வாசிப்பை நேசிக்க வைக்கும் லெட்ஸ் ரீட்ஸ் இந்தியா அமைப்பின் புதுமையான முயற்சி!
வாசிப்பை நேசிப்போம் ! சமூக வலைத்தளம் பெருகியுள்ள காலம் இது . இதன் காரணமாக , நூல்களைப் படிக்கம் பழக்கம் மெல்ல குறைந்து வருகிறது . நூல்களை விட அதன் சுருக்கங்களை சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தாலே போதுமானதாக உள்ளது . பலரும் அதனை எளிதாக படித்துவிட்டு அடுத்தடுத்து விஷயங்களுக்கு சென்றுவிடுகின்றனர் . இதை தடுக்கவே மகாராஷ்டிரா மாநிலத்தில் லெட்ஸ் ரீட் இந்தியா எனும் திட்டத்தை தொடங்கியுள்ளனர் . இதில் தகவல்தொழில்நுட்ப நிறுவனப் பணியாளர்களும் , பொறியாளர்களும் இணைந்துள்ளனர் . சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய இப்பணி , தற்போது வேகம் பிடித்துள்ளது . தற்போது இந்த அமைப்பினர் பத்து லட்சம் நூல்களை மக்களுக்கு வாசிக்க வழங்கி வருகின்றனர் . எங்களது நோக்கம் , சமூக வலைத்தளங்களிலுள்ள இளைஞர்களை வாசிப்பு நோக்கி திருப்புவதுதான் . இதன்மூலம் நமது சமூகம் அறிவுள்ள சமூகமாகவும் , பொறுப்புள்ளதாவவும் வளரும் . நூல்களைப் படிக்க இலவசமாகவே இந்த அமைப்பு வழங்குகிறது . ஒரே ஒரு விதி உண்டு . மொபைல் வேன்களில் வரும் நூல்களை யார் வேண்டுமானாலும் எடுத்து படிக்கலாம் . ஒருவாரம் வைத்து படிக்