மாநில பொருளாதார நலனுக்காக கனவு கண்ட லட்சியவாதித் தலைவர்! - புத்ததேவ் பட்டாச்சார்ஜி - அஞ்சலி
அஞ்சலி புத்ததேவ் பட்டாச்சார்ஜி 1944-2024 மேற்கு வங்கத்தின் இடதுசாரிக்கட்சி, தனது முக்கியமான தலைவர்களில் ஒருவரான புத்ததேவை இழந்திருக்கிறது. அவருக்கு மனைவி மீரா, மகன் சுசேட்டன் ஆகியோர் உண்டு. மாநிலத்தில் இரண்டு முறை தொடர்ச்சியாக தேர்தலில் வென்று முதல்வராக பதவி வகித்தார். 2000-11 வரையிலான காலகட்டத்தில், மேற்கு வங்கத்தை தொழில்துறை சார்ந்த மாநிலமாக பல்வேறு முதலீடுகளை ஈர்க்கக் கூடியதாக மாற்ற கனவு கண்டார். ஆனால் அக்கனவு நிறைவேறவில்லை. புத்ததேவின் இறப்பு முக்கியமான காலகட்டத்தில் நடந்திருக்கிறது என்றே கூறவேண்டும். அவர் முதல்வராக பதவியேற்றது இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு.... 1977 ஆம் ஆண்டு ஜோதிபாசு தலைமையின் கீழ் இடதுசாரி கட்சி தேர்தலில் பெரும் வெற்றியை பெற்று ஆட்சி அமைத்தது. அன்றைய காலம் அரசியல் சிந்தனையாளர்களுக்கானது. பல்வேறு அரசியல் தத்துவவாதிகளின் கொள்கை, கோட்பாடுகள், மேற்கோள்கள், செயல்பாடுகள் என அரசியல்தளம் மாறியிருந்தது. இப்படியான சூழலில் வளர்ந்து வந்த புத்ததேவ் கவிதைகளை எழுதினார். புத்தக திருவிழாக்களுக்கு தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார். காப்ரியல் கார்சியா மார்கேஸ் நூல்களை மொழி...