இடுகைகள்

டேட்டா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறிய இமேஜரி ரேடார்களை உள்நாட்டில் தயாரித்து கொடுக்கும் கேலக்ஸ் ஐ! - சுயாஸ் சிங்

படம்
  சுயாஸ் சிங், கேலக்ஸ் ஐ கேலக்ஸ்ஐ குழுவினர் சுயாஸ் சிங், இயக்குநர், துணை நிறுவனர் கேலக்ஸ் ஐ இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் வணிக ரீதியான தேவைகளுக்கான இமேஜிங் ரேடார்களை உள்நாட்டில் தயாரித்து வருகிறது, கேலக்ஸ் ஐ. இந்த நிறுவனம், உலகளவில் உள்ள இமேஜிங் ரேடார் சந்தையை குறிவைத்துள்ளது. 40 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இந்த சந்தை   வளர்ந்துள்ளது. தற்போது இந்தியா, இமேஜிங் ரேடார் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் மற்றும் பிற வெளிநாடுகளிடம் பெற்று பயன்படுத்தி வருகிறது. அரசியல் சூழல்கள் மாறும்போது வெளிநாடுகள், தங்கள் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குவது நிறுத்தப்படும். எனவே, உள்நாட்டில் அதற்கான முயற்சிகளை எடுப்பது அவசியம். அந்த வகையில் கேலக்ஸ் ஐ என்ற தனியார் நிறுவனம் இமேஜிங் ராடார் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளது. பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் வணிக மதிப்பு 15 மில்லியன் டாலர்களாக உள்ளது. மல்டி சென்சார் இமேஜிங் தொழில்நுட்பத்தில் கேலக்ஸ் ஐ மூன்று காப்புரிமைகளைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் சிறிய செயற்கைக்கோள்களை , போனில் உள்ளடங்கும் அளவிலான பொருட்களைக் கொண்டு தயாரித்து வருகிறது

5 ஜியால் முன்னேறும் துறைகள்! - போக்குவரத்து, சூப்பர் ஆப், விற்பனைத்துறை

படம்
  5 ஜி பயன்கள்  ஸ்மார்ட்போன் பயனாளர்கள் டேட்டா வேகம் பத்து மடங்கு அதிகரிக்கும். தரவிறக்க வேகத்திற்கு வட்டவடிவில் சுத்துவதை நீங்கள் பார்க்கும் துரதிர்ஷ்டம் நேராது. ஓடிடி தளத்தில் நிகழ்ச்சிகளை பார்ப்பது வேகமாகும்.  வீடு வீஆர் விளையாட்டுகளை எளிதாக விளையாடலாம். 8கே அளவிலான டிவிகளைப் பயன்படுத்தலாம்.  கல்வி  பெருந்தொற்றில் அறிமுகமான டிஜிட்டல் கல்வி இன்னும் வேகமாகும். நெடுந்தொலைவில் இருந்தாலும் கூட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதாக கல்வி கற்றுத் தரமுடியும்.  விற்பனை விரல் முனையில் தட்டினால் பொருட்கள் வாசலில் வந்து நிற்கும். குரல் வழி ஆணை, உடல்மொழி மூலம் நீங்கள் எளிதாக பொருட்களை வாங்கலாம். பணத்தை வேகமாக செலுத்தலாம். அமேசான் கோ போல கேஷியர் இல்லாத சூப்பர் மார்க்கெட்டுகள் உருவாக வாய்ப்புள்ளது.  வங்கி மொபைலில் இருந்தே வங்கியில் செய்யும் அனைத்து விஷயங்களையும் செய்யலாம். வங்கிக்கு செல்வது என்பது மிக அரிதான நிகழ்வாக மாறும்.  விவசாயம்  பயிர் விதைப்பது தொடங்கி சாகுபடி வரையிலான அனைத்து விஷயங்களும் தொழில்நுட்ப ரீதியாக ஒழுங்குபடுத்தப்படும்.  உற்பத்தித்துறை இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் முறையில் சென்சார், கருவிகள

புதிய இந்தியாவில் மாணவர்கள் கற்க வேண்டிய வாழ்க்கைத் திறன்கள்!

