இடுகைகள்

மாவோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாவோவுக்கு அடுத்த நிலையில் தன்னை வலிமைப்படுத்திக்கொண்டு வரும் ஷி!

படம்
  ஷி ச்சின்பிங் செல்வாக்கும், கருத்துகளும்! ஷி ச்சின்பிங்  சிக்ஸியாங் - ஷி ச்சின்பிங் கருத்துகள் என்ற பெயரில் நூலொன்றை லியுமிங்ஃபு, வாங் ஸாங்யுவான் என்ற இரு கல்வியாளர்கள் வெளியிட்டனர். இந்த நூலை வெளியிட்ட நிறுவனம், ஸெஜியாங் வணிக நிறுவனம். நூல் ஆங்கிலம், சீனம் என இருமொழிகளில் வெளியானது.  இந்த நூல் பற்றி டாங்ஜியான் யான்ஜியு என்ற பொதுவுடைமைக் கட்சி இதழிலும் புகழ்ந்து எழுதப்பட்டது. இதே நூல் பற்றி, வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பொதுவுடைமைக் கட்சி பள்ளியில் வெளியாகும சூக்சி ஷிபாவோ என்ற இதழில் கட்டுரை ஒன்றை எழுதினார். அக்டோபர் மாதம் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற 19ஆவது பொதுவுடைமை கட்சி மாநாட்டில் ஷி ச்சின்பிங்கின் கருத்துகள் வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டது. மாவோ, டெங் ஆகியோருக்கு பிறகு ஷி ச்சின்பிங்கின் கருத்துகள் பொதுவுடைமைக் கட்சியால் ஏற்கப்பட்டுள்ளது.  2012-14 ஆகிய காலகட்டங்களில் ஷி ச்சின்பிங் ஆற்றிய உரைகள் நூலாக ஷி ச்சின்பிங் - சீன அரசு நிர்வாகம் என்ற பெயரில் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த வரிசையில் இதுவே முதல் நூல். இந்நூல் மஞ்சள் நிறத்தில் ஷி ச்சின்பிங்கின் மார்...

அபினியால் அழிந்த தேசம் மீண்டெழுந்த வரலாறு! - சீனாவின் வரலாறு - வெ.சாமிநாதன்

படம்
      சீனாவின் வரலாறு வெ சாமிநாதன் பிரபஞ்ச ஜோதி பதிப்பகம் பதிப்பு 1962 தமிழ் இணைய கல்விக்கழகம் நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்பு சீனாவைப் பற்றி அன்றைய காலத்தில் 81 ஆங்கில நூல்களை படித்து அதிலுள்ள விஷயங்களை எடுத்து சேர்த்து 564 பக்கத்திற்கு நூலை எழுதியிருக்கிறார் நூலாசிரியர். இந்த நூலில் அடிக்குறிப்புகளே நிறைய உள்ளன. அதுமட்டுமல்லாமல் அனுபந்தம், நூலின் முக்கிய பகுதிகள், குறிப்புகள், நூலை எழுத உதவிய மேற்கோள் நூல்கள் என அனைத்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இன்றைக்கு கூட இப்படியான தெளிவான நூலை ஒருவர் எளிதாக எழுதிவிட முடியாது. அந்தளவு நூல் சிறப்பாக தெளிவாக உள்ளது. இன்றைக்கு சீனா, தரைவழியாக, நீர் வழியாக தன்னை விரிவுபடுத்திக்கொள்ள முயன்று வருகிறது. எதற்கு இந்த கோபம், ஆக்ரோஷம் என பலரும் நினைப்பார்கள். அதற்கான விடை அதன் வரலாற்றில் உள்ளது. குறிப்பாக ஜென்ம எதிரியான ஜப்பான், சீனாவை அழித்து மக்களை வேட்டையாடிய வரலாற்றை இன்றும் சீன டிவி தொடர்களில் நீங்கள் பார்க்க முடியும். பெரும்பாலான வரலாற்றுத் தொடர்களில், திரைப்படங்களில் ஜப்பானியர்கள்தான் தீயவர்கள், வில்லன்கள். அதற்கான காரணங்களை நீங்கள் வெ ச...

மாவோ - ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் - மழைப்பேச்சு பாட்காஸ்ட்

படம்
      https://archive.org/details/mao-communist-history

மாவோவின் இளமைக் காலத்தை விளக்குகிற நூல்!

