிகழ்ச்சி. இதில் எடுக்கும் முடிவு. அந்த நேரத்தில் அங்கே உள்ள சூழலைப் பொறுத்தது. இன்னொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். ஒரு காரில் நண்பரோடு பயணிக்க நினைக்கிறீர்...

குழந்தையின் நினைவுகளில் உள்ள தாயின் உருவம்!

படம்
  1920ஆம் ஆண்டு உளவியலாளர்கள் நினைவு, கற்றல் ஆகியவற்றை பற்றி அறிய நரம்பியல் துறையை நாடினர். எனவே அதுபற்றிய ஆய்வுகளை நடைபெற்றன. இதில் முக்கியமான ஆய்வாளர் கார்ல் லாஸ்லி. இவர்தான் மூளையிலுள்ள செல்கள் பற்றி ஆய்வுசெய்து பிறருக்கான வாசலை திறந்து வைத்தார். அவருக்குப் பிறகு கனடா நாட்டைச் சேர்ந்த உளவியலாளரான டொனால்ட் ஹெப் முக்கியமான பங்களிப்பைச் செய்தார். ஹெப்பியன் கற்றல் அழைக்கப்படும் அவரது முறை இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.  ஒரு குறிப்பிட்ட செயலை திரும்ப திரும்ப செய்யும்போது மூளையிலுள்ள செல்கள் அணியாக திரண்டு நிற்கின்றன. இதன் விளைவாகவே நினைவுகள் உருவாகின்றன என்று டொனால்ட் கூறினார். தனது கொள்கையை விளக்க தி ஆர்கனிசேஷன் ஆஃப் பிஹேவியர்  என்ற நூலை 1949ஆம் ஆண்டு எழுதினார். ஒரு குழந்தை தொட்டிலில் படுக்க வைக்கப்பட்டுள்ளது. அப்போது வீட்டு மாடிப்படிக்கட்டுகளில் யாரோ ஒருவர் ஏறி வருகிறார். அதை குழந்தை கேட்கிறது. அப்படி வருபவர் அந்த குழந்தையை தூக்கினால் யார் தன்னை தூக்குவது என குழந்தை கவனிக்கிறது. தன்னை அள்ளி எடுப்பவர்களின் முகத்தைப் பார்க்கிறது. பிறகு தன்னை தூக்கச் சொல்லி சிணுங்குகிறது. இந்...

ஞாபகசக்தியை மேம்படுத்திக்கொள்ள உதவும் வழிகள் சில!

படம்
    மனித கால்குலேட்டர்களுக்கு இன்று பெரிய மரியாதை கிடைக்கப்போவதில்லை. அந்தளவுக்கு சூப்பர் கணினிகள் வளர்ந்துவிட்டன. கூகுளின் தேடலுக்கு பார்ட் எனும் செயற்கை நுண்ணறிவு உதவுகிற காலம் இது. இந்த காலத்திலும் சில விஷயங்களை மூளையில் நினைவு வைத்துக்கொண்டு தேவையானபோது கூறுகிற மனிதர்கள் ஆச்சரியம் தருவதோடு சற்று பொறாமையையும் ஏற்படுத்துகிறார்கள். உணவகங்களில் மெனு கார்டை நாம் பார்த்துக்கொண்டிருக்க சிறப்பு உணவுகளை கூறிவிட்டு, அதன் தயாரிப்பு முறைகளை படபடவென ஒப்பிப்பவர்களை பார்த்தால், உணவை விட அவர் எப்படி இத்தனை விஷயங்களை நினைவில் கொள்கிறார் என்று தோன்றும். ஏனெனில் பலருக்கும் நேற்று காலையில் என்ன சாப்பிட்டோம் என்பதே அண்டன் பிரகாஷ் கட்டுரையை புரிந்துகொள்வது போல கடினமாக, மீள நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது. தேவையானபோது குறிப்பிட்ட விஷயங்களை நினைவில் இருந்து மீள எடுத்து பேசி கைதட்டல் வாங்குவது என்பது பெரிய சாமர்த்தியம். சற்று பொறாமை இருந்தாலும் கைதட்டிவிடுவதுதான் பெரிய மனுஷன் செய்யும் வேலை. மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் பகுதிதான் நினைவுகளை உருவாக்குகிறது. அதுமட்டும்தானா என்றால் அமிக...