படம்
  புதிய இந்தியாவில் வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைத் திறன்கள் என்னென்ன? வாழ்க்கைத் திறன்கள் என்பது வாழ்க்கையை எளிதாக நடத்திச்செல்ல உதவுபவை. இவற்றை கற்றால் நிறைய இடர்பாடுகளை எளிதாக கடந்துசெல்ல முடியும். சவால்களை சந்திக்கலாம். எவரெஸ்டில் ஏறலாம். செங்கடலில் குதித்து நீந்தலாம். பாராகிளைடிங் செய்யலாம். இத்தனையும் சாத்தியம். புதிய தலைமுறை குழந்தைகளுக்கு இப்படி இந்தியாவில் என்னென்ன திறன்களைக் கற்றுக்கொடுக்கலாம் என்ற பரிந்துரை பயிற்சிகள் இதோ... பொய் சொல்லும் கலை - ஆர்ட் ஆஃப் லையிங்  5 வயதுக்கும் மேற்பட்டவர்கள் நிஜத்தை தீர்மானமாக மறைத்து நினைத்தே பார்க்க முடியாத ஆனால் சற்றேறக் குறைய நம்பும்படியான பொய்களை சொல்லவேண்டும். சொல்லும் பொய்யை யாரேனும் கண்டுபிடித்தால் கூட அதற்கு காரணம் என பயிற்சி மாணவர்கள் ஒருவரை குறை சொல்லிவிடலாம். இதை எந்த குற்ற உணர்ச்சியுமின்றி மாணவர்கள் பயில பொய் சொல்லித்தரும் ஆசிரியர் நியமிக்கப்படுவார். இவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தினசரி உண்டு. கூடுதலாக களப்பணி செய்தால்தானே பொய் சொல்லும் கலை சிறக்கும். வேலை இல்லாத, ஊட்டச்சத்து பாதிப்புகொண்ட பதினைந்து லட்ச ரூபாய் தனது 

வேலைக்கு பயணிக்கும் தொலைவு - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  ஒருவர் மாங்காடு, அல்லது மடிப்பாக்கத்திலிருந்து ராயப்பேட்டை வருவது என்றால் தினசரி அவர் எத்தனை மணிக்கு கிளம்பவேண்டும்? கணித லாஜிக் கிடையாது என்பதால் மனதில் தோன்றும் விடையை நீங்கள் சொன்னால் போதும். குறைந்தது 30 நிமிடங்களை பயணத்திற்கென ஒதுக்கவேண்டும். போக்குவரத்து நெரிசல் கூடினால் அமைச்சர்கள் நகர்வலம் வந்தால் இன்னும் நேரம் கூடும்.  1994ஆம் ஆண்டு சீசர் மார்செட்டி, பயணம் செய்வதில் மனிதர்களின் குணங்களை பற்றி ஆராய்ந்தார். இதனை மார்செட்டி கான்ஸ்டன்ட் என்று அழைக்கின்றனர். இவரது ஆய்வுப்படி ஒருநாளில் ஒருவர் ஒரு மணிநேரத்தை பயணத்திற்கென ஒதுக்கிவிடுகிறார். இந்த வகையில் அமெரிக்காவில் 30 நிமிடங்கள் என கணக்கு போட்டால், அமெரிக்காவில் 27, இங்கிலாந்தில் 29, கனடாவில் 26 நிமிடங்கள் செலவாகின்றன.  காலம்தோறும் எப்படி நகரங்கள் மாறுகின்றன, அதற்கேற்ப பயணம் செய்து மனிதர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை மார்செட்டி ஆய்வு செய்தார். இப்போது அதுதொடர்பான தகவல்களைப் பார்ப்போம்.  1800களில் ரோம், வெனிஸ், பெர்லின் ஆகிய நாடுகளில் மக்கள் தினசரி வேலைக்கு நடந்து சென்ற தூரம் 5 கி.மீ.  ஒருவரால் முப்பது நிமிடங்களில் நடக்க முட