படம்
  மாவோ - ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் எட்ஹர் ஸ்னோ சவுத் விஷன் புக்ஸ் தமிழில் எஸ் இந்திரன் ப.127 இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1937ஆம் ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகே வெளியுலகிற்கு சீனா, அதன் கம்யூனிச தலைவரான மாவோ பற்றிய முழுமையான அறிவு கிடைத்தது. மாவோவின் நூற்றாண்டான 1993ஆம் ஆண்டு மூல நூலின் மொழிபெயர்ப்பு சுருக்கமாக தமிழில் மொழிபெயர்ப்பாளர் இந்திரனால் எழுதி வெளியிடப்பட்டது. மாவோவின் இளமைப்பருவம் நூலில் சிறப்பாக வாசகர்களின் மனதில் பதியும்படி எழுதப்பட்டுள்ளது. மூல நூலின் சுருக்கம் என்பதால் மற்ற பகுதிகள் எல்லாம் வேகமாக கடந்துசெல்கிறது. அவை எவற்றிலும் மனதில் பதியும் எந்த சம்பவமும் இல்லை. அடிப்படையாக நூல் வழியாக தெரிந்துகொள்வது என்னவென்றால், நூலிலுள்ள சம்பவங்களை எட்ஹரிடம் ஐந்து மணிநேரத்தில் மாவோ கூறியிருக்கிறார். அவற்றை அவர் பதிவு செய்து அல்லது குறிப்பெடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறார். நூலில் ஆச்சரியமூட்டும் விஷயம், அவரோடு வேலை செய்த தோழர்களுக்கு என்ன ஆனது, இப்போது என்ன செய்கிறார்கள் என்பதையும் கூட அக்கறையோடு பிராக்கெட் போட்டு எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்த தகவல் வாசகர்களுக்கு எந்த...

மூன்றுலக கோட்பாடு எப்படி திரிக்கப்பட்டது என்பதை விளக்குகிற நூல்!

படம்
          மாசேதுங்கும் மூன்றுலக கோட்பாடும் சீன பொதுவுடைமைக் கட்சியின் தலைவரும், ஆட்சியாளருமான மாசேதுங்கின் ஆதரவாளர்களால் எழுதப்பட்ட நூல். இந்த நூலில் மாவோவின் மூன்றுலக கொள்கை எவ்வாறு தவறாக குருச்சேவ், டெங் ஷியாவோபிங் ஆகியோரால் மாற்றப்பட்டு கூறப்பட்டது என கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அதில் உள்ள தவறுகளையும் சுருக்கமாக விவரிக்கிறது. நூல் மொத்தம் ஐம்பத்தாறு பக்கங்களைக் கொண்ட சிறு நூல்தான். அதிலேயே மூன்றுலக கோட்பாடு என்றால் என்ன, அதில் மாவோ கூறியது என்ன, பின்னாளில் ஆட்சிக்கு வந்த டெங், ரஷ்யாவின் அதிபராக இருந்த குருச்சேவ் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அதை எப்படி மாற்றினார்கள் என விளக்குகிறது. கூடவே ஆசியான் அமைப்பையும் கடுமையான தொனியில் விமர்சிக்கிறது. நூலின் மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. தலைவர்கள் கூறிய கருத்துக்கு ஆதரவான விஷயங்களை மக்கள் தினசரி உள்ளிட்ட பத்திரிகையிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சீன பொதுவுடைமைக் கட்சி பற்றி தமிழில் படிப்பது நன்றாக உள்ளது. அதன் நோக்கத்தை, மாவோவின் லட்சியத்தை புரிந்துகொள்ள நூல் உதவுகிறது. உலகளவில் ஐக்கிய முன்னணி என கூட...

சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியாபோபிங் கடந்த வந்த அரசியல் முள்பாதை

படம்
           book review சீனாவின் நவீன சிற்பி - டெங் ஷியாபோபிங் கடந்த வந்த அரசியல் முள்பாதை டெங் ஷியாபோபிங் அண்ட் தி சைனீஸ் ரிவல்யூஷன் அரசியல் சுயசரிதை டேவிட் எஸ் ஜி குட்மேன் ரூட்லெட்ஜ் பதிப்பகம் டெங் ஷியாபோபிங்கை முன்னிறுத்தாமல் இன்று ஷி ச்சின்பிங் எந்த உரையையும் தொடங்கி முடிப்பதில்லை. சீனர்களுக்கு தேசியக்கட்சியோடு போரிட்டு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது மாவோ என்றால், அந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை அமைத்தவர், டெங் ஷியாபோபிங். 1976 தொடங்கி 1985ஆம் ஆண்டு வரை சீன அதிபராக இருந்த டெங் செய்த ராணுவ, பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாகவே சீனா, இன்று பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இங்கு கவனிக்க வேண்டியது, சீனா தனது நாட்டை வளர்ச்சிக்காகத் திறந்துவைத்தாலும் அதன் கலாசாரத்தை ஆன்மாவை முழுக்க இழந்துவிடவில்லை. சோசலிசச்தை சீன கலாசாரத்தோடு இணைந்து திட்டங்களை தீட்டி முன்னெடுத்தவர் டெங். இந்த நூல், டெங்கின் அரசியல் வாழ்க்கையை விரிவாக அலசுகிறது. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பெரிதாக பேசவில்லை. ஏனெனில் அங்குள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கம், அ...

சீனாவின் வெளியுறவுக்கொள்கை!

