இடுகைகள்

மாவோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களை கொன்ற மாவோயிஸ்ட் தலைவர்! - ஹிட்மா

படம்
                  மாவோயிஸ்ட் தலைவர் ஹிட்மா சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர் . இதில் மூளையாக செயல்பட்டவர் கமாண்டர் ஹிட்மா என்று அறிய வந்துள்ளது . இவரது ராணுவப்படைதான் அரசின் படைகளை தாக்கி வீழ்த்தியுள்ளது . ஹிட்மா , வெளியே தெரியாத கமாண்டர் தலைவராக மக்கள் விடுதலை கொரில்லா படைபிரிவை நடத்தி வந்தவர் ஆவார் . தண்டகாரண்யா சிறப்பு பகுதி அமைப்பின் உறுப்பினருமாவார் . தெற்கு பஸ்தர் , பிஜாபூர் , சுக்மா ஆகிய மாவட்டங்களில் மாவோயிஸ்ட் அமைப்பு இயங்கி வருகிறது . 2010 இல் சிஆர்பிஎப் படைப்பிரிவைச் சேர்ந்த 76 வீரர்களைக் கொன்றது . 2013 இல் மாநில காங்கிரஸ் தலைவரை கொன்றது , பேஜி , புர்காபால் , மின்பா , டாரம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது மாவோயிஸ்ட் அமைப்பு . இவரைப் பற்றிய தகவல் கொடுத்தால் 25 லட்சம் பரிசு கொடுப்பதாக சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது . பிற மாநில அரசு அமைப்புகள் ரூ .20 லட்சம் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர் . ஹிட்மா என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் மாவோயிஸ்ட் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை இன்ன

மூதாதையர்களின் கனவில் வாழும் ஓநாய்கள்! - ஓநாய் குலச்சின்னம்

படம்
ஓநாய் குலச்சின்னம் ( Wolf Totem ) ஜியாங் ரோங் ( Lü Jiamin ) தமிழில் - சி.மோகன் அதிர்வு பதிப்பகம் பக்கம் 707 மாவோவின் சீர்த்திருத்த கொள்கைகள் எப்படி மங்கோலிய நாடோடி மக்களின் வாழ்க்கை அழித்தன, அவர்களின் இயற்கை சார்ந்த வாழ்க்கை எப்படி வளர்ச்சி என்ற ஒற்றை சொல்லுக்கு பலியானது என்பதை இந்நாவல் விவரிக்கிறது. இதில் வரும் ஜென் சென் என்ற இளைஞர், நகரிலிருந்து கால்நடை வளர்ப்புக்காக கிராமப் பகுதிக்கு அனுப்பப்படுகிறார். அவர் மட்டுமல்ல, ஏராளமான நகரப்புற மாணவர்கள் அங்கு பல்வேறு பயிற்சிகளுக்காக வந்திருக்கின்றனர். ஆனாலும் பலரும் அந்த சூழ்நிலையை சகித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். விரும்பி அல்ல. இதில் வேறுபடுவது ஜென் மட்டுமே. அவன் மட்டுமே அந்த மேய்ச்சல் நிலம் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையை புரிந்துகொள்ள முயல்கிறான். அதன் வழியாக ஓநாய்கள் அவன் வாழ்வில் நுழைகின்றன. மொழிபெயர்ப்பாளர் சி.மோகன் அவற்றின் வாழ்வு வழியே மங்கோலியர்கள் டெஞ்ஞர் எனும் கடவுளை எப்படி காண்கிறார்கள் என்பதை அவன் அறிந்து வியக்கிறான். ஏறத்தாழ பில்ஜி தன் முதிய வயதில் தான் கற்ற அனைத்தையும் வேட்டை நுணுக்கங்களையும் க