கொடூரமாக பரவும் வைரஸை பற்றி கவலைப்படாமல் இருந்துவிட்டோம்! - ப்ராமர் முகர்ஜி,

படம்
            நேர்காணல் பேராசிரியர் பிராமர் முகர்ஜி உத்தர்பிரதேச மாநிலத்தில் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது . இதில் நாம் பின்பற்றிய மாடல் தோற்றுப்போய்விட்டது என்று கூறியுள்ளீர்கள் . இப்படி நோய்த்தொற்று அதிகரிப்பது உத்தரப்பிரதேசத்தில் மட்டும்தானா ? இல்லை . உத்தரப்பிரதேசம் , மேற்குவங்கம் , பீகார் , டெல்லி ஆகியவை இதுபோன்ற ஆபத்தான கட்டத்தில் உள்ளன . இதற்குப்பிறகு ஆந்திரா , ராஜஸ்தான் , மத்தியப்பிரதேசம் . கேரளா , குஜராத் , கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வருகின்றன . கேரளத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளது . கேரளா , மேற்கு வங்கம் , உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பது அவசியம் . அசாம் , ஒடிஷாவில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை இப்போதைக்கு குறைவாக உள்ளது . இரண்டாவது அலை பாதிப்பு இந்தியாவில் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா ? மே மாதத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் . பிறகு பத்து நாட்களில் இறப்பு எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்புள்ளது . மே மாதத்தின் நடுப்பகுதியில் எட்டு முதல் பத்து லட்சம் என நோயாளிகளின் எண்ணிக்கை கூடலாம் . 5,500 என இறப்பு எண்

டேட்டா கார்னர்! - நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியை பார்க்க மெனக்கெடும் இங்கிலாந்து மக்கள்!

படம்
  5.2 மில்லியன் அளவிலான பாதுகாப்பு கேமராக்கள் இங்கிலாந்திலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸை முதல் அலையின்போது கட்டுப்படுத்த 20 நாட்கள் இங்கிலாந்து அரசுக்கு தேவைப்பட்டது.  அமாங் அஸ் எனும் விளையாட்டு உலகமெங்கும்  74.8 மில்லியன் அளவுக்கு மக்களால் தரவிறக்கப்பட்டுள்ளது.  உலகிலுள்ள ஒரு சதவீத வேளாண் நிறுவனங்கள் 70 சதவீத நிலங்களைக் கட்டுப்படுத்தி பயிர் விளைச்சலை மக்களுக்கு வழங்குகின்றன.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 சதவீத நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு மூன்று மாதங்களுக்குள்ளாக உளவியல் சிகிச்சையும் தேவைப்பட்டது.  உலகில் 3 சதவீத விளையாட்டு மேம்பாட்டாளர்கள் நினென்டோ நிறுவனத்தின் விளையாட்டு சாதனங்களை மேம்படுத்த உழைத்து வருகின்றனர். இப்பணி கடுமையானது.  இங்கிலாந்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சிகளைக் காண 750 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை, முந்தைய ஆண்டில் செலவிடப்பட்ட தொகையை விட அதிகமாகும். 

உலகை மாற்றிய ஃபைபர் ஆப்டிக்ஸ்!

படம்
தெரிஞ்சுக்கோ ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபிள்தான் இன்று நீங்கள் மும்பைக்கு அனுப்பும் இமெயிலை நொடியில் கொண்டுபோய் சேர்க்கிறது. இங்கிருந்து தென் கொரியாவுக்கு அனுப்பினாலும் சேர்க்கும் தொழில்நுட்பம் அதேதான். அந்தளவு தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒற்றை ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபிள் வழியாக 25 ஆயிரம் போன் அழைப்புகள் செல்கின்றன. ஃபைபர் ஆப்டிக் கேபிளின் உள்விட்டம் 9 மைக்ரான்கள் ஆகும். இதன் வெளிப்புறம் 125 மைக்ரான்கள் என அமைந்துள்ளது. சீனாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக வீடுகளையும் அலுவலகங்களையும் இணைக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் நாற்பது நாடுகள் இணைந்துள்ளன. இதில் தோராய தரவிறக்கவேகம்  நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவின் இடம் 25. டோக்கியோ ஆஸ்லோ, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் மாத இணையக்கட்டணம் 25 முதல் 40 டாலர்கள் வரை உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் உலகம் முழுக்க நாடுகளிடையே 80 சதவீத டேட்டா போக்குவரத்தை ஃபைபர் ஆப்டிக்ஸ் மூலமே நடைபெறுகிறது. ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா செல்லும் டேட்டாவின் வேக அளவு 80 மில்லி செகண்ட்ஸ். நன்றி - க்வார்ட்