படம்
  சீனாவின் வெளியுறவுக்கொள்கை! அமைதியான நல்லுறவு நோக்கத்தை அடிப்படையாக கொண்ட ஐந்து அம்சங்களை அடிப்படையாக கொண்ட வெளியுறவுக்கொள்கை உருவாக்கப்பட்டு எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. 1954ஆம்ஆண்டு ஜூன் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, சீனாவும், இந்தியாவும் வெளியுறவு கொள்கையை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தமிட்டன. அண்மையில், இதை நினைவுகூறும் வகையில், பெய்ஜிங் நகரில் விழா நடத்தப்பட்டது. இதில், சீனாவின் பிரதமர் லீ குவாங், அதிபர் ஷி ச்சின்பிங் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். மனித குலத்தின் எதிர்காலத்திற்கான அமைதியான ஒத்திசைவு கொண்ட வாழ்வை உருவாக்குவது என கொள்கைகள் பற்றி கூறப்பட்டது. உண்மையில் சீனா, இந்த கொள்கைகள் வழியாக என்ன நினைக்கிறது, உலகம் பற்றிய அதன் பார்வை என்ன என்பதைப் பார்ப்போம். இந்தியாவில் சீனாவின் வெளியுறவு கொள்கையை பஞ்ச சீல கொள்கை என்று அழைப்பார்கள். இக்கொள்கையை முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, நடைமுறைப்படுத்தி இயங்கினார். அண்டை நாடுகள் மற்றும் மேற்கு நாடுகள் தொடர்பான உறவுகளை தீர்மானித்த கொள்கை இது. பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்தில் இருந்து இ்ந்தியா போராடி மீண்ட  ஆண்டு, 1947. இதற்கு காந்தி தல...

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களை கொன்ற மாவோயிஸ்ட் தலைவர்! - ஹிட்மா

படம்
                  மாவோயிஸ்ட் தலைவர் ஹிட்மா சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர் . இதில் மூளையாக செயல்பட்டவர் கமாண்டர் ஹிட்மா என்று அறிய வந்துள்ளது . இவரது ராணுவப்படைதான் அரசின் படைகளை தாக்கி வீழ்த்தியுள்ளது . ஹிட்மா , வெளியே தெரியாத கமாண்டர் தலைவராக மக்கள் விடுதலை கொரில்லா படைபிரிவை நடத்தி வந்தவர் ஆவார் . தண்டகாரண்யா சிறப்பு பகுதி அமைப்பின் உறுப்பினருமாவார் . தெற்கு பஸ்தர் , பிஜாபூர் , சுக்மா ஆகிய மாவட்டங்களில் மாவோயிஸ்ட் அமைப்பு இயங்கி வருகிறது . 2010 இல் சிஆர்பிஎப் படைப்பிரிவைச் சேர்ந்த 76 வீரர்களைக் கொன்றது . 2013 இல் மாநில காங்கிரஸ் தலைவரை கொன்றது , பேஜி , புர்காபால் , மின்பா , டாரம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது மாவோயிஸ்ட் அமைப்பு . இவரைப் பற்றிய தகவல் கொடுத்தால் 25 லட்சம் பரிசு கொடுப்பதாக சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது . பிற மாநில அரசு அமைப்புகள் ரூ .20 லட்சம் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர் . ஹிட்மா என்று சுருக்கமாக குறிப்பிடப்படும்...

மூதாதையர்களின் கனவில் வாழும் ஓநாய்கள்! - ஓநாய் குலச்சின்னம்

படம்
ஓநாய் குலச்சின்னம் ( Wolf Totem ) ஜியாங் ரோங் ( Lü Jiamin ) தமிழில் - சி.மோகன் அதிர்வு பதிப்பகம் பக்கம் 707 மாவோவின் சீர்த்திருத்த கொள்கைகள் எப்படி மங்கோலிய நாடோடி மக்களின் வாழ்க்கை அழித்தன, அவர்களின் இயற்கை சார்ந்த வாழ்க்கை எப்படி வளர்ச்சி என்ற ஒற்றை சொல்லுக்கு பலியானது என்பதை இந்நாவல் விவரிக்கிறது. இதில் வரும் ஜென் சென் என்ற இளைஞர், நகரிலிருந்து கால்நடை வளர்ப்புக்காக கிராமப் பகுதிக்கு அனுப்பப்படுகிறார். அவர் மட்டுமல்ல, ஏராளமான நகரப்புற மாணவர்கள் அங்கு பல்வேறு பயிற்சிகளுக்காக வந்திருக்கின்றனர். ஆனாலும் பலரும் அந்த சூழ்நிலையை சகித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். விரும்பி அல்ல. இதில் வேறுபடுவது ஜென் மட்டுமே. அவன் மட்டுமே அந்த மேய்ச்சல் நிலம் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையை புரிந்துகொள்ள முயல்கிறான். அதன் வழியாக ஓநாய்கள் அவன் வாழ்வில் நுழைகின்றன. மொழிபெயர்ப்பாளர் சி.மோகன் அவற்றின் வாழ்வு வழியே மங்கோலியர்கள் டெஞ்ஞர் எனும் கடவுளை எப்படி காண்கிறார்கள் என்பதை அவன் அறிந்து வியக்கிறான். ஏறத்தாழ பில்ஜி தன் முதிய வயதில் தான் கற்ற அனைத்தையும் வேட்டை நுணுக்கங்களையும் க...