இடுகைகள்

ஜான் வெய்ன் கேசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறுவர்களை செக்சுக்கு பயன்படுத்திய கோமாளி! - ஜான் வெய்ன் கேசி

படம்
அசுர குலம் ஜான் வெய்ன் கேசி இன்று ஜோக்கர்கள்தானே எதிர்கால வில்லன்களாக மாறுகிறார்கள். அப்படித்தான் ஜான் வேய்ன் கேசி, நினைத்துப் பார்க்க முடியாத கொடூர ஆளாக மாறியதும். முதலில் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு கேசி ஒரு கோமாளிதான். கோமாளி வேடம் போட்டு குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுபவர்தான். ஆனால் உள்ளுக்குள் அவர் ஓரினச்சேர்க்கையாளர். பாலினம் சார்ந்த விருப்பங்கள் நிச்சயம் குற்றம் கிடையாது. ஆனால் அதற்கு அவர் நாடியது சிறுவர்கள். அவர்களை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்டு சிறை தண்டனை பெற்ற வரலாறு அவருக்கு உண்டு. பின்னர், சிறுவர்களை கொல்லத் தொடங்கியதுதான் அவரை சீரியல் கொலைகாரர்களில் முக்கியமானவராக மாற்றியது. சிகாகோவில் கட்டடத்துறை சார்ந்த வேலைகளைச் செய்து வந்த கேசி பொது சமூகத்தில் நல்ல பெயரை சம்பாதித்தார். ஊரில் கந்தையா மாமா, பழனிச்சாமி சித்தப்பா என சிலர் உண்டு. இவர்கள் ஊரில் எந்த விழா நடந்தாலும் அங்கு சென்று வாழை மரத்தை ஊன்றி நிமிர்த்தி வைப்பது முதல் சோற்று பந்தியை கவனிப்பது வரை வேலைகளை செய்வார்கள். ஏறத்தாழ கேசி அப்படிப்பட்ட ஆள்தான். அதனால்தான் அவருக்கு சிகாகோவில் அவர