என்ஜிஓக்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? ஒரு அலசல்

படம்
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சி! தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயலாற்றத் தொடங்கியபின் அரசின் பெரும் பாரம் குறைந்துவிட்டது. அரசு செய்யவேண்டிய பல விஷயங்களை தன்னார்வ நிறுவனங்கள் செய்து அதற்கு சிறிய தொகையை பெறுவதோடு, சமூகத்தின் நல்ல பெயரையும் பெறுகிறார்கள். ஏறத்தாழ அரசு மீதான கோபத்தை தீர்ப்பவர்கள் என்று கூட இவர்களைச் சொல்ல முடியும். இவர்களால் அரசு அமைக்க முடியுமா என்றால், டில்லியை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைகாட்டலாம். ஊழலுக்கான மசோதா, போராட்டம் எனத் தொடங்கி மக்களின் மீதான கோபத்தை சரியாக அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறினார் அரவிந்த் கெஜ்ரிவால். அவருக்கு ஓட்டுபோட்டது முழுக்க மத்திய நடுத்தர வர்க்கத்தினர்தான். அவர்களின் வளர்ச்சியை டேட்டாவாக பார்ப்போம். 2014- 18 வரை தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வளர்ச்சி 11 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமூகச் செயற்பாடுகளுக்கு கிடைக்கும் தனியார் நிறுவன நிதி 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நிதி மேற்சொன்ன காலகட்டத்தில் கிடைத்ததுதான். மத்திய அரசின் பல்வேறு சுரங்கம் உள்ளிட்ட திட்டங்களை க்ரீன்பீஸ் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்த்து போராடின. உ

ஜியோவுக்கு மூன்று ஆண்டு நிறைவு! - இஷா அம்பானியின் கனவு!

படம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவாகிறது. முகேஷ் அம்பானியின் மகள் இஷா, இந்த நிறுவனத்தின் உருவாக்கத்திற்கு காரணம், யேல் பல்கலையில் படித்தபோது விடுமுறைக்கு இந்தியா வந்திருந்தார். இந்தியாவில் இணைய இணைப்பு மிக மெதுவாக இயங்குவதாக தந்தை முகேஷிடம் கூறினார். அதுவே பின்னர் ஜியோவாக குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா என மாறி இன்று இந்தியாவை ஆக்கிரமித்துள்ளது. மேற்சொன்ன சம்பவம் நடந்தது 2011 ஆம் ஆண்டு, 2018 ஆம் ஆண்டு தனது துணிகர பிசினஸ் முயற்சிக்காக லண்டனில் விருது பெற்றுவிட்டார் முகேஷ். பேசும் அழைப்புகள் இலவசம். டேட்டாவுக்கு குறைந்த காசு என்ற திட்டம் ஏர்டெல் உள்ளிட்ட கம்பெனிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. எதிர்பார்த்தது போலவே இந்தியர்கள் ஜியோவைத் தேர்ந்தெடுத்தனர். இன்று இந்திய அரசு அமைப்புகள் கூட ஜியோவை தங்களது தொலைபேசி நிறுவனமாக ஒப்பந்தம் செய்து வருகின்றன. இந்த நேரத்தில் உங்கள் மூளையில் பிஎஸ்என்எல் எம்டிஎன்எல் என்ற நிறுவனங்களின் பெயர்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. ஜியோ என்பதற்கான லோகோவும இஷாவின் ஐடியாதான். பழமையான ரிலையன்ஸ் லோகோவை கடாசிவிட்