இடுகைகள்

ஃபோர்ப்ஸ் இதழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகம் போற்றும் வள்ளல்கள்!

படம்
பில்கேட்ஸ், வாரன் பஃபட் மட்டுமல்ல தன்னளவில் உலகில் பல்வேறு விஷயங்களுக்கு தாங்கள் சம்பாதித்த பணத்தைக் கொடுக்கும் பணக்கார ர்கள், தொழிலதிபர்கள் உலகம் முழுக்க உண்டு. அவர்களைப் பற்றி ஃபோர்ப்ஸ் இதழ் அட்டவணைப்படுத்தியுள்ளது. அவர்களில் சிலரைப் பற்றி பார்ப்போம். அசீம் பிரேம்ஜி விப்ரோ நிறுவனத் தலைவர் 7.6 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனத்தின் தலைவர். அசீம் பிரேம்ஜி பவுண்டேஷன் மூலம் கல்வி தொடர்பான பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் பல்வேறு சமூகத்திற்கு அவசியமான பணிகளைச் செய்து வருகிறது. கடந்த ஜூலையில் விப்ரோ நிறுவன தலைவர் பணியிலிருந்து விலகினார். காந்தி மூலம் ஊக்கம் பெற்ற இவர், தன் வாழ்நாளில் 21 பில்லியன் டாலர்களை சமூகத்திற்காக அளித்துள்ளார். தியோடர் ராச்மட் - திரிபுத்ரா குழுமம் இந்தோனேசியா விவசாயம் சார்ந்த, சுரங்கம் போன்ற தொழில்களை ஏ அண்ட் ஏ ராச்மட் என்ற நிறுவனம் மூலம் செய்து வருகிறார். கல்வி, ஆதரவற்றோருக்கான உதவிகளை சர்வீஸ் பவுண்டேஷன் மூலம் செய்து வருகிறார். இந்த வகையில் 5 மில்லியன் டாலர்களை செலவழித்துள்ளார்.  1999ஆம் ஆண்டு மாணவர்களுக்கு

தொழில் நாயகன் நாதெள்ளா- மைக்ரோசாப்ட் இயக்குநர்!

படம்
சத்யா நாதெள்ளா - நம்பர் 1 நீங்கள்தான் நம்பர் 1 தலைவராக ஃபோர்ப்ஸ் இதழில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால், அவரே வெட்கப்படுவார். 1992ஆம் ஆண்டு மைக்ரோசாப்டில் சேர்ந்தவர், இன்று 129 பில்லியன் டாலர்கள் வருமானம் சம்பாதிக்கும் நிறுவனத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இவர் பில்கேட்ஸ், ஸ்டீவ் பால்மர் போல ஊடகங்களில் அறிமுகம் கொண்டவர் அல்ல. ஆனால் சிறப்பான குழுக்களை அவர்களின் அரசியல் கடந்து உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். சிறந்த இயக்குநரின் தகுதி என்பது, குழுவாக மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் சக்தியை அவர்களுக்கே காட்டுவதுதான் என்கிறார். 2014ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட்ஸ் நிறுவன இயக்குநராக அறிவிக்கப்பட்ட சத்யா நாதெள்ளாவின் முன் நிறைய தடைகள் இருந்தன. நிறுவனம் எதிர்காலத்தில் எந்த தொழில்நுட்பத்தை பிடித்துக்கொள்ளவேண்டும் என்று தெரியாமல் இருந்தது. அதனை ஒழுங்கு செய்து பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து நிறுவனத்தின் எதிர்காலத்தை வெளிச்சமாக்கினார். மேக கணிய முறையை லினக்ஸ் கட்டமைப்பை இணைத்து வலிமையாக்கினார். நிறுவனத்தின் பலத்தோடு பலவீனங்களையும் அறிந்திருந்தார். அதுவே அவரை பலமாக்